-
14th August 2015, 06:49 PM
#1981
Junior Member
Seasoned Hubber
நமது நண்பர்களுக்கு ஒரு விளக்கம்.
திரு.குமார் சார் இன்று இதயக்கனி விழாவில் திரு.முக்தா சீனிவாசன் அவர்களின் பேச்சை பதிவிட்டுள்ளார். இதயக்கனி திரைப்பட விழாவில் முக்தா சீனிவாசன் அவர்கள் தவறுதலாக ஒரு தகவலை சொல்லியிருக்கிறார். தவறுதல் எல்லாருக்கும் சகஜம். அதற்காக அவர் பேசியது எல்லாமே தவறு, பொய் என்று சொல்லிவிட முடியாதே.
உதாரணமாக, ராஜராஜசோழன் திரைப்படம் தமிழகத்தில் எங்குமே 100 நாட்கள் ஓடவில்லை. எனக்குத் தெரிந்து அமெரிக்காவிலும் அந்தப் படம் ஓடியதாக தெரியவில்லை. ஆனால், கல்வெட்டிலேயே அந்தப் படம் 100 நாட்கள் ஓடியதாக பொறித்து வைத்துள்ளனர். (சேலம் அலங்காரில் உழைக்கும் கரங்கள் திரைப்படம் 96 நாட்கள் ஓடியிருந்தாலும் நாம் அதை 100 நாள் பட்டியலில் சேர்ப்பதில்லை)
அந்த தவறான தகவலுக்காக, நடிகர் திலகம் மரியாதைக்குரிய திரு.சிவாஜிகணேசன் அவர்கள் நடித்த எந்த படங்களுமே 100 நாட்கள் ஓடியதில்லை என்று சொல்ல முடியுமா? அவரது பல படங்கள் 100 நாட்கள் ஓடியவைதான்.
முக்தா சீனிவாசன் அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தோறும் தலைவர் வீட்டில் இருந்து புதிய கதராடை செல்லும். இதை அவரே தெரிவித்திருக்கிறார். அதேபோல, திரு.பாலாஜி அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தலைவரை சந்தித்து 100 ரூபாய் பெற்றுக் கொள்வார். (இதற்கு அவர் ஒரு நிகழ்ச்சி சொல்லுவார். இப்போது வேண்டாம்) அந்த அளவுக்கு அவர்கள் இருவரும் தலைவருக்கு நெருக்கமாக இருந்தனர். ஆனால், இருவரும் தலைவரை வைத்து படம் தயாரித்ததில்லை.
அதுபோல, மரியாதைக்குரிய திரு.சின்னப்பா தேவர் அவர்களும் நடிகர் திலகத்தின் நெருங்கிய நண்பர்தான். அவரது தலைமையில்தான் தேவருக்கு மணிவிழா நடத்தப்பட்டது. அந்த அளவுக்கு நெருக்கமானவர்கள். ஆனாலும், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை வைத்து தேவர் அவர்கள் ஒரு படம் கூட தயாரித்ததில்லை. அதற்கு என்ன காரணமோ, அதே காரணம்தான் திரு.முக்தாவும் திரு. பாலாஜியும் தலைவரை வைத்து ஒரு படம் கூட எடுக்காததற்கும் காரணம்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Last edited by KALAIVENTHAN; 16th August 2015 at 03:32 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th August 2015 06:49 PM
# ADS
Circuit advertisement
-
14th August 2015, 07:35 PM
#1982
Junior Member
Seasoned Hubber
நமது நண்பர்கள் தெரிந்து கொள்வதற்காக இந்த விளக்கம்.
தலைவர் கதாநாயகனாக நடித்த 115 படங்களில் 6 படங்கள் வெள்ளி விழா கண்டவை. திரு.சிவாஜிகணேசன் அவர்கள் நடித்த முதல் 200 படங்களில் (1979 வரை )10 படங்கள் வெள்ளி விழா கண்டவை.
115 படங்களுக்கு = 6 படங்கள் வெள்ளி விழா.
200 படங்களுக்கு = 10 படங்கள் வெள்ளி விழா
இதை மட்டுமல்ல,
தலைவர் திரையுலகில் இருக்கும் வரை அதிகம் சம்பளம் வாங்கிய நடிகர் அவர்தான் என்று கூறியிருந்தேன். அவரை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் யாரும் நஷ்டப்பட்டதில்லை என்றும் கூறியிருந்தேன். எல்லாரும் புரிந்து கொண்டால் சரி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
14th August 2015, 07:48 PM
#1983
Junior Member
Seasoned Hubber
மேலே உள்ள பதிவு குறித்து ஒரு விளக்கம்.
திரிசூலம் படம் 1979ம் ஆண்டு வெளியானது. அப்போது தலைவர் திரையுலகில் இல்லை. 1978 வரையில் என்று மாற்று முகாம் நண்பர்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருப்பதை கணக்கில் கொண்டால் திரிசூலம் அந்தக் கணக்கில் வராது. அப்படிப் பார்த்தால் 1978ம் ஆண்டு வரை அவர்களுக்கு, அதாவது 199 படங்களுக்கு 9 படங்கள் வெள்ளி விழா என்றுதான் கொள்ளவேண்டும்.
