-
16th June 2015, 03:26 PM
#3161
Junior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
16th June 2015 03:26 PM
# ADS
Circuit advertisement
-
16th June 2015, 03:27 PM
#3162
Junior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
16th June 2015, 03:28 PM
#3163
Junior Member
Seasoned Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
16th June 2015, 07:14 PM
#3164
Junior Member
Platinum Hubber
-
16th June 2015, 07:14 PM
#3165
Junior Member
Platinum Hubber
VATHIYAR - MGR
சினிமா விரும்பிகளுக்கு இது பொற்காலம் என்று சொல்லலாமா? செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளில் பழையது முதல் புதியது வரை, பல்வேறு மொழிகளில் படங்களைப் பார்க்கிற வாய்ப்பு; பிறர் சொல்லக் கேட்டு, விசாரித்து வாங்கிவந்து வீட்டிலேயே டி.வி.டியில் பல படங்களைப் பார்க்கிற வசதி. இதுவும் போக, உபரி சவுகரியமாக, இருபது ரூபாய்க்கு திருட்டு டிவிடிக்கள் வேறு! அப்புறம் இருக்கவே இருக்கிறது இணையதளங்கள், டோரண்டுகள்!
ஆனால், இவற்றில் சரிபாதி வசதிகளும் இல்லாத காலத்தில் வெளிவந்த பல படங்களும், அந்தப் படங்கள் அந்தந்தக் காலகட்டத்தில் படைத்த வரலாறுகளும், அதன் நாயகர்களும் இன்னும் பின்னுக்குத் தள்ளப்பட்டு விடாமல் நம்மோடு அவ்வப்போது உரசிக்கொண்டு உட்கார்ந்திருப்பதுதான் வியப்பிலும் வியப்பு. அதில் நமக்கு மிகவும் அன்னியோன்னியமானவர் ஒருவர் உண்டேன்றால், அது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் என்று தைரியமாகச் சொல்லலாம்.
நேர்மறையான ஆற்றல் (Positive Energy) என்ற உந்துசக்தியை நமக்குள் உருவாக்க பலவழிகள் கூறப்பட்டுள்ளன:
தியானம் செய்; சகமனிதனை மதித்துவாழ்; தளைகளை அறுத்தெறி; நல்லதையே பார்; அமைதியை விரும்பு; கவலை தவிர்...இன்னும் எத்தனையோ? இது குறித்துத் தான் எத்தனை புத்தகங்கள்? எத்தனை கலந்துரையாடல் நிகழ்ச்சிகள்? என்னென்ன வியாக்கியானங்கள்? பலருக்கு இவை புரியாமல், கைக்கெட்டாமல் இருக்கலாம். ஆனால், இவற்றிற்கு எல்லாரும் அறிந்த ஒரு உதாரணத்தை சட்டென்று சொல்வதென்றால் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.திரைப்படங்கள் என்று துணிந்து அடித்துக் கூறிவிடலாம்.
"நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்-இங்கு
ஏழைகள் வேதனைப்பட மாட்டார்!
உயிருள்ளவரை ஒரு துன்பமில்லை-அவர்
கண்ணீர்க்கடலிலே விழமாட்டார்."
சில மாதங்களுக்கு முன்பு, ஒரு புதிய அனுபவத்தினைப் பெறுவதற்காக, நண்பர்கள் சிலருடன் "எங்க வீட்டுப் பிள்ளை,’ திரைப்படத்தை அரங்கினில் சென்று பார்த்த நாளை மறக்க முடியவில்லை. படம் முடிந்துவந்த போது அரங்கினிலிருந்து வெளியேறிய எம்.ஜி.ஆர்.அபிமானிகளின் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி? சற்றே சீர்தூக்கிப் பார்த்தால், ’நாடகத்தனமான வசனங்கள், அதிகப்படியான ஒப்பனை, செயற்கையான காட்சியமைப்புகள், பொருத்தமில்லாத உடையலங்காரங்கள்,’ என எத்தனையோ நெருடல்கள் இருந்தபோதிலும், எங்க வீட்டுப் பிள்ளை போன்ற படங்கள் இன்னும் பெரும்பாலானோர் மக்களின் மனதில் பசுமையாய் இருப்பதற்கு காரணம் என்ன? தொழில்நுட்பத்தின் அடிப்படை வசதிகள் கூட கால் ஊன்றியிராத அந்தப் படங்களில் தென்பட்ட அதே குறைகள் இன்றும், இந்த அதிநவீன யுவசினிமா காலத்திலும் தொடர்கிறது எனும்போது, அவை மட்டும் ஒரு சாராரால் எள்ளப்படுவது ஏன்?
அதன் பின்னர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பல படங்களை மோஸர் பேயரின் புண்ணியத்தால் நேரம் கிடைத்தபோதெல்லாம் பார்க்க நேர்ந்தது. மதுரை வீரன், மன்னாதி மன்னன், குடியிருந்த கோயில், ஒளி விளக்கு, ஆயிரத்தில் ஒருவன், படகோட்டி..இன்னும் பல.....!
