-
27th June 2015, 07:09 PM
#1461
Moderator
Diamond Hubber
மவுலிவாக்கம் கட்டிட விபத்து பின்னணியில் உருவாகும் எங்க வீட்டுப் பெண்
கடந்த ஆண்டு மவுலிவாக்கத்தில் புதிதாக கட்டப்பட்ட பலமாடி கட்டிடம் இடிந்து தரைமட்டமானதில் ஏராளமானோர் உயிரிழந்தனர், பலர் வீடுகளை இழந்தனர். இந்த சம்பவத்தை பின்னணியாக கொண்டு உருவாகி ஒளிபரப்பாகும் தொடர் எங்க வீட்டுப்பெண். வாழ்க்கையை கனவுகளோடு எதிர் நோக்கிக் கொண்டிருப்பவர் சுமித்ரா. அவருக்கு திருமணம் நிச்சயமாகியிருக்கிறது. தந்தை கலெக்டர். திடீரென அவர் கட்டுப்பாட்டில் உள்ள அபார்ட்மெண்ட் கட்டிவரும் ஒரு பலமாடி கட்டிடம் இடிந்து விழுகிறது. கலெக்டர் பதவி நீக்கம் செய்யப்பட்டு சிறைக்குச் செல்கிறார். சுமித்ராவின் திருமணம் நின்று போகிறது. நன்றாக இருந்த குடும்பம் ஒரே நாளில் நடுத்தெருவிற்கு வருகிறது.
அதன் பிறகு சுமித்ரா போராடி தன் குடும்பத்தையும், தந்தையையும் எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை. சுமித்ராவாக ஹரிசித்ரா நடிக்கிறார் அவரது தந்தை கலெக்டராக ஒய்.ஜி.மகேந்திரன் நடிக்கிறார். தாயாக யுவஸ்ரீ நடிக்கிறார். இவர்கள் தவிர சரத்பாபு, கவிதாலயா கிருஷ்ணன், பாத்திமா பாபு, ராம்மோகன், ஜூனியர் பாலையா ஆகியோரும் நடிக்கிறார்கள். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
நன்றி: தினமலர்
-
27th June 2015 07:09 PM
# ADS
Circuit advertisement
-
1st July 2015, 08:27 PM
#1462
Moderator
Diamond Hubber
மகாபாரதம் தொடருக்காக பிரமாண்ட குருஷேத்திர போர்
சென்னை: சன் டி.வி.யில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 10 மணி முதல் 11 மணி வரை ஒளிப்பரப்பாகும் தொடர் ‘மகாபாரதம்’. தமிழ் நடிகர்களைக் கொண்டு தமிழில் சினிவிஷ்டாஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் பிரமாண்ட தொடர் பற்றி இயக்குனர் ‘செங்கோட்டை’ சி.வி.சசிகுமார் கூறியதாவது:
தமிழில், தமிழுக்காக மட்டும் தயாரிக்கப்பட்ட எந்தவொரு சரித்திர தொடரும் 50 எபிசோடுகளை கடந்தது இல்லை. நாங்கள் கடந்த மூன்று வருடங்களாக இத்தொடரை ஒளிபரப்பாகி வருகிறோம். 120 எபிசோடுகளை கடந்துள்ளோம். தமிழுக்காகவே தயாரிக்கப்பட்ட இந்த தொடரில் மற்றவர்கள் சொல்லாத நுட்பமான கருத்துக்களைச் சொல்கிறோம். பிரமாண்டமும், கருத்தும் ஒருசேர இருப்பதே இதன் சிறப்பு. நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய நூல்களில் இருந்து தேர்ந்தெடுத்து, அவற்றைத் தொகுத்து வழங்கி வருகிறோம். கற்பனையான பிரம்மாண்டத்தை விட உண்மை யான கருத்துக்கே, இந்த மகாபாரதம் முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கிறது.
