-
28th June 2015, 10:41 AM
#1491
Senior Member
Diamond Hubber
கலக்கலோ கலக்கல் ராகவேந்திரன் சார். கொன்று விட்டீர்கள் கொன்று.
அதுவும் தலைவர் பக்கவாட்டு போஸில் ஆமோதிக்கும் அந்த ஸ்டைலை குறிப்பிட்டதற்கு ரொம்ப தேங்க்ஸ். அந்த ஒரு நொடிக்கு எப்படி காத்திருப்பேன் தெரியுமா? இந்தக் காட்சி பற்றி நடிகர் திலகம் திரியில் எழுதியது கூட ஞாபகம் இருக்கிறது.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th June 2015 10:41 AM
# ADS
Circuit advertisement
-
28th June 2015, 10:43 AM
#1492
Junior Member
Seasoned Hubber
கருவின் கரு - 128
பாகம் 2 - தந்தை
தந்தை - மகள் பந்தம்
ஸ்ரீரங்க நாதரின் புகழ் மாலையில் ஆண்டாளகத்தெரியும் ஒரு மகள் -----
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
28th June 2015, 10:46 AM
#1493
Junior Member
Seasoned Hubber
கருவின் கரு - 129
பாகம் 2 - தந்தை
தந்தை - மகள் பந்தம்
மகளின் மேல் வைத்திருக்கும் அன்பை மிக அழகாக எடுத்துச்சொன்ன படங்களில் "மகாநதி "யும் ஒன்று - கமலின் நடிப்பு மனதை உருக வைக்கும்
-
28th June 2015, 10:48 AM
#1494
Junior Member
Seasoned Hubber
கருவின் கரு - 130

பாகம் 2 - தந்தை
தந்தை - மகள் பந்தம்
என்ன ஒரு பாடல் !! " கண்ணாடி வளையலும் காகிதப் பூக்களும் கண்ணே உன் மேனியில் நிழலாடும், இல்லாத உள்ளங்கள் உறவாகும் "
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th June 2015, 10:53 AM
#1495
Junior Member
Seasoned Hubber
கருவின் கரு - 131
பாகம் 2 - தந்தை
தந்தை - மகள் பந்தம்
மடி மீது வளர்த்த பிள்ளை அடித்தாலும் வலிப்பது இல்லை அது போல நானும் உந்தன் சொல்லை தாங்கினேன் ..... எவன் மீதும் வருத்தம் இல்லை அவன் மீதும் வருத்தம் இல்லை ... விதி என்று தேர்த்தினேன்
-
28th June 2015, 06:52 PM
#1496
Junior Member
Newbie Hubber
-
28th June 2015, 07:58 PM
#1497
Junior Member
Newbie Hubber
Meghe Dhaka Tara (1960),Komal Gandhar (1961),Subarna Rekha (1962)-Rithwik Ghatak -Bengali,India .
என்ன ஒரேயடியாக ஈரான்,கொரியா,இத்தாலி என்று உதார் விடுகிறானே ,இந்தியாவில் யாருமே கண்ணில் படவில்லையா என்று சிலர் புலம்பல் கேட்கிறது. இதோ நான் மதிக்கும் யுகபுருஷன்,இயக்குனர் ரித்விக் கட்டாக்.
இவர் இணை கலை படங்களில் சத்யஜித்ரே ,மிருணாள் சென் இவர்களோடு பயணித்தாலும் என் பார்வையில் அவர்களை விட மிக சிறந்தவர். நேர்மையான,பாவனை தவிர்த்த படங்கள் தந்தவர். சிறிய சிறிய விஷயங்களிலும் கூர்மையான,குறிப்பான கவனம் செலுத்தி சமூக நடைமுறையை ,ரியலிச படங்களை, இடது சிந்தனைகளோடு தந்தவர்.
ஐம்பதே வயதில் மரித்தவர்,குடிக்கு அடிமையாகி,மனைவியை பிரிந்து,மனநிலை பாதிக்க பட்டு,மருத்துவமனையில் இரு ஆண்டுகள் கழித்தவர்.