திரைத்துறையில் பணிபுரியும் சிலரோடு எம்.ஜி.ஆர் படங்கள் குறித்து பலமுறை உரையாடியபோதெல்லாம், பல ஆச்சரியமான தகவல்கள் கிடைத்தன. மேற்கத்திய பாணியில் வசனங்களைக் குறைத்து, கேமிராவின் உபயோகத்தை அதிகமாக்கிப் படங்களை எடுத்த ஸ்ரீதர்; புராண இதிகாசங்களின் அடிப்படையில் பல படங்களைத் தயாரித்து இயக்கிய ஏ.பி.நாகராஜன்; பிரம்மாண்டத்துக்குப் பெயர் போன ஜெமினி எஸ்.எஸ்.வாசன்; அதிரடி படங்களைத் தயாரித்த மாடர்ன் தியேட்டர்ஸ்...என்று பல்வேறு விதமான திரைப்படங்களை எடுத்தவர்களும் எம்.ஜி.ஆருடன் ஏதோ ஒரு கட்டத்தில் இணைந்திருக்கிறார்கள்.
அண்மையில் புத்தகக்கண்காட்சியில் தமிழ்த்திரைப்படங்கள் குறித்து எழுதப்பட்ட பல புத்தகங்களைப் புரட்டிப் பார்த்தபோது, எம்.ஜி.ஆர் குறித்து பெரும்பாலான பக்கங்கள் எழுதப்பட்டிருப்பதைக் கவனிக்க முடிந்தது. இது தவிர, எம்.ஜி.ஆர் பற்றி எழுதப்பட்ட பல புத்தகங்களையும் பார்வையிட நேரிட்டது.
’சின்ன எம்.ஜி.ஆர்,’ ’கருப்பு எம்.ஜி.ஆர்,’ என்றெல்லாம் எம்.ஜி.ஆரோடு தம்மைப் பலர் ஏன் அடையாளம் காண முயல்கிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது. மேலும் தேர்தல் ஜூரத்தில் பலருக்கு ஏன் எம்.ஜி.ஆர் என்ற ஒற்றை வார்த்தையைப் புலம்பாமல் இருக்க முடியவில்லை என்ற சூட்சுமமும் புரிந்தது.
எம்.ஜி.ஆர் பல விதங்களில் இன்று முன்னோடி! திரையுலகிலும் சரி, அரசியலிலும் சரி - அவர் அடைந்த வெற்றி இன்றளவிலும் மலைப்புடன் வியந்து நோக்கப்படுகின்றது. பலருக்கு அவர் லட்சிய புருஷனாகவும், சிலருக்கு வியாபார தந்திரமாகவும், இன்னும் சிலருக்கு கேடயமாகவும் இன்னும் இருப்பது தான் காலங்கடந்தும் நிலைத்திருக்கிற அவரது புகழின் அடையாளங்கள்!
’அவரு ஒருத்தருக்குத்தான்யா படம் பார்க்க வர்றவங்களோட பல்ஸு தெரிஞ்சிருந்தது,’ என்று ஒற்றை வாக்கியத்தில் ஒரு திரைப்படத்துறையைச் சேர்ந்த நண்பர் கூறியபோது, அது சத்தியம் என்று விளங்கியது.
அவரது பாடல்களில் இழையோடிய கருத்துக்கள்; நேர்மறையான சிந்தனை; சமூக அக்கறை; கிஞ்சித்தும் தவறான முன்னோடிகளை உருவாக்கி விடாமலிருப்பதற்காக அவர் மேற்கொண்ட எச்சரிக்கை - இவற்றில் ஒரு குந்துமணியளவு இன்றைக்கு "நாளைய முதல்வர்" என்று சுவரொட்டி அடித்துக் கொள்கிற அல்பங்களுக்கு இருந்தால், இன்னேரம் தமிழகத்தின் திரையுலகமும், அரசியலும் ஒரு மிகப்பெரிய மாறுதலை சந்தித்திருக்கக் கூடும்.
எம்.ஜி.ஆரைப் பற்றி ஆய்வு செய்கிற பொறுமையோ, அவர் குறித்த தகவல்களைத் தொகுத்தளிக்கிற முயற்சியோ இல்லாதுபோனாலும், இன்றும் வரலாறாய், ஏழை எளிய மக்களின் மன அரியணையில் வீற்றிருக்கும் அந்த யுகபுருஷனை, வணங்குகிறேன்.
இருந்தாலும் வாழ்ந்தாலும் பேர்சொல்ல வேண்டும்!
இவர்போல யாரென்று ஊர்சொல்ல வேண்டும்!
வாத்தியார் வாத்தியார் தான்!
REPRODUCED
Last edited by esvee; 16th June 2015 at 07:25 PM.
-
16th June 2015, 07:18 PM
#3166
Junior Member
Platinum Hubber
-
16th June 2015, 07:20 PM
#3167
Junior Member
Platinum Hubber
-
16th June 2015, 09:10 PM
#3168
Junior Member
Diamond Hubber
-
16th June 2015, 09:17 PM
#3169
Junior Member
Diamond Hubber
-
16th June 2015, 09:28 PM
#3170
Junior Member
Diamond Hubber
Bookmarks