-
5th July 2015, 07:42 AM
#1601
Junior Member
Seasoned Hubber
கருவின் கரு - 155
பாகம் 2 - தந்தை
தந்தை - மகன் பந்தம்
குழந்தை பருவம்
ஆசைகள் கண்களில் தேங்க , ஆண்மையினால் அடைந்த ஒரு வெற்றியை முழுவதுமாக பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறான் - பத்து மாதங்கள் சுமந்த சுமையை அவள் இறக்கி வைக்கின்றாள் - அதை அன்று தோளில் சுமந்தவன் தான் - தன்னை நாலு பேர்கள் சுமக்கும் வரை சுமக்கின்றான் - அதற்க்கு அவன் கூலி கேட்பதில்லை - சுமந்த சுமை அவன் முதுகை ஒரு கேள்விக்குறி ஆக்குகின்றன - அவனுடைய முதுகை விட அவன் வாழ்க்கை ஒரு பெரிய கேள்விக்குறியாகும் போது அவனுடன் துணைக்கு வருவது அவனுடைய பழைய நினைவுகள் மட்டுமே .........
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
5th July 2015 07:42 AM
# ADS
Circuit advertisement
-
5th July 2015, 07:43 AM
#1602
Junior Member
Seasoned Hubber
கருவின் கரு - 156
பாகம் 2 - தந்தை
தந்தை - மகன் பந்தம்
குழந்தை பருவம்
மனதில் படுவதை யோசிக்காமல் வெளியே சொல்வது குழந்தையின் உள்ளம் ... கள்ளம் கபடம் இல்லாத அந்த குழந்தை உள்ளம் என்றுமே அவனை ஒரு ஹீரோ வாக பார்க்கிறது . வயதாகி அவன் ஒரு குழந்தையாகும் போது அந்த குழந்தை உள்ளத்தில் என்றுமே ஹீரோ வாக அமர்ந்து இருப்பது அவனுடைய பிள்ளைகள் தான் ...
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
5th July 2015, 07:44 AM
#1603
Junior Member
Seasoned Hubber
கருவின் கரு - 157
பாகம் 2 - தந்தை
தந்தை - மகன் பந்தம்
குழந்தை பருவம்
அர்த்தமே இல்லாத அந்த கபடம் அற்ற சிரிப்பு - ஒரு தந்தையின் மடி மீது ஓடி வந்து விழும் கவிதைகள் ----
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
5th July 2015, 07:44 AM
#1604
Junior Member
Seasoned Hubber
கருவின் கரு - 158
பாகம் 2 - தந்தை
தந்தை - மகன் பந்தம்
குழந்தை பருவம்
வாய் பேசத்தெரியாத குழந்தை - தந்தையின் பரிதவிப்பு - கேட்டவர்க்கு கேட்டபடி தரும் அந்த கண்ணனிடம் தஞ்சம் - உருக வைக்கும் ஒரு ப்ராத்தனை ------
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான் - ஏழை
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான் - ஏழை
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் ஆ..
தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்
தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்
தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்
தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்
கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான்
கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான்
தருமம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான்
தாளாத துயர் தீர்க்கக் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் மாயக் கண்ணன் வந்தான்
கண்னன் வந்தான்
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான் - ஏழை
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் ஆ..
முடவர்களை நடக்க வைக்கும் ப்ருந்தாவனம்
மூடர்களை அறிய வைக்கும் ப்ருந்தாவனம்
முடவர்களை நடக்க வைக்கும் ப்ருந்தாவனம்
மூடர்களை அறிய வைக்கும் ப்ருந்தாவனம்
குர்டர்களைக் காண வைக்கும் ப்ருந்தாவனம்
ஊமைகளைப் பேச வைக்கும் ப்ருந்தாவனம்
குர்டர்களைக் காண வைக்கும் ப்ருந்தாவனம்
ஊமைகளைப் பேச வைக்கும் ப்ருந்தாவனம்
அடையாத கதவிருக்கும் சந்நிதானம்
அஞ்சாத சொல்லிருக்கும் சந்நிதானம்
சந்நிதானம் கண்ணன் சந்நிதானம் சந்நிதானம்
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான் - ஏழை
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் கண்ணா கண்ணா கண்னா!
கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும்
காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும்
கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும்
காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும்
கனி மழலைக் குரல் கொடுத்துப் பாட வேண்டும்
கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும்
கனி மழலைக் குரல் கொடுத்துப் பாட வேண்டும்
கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும்
கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா
கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா
கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா
கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா
கண்ணா கண்ணா கண்ணா கண்ணா
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வ்ந்தான் - ஏழை
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
5th July 2015, 04:30 PM
#1605
Junior Member
Seasoned Hubber
நண்பர்களுக்கு வணக்கம். நேரமின்மையால் வர முடியவில்லை. மன்னிக்கவும்.
வாசு சார்,
‘வெற்றி மீது வெற்றி வந்து....’ பாடலுக்கு மனமார்ந்த நன்றிகள். தாமதமாக பாராட்டுவதற்கு மன்னிக்கவும் சார். நீங்கள் குறிப்பிட்டதுபோல மக்கள் திலகம் தனது சுறுசுறுப்பால் ராஜம்மாவை மட்டுமல்ல, நம்மையும் சுறுசுறுப்பாக்கி விடுவார். மாடிப்படியின் கைப்பிடியில் வழுக்கி வரும் அழகு சொக்கவைக்கும். பொருத்தமான இடத்தில் கர்ணன் காட்சியை இணைத்திருக்கும் உங்கள் திறமை ரசிக்க வைக்கிறது. பாராட்டுக்கள்.
அதிகம் அறியப்படாத ‘ஏன்?’ திரைப்படத்தை பற்றிய தங்களின் பதிவு உங்கள் அசாத்திய உழைப்பை காட்டுகிறது. மற்றவர்கள் ரசிப்பதற்காக தன்னையே வருத்திக் கொள்ளும் உங்கள் உழைப்புக்கு நன்றி.
ஏன்? படத்தின் பாட்டுப்புத்தகத்தை பதிவிட்ட ராகவேந்திரா சார் அவர்களுக்கும் நன்றி.
ரவி சார்,
நவரத்தின வியாபாரம் பற்றிய எனது கருத்துக்கு தங்களின் பதிலை ரசித்து சிரித்தேன். நகைச்சுவை உங்களுக்கு இயல்பாய் வருகிறது. கருவின் கரு பாடல்களும் கருத்துக்களும் பாச சங்கிலியால் எங்களை பிணைத்து விடுகிறது. பாராட்டுக்கள். நன்றிகள்.
கல்நாயக்,
பூ பாடல்களை மீண்டும் தொடங்கியிருப்பதற்கு நன்றி. ‘இறைவன் என்றொரு கவிஞன்’ பாடலை இதற்கு முன் நீங்கள் கேட்டதே இல்லையா? ஆச்சரியமாக இருக்கிறது. ஹிட்டான பாடல்தானே. ஆமாம்........... சின்னக்கண்ணனை ஏன் மறக்க நினைக்கிறீர்கள்? உங்கள் பதிவை (எண்.1403) பாருங்கள். ‘இங்கே நிறைய எழுத உற்சாகம் கொடுக்கும் சி.க.வை என்னால் மறக்காமல் இருக்க முடியாது..’ என்று கூறியிருக்கிறீர்களே? ‘ சி.க.வை என்னால் மறக்க முடியாது’ என்றல்லவா இருந்திருக்க வேண்டும்? சின்னக்கண்ணன் மீது உங்களுக்கு என்ன கோபம் அவரை மறப்பதற்கு? (சும்மா விளையாட்டுக் சொன்னேன்) சரியாக மாற்றி விடுங்கள்.
அப்புறம்... எனக்கு என்றும் 18 இல்லை. ரொம்ப பொறாமைப்பட வேண்டாம். இன்னும் சில மாதங்களில் எனக்கு 19 வயது பிறக்கப் போகிறது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு.ஆதிராம்,
உங்கள் தந்தையைப் பற்றி நீங்கள் கூறியிருப்பது கண்களை குளமாக்கியது.
திரு.ராஜேஷ்,
திரை இசையில் பக்தி பாடல்கள் அருமை. திருப்புகழை பாடப் பாட... பாடல் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களையும் கூட தலையாட்டி ரசிக்கச் செய்யும் அருமையான பாடல். நன்றி.