நாளை ஒளிபரப்பாகும் தொடரில், பாண்டவர்கள் சார்பாக கிருஷ்ணன் சமாதான தூது வந்து, துரியோதனின் செயல் கண்டு வருந்தியது, தன் சமயோஜித புத்தியால் விதுரனின் விஷ்ணு தனுசை உடைக்கச் செய்தது, தான் யார் என்று விஸ்வரூபம் காட்டி குருஷேத்திர போர் பிரகடனம் செய்ததும் போன்ற முக்கியமான நிகழ்வுகள் ஒளிபரப்பாக உள்ளன. அதைத் தொடர்ந்து குருஷேத்திர போர் பிரமாண்டமாக ஒளிபரப்பாக உள்ளது. அதை எட்டு கேமரா படமாக்குகிறது. 50க்கும் மேற்பட்ட நடிகர்கள், 40க்கு மேற்பட்ட தேர்கள், 100 குதிரைகள் என பெரிய அளவில் எடுக்க இருக்கிறோம். இது சின்னத் திரையில் புதிய வரலாறு. இவ்வாறு கூறினார்.
நன்றி: தினகரன்
-
12th July 2015, 06:32 AM
#1463
Moderator
Diamond Hubber
கோவை சரளாவின் செல்லமே செல்லம் பாகம் 2 தயாராகிறது -
காமெடி மற்றும் குணசித்திர நடிகை கோவை சரளா செல்லமே செல்லம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இது இமான் அண்ணாச்சி நடத்தும் குட்டி சுட்டி நிகழ்ச்சி போன்றது அதில் குழந்தைகள் மட்டும் கலந்து கொள்வார்கள். இதில் குழந்தைகளும் பெற்றோர்களும் கலந்து கொள்வார்கள். கோவை சரளா காமெடியாகவும், ஜாலியாகவும் நிகழ்ச்சியை நடத்துவார்
இந்த நிகழ்ச்சியின் வெற்றியைத் தொடர்ந்து செல்லமே செல்லம் நிகழ்ச்சியின் இரண்டாம் பகுதியை தயாரிக்கிறது சரிகம நிறுவனம். இதன் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடந்து வருகிறது. "சரிகம நல்ல தரமான நிகழ்ச்சிகளை மட்டுமே ரசிகர்களுக்கு வழங்கி வருகிறது. அந்த வகையில் செல்லமே செல்லம் குழந்தைகளையும் பெரியவர்களையும் ஒரு சேர கவர்ந்துள்ள நிகழ்ச்சி. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் இரண்டாம் பகுதியை தயாரிக்கிறோம்" என்றார் சரிகம நிறுவனத்தின் துணை தலைவர் பி.ஆர்.விஜயலட்சுமி.
நன்றி: தினமலர்
-
12th July 2015, 06:35 AM
#1464
Moderator
Diamond Hubber
பூவிழி வாசலிலே: குழந்தையை மையமாக கொண்ட புதிய தொடர் - New serial in Raj tv
பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குழந்தையை மையமாக கொண்டு பூவிழி வாசலிலே என்ற திரைப்படம் வந்தது. அதே போன்று தற்போது ராஜ் டி.வியில் வருகிற 13ந் தேதி முதல் பூவிழி வாசலிலே என்ற தொடர் ஒளிபரப்பாகிறது.
தேன்மொழி என்ற குழந்தையை சுற்றி நடக்கிற கதை. வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த தேன்மொழியின் பாட்டி திடீரென இறந்த விடுகிறார். அவரது இறுதி சடங்கு நிறைவேற்ற பணம் இல்லாமல் தவிக்கும் தந்தை உள்ளூர் ஜமீன்தாரிடம் மகள் தேன்மொழியை அடமானமாக வைத்து பணம் வாங்கி இறுதி சடங்கை நிறைவேற்றுகிறார். சில வருடங்களில் கடனை அடைக்கமுடியாமல் தந்தை இறந்து போகிறார். இதனால் தேன்மொழியை தாயிடமிருந்து பிரித்து தன்னுடன் வைத்துக் கொள்கிறார் ஜமீன்தார்.
