-
29th June 2015, 11:44 AM
#3691
Junior Member
Seasoned Hubber
RARE STILL FROM NET.
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
29th June 2015 11:44 AM
# ADS
Circuit advertisement
-
29th June 2015, 11:45 AM
#3692
Junior Member
Seasoned Hubber
RARE STILL FROM NET.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
29th June 2015, 02:48 PM
#3693
Junior Member
Diamond Hubber
-
29th June 2015, 05:42 PM
#3694
Junior Member
Platinum Hubber

Originally Posted by
Varadakumar Sundaraman
RARE STILL FROM NET.

இனிய நண்பர் திரு குமார் சார்
மக்கள் திலகத்தின் அபூர்வ நிழற்படங்கள் மிகவும் அருமை . எந்த வித ஆடம்பரமின்றி எளிமையாக மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் மக்கள் மத்தியில் கலா ரசனையோடு ரசிக்கும் காட்சி - . அற்புதமான பதிவு.
-
29th June 2015, 07:47 PM
#3695
Junior Member
Platinum Hubber
ஓடி ஓடி உழைக்கணும் …
‘நல்ல நேரம்’ திரைப்படத்திற்காக நாயகன் பாடும் பாடல்! காட்டுவிலங்காம் யானைகள் வைத்து தேவர் எடுத்த படம்! உழைப்பின் மேன்மையை உயர்த்திக்காட்டும் புலவரின் கைவண்ணம்! எழுத்தில் எழுந்துநிற்கும் உயர்ந்த கோபுரம்! வாழ்க்கைப் பாடத்தை வரிகளில் காட்டியிருக்கும் அற்புதக் கவிதை!
உழைப்பின் பெருமை என்னவென்று உலகறியும்! உழவன் முதல் கவிஞன் வரை உழைப்பு ஒன்றுதான் மனித முன்னேற்றத்திற்கு முதல்படி! இவ்வுலகில் பிறந்த எந்த மனிதனும் உழைப்பதில் பின்வாங்கக் கூடாது. இன்னும் சொல்லப்போனால், உழைக்க மறுப்பவனுக்கு உண்ணுவதற்கு உரிமை கிடையாது என்றே இலக்கணம் வகுக்கலாம். அதுவும் தனக்காக வாழ்வதைவிட பிறருக்காக வாழ்வதிலேதான் அர்த்தமிருக்கிறது! ஆனந்தமிருக்கிறது! இந்த தத்துவ தரிசனத்தைத் திரைப்பாடலில் கொண்டுவரும் சாமர்த்தியம் புலவர் புலமைப்பித்தன் போன்ற பிதாமகர்களுக்கே கைகூடும்!
இருசக்கர வாகனத்தில் பயணம் செல்லும்போதெல்லாம் என் மகனை முன் வைத்துக்கொண்டு எம்.ஜி.ஆர். பாடல்களை முணுமுணுப்பது வழக்கம்! என் மகன் விவேகானந்தன் சுமார் 6 வயது இருக்கும்போது முதலில் உரக்கப்பாடிய வரிகள் இவைதான்…
வயித்துக்காக மனுஷன் இங்கே கயித்தில் ஆடுறான் பாரு
ஆடி முடிச்சி இறங்கி வந்தா அப்புறம் தாண்டா சோறு
நான் கூட கேட்டேன். என்ன விவேக், பல்லவியெல்லாம் விட்டுவிட்டு சரணத்தில் உள்ள வரிகளைப் பாடுகிறாயே என்று! அப்பா, அதில் கருத்து இருக்கிறது என்றான். அவன் கண்டிப்பாக வாழ்க்கையில் முன்னுக்கு வருவான். வெற்றி மேல் வெற்றி பெறுவான் என்று உணர்ந்தேன். தற்போது பொறியியல் பட்டப்படிப்பு முடித்து தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதோடு, கவியரசு கண்ணதாசன் அவர்களின் பூரண ஆசிகளால் குறும்படங்களுக்குப் பாடல்கள் எழுதிவருகிறான்.
உலகம் முழுமைக்கும் உரிய பாடலிது! அறநெறி போற்றி ஆயிரம் செய்யுள்களைவிட இந்த ஒரு திரைப்பாடல் அதைவிட மக்கள் மனதில் எளிதாகச் சென்று சேரத்தக்கது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?
1234 … அப்… அப்…
ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாங் கொடுக்கணும்
ஆடிப் பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்
வயித்துக்காக மனுஷன் இங்கே கயித்தில் ஆடுறான் பாரு
ஆடிமுடிச்சி இறங்கி வந்தா அப்புறம் தாண்டா சோறு
அன்போடு சொல்லுறதைக் கேட்டு நீ அத்தனைத் திறமையும் காட்டு
இந்த அம்மாவைப் பாரு ஐயாவைக் கேளு
ஆளுக்கொண்ணு கொடுப்பாங்க
சோம்பேறியாக இருந்து விட்டாக்கா சோறு கிடைக்காது தம்பி
சுருசுருப்பில்லாம தூங்கிட்டுருந்தா துணியும் இருக்காது தம்பி
இதை அடுத்தவன் சொன்னா கசக்கும்
கொஞ்சம் அனுபவம் இருந்தா இனிக்கும்
இதுக்கு ஆதாரம் கேட்டா ஆயிரம் இருக்கு
அத்தனையும் சொல்லிப்போடு
வலிமையுள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி
பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம் சட்டம் ஆகணும் தம்பி
நல்ல சமத்துவம் வந்தாகணும் அதிலே மகத்துவம் உண்டாகணும்
நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும் படிப்பினைத் தந்தாகணும் – நாட்டுக்குப்
படிப்பினைத் தந்தாகணும்.
ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாங் கொடுக்கணும்
ஆடிப் பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்
courtesy - – கவிஞர் காவிரிமைந்தன்.vallamai
Last edited by esvee; 29th June 2015 at 07:56 PM.
-
29th June 2015, 08:52 PM
#3696
Junior Member
Platinum Hubber
-
29th June 2015, 08:54 PM
#3697
Junior Member
Platinum Hubber
-
29th June 2015, 09:26 PM
#3698
Junior Member
Platinum Hubber
சென்னை பாட்சாவில் (மினர்வா) தற்போது வெற்றிநடை போடுகிறது
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அளிக்கும் "உழைக்கும் கரங்கள் " தினசரி பகல் காட்சியில் .
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
29th June 2015, 09:28 PM
#3699
Junior Member
Veteran Hubber

