-
9th July 2015, 08:39 PM
#341
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
saileshbasu
Is this image file taken during Singapore Programme during early 1970's?
திரு.சைலேஷ் சார்,
நீங்கள் கூறுவது மிகச் சரி. கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தலைவர் சிங்கப்பூர் சென்றபோது எடுத்த படம். அந்த நிகழ்ச்சியில் இதே தோற்றத்தில் சசிகபூருடன் தலைவர் பேசிக் கொண்டிருப்பது மற்றும் இருவரும் கைகோர்த்து ஓடி வருவது போன்ற புகைப்படங்கள் ஏற்கனவே நமது திரியில் இடம் பெற்றுள்ளன. என்றாலும், இந்தப் படம் இடம் பெற்றதில்லை. திரு.யுகேஷ்பாபு அவர்களுக்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th July 2015 08:39 PM
# ADS
Circuit advertisement
-
9th July 2015, 08:41 PM
#342
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
ravichandrran
திரைப்படங்களைத் தவிர, பொதுவாக தங்க நகைகளோ, மாலைகளோ அணியும் வழக்கம் தலைவருக்கு இல்லை. இந்தப் படத்தில் மாலை அணிந்திருக்கிறார். துளசி மாலை போல தெரிகிறது. ‘புன்னகையால் புவியாண்ட மன்னன்’....... தலைவரின் சிரிப்புக்கு நீங்கள் கொடுத்திருக்கும் விளக்கம் சூப்பர். இந்த புன்னகை தந்த இன்ப மயக்கத்திலிருந்துதானே இன்னும் நாம் விடுபடாமல் இருக்கிறாம். நன்றி திரு. ரவிச்சந்திரன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
9th July 2015, 08:42 PM
#343
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
puratchi nadigar mgr
கரிகாலன் வீசும் கத்தியை விட பார்வை கூர்மையானது. நன்றி திரு.லோகநாதன் சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
9th July 2015, 08:45 PM
#344
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
RAGHAVENDRA
அன்பு நண்பர்களே,
எம்.ஜி.ஆர். புகழ் பாடுவதில் தங்களுக்குள் உள்ள வேகம், ஈடுபாடு, ஆர்வம் யாவையும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கக் கூடியவை. குறுகிய காலத்தில் ஒரு உத்வேகத்துடனும் ஒரு வைராக்கியத்துடனும் 15ம் பாகத்தை நிறைவு செய்து தங்கள் பணியை செவ்வனே செய்துள்ளீர்கள். தங்கள் ஒவ்வொருவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
பரந்த உள்ளத்துடன் கூடிய பாராட்டினை வழங்கியிருக்கும் பண்பாளப் பெருந்தகை திரு.ராகவேந்திரா சாருக்கு நன்றிகள்.
தாங்கள் 7,000 பதிவுகள் கண்டிருப்பதற்கும் தொடர்ந்து பல ஆயிரங்கள் காணவும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
9th July 2015, 08:46 PM
#345
Junior Member
Seasoned Hubber
புதிய பாகத்தை தொடங்கி இருக்கும் திரு சத்யா அவர்களுக்கும் , இதற்க்கு பின்னால் தோள் கொடுத்து அரவணைத்து செல்லும் இந்த திரியின் அனைத்து உடன் பிறவா சகோதர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் - இந்த பாகமும் சிறந்த வெற்றி அடையும் என்பதில் கடுகு அளவிலும் சந்தேகம் இல்லை
அன்புடன்
ரவி
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th July 2015, 08:51 PM
#346
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th July 2015, 09:22 PM
#347
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
g94127302
புதிய பாகத்தை தொடங்கி இருக்கும் திரு சத்யா அவர்களுக்கும் , இதற்க்கு பின்னால் தோள் கொடுத்து அரவணைத்து செல்லும் இந்த திரியின் அனைத்து உடன் பிறவா சகோதர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் - இந்த பாகமும் சிறந்த வெற்றி அடையும் என்பதில் கடுகு அளவிலும் சந்தேகம் இல்லை
அன்புடன்
ரவி
நல்லிதயம் கொண்ட நண்பர் திரு.ரவி சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
9th July 2015, 09:27 PM
#348
Junior Member
Seasoned Hubber
தெளிவை ஏற்படுத்தும் அருமையான பதிவு. நன்றி திரு.செல்வகுமார் சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
9th July 2015, 09:30 PM
#349
Junior Member
Platinum Hubber
நாளை (10/07/2015) காலை 11 மணிக்கு மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த
"நம் நாடு " சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது .

தகவல் உதவி: மடிப்பாக்கம் திரு. சுந்தர்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th July 2015, 09:31 PM
#350
Junior Member
Seasoned Hubber
மணிமாறன் - 50
இன்று ஆயிரத்தில் ஒருவன் பொன்விழா ஆண்டு நிறைவு செய்து 51-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. நிறைய எழுத ஆசை. நேரம்தான் இல்லை. திரு.சிவாஜி கணேசன் அவர்களின் தீவிர ரசிகையான சகோதரி சாரதா அவர்கள் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் குறித்து அட்டகாசமான விமர்சனம் எழுதியுள்ளார். படத்தை அவர் மிகவும் ரசித்து பார்த்திருக்கிறார் என்பது நம்மை ரசிக்க செய்யும் அவரது விமர்சனத்திலிருந்தே தெரிகிறது. தலைவரையும், அவரின் கத்திச்சண்டைகளையும் திறமையையும் நடிப்பாற்றலையும் பாராட்டியிருப்பதன் மூலம், (காட்சியமைப்பு, படமாக்கப்பட்ட விதம், பாடல்களையும் கூட) நுணுகிப் பார்த்து பிரமாதமாக அலசியிருக்கிறார் என்பதை அவரது எழுத்துக்களே கட்டியம் கூறுகின்றன.
கதை சொல்ல தேவைப்படாத அளவுக்கு தமிழக மக்களுக்கு இந்தப் படம் பழகிப்போனது என்றும் இன்றும் ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் அந்தப் படம் ஒளிபரப்பாகி வருகிறது என்றும் 5 ஆண்டுகளுக்கு முன்பு அவர் கூறியிருந்தாலும் இன்றும் அதே நிலை தொடர்கிறது. என்றும் தொடரும். தொலைக்காட்சிகளில் மட்டுமல்ல, தமிழகத்தின் ஏதாவது ஒரு திரையரங்கில் ஆயிரத்தில் ஒருவன் ஓடிக்கொண்டே இருக்கிறது. 15 நாட்களுக்கு முன் வேலூர் அருகே பள்ளிகொண்டாவில் திரையிடப்பட்டதை நண்பர்கள் நமது திரியில் தெரிவித்திருந்தனர். விரைவில் சென்னையில் படம் வெளியாகப் போவதை திரு.லோகநாதன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் டிஜிட்டலில் வெளியாகி சென்னையில் மறுவெளியீட்டில் வெள்ளிவிழா கண்ட ஒரே படம் (ஆல்பட் காம்ப்ளக்சில் 190 நாட்கள்)என்ற பெருமையை பெற்று சாதனை படைத்தது. இத்தனைக்கும் அதே நேரத்தில் சத்யம் திரையரங்கிலும் 140 நாட்களுக்குமேல் ஓடியது என்பது சாதனை சக்கரவர்த்தியின் மேலும் ஒரு சாதனை.
காலத்தால் அழியாத, அழிக்கவும் முடியாத ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் குறித்து சகோதரி சாரதா அவர்கள் எழுதியிருக்கும் அற்புதமான விமர்சனத்தை, ‘அவார்டா கொடுக்கறாங்க’ என்ற இணையதளத்தில் இருந்து எடுத்து கொடுத்துள்ளேன்.
https://awardakodukkaranga.wordpress...E%A4%E0%AE%BE/
சகோதரி சாரதாவின் விமர்சனத்தை அடுத்த பதிவில் கொடுக்கிறேன். அருமையான விமர்சனத்தை வழங்கியுள்ள சகோதரி சாரதா அவர்களுக்கு பணிவான நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Bookmarks