-
29th July 2015, 03:02 PM
#1321
Junior Member
Seasoned Hubber
தலைவருக்கு எதிராக என்னதான் புழுதிவாரி தூற்றினாலும் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்பதையே துக்ளக் இதழில் வெளியான இந்த கடிதங்கள் காட்டுகிறது. நன்றி திரு.லோகநாதன் சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
29th July 2015 03:02 PM
# ADS
Circuit advertisement
-
29th July 2015, 03:03 PM
#1322
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
g94127302
திரு கலாமின் மறைவின் தாக்கம் குறையக்கூடியதே அல்ல - இப்பொழுது வாழும் அரசியல் வாதிகளைபார்க்கும் பொழுது இப்படி பட்ட ஒரு தன்னலம் இல்லாத ஒருவர் நம்மிடையே வாழ்ந்தார் என்று எண்ணும் பொழுது கண்களில் இருந்து பொங்கி வரும் கண்ணீரை நிறுத்த முடியவில்லை .........................
" A great Indian muslim died on Hindu holy day of Tholi Ekadasi in a christian hospital. He maintained secularism in his death also". Salute to great man.
====
The first pooja at Sri rameswaram temple is offered in Kalam sir's family name everyday which has been a practise since his great grand father's times.
There used to be a utsav wherein the utsav moorti was decorated n sailed in a boat (a saucer kind of a boat) which is called "teppotsava".
When the 'teppa' sailed amidst the river, the utsav murti (idol) fell into the river 400 feet deep. Everyone was worried n confused.
Immediately, kalam's great grand father dived into the river n brought the idol out from deep waters. Since then, the first pooja in the rameshwram temple is offered in/by/for their family to Lord Rameswara(one of the 12 jyotirlingas).
அரிய தகவலுக்கு நன்றி திரு.ரவி சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
29th July 2015, 03:08 PM
#1323
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
saileshbasu
வெளிவராத வெள்ளிக்கிழமை திரைப்படத்துக்காக எடுக்கப்பட்ட அரிய ஸ்டில். நன்றி சைலேஷ் சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
29th July 2015, 03:11 PM
#1324
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
esvee
இலங்கை - கொழும்பு கேபிடல் திரை அரங்கில் மக்கள் திலகத்தின் அடிமைப்பெண் திரைப்படம் தற்போது நடை பெறுகிறது . கடந்த மாதம்
இதே அரங்கில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் 18 நாட்கள் ஓடியது என்று திரு நாகர் கோயில் திரு மணி அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார் .
நன்றி திரு மணி சார் .
இலங்கையில் ஆயிரத்தில் ஒருவன் வெற்றிகரமாக 18 நாட்கள் ஓடியதையும் தற்போது அடிமைப்பெண் படம் திரையிடப்பட்டிருப்பதையும் தெரிவித்த திரு.மணி அவர்களுக்கும் பதிவிட்ட திரு.வினோத் அவர்களுக்கும் நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
29th July 2015, 08:52 PM
#1325
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
Sathya VP
சகோதரர் திரு.சத்யா அவர்களுக்கு,
பணிகள் காரணமாக சில நாட்கள் பதிவுகளை பார்க்க முடிவதில்லை. நேரம் கிடைக்கும்போது பார்க்காமல் விட்ட பதிவுகளை பார்த்து படித்து விடுவேன். இன்று அப்படி பார்த்தபோது இந்த பதிவை நிதானமாக படித்தேன். அப்போதிருந்த அரசியல் சூழ்நிலைகள் நினைவில் வந்துபோயின.
பிரதமராக இருந்த இந்திரா காந்தி அம்மையார் 1976-ல் சோவியத் யூனியனுக்கு சென்றபோது நடந்த வழியனுப்பு விழாவில் புரட்சித் தலைவரும் தமிழக காங்கிரசின் தனிப்பெரும் தலைவராக இருந்த அய்யா மூப்பனாரும் சிரித்தபடி பேசும் புகைப்படத்தையும் செய்தியையும் பார்த்தேன்.
தலைவர் மறைந்த பிறகு 1989-ம் ஆண்டு நடந்த தேர்தலில், கழகம் இரண்டாக பிளவுபட்டு புரட்சித் தலைவரின் வெற்றிச் சின்னமாம் இரட்டை இலையும் முடக்கப்பட்ட நிலையில், அதிமுக ஜெ. அணிக்கு சேவல் சின்னமும் அதிமுக ஜா. அணிக்கு இரட்டை புறா சின்னமும் தேர்தல் கமிஷனால் ஒதுக்கப்பட்டன. கட்சி பிளவுபட்டு, தலைவரின் வெற்றிச் சின்னமும் முடக்கப்பட்ட நிலையில், ஆட்சி அமைக்கும் வாய்ப்பை அதிமுக இழந்தது.
கழகம் பிளவுபடாமல் இருந்திருந்தால் 1989-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கும். அன்னை ஜானகி அம்மையார் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து கழகம் ஒன்றானது. இரட்டை இலை சின்னமும் திரும்பக் கிடைக்க அன்னை ஜானகி அம்மையார் உதவினார். அதனால், இரட்டை இலை சின்னமும் கழகத்துக்கு திரும்பக் கிடைத்தது.
சட்டப் பேரவை பொதுத் தேர்தலின் போது மதுரை கிழக்கு தொகுதிக்கும் மருங்காபுரி தொகுதிக்கும் தேர்தல் நடக்கவில்லை. அந்த தொகுதிகளுக்கு மார்ச் மாதம் இடைத்தேர்தல் நடந்தது. அந்த இடைத்தேர்தலில் ஒன்றுபட்ட அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டது. இரண்டு தொகுதிகளிலும் அதிமுகவே வெற்றி பெற்றது. கழகம் பிளவுபடாமல் இருந்திருந்தால் 1989 சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் ஆட்சியை கைப்பற்றியிருக்கும் என்பதற்கு இந்த இடைத்தேர்தல் முடிவுகளே ஆதாரம்.
89-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் தா.பாண்டியன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டது. தனித்துப் போட்டி என்றே சொல்லிவிடலாம். தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த அய்யா மூப்பனார் தலைமையில் காங்கிரஸ் தேர்தலை சந்தித்தது. அதிமுக ஜெ.அணி அணி 27 இடங்களில் வெற்றி பெற்றது. கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 3 இடங்களில் வெற்றி பெற்றது.
அய்யா மூப்பனார் தலைமையில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 26 இடங்களில் வெற்றி பெற்றது. 19.83 சதவீத ஓட்டுக்களைப் பெற்றது. அந்த அளவுக்கு அய்யா மூப்பனார் தலைமையில் காங்கிரஸ் குறிப்பிடத்தக்க வலிமையோடு இருந்தது. தலைவர் மீதும் மதிப்பும் மரியாதையும் கொண்டவர் அய்யா மூப்பனார்.
மேலே உள்ள படத்தைப் பார்த்ததும் பழைய நினைவுகள் மனதில் ஓடின. அதைத்தான் பகிர்ந்து கொண்டேன். நன்றி.
1989-ம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தல் முடிகவுகளுக்கான இணைப்பை கீழே கொடுத்திருக்கிறேன்.
https://en.wikipedia.org/wiki/Tamil_...election,_1989
அன்புடன் :கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
29th July 2015, 10:14 PM
#1326
Junior Member
Platinum Hubber
இதயக்கனி ஆசிரியர் திரு. எஸ். விஜயன் அவர்களின் "எம்.ஜி.ஆர்.கதை " நூல்
வெளியீட்டு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தொடர்ச்சி ..........

இதயக்கனி ஆசிரியர் திரு. விஜயன் வரவேற்புரை.
-
29th July 2015, 10:17 PM
#1327
Junior Member
Platinum Hubber
உடை அலங்கார நிபுணர் திரு. முத்து புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.பற்றி புகழுரை.
-
29th July 2015, 10:19 PM
#1328
Junior Member
Platinum Hubber
திரு.எம்.ஏ. முத்து அவர்களுக்கு தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவர்
பொன்னாடை அணிவிக்கிறார். அருகில் திரு. விஜயன்.
-
29th July 2015, 10:20 PM
#1329
Junior Member
Platinum Hubber
பிரான்ஸ் எம்.ஜி.ஆர். பேரவை தலைவர் உரையாற்றும்போது
-
29th July 2015, 10:22 PM
#1330
Junior Member
Platinum Hubber
பிரான்ஸ் எம்.ஜி.ஆர். பேரவை தலைவர் அவர்களுக்கு இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு தலைவர் திரு. ராஜ்குமார் பொன்னாடை போர்த்துகிறார்.அருகில்
திரு. விஜயன்.
Bookmarks