புரட்சிதலைவர் எம்ஜிஆர் ஒரு முறை அமெரிக்கா வில் நெடுஞ்சாலையில் பயணம் செய்து கொண்டு இருக்கின்றார், வழியில் கார் ஒன்று சாலை விபத்தில் சிக்கி சின்னா பின்னமாகியிருக்கிறது. அதில் இருப்பவர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார். இதை பார்த்த உடனே, நம் புரட்சித்தலவைர் அவர்கள், தன் காரை நிறுத்தச்சொல்லி காரில் அடிபட்டு கிடந்தவரை தானே தூக்கி, தன் காரில் ஏற்றி மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் . நம் பொன்மனசெம்மலுடன் இருந்தவர்கள் எவ்வளவோ சொல்லியும் பிடிவாதமாக அடிபட்டவருக்கு உதவி செய்து விட்டுதான் அடுத்த நிகழ்ச்சிக்கு மிகவும் தாமதமாக சென்று உள்ளார் . அந்த விழாவில் தாமதமாக வந்ததற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு நடந்த சம்பவத்தை விவரித்து சொல்லி இருக்கின்றார் .தொடர்ந்து பேசிய தலைவர் ஒரு விபத்து நடந்து விட்டது யாரும் உதவிக்கு வரவில்லை சாலையில் சென்ற கார்கள் எல்லாம் நிற்காமல் விரைகின்றன. ஆனால் இப்படி ஒரு விபத்து நடந்தால், தங்கள் உறவினர்கள் நண்பர்கள் அடிபட்டுக் கிடப்பதுபோல் நினைத்து ஓடோடி வந்து உதவி செய்யக்கூடிய மனிதாபிமானம் உள்ளவர்கள் உலகிலேயே எங்கள் தமிழ் நாட்டினர்தான், என்று பெருமையோடு தெரிவித்து கொள்கின்றேன் என்று பேசிய பொழுது அரங்கமே எழுந்து நின்று எழுப்பிய கரவோசை அடங்க வெகு நேரமானது
முகநூலில் தகவல் : அ . ரவிச்சந்திரன் - அ.இ.அ.தி.மு. க. பைங்காடு - THANKS TO THEM.
எந்த ஒரு சிறு வாய்ப்பு கிடைத்தாலும், நமது நாட்டின் பெருமையையும், தமிழனின் பெருமையையும் நிலை நாட்டுவதில் தனி அக்கறை கொண்டவர்தான் நம் மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்கள்
Last edited by makkal thilagam mgr; 29th June 2015 at 09:36 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
29th June 2015, 09:31 PM
#3700
Junior Member
Platinum Hubber
மெகா டிவியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் ,"
வேட்டைக்காரன் " ஒளிபரப்பாகியது .
Bookmarks