-
14th August 2015, 06:49 PM
#11
Junior Member
Seasoned Hubber
நமது நண்பர்களுக்கு ஒரு விளக்கம்.
திரு.குமார் சார் இன்று இதயக்கனி விழாவில் திரு.முக்தா சீனிவாசன் அவர்களின் பேச்சை பதிவிட்டுள்ளார். இதயக்கனி திரைப்பட விழாவில் முக்தா சீனிவாசன் அவர்கள் தவறுதலாக ஒரு தகவலை சொல்லியிருக்கிறார். தவறுதல் எல்லாருக்கும் சகஜம். அதற்காக அவர் பேசியது எல்லாமே தவறு, பொய் என்று சொல்லிவிட முடியாதே.
உதாரணமாக, ராஜராஜசோழன் திரைப்படம் தமிழகத்தில் எங்குமே 100 நாட்கள் ஓடவில்லை. எனக்குத் தெரிந்து அமெரிக்காவிலும் அந்தப் படம் ஓடியதாக தெரியவில்லை. ஆனால், கல்வெட்டிலேயே அந்தப் படம் 100 நாட்கள் ஓடியதாக பொறித்து வைத்துள்ளனர். (சேலம் அலங்காரில் உழைக்கும் கரங்கள் திரைப்படம் 96 நாட்கள் ஓடியிருந்தாலும் நாம் அதை 100 நாள் பட்டியலில் சேர்ப்பதில்லை)
அந்த தவறான தகவலுக்காக, நடிகர் திலகம் மரியாதைக்குரிய திரு.சிவாஜிகணேசன் அவர்கள் நடித்த எந்த படங்களுமே 100 நாட்கள் ஓடியதில்லை என்று சொல்ல முடியுமா? அவரது பல படங்கள் 100 நாட்கள் ஓடியவைதான்.
முக்தா சீனிவாசன் அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தோறும் தலைவர் வீட்டில் இருந்து புதிய கதராடை செல்லும். இதை அவரே தெரிவித்திருக்கிறார். அதேபோல, திரு.பாலாஜி அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தலைவரை சந்தித்து 100 ரூபாய் பெற்றுக் கொள்வார். (இதற்கு அவர் ஒரு நிகழ்ச்சி சொல்லுவார். இப்போது வேண்டாம்) அந்த அளவுக்கு அவர்கள் இருவரும் தலைவருக்கு நெருக்கமாக இருந்தனர். ஆனால், இருவரும் தலைவரை வைத்து படம் தயாரித்ததில்லை.
அதுபோல, மரியாதைக்குரிய திரு.சின்னப்பா தேவர் அவர்களும் நடிகர் திலகத்தின் நெருங்கிய நண்பர்தான். அவரது தலைமையில்தான் தேவருக்கு மணிவிழா நடத்தப்பட்டது. அந்த அளவுக்கு நெருக்கமானவர்கள். ஆனாலும், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை வைத்து தேவர் அவர்கள் ஒரு படம் கூட தயாரித்ததில்லை. அதற்கு என்ன காரணமோ, அதே காரணம்தான் திரு.முக்தாவும் திரு. பாலாஜியும் தலைவரை வைத்து ஒரு படம் கூட எடுக்காததற்கும் காரணம்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Last edited by KALAIVENTHAN; 16th August 2015 at 03:32 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th August 2015 06:49 PM
# ADS
Circuit advertisement
Bookmarks