ஒரு கட்டத்தில் மனம் மாறும் ஜமீன்தார், தேன்மொழியை அவள் தாயிடம் ஒப்படைக்கிறார். ஈஸ்வரன் என்கிற நல்ல மனிதர் தேன்மொழியை படிக்க வைக்க நினைக்கிறார். ஒரு கொலை வழக்கில் அவரும் ஜெயிலுக்கு போய்விடுகிறார். அதன் பிறகும் தேன்மொழி வாழ்க்கையில் எப்படி ஜெயிக்கிறாள் என்பதுதான் கதை. திங்கள் முதல் சனி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
நன்றி: தினமலர்
-
12th July 2015, 06:40 AM
#1465
Moderator
Diamond Hubber
ரேஸில் முந்தும் லட்சுமி
பிரபல திரைப்பட இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா தயாரித்து ஒளிபரப்பி வரும் லட்சுமி வந்தாச்சு சீரியல் மற்ற சீரியல்களை பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னேறிக் கொண்டிருக்கிறது. டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் முன்னேறுகிறது. வாணி போஜன், அனு பிரகாஷ், நாதன், ஹரிப்ரியா நடிக்கிறார்கள்.
>கூட்டுக் குடும்பமாக இருக்கும் நாட்டாமை நாச்சிமுத்து குடும்பத்துக்கு மூத்த மருமகளாக வருகிறாள் தேன்மோழி. தன் கணவன் தங்கவேலுவை கைக்குள் போட்டுக் கொண்டு குடும்பத்து நிர்வாகத்தை தன் கைக்குள் கொண்டு வர திட்டமிடுகிறாள். ஆரம்பத்தில் மருமகளின் செயலால் வெறுப்படையும் நாச்சிமுத்து பின்பு அவள் செய்வதுதான் சரி என்று வழிக்கு வருகிறார். இதைப் பயன்படுத்தி நாச்சிமுத்துவின் இரண்டாவது மகன் வெற்றிவேலுவை வீட்டைவிட்டு வெளியேற்ற திட்டமிடுகிறாள். இந்த நிலையில் வீட்டுக்கு இரண்டாவது மருகளாக வருகிறார் லட்சுமி. தேன்மொழியின் திட்டங்களை முறியடித்து லட்சுமி குடும்பத்தை எப்படி காப்பாற்றுகிறாள் என்பது கதை. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
நன்றி: தினமலர்
-
18th July 2015, 06:39 AM
#1466
Moderator
Diamond Hubber
ஆயிரம் எபிஷோடுடன் சரவணன் மீனாட்சி தொடர் நிறைவு பெறுகிறது!
கடந்த 2011 நவம்பர் 7-ந்தேதி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர் சரவணன் மீனாட்சி. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகும் இந்த தொடரின் சீசன் 1-ல் மிர்ச்சி செந்தில்-ஸ்ரீஜா ஜோடி சேர்ந்து நடித்தனர். அவர்களுக்கிடையே நடிப்பில் நல்லதொரு கெமிஸ்ட்ரி உருவாகி அந்த தொடர் நேயர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்று வந்தது. மதுரையை கதைக்களமாகக் கொண்ட இந்த தொடரில் மதுரையைச் சேர்ந்த நடிகர் நடிகைகளும் சிலர் நடித்தனர். மேலும், அந்த தொடரில் உருகி உருகி இயல்பாக ரொமான்ஸ் செய்து நடித்த மிர்ச்சி செந்தில்-ஸ்ரீஜா ஜோடிக்கிடையே நிஜத்திலும் காதல் உருவானதை அடுத்து அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இப்போதும் செந்தில் நடித்தபோதும், ஸ்ரீஜா நடிப்பை நிறுத்தி விட முழுநேர இல்லத்தரசியாகி விட்டார்.
இந்நிலையில், அடுத்தபடியாக அந்த தொடரின் சீசன் 2ல் புதிய ஜோடிகளாக ரசித்ரா-கவின் களமிறங்கினர். அவர்களது ரொமான்சையும் நேயர்கள் ரசித்தபோதும், பெரிய அளவில் இல்லை. அதனால் தற்போது 950 எபிசோடுகளை கடந்து விட்ட சரவணன் மீனாட்சி தொடரை 1000 எபிசோடுடன் முடித்துக் கொள்ளப்போகிறார்களாம். அதன் இறுதிகட்ட படப்பிடிப்புகள் இப்போது நடந்து வரும நிலையில், இன்னும் 2 மாதங்கள் மட்டுமே சரவணன் மீனாட்சியை விஜய் டிவியில் கண்டுகளிக்க முடியும் என்கிறார்கள.