இங்கே பதிவிடும் எல்லாரையும் நான் மதிக்கிறேன். ஒவ்வொருவருக்கும் தனித்திறமை உண்டு. என்றாலும் நான் சொல்வதை எல்லாரும் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். எல்லாருக்கும் செல்லப் பிள்ளையான நமது சின்னக்கண்ணன் இல்லாத திரி குழந்தை இல்லாத வீடு போல வெறிச் சென்று இருக்கிறது. விடுமுறை முடிந்து எப்போது வருகிறார்?
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
-
5th July 2015, 04:31 PM
#1606
Junior Member
Seasoned Hubber
திரு.கோபால்,
பதிவுகளைப் படித்தேன். நிலைமைகளைப் புரிந்து கொண்டு அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். பதில் சொல்வதற்கு வாய்ப்பு இல்லாத நிலையில் உங்களை விமர்சிப்பது முறையோ, அழகோ அல்ல.
என்னுடைய கருத்தோடு ஒத்திசைவு கொண்டவர்களாக இல்லாவிட்டாலும் கூட, விஷயம் தெரிந்தவர்களை, திறமையாளர்களை, அவற்றை வெளிக்கொணரும் ஆற்றலும் அதற்காக கடின உழைப்பும் கொண்டவர்களை என்றும் மதிப்பவன் என்ற முறையில் வருந்துகிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
5th July 2015, 04:37 PM
#1607
Junior Member
Seasoned Hubber
‘இதை மறந்தாலே வாழ்வில் கிடைக்கும் சன்மானம்.......’
சமீபத்தில் படித்த செய்தி ஒன்று மனதை உலுக்கியது. சேலம் அருகே ஒரு பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காரணம், ஒரு கொள்ளை வழக்கில் அவரது கணவருக்கு தொடர்பு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதை அறிந்தோ என்னவோ, அந்த பெண்ணின் கணவரும் தலைமறைவாக இருந்தார். அக்கம்பக்கத்தாரின் இழிசொல் பொறுக்க முடியாமல், கணவரால் ஏற்பட்ட அவமானம் தாங்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் அந்தப் பெண்.
இதில், கொடுமை அந்தப் பெண்ணுக்கு 2 பெண் குழந்தைகள். ஒரு குழந்தைக்கு 2 வயது, இன்னொரு குழந்தைக்கு 4 வயது. விஷயம் அறிந்து 5 நாட்களுக்கு முன் தனது வீட்டுக்கு நள்ளிரவில் வந்திருக்கிறான் தலைமறைவாக இருந்த ஆசாமி. வந்தவன், தனது இருகுழந்தைகளுடன் விளையாடிவிட்டு குளிர்பானத்தில் குழந்தைகளுக்கு விஷத்தை கலந்து கொடுத்து அவர்களை கொன்று விட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டான்.
உண்மையில் தனது பெண் குழந்தைகள் மீது அவனுக்கு அளவற்ற பாசம் இருந்திருக்கிறது. அதனால்தான், தாயும் தந்தையும் இல்லாமல் ஆதரவின்றி இரு குழந்தைகளும் கஷ்டப்படக் கூடாது என்று நினைத்தவன் அவர்களையும் தன்னோடு அழைத்துக் கொண்டு போய்விட்டான். குடும்பத் தலைவன் தவறான வழியில் சென்றதால் ஒரு குடும்பமே அழிந்திருக்கிறது.
மானத்துக்கும் நல்லோர் பழிக்கும் செயல்களுக்கும் அஞ்சியிருந்தால் அவனுக்கும் அவன் குடும்பத்துக்கும் இந்த நிலையே வந்திருக்காது.
சதாரம் திரைப்படத்தில் இசை மேதை ஜி.ராமநாதன் அவர்களின் அருமையான இசையமைப்பில் திருச்சி லோகநாதன் அவர்கள் பாடும் பாடல், என்னை மிகவும் கவர்ந்த பாடல். எல்லாருக்கும் தெரிந்த பாடல்தான்.
திரு.லோகநாதன் அவர்களின் வாழ்வும் துயரமானதுதான். கடைசி காலத்தில் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். திருச்சிக்கு அருகே குணசீலம் என்ற இடத்தில் பெருமாள் கோயிலில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அவர்களுடைய குடும்பத்தார் கொண்டு வந்து வைத்திருப்பார்கள். சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட நீரை தினமும் தெளித்தால் மனநலம் சரியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அங்கு சிறிது காலம் வைக்கப்பட்டிருந்தார். பிறகு, அவர் குணமடைந்தாலும் தீவிரமாக செயல்பட முடியவில்லை. எனது அபிமான பாடகர்கள் வரிசையில் திரு.லோகநாதன் அவர்களுக்கு தனி இடம் உண்டு. அவர் பாடிய அழியாத பாடலுக்கு வருவோம்.
மானத்துக்கு பயந்து கணவனின் செயலால் ஏற்பட்ட அவமானம் தாங்கமுடியாமல் தற்கொலை செய்த பெண்ணின் நிலையை விளக்குவது போன்ற வரிகள்...
கண்ணான கணவன் தன்மானம் தன்னை
காப்பாற்றும் பெண் தெய்வம்
மனம் புண்ணாகி சிந்தும் கண்ணீரைக் காண
பொறுக்காதடா தெய்வம்
எதற்காக, அந்த ஆசாமி கொள்ளையடித்தான்? கேவலம் பணத்துக்காகத்தானே? கடுமையாக உழைத்தால் வயிற்றுக்கு சோறு நிச்சயம். அதிக பணம் வேண்டும் என்ற ஆசையால்தானே கொள்ளையடித்தான்? அதனால், அவனுக்கு என்ன இன்பம் கிடைத்து விட்டது? நேர்மையாக உழைத்து வாழ்ந்தால் குடும்பத்தாரின் மெய்யான அன்பு என்னும் ஈடில்லாத செல்வத்தோடு மகிழ்ச்சியாக வாழந்திருப்பானே? இதை புரிந்து கொள்ள மனிதன் மறுக்கிறான்.
அழியாத இன்பம் புவியோர்கள் எண்ணும்
பணம் காசிலே இல்லை
மெய்யன்பே எந்நாளும் அழியா செல்வம்
அதற்கீடு வேறில்லை..
இந்த வரிகளில், பணம் காசிலே இல்லை.. என்ற வார்த்தைகளுக்குப் பிறகு திரு.லோகநாதன் அவர்கள் அ... அ... அ... அ.. என்று ஏற்ற இறக்கத்துடன் ஒரு பிட் பாடுவார் பாருங்கள். எவ்வளவு மேதைகளை நாம் இழந்து விட்டிருக்கிறோம் என்பது புரியும்.
பாடலின் ஆரம்ப வரிகள்.....
மண் மீது மானம் ஒன்றே பிரதானம்
என்றெண்ணும் குணம் வேணும்
இதை மறந்தாலே வாழ்வில்
கிடைக்கும் சன்மானம், மாறாத அவமானம்
சிந்திக்க வைக்கும் வரிகள்.... எல்லாரையும்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
5th July 2015, 05:17 PM
#1608
Junior Member
Seasoned Hubber
கலை சார் , நீங்கள் மீண்டும் இங்கு வருவதற்கு நன்றி பல - என்னடா இன்று சொன்ன ஒரு " good morning " வேஸ்ட் ஆக போய்விட்டதே - எடுத்துக்கொள்ள யாருமே இன்று திரியின் பக்கம் வரவில்லையே என்று வருத்தப்பட்டுக்கொண்டிருந்தேன் - வாராத ஒருவர் வந்தது மட்டும் அன்றி அருமையான திரு லோகநாதனைப்பற்றிய அரிய பல தகவல்களையும் தந்து உள்ளீர்கள் - அவர் பாடிய இனிமையான பல பாடல்களில் எல்லோருடைய மனதையும் கவர்ந்த சில பாடல்கள் -உங்களுக்காக இதோ
Trichy Loganathan
Download Trichy Loganathan Hits
Aasaiye Alaipole Namellam Adan Mella
Adikkira Kai Than Anaikum Anaikura Kai
Chinnakkuti Natthana Silaraiya Mathuna
Endru Thaniyum Intah Sundhanthira Thagam
Inbam Engum Ingae Asai Puriyuthu
Indha Vazhvu Sontham Anal Aiya Inbalogam
Inithai Naamum Inainthirupom
Kaiyile Vaanginen Paiyilae Podala Kasu Pona
Kalyana Samayal Satham Kaikarigalum Pramatham
Kangalum Kavi Paduthae Kannae Un Kangalum
Koovamal Koovum Kokilam Un Kondadum
Maanilamae Sila Manidaral Enna Maruthal Paraiyah
Manmeethu Maanum Onrae Prathanam
Nilave Neethan Thoothu Sellayao
Oorar Urangayile Utrarum Thongayile Nalla Pambu
Ponnana Vazhvu Managi Ponal Thuyaram
Pottukitta Rendu Paerum Sathae Pottukanum
Purusan Veettil Vazhapogum Pennae Thangachi
Ulavum Thendral Katrinilae Odam
Vaanameethil Yenthi Odum Venilavae
Vaarai Nee Vaarai ogum Idam Vegu Thooram
Vazhkkaiyin Padam Ooridum Odum
Velli Anname Varayao Entha Vedikaiyai Nee Parayo
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
5th July 2015, 05:43 PM
#1609
Junior Member
Seasoned Hubber
நன்றி ரவி சார். எல்லாமே அருமையான பாடல்கள். சொல்ல மறந்து விட்டேன். நீங்கள் ஒவ்வொரு நாளும் குட்மார்னிங் பதிவு போடும்போது தேர்ந்தெடுக்கும் படங்கள் அருமை. அப்புறம்..... நல்லவர்களின் குட்மார்னிங் என்றுமே வீணாகாது சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
5th July 2015, 08:37 PM
#1610
Junior Member
Veteran Hubber
பாடகக் கோமாளிகளின் ஊடகப் பார்வையில் கோமான்களின் (வாழ்க்கை) நாடகங்கள் !!
இதுவும் ஒரு (வி)/(சொ)ல்லம்புகளால் மனத்தைக் கவ்வும் விதுர பாணமான மதுர கானமே ! ! படித்தால் மட்டும் போதுமா
உலகம் ஒரு நாடக மேடைதான். இறைவனின் இயக்கத்தில் நாமெல்லாம் பொம்மலாட்ட நடிகர்களே!சர்க்கஸ் கோமாளிகளின் slapstick கோமாளித்தனமும் நாம் கவலை மறந்து களித்திடவே!
நீர்க்குமிழி வாழ்க்கையில் உள்ளம் செய்யும் கோமாளித்தனங்களை எப்படி வகைப்படுத்துவது ?!படிப்பினால் பதவிகளால் பணத்தால் குணத்தால் பண்பால் அன்பால் அறிவால் ...எத்துணை சர்க்கஸ் ட்ரபீஸ் தாவுதல் போல நிலையற்ற ஏற்றத்தாழ்வுகள்? பணமிருந்தும் படிப்பில்லையேல் படித்த மனைவியின் கண்களுக்கு கணவனும் கோமாளியே !!!
அதிகம் பிரபலமாகாத நகைச்சுவை நடிகர்களுக்கும் பாடல் கருத்தினை மையப்படுத்திட screen space அளித்து பதைபதைப்பான பரிதவிப்புடன் தர்மசங்கடம் சேர்ந்த சோர்ந்த மௌனமான உடல்மொழியிலே தனது பாத்திரத்தின் மன உளைச்சல்களை வெளிப்படுத்துவதில் உச்சம் காணும் நடிகர்திலகத்துடன் குறைவற்ற நடிப்பினை நிறைவாக நல்கிடும் ராஜசுலோச்சனா!!
வாழ்க்கைப் புதிருக்கு ஒரு வகையான பொருள் பொதிந்த பாடல் வரிகள்......படித்தால் மட்டும் போதுமா....
அழுகிற கூட்டத்தின் நடுவில் சிரிப்பவர் கோமாளி.......அறிவற்ற கூட்டம் அருகில் இருந்தால் அறிஞனும் கோமாளி .....
நான்கு கோமாளிகளின் கணிப்பில் இரண்டு ஏமாளிகள் !!
Last edited by sivajisenthil; 8th July 2015 at 06:07 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
Bookmarks