1978ம் ஆண்டு வரை
தலைவரின் 115 படங்களில் வெள்ளி விழா கண்டவை = 6 படங்கள்
திரு.சிவாஜிகணேசனின் 199 படங்களில் வெள்ளி விழா = 9 படங்கள்
மற்றபடி, அதிக சம்பளம் குறித்தும் தலைவரை வைத்து படம் எடுத்தவர்கள் நஷ்டம் அடைந்ததில்லை என்று கூறியிருப்பதிலும் எந்த மாற்றமும் இல்லை.
நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Last edited by KALAIVENTHAN; 14th August 2015 at 07:53 PM.
-
14th August 2015, 08:20 PM
#1984
Junior Member
Seasoned Hubber

நண்பர்களுக்கு,
நாளை சுதந்திர தினம். விடுமுறை நாள் என்றாலும் பல்வேறு பணிகள் இருப்பதால் நாளை என்னால் திரிக்கு வர முடியாது. முடிந்தால் நாளை மறுநாள் வருகிறேன்.
சுதந்திர தினம் என்பது வெள்ளையனை கணக்கு தீர்த்த நாள் மட்டுமல்ல, நமக்கு நாமே கணக்கு பார்க்கும் நாள் என்று பேரறிஞர் அண்ணா கூறினார்.
அந்த வகையில், லஞ்சமற்ற, ஊழலற்ற, மதச்சார்பற்ற, வறுமை ஒழிந்த, வளமிக்க நாடாக நாம் மாறியிருக்கிறோமா என்பதை நமக்கு நாமே கணக்கு பார்க்கும் நாள். பார்ப்போம்.
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
14th August 2015, 08:52 PM
#1985
Junior Member
Platinum Hubber
நண்பர்களே தப்பான பதிவுகளை செய்யவேணாம்..சேலம் அலங்காரில் உழைக்கும் கரங்கள் வெளியிடப்படவில்லை.. சங்கத்திலும், கல்பனாவிலும் சேலத்தில் இரண்டு திரையரங்கிலும் வெளியிடப்பட்டது. எனக்கு நன்றாக தெரியும்.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
14th August 2015, 09:04 PM
#1986
Junior Member
Diamond Hubber
ஒரு பழைய காமெடி நினைவிற்கு வந்தது l.i.c. கட்டிடம், சென்ட்ரல் ரயில்வே நிலையம், எழும்பூர் ரயில்வே நிலையம் போன்ற கட்டிடங்களை பார்த்து ஒரு நபர் "இந்த கட்டிடம் என்னது; இந்த கட்டிடம் என்னது " என்று சொல்லிக்கொண்டு இருந்தார்! இந்த "கட்டிடங்கள் தனது" என்று பதிவு செய்ய ஆதாரம் இல்லாமல் செல்லவேண்டாம் என்பது எனது வேண்டுகோள்.
Last edited by saileshbasu; 15th August 2015 at 12:35 AM.
-
14th August 2015, 09:22 PM
#1987
Junior Member
Diamond Hubber
கருணையே இல்லாத இடத்தில் எவளவு "நிதி" இருந்தாலும் பயனில்லை.
- புரட்சித்தலைவர்
-
14th August 2015, 09:33 PM
#1988
Junior Member
Diamond Hubber
Last edited by saileshbasu; 14th August 2015 at 09:59 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th August 2015, 09:53 PM
#1989
Junior Member
Seasoned Hubber
நண்பர் திரு.முத்தையன் அம்மு அவர்களுக்கு,
சேலம் சங்கம் தியேட்டரில் நீதிக்குத் தலைவணங்கு படம் 1976 மார்ச் மாதம் 18-ம் தேதி ரிலீஸ் ஆகி அதே தியேட்டரில் 100 நாட்கள் ஓடியுள்ளது.
உழைக்கும் கரங்கள் படம் மே 23-ம் தேதி ரீலீஸ் ஆனது. எனவே, சங்கம் தியேட்டரில் உழைக்கும் கரங்கள் ரீலிஸ் ஆகியிருக்க வாய்ப்பில்லை.
மேலும், நடிகர் திலகம் திரியில் சேலம் பேலஸில் அவன்தான் மனிதன் படம் திரையிடப்பட்டது என்று கூறியிருக்கிறீர்கள். சேலம் நியூசினிமாவில் அவன்தான் மனிதன் படம் ரீலிஸ் ஆகி 100 நாட்கள் ஓடியது.
எதற்கும் நீங்கள் தெரிவித்துள்ள தகவலை சரிபாருங்கள் என்று அன்புடன் கோருகிறேன். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
14th August 2015, 10:38 PM
#1990
Junior Member
Diamond Hubber
Bookmarks