>அதனால் அந்த தொடரில் வருடக்கணக்கில் நடித்து வந்த நடிகர் நடிகைகள் வேறு சீரியல்களில் நடிப்பதற்கு வாய்ப்புத்தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
நன்றி: தினமலர்
-
30th July 2015, 11:18 PM
#1467
Moderator
Diamond Hubber
மை லவ் பிரஃம் அனதர் ஸ்டார்: ஜூலை 30 முதல் புதிய கொரியன் தொடர்
புதுயுகம் தொலைக்காட்சி கே வரிசையில் உலக புகழ்பெற்ற கொரியன் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வரிசையில் அடுத்து வருகிறது மை லப் ப்ஃரம் அனதர் ஸ்டார் என்ற தொடர் வருகிற 30ந் தேதி முதல் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த தொடரை ஜான் டீ யா இயக்கி உள்ளார். கிம் சோ ஹயூன், ஜுன் ஜி ஹியுன் நடித்துள்ளனர். 21 எபிசோட்களை கொண்ட இந்த தொடர் உலக புகழ்பெற்றதாகும்.
வேற்று கிரகத்தில் இருந்து ஒரு இளைஞன் பூமியை ஆராய்ச்சி செய்வதற்காக வருகிறான். வந்த இடத்தில் ஒரு பெண்ணை ஆபத்தில் இருந்து காப்பாற்றுகிறான். அதன் பிறகு 400 வருடங்கள் பூமியில் தங்கி ஆராய்ச்சி செய்துவிட்டு கிளம்பும்போது, தான் வந்தபோது காப்பாற்றிய பெண்ணின் தோற்றத்தில் ஒரு பெண்ணை சந்திக்கிறான். அந்த பெண்ணை காதலிக்கிறான். அவள் ஒரு பிரபலமான நடிகை. அவர்கள் காதல் நிறைவேறியதா? இளைஞன் பூமியிலிருந்து திரும்பிச் சென்றானா என்பது கதை.
நன்றி: தினமலர்
-
8th August 2015, 12:34 AM
#1468
Moderator
Diamond Hubber
அபூர்வ ராகங்கள் Aug 10, 2015
அபூர்வ ராகங்கள் தொடரில் தென்றல் துளசி!
தென்றல் சீரியல் மூலம் பிரபலமானவர் ஸ்ருதிராஜ்.
அந்த தொடரில் அவர் நடித்த துளசி என்கிற கதாபாத்திரம் அவருக்கு பெண்கள் மத்தியில் பெரிய பெயரை வாங்கிக்கொடுத்தது. அதையடுத்து ஆபீஸ் என்ற தொடரில் நடித்த ராஜீ கேரக்டரும் ஸ்ருதிராஜை பேச வைத்தது. இப்போது அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் என்ற தொடரில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இதையடுத்து, அபூர்வ ராகங்கள் என்றொரு தொடரில் டைட்டில் வேடத்தில் நடிக்கிறார் ஸ்ருதிராஜ். ஒரு பிரபல சேனலில் ஒளிபரப்பாக இருக்கும் அந்த தொடரின் படப்பிடிப்பு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்த தொடரில் இதற்கு முன்பு நடித்த சீரியல்களை விடவும் வெயிட்டான வேடத்தில் நடிக்கிறாராம் அவர்.
குறிப்பாக, குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சாதுர்யமாக சமாளிப்பது மட்டுமின்றி, ஒரு போர்க்குணம் கொண்ட பெண்ணாகவும் நடிக்கிறாராம் ஸ்ருதிராஜ். அதேசமயம், அவருக்கென்று பெண் ரசிகைகள் அதிகமாக இருப்பதால், சென்டிமென்ட் காட்சிகளும் இந்த தொடரில் அதிகமாக உள்ளதாம்.
அதனால், இந்த அபூர்வ ராகங்கள் தனக்கு சீரியல் உலகில் முன்னணி நடிகை என்கிற அங்கீகாரத்தை ஏற்படுத்திக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறார் ஸ்ருதிராஜ்.
நன்றி: தினமலர்
-
8th August 2015, 12:38 AM
#1469
Moderator
Diamond Hubber
விஜய் சித்திரத்தில் ஒளிபரப்பாக இருக்கும் 7 கதைகள்
விஜய் தொலைக்காட்சி, விஜய் சித்திரம் என்ற நிகழ்ச்சியை நாளை முதல் ஒளிபரப்புகிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 3 மணிக்கு இது ஒளிபரப்பாகும். பிரபல எழுத்தாளர்களின் சிறுகதை அல்லது நாவலை ஒரு திரைப்படத்தின் தரத்தில் படம்பிடித்து இரண்டு மணிநேர திரைப்படமாகவே ஒளிபரப்புகிறார்கள். நாளை முதல் அடுத்த 7 வாரங்களில் ஒளிபரப்பாக இருக்கும் கதைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அது வருமாறு:
1. .பாயம்மா: மதத்தில் தீவிர நம்பிக்கை கொண்ட ஒரு முஸ்லிம் பெண், தன் மகள் இன்னொரு மதத்தவரை காதலித்து அவரைத்தான் திருமணம் செய்வேன் என்று பிடிவாதமாக இருக்கும்போது அவர் என்ன செய்கிறார் என்கிற கதை.
2. இரண்டாம் ஆதாம்: ஒரு நடுத்தர வயது பெண் தனது கணவரையும் இந்த சமூகத்தையும் எப்படி எதிர்கொள்கிறாள் என்கிற கதை.
3. மாரி: அநாதை ஆஸ்ரமத்தில் வளர்ந்த ஒரு இளம் பெண் இந்த சமூகத்தை எப்படி எதிர்கொண்டு ஜெயிக்கிறாள் என்கிற கதை.
4. தவளைக் கண்ணன்: பள்ளி பருவத்திலிருந்தே நண்பர்களாக இருப்பவர்களில் ஒருவன் அரசியல்வாதியாகிறான். இன்னொருவன் அவனது செயலாளர் ஆகிறான். அதன் பிறகு அவர்கள் நட்பு எப்படி இருக்கிறது என்கிற கதை.
5. கணேஷ் வசந்த்: எழுத்தாளர் சுஜாதாவின் கதை மாந்தர்களான கணேசும், வசந்தும் ஒரு முக்கிய வழக்கில் எப்படி துப்பறிகிறார்கள் என்கிற கதை.
6. அந்த ஒரு நிமிடம்: இதுவும் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் கதை.
7. பஞ்சாபகேசன் தேவசகாயம்: ஊட்டியில் உள்ள காப்பி எஸ்டேட்டில் நடக்கும் ஒரு கொலையை துப்பறியும் கதை
நன்றி: தினமலர்
-
5th October 2015, 10:57 PM
#1470
Moderator
Diamond Hubber
ஒரே தொடரில் இரண்டு கதைகள்
பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிழல் தொடர் மற்ற தனியார் தொலைக்காட்சி தொடர்களுக்கு நிகரான வரவேற்புடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. கே.ஏ.ராஜபாண்டியன் எழுதிய கதையை சையத் ரஃபிக் பாஷா இயக்குகிறார்.
முதியவர்கள், குழந்தைகள் அடைக்கலமாகி இருக்கும் அன்பு இல்லம் தான் கதை களம். இங்கு நடக்கும் சுவாரஸ்யமான, நெகிழ்ச்சியான, திடுக்கிடும் சம்பவங்களை கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. காதல் கணவனால் ஏமாற்றப்பட்ட கலா தன் குழந்தையுடன் அன்பு இல்லத்தில் போராட்டம் நிறைந்த வாழ்க்கையை வாழ்வது ஒரு கதை.
பார்வை இழந்த ஆனந்தன் அநாதையாக அன்பு இல்லத்தில் தஞ்சம் அடைகிறான். அங்கு அவனுக்கு ரஞ்சனி என்ற பெண்ணின் அன்பும், காதலும் கிடைக்கிறது. அந்த காதலுக்கு ஏற்படும் பிரச்சினைகள், அதை எதிர்த்து காதலர்கள் போராடுவது தனிக் கதை. இப்படி
ஒரே இடத்தில் நடக்கும் இரண்டு கதைகளுடன் தொடர்கிறது நிழல்கள் தொடர். தற்போது இது 100 வது எபிசோடை கடந்திருக்கிறது. பொதிகை டி.வியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
நன்றி: தினமலர்
Bookmarks