Page 152 of 402 FirstFirst ... 52102142150151152153154162202252 ... LastLast
Results 1,511 to 1,520 of 4018

Thread: Makkal Thilagam MGR -PART 16

  1. #1511
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like
    TODAY 7.00PM WATCH SUNLIFE TV




  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1512
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like
    TODAY 6.00AM WATCH JMOVIE




  4. #1513
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழாவை எல்லோரும் ஆவலாய் எதிர்பார்க்கும் இந்த வேளையில் ...
    அந்த நூற்றாண்டு விழா கொண்டாட்டம் என்று ஆரம்பிப்பது சரியாக இருக்கும் என்று ஒரு சின்ன ஆய்வு செய்ததன் விளைவு.....:
    ஆச்சர்யம்..... அதிர்ச்சி.... இறுமாப்பு..... இப்படி எல்லா உணர்ச்சியும் கலந்த ஒரு ......

    99 ஆண்டுகள் என்று முடிவடைகிறதோ..... அன்றைய தினம் தானே.... 100 ஆவது ஆண்டின் தொடக்க நாள்.... அப்படியானால்.....

    17-01-1917 எம்.ஜி.ஆர். பிறந்த நாள்....:
    99 ஆண்டுகள் X 365 நாட்கள் ... 36135 நாட்கள்
    17.01.1917 உடன் 36135 நாட்களை கூட்டினால்...., நமக்கு கிடைப்பது......
    24-12-2015 எம்.ஜி.ஆரின் நினைவு நாள்....
    அவர் திட்டமிட்டு வாழ்ந்தாரா.....?
    மீண்டும் அந்த மந்திர சக்தி ஜனிக்க வாய்ப்பு இருக்கிறதா.....?
    என்னால்..... இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடிய வில்லை.....
    ஆம்..... உண்மையில் எம்.ஜி.ஆர். ஒரு அபூர்வ சக்தி தான்.....


    Thanks to Sri. Mayil Raj, FB.
    Last edited by saileshbasu; 2nd August 2015 at 02:17 PM.

  5. Thanks Russellzlc thanked for this post
    Likes Russellzlc liked this post
  6. #1514
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Muthaiyan Ammu View Post
    ‘மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம்..’


    சில விஷயங்களைப் பார்த்தால் நமக்கு கோபம் வரத்தான் செய்கிறது.

    முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி அவர்களின் படுகொலை வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதயத்தில் ஈரமுள்ள யாரும் அதை நியாயப்படுத்த மாட்டார்கள். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் உட்பட 7 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாக நீதிமன்றத்தால் குறைக்கப்பட்டது. இதை எதிர்த்து ஏற்கனவே மத்திய காங்கிரஸ் அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி ஆனது. பாரதிய ஜனதா தலைமையிலான அரசும் தூக்கு தண்டனையை ரத்து செய்தது தவறு என்று கூறி இரண்டாம் முறையாக தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவையும் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    அதோடு விடவில்லை மத்திய அரசு. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருப்பதோடு, இந்த விவகாரத்தை தமிழக அரசு அரசியலாக்குகிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளது.

    ஆரம்பத்தில் கூறியிருப்பது போல திரு. ராஜிவ் காந்தி அவர்களின் படுகொலையை யாரும் ஏற்க முடியாது. கடுமையாக கண்டிக்கத்தக்கது. அதே நேரம், குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றவர்கள் சுமார் 25 ஆண்டுகளாக சிறையில் உள்ளார்கள். இதை மனதில் கொண்டுதான் மனிதாபிமான அடிப்படையில் அதிமுக தலைமையிலான தமிழக அரசு (அதுவும் விடுதலை குறித்து தமிழக அரசு முடிவு செய்யலாம் என்ற உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி) அவர்களை விடுவிக்க உத்தரவிட்டது.

    அதிலும் கூட, பேரறிவாளன் சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது மட்டுமல்ல. அவரை விசாரித்த போலீஸ் அதிகாரி தியாகராஜன் என்பவர் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ‘பேட்டரி வாங்கிக் கொடுத்தேன். ஆனால், அது எதற்கு என்று தெரியாது’ என்று பேரறிவாளன் கூறியதை அவரது வாக்குமூலத்தில் நான் பதிவு செய்யவில்லை என்று திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். அதை பதிவு செய்திருந்தால் தூக்கு தண்டனை அவருக்கு விதிக்கப்படாமல் இருந்திருப்பதற்கு கூட வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

    ஆயுள் தண்டனை என்பது ஆயுள் இருக்கும் வரை என்று சில விளக்கங்கள் அளிக்கப்பட்டாலும் கூட 10 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்தவர்களை அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு விடுதலை செய்த முன்னுதாரணங்கள் உண்டு.

    ‘அதோடு இதை பொருத்திப் பார்க்கக் கூடாது. நாட்டின் தலைவரை கொன்ற வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் இவர்கள்’ என்று சிலர் கூறலாம். இவர்கள் 25 ஆண்டுகளை சிறையில் கழித்திருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல, மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சவுக்கு கொலை சதியில் உடந்தையாக இருந்ததாக அவரது தம்பி கோபால் கோட்சேக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், சில ஆண்டுகள் கழித்து அவரை மகாராஷ்டிரா அரசு விடுதலை செய்தது. பின்னர், பல ஆண்டுகள் சுதந்திரமாக வாழ்ந்து 10 ஆண்டுகளுக்கு முன்தான் அவர் புனேவில் இறந்தார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    இதைத்தான் முதலில் சொன்னேன்... சில விஷயங்களைப் பார்த்தால் கோபம் வரத்தான் செய்கிறது. ஆனால், வயதும் முதிர்ச்சியும் அதனால் விளைந்த பக்குவமும் உடனே தடுத்து விடுகின்றன.