நாடகத்தில் தொடங்கினார். மதுமதி(மறுபிறவி-ஆவி இன்னொரு உடலுக்குள் அடக்கம்)என்ற சிறந்த வெகுஜன படத்திற்கு திரைக் கதை எழுதியவர்.(பிமல்ராய் இயக்கம்)
மேலே சொன்ன முப்படங்களும் ,ரித்விக்கை மிக பாதித்த 1947 இன் பிரிவினை ,அது சார்ந்த சமூக,பொருளாதார,குடும்ப,அரசியல்,தனிமனித பிரச்சினைகள்தான் மூன்று படங்களின் மூலம்.
மேகே தாக்க தாரா , ஒரு பெண்ணின்(நீத்தா) நல்ல இயல்பு ,தியாகம் குடும்பத்தாரால் உபயோக படுத்த பட்டு, காதல்,வேலை,ஆரோக்கியம் இழந்து நிற்கும் போது கசக்கி எரிய பட்டு, சிறிதே ஆதரவு காட்டும் அண்ணனிடம் ,நான் வாழவே விரும்புகிறேன் என கதறி தோள் சாயும் பரிதாபம்.
கோமல் காந்தார் -இது இந்திய படங்களை முன்னெடுத்து செல்லும் முயற்சி. ஐரோப்பிய முறையில் தன் ரசனை,கருத்துக்கள் சார்ந்த தனிப்பட்ட படமாக்க முயற்சி.ஒரு இடது சாரி நாடக குழு (IPTA )அதில் விருகு,அனுசுயா என்ற பாத்திரங்கள். இலட்சியங்கள்,ஊழல்,கலைக்கும் வாழ்க்கைக்கும் ஆன தொடர்பு, கலையின் ஆளுமை,வர்க்க போராட்டம் என்று விவாதம் செய்து நகரும்.
சுபர்ண ரேகா, ஒரு தாழ்த்த பட்ட பையனை(அபி ) எடுத்து வளர்க்கும் பிராமணர்(ஈஸ்வர்) தன்னுடைய தங்கை சீதாவிற்கும் அபிக்கும் ஏற்படும் காதலை ஏற்க முடியாமல், அவர்கள் சேரியில் வறுமையில் உழன்று டிரைவர் ஆகும் அபி, ஒரு விபத்தில் மாட்ட,
வறுமை சீதாவை,ஒரு இரவு விடுதியில் தள்ள,ஹர பிரசாத் என்ற நண்பரின் உந்துதலால்,ஈஸ்வர் விரக்தியால்,தனிமையால் ,கல்கத்தா வந்து குடியில் தோய்ந்து,இரவு விடுதிக்கு வர, அங்கு அவர் தங்கையே அவருக்கு தேவை பூர்த்தி செய்ய வர, அவமானத்தால் உயிர்துறக்கும் தங்கையின் மகனை எடுத்து வளர்க்கிறார் ஈஸ்வர்.
குமார் சஹானி,மணி கவுல்,மீரா நாயர்,கேத்தன் மேத்தா,அடூர் என்று பல இயக்குனர்களின் உந்து சக்தி இந்த மேதை. இவர் படங்களை சுட்டு பல படைப்புகள். (reincarnation of peter proud ,karz ,எனக்குள் ஒருவன்,ஓம் சாந்தி ஓம் ,குல விளக்கு,மறக்க முடியுமா,அவள் ஒரு தொடர்கதை,மகாநதி ) .
நான் மிக மிக மிக மதிக்கும் இந்திய இயக்குனர்களில் முதல்வர்.
-
28th June 2015, 08:52 PM
#1498
Senior Member
Seasoned Hubber
கோபால் ஜி,
நீங்கள் ஏன் எல்லோரையும் எதாவது சொல்லிக்கொண்டே இருக்கிறீர். ஏதாவது தமிழ் சீரியல் பாதிப்பா.
உங்கள் தொடர் பிடித்தவர்கள் படிக்கிறார்கள், அவர்கள் கருத்துக்களை எழுதுகிறார்கள்
அவ்வளவு தான் அதற்காக இரண்டு கால் மிருகம் என்றெல்லாம் சொல்லுவது அ நாகரீகம். அப்படி சொல்ல உங்களுக்கு என்ன உரிமை உள்ளது
மற்றவர்களைப்போல் நீங்களும் இந்த ஹப்பில் ஒரு அங்கம் அவ்வளவே.
நீங்கள் கொஞ்சம் ஜாஸ்தியாகவே எல்லோரையும் வசை பாடுவது அழகல்ல.
எல்லோரும் எல்லா நேரத்திலும் பொறுமை காக்கவேண்டும் என்ற அவசியமும் இல்லை
பதிவிடுது நம் வேலை. யாரும் பார்க்கவில்லை லைக் செய்யவில்லை என்று சொல்வது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது.
-
28th June 2015, 09:24 PM
#1499
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Gopal,S.
ராஜேஷ்,
உன் உளறல் அத்து மீறுகிறது. நீயும் ஹப்பர், நானும் ஹப்பர் என்று சொல்வது,சுசிலாவும் பின்னணி பாடகி,மாலதியும் பின்னணி பாடகி என்று சொல்வது போல. எங்கே நிற்க வேண்டுமோ ,அங்கே நில்.உன் ஒன்றைரையணா கன்னட பாடல்களுடன் நிறுத்தி கொள்.
அறிவை வளர்த்து கொள் என்றால் ,ஒப்பு கொள்ளாமல்,பிதற்றாதே. உனக்கு இசையறிவும் இல்லை.எழுதும் திறமையும் இல்லை. அகந்தை இல்லை என்ற பிளஸ் பாயிண்ட் டும் அடி வாங்குகிறது.
எனக்கு லைக் தான் வேண்டுமென்றால்,எப்படி வாங்குவதென்று தெரியும்.
எல்லோருக்கும் ரசனை வளர்க்கும் முயற்சியில் இறங்க மாட்டேன். ஒரு curiosity கூட இல்லாதவன் செத்த பிணத்திற்கு சமம்.
உளறல் என்ற வார்த்தையெல்லாம் பேசுவது. எல்லோரையும் ஏக வசனத்தில் அழைப்பது இதெல்லாம் உங்கள் வயசிற்கு அழகு
எனக்கு எது இல்லை எது இருக்கிறது என்பது எனக்கு தெரியும். என்றுமே யார் மனதையும் நோகும்படி ஒரு பதிவிட்டது இல்லை
நீங்கள் என்னமோ கடவுள் போலவும் உமக்குத்தான் ரசனை உள்ளது போல் பிதற்றுவது அழகல்ல.
என் ஒன்றையணா கன்னட பாடல்களுடன் நிறுத்திக்கொள் என்று சொல்ல நீர் யாரய்யா...
உமக்குத்தெரிந்ததை நீர் இங்கே கொட்டுகிறீர் அதேபோல் நாங்கள் செய்கிறோம்.
ஹப் நாகரீகம் கூட இல்லாமல் சும்மா எப்போ பார்த்தாலும் மிருகம் அது இது என்று. நீங்கள் மிகச்சிறந்த ரசனையாளனாகவே இருங்கள்
எப்படி பேசவேண்டும் என்ற நாகரீகம் இல்லை என்றால் எந்த வகை ரசனை இருந்தும் ஒரு மன்னுக்கும் லாயக்கில்லை.
-
28th June 2015, 09:34 PM
#1500
Senior Member
Seasoned Hubber
அதுமட்டுமல்ல இது பொதுவான ஹப். இதில் நீர் என்னமோ எல்லாம் தெரிந்தவர் போலவும் மற்றவர்கள் எல்லாம் ஒன்றுமே தெரியாத முட்டள்கள் போலவும் பேசுவது எவ்வளவு மட்டமான செயல்.
உங்களை எல்லோரும் இப்படி பேச வேண்டாம் என்று சொல்லிக்கொண்டுதானே வந்திருக்கிறார்கள். யார் சொல்லியும் நீங்கள் மாறவே மாட்டேன் என்று சொன்னால் ..............
ஜி என்று உங்களை அழைக்க மனமில்லை கோபால்.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
Bookmarks