    மேலும், நமது வாழ்க்கைக்கு தலைவர்தான் நல்வழி காட்டியிருக்கிறாரே? எப்படி வாழ வேண்டும் என்பதற்கு வழிமுறைகளை வகுத்துக் கொடுத்திருக்கிறாரே? தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமின்றி, திரைப்படங்கள் மூலமாகவும்.

    நாட்டின் அரசியல் நிலைமைகளை அப்பட்டமாய் காட்டும் பிரம்மாண்ட வெற்றிப் படமான நம்நாடு திரைக்காவியத்தில், ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ பாடலில், காவி நிற சட்டை சிமெண்ட் நிற பேண்ட்டில் தலைவர் செம கியூட்டாக இருப்பார்.

    ஏழைகள் குடியிருக்கும் பகுதியை நகராட்சி அதிகாரிகள் உதவியோடு கபளீகரம் செய்ய நினைக்கும் ஆளவந்தார் பாத்திரத்தில் வரும் திரு.அசோகனின் தில்லுமுல்லுகளை தடுப்பதால் நகராட்சியில் பணியாற்றிய தலைவரின் வேலை பறிபோயிருக்கும். தேங்காய் சீனிவாசன் தலைவர் வீட்டுக்கு வந்து விஷயத்தை போட்டுக்கொடுக்க, அண்ணன் திரு.பகவதி அவர்கள் தலைவர் மீது கோபப்படுவார். சாப்பாடு வேண்டாம் என்பார். அவரது குழந்தைகளும் (குட்டி பத்மினி, ஸ்ரீதேவி) கோபத்தில் சாப்பிட மறுக்கும். பண்டரிபாய் அவர்கள் அலுத்துக் கொள்வார். அப்போது, குழந்தைகளுக்கு தலைவர் புத்திமதி கூறுவது போல பாடல்.

    பாடலின் முடிவில், குழந்தைகள் திரு.பகவதியை சமாதானப்படுத்த அவர் சிரித்துக் கொண்டே சாப்பிட எழுவார். உடனே தலைவர் பண்டரிபாயை பார்த்து ‘போங்க, போங்க, இதுதான் சமயம்.. எல்லாருக்கும் சாப்பாடு போடுங்க..’ என்பது போல கைகாட்டி அவசரப்படுத்துவார். அதை அவர் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. அவரும் சிரித்துக் கொண்டே வந்தால் போதுமானதே.

    ஆனால், குடும்பத்தின் பாசப் பிணைப்பை காட்டுவது மட்டுமல்ல, காட்சியுடனும் நம்மை பிணைக்கும் தலைவரின் இந்த உடல் மொழி. பண்டரிபாயும் மாறிய நிலைமையைக் கண்டு மகிழ்வுடன் அடுக்களைக்குள் நுழைவதும், அவரைத் தொடரும் எல்லாரும் சிரித்த முகத்துடன் சாப்பிட அமர்வதும் கோபதாபங்களுக்கிடையிலும் பாசத்தையும் நேசத்தையும் காட்டும் சராசரி குடும்பங்களில் காணுவது போன்ற ரசமான காட்சி.

    பாடலில், ‘மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம், மெய்யான அன்பே தெய்வீகமாகும்’ என்ற வரிகள் நாம் மனதில் கொள்ள வேண்டியவை. கோபம் என்பது செயலாய் வெளிப்பட்டு விடக்கூடாது என்பதற்கும் மேலே ‘மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம்’ என்கிறார் தலைவர். மனதில் கூட கோபம் கொள்ளக் கூடாது என வலியுறுத்துகிறார், தன்னை சுட்டவரைக் கூட நினைவு திரும்பியதும் ‘அண்ணன் எப்படி இருக்கிறார்?’ என்று கேட்ட கோபம் கொள்ளாத, மெய்யான அன்பின் தெய்வீகத்தை காட்டிய அந்த உதாரண புருஷர்.

    பாடலில் வரும்,

    ‘விழிபோல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்
    தவறான பேர்க்கு நல்வழி காட்ட வேண்டும்
    ஜனநாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர்
    தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்..’

    என்ற வரிகளின் போது அதில் பொதிந்துள்ள அர்த்தத்தை புரிந்து கொண்ட மக்கள் மேலும் உற்சாகமடையும் வகையில், ‘தென்னாட்டு காந்தி...’ வரிகளின் போது தலைவருக்கு பின்னே பேரறிஞரின் படம் காட்டப்படும்போது திரையரங்கே கரவொலியாலும் விசிலாலும் அதிரும்.

    ஜனநாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர்... என்று சொன்ன தென்னாட்டு காந்தி பேரறிஞர் அண்ணா சொன்ன முக்கியமான விஷயம் ஒன்று உண்டு. எல்லாருக்கும் தெரிந்ததுதான். அது...

    ‘சட்டம் ஒரு இருட்டறை..’

    ‘அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு..’

    இதையடுத்து, பேரறிஞர் சொன்ன வரிதான் மிகவும் முக்கியமானது.

    ‘அந்த விளக்கு பெரும்பாலும் ஏழைகளுக்கு கிடைப்பதில்லை’.


    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்


  7. #1515
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  8. #1516
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  9. #1517
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  10. #1518
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  11. #1519
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  12. #1520
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •