-
15th August 2015, 04:14 PM
#2651
Senior Member
Senior Hubber
சி.செ.. என்னை விட பாடல்கள் மிகத் தெரிந்த பெரியவங்கள்ளாம் இருக்காங்க(மதுண்ணா, வாசு, ராகவேந்தர்) ..அவங்களைவிட்டுட்டு நான் ரவிக் ஷாங்க்ஸ் எப்படி எழுதறது ( தெரியாதுங்கறது வேறுவிஷயம்).. இயற்கைக்கு விரோதமாய்டும்..அட..இயற்கை..
இந்த இயற்கை இருக்கிறதே எவ்வளவு அழகு..கொஞ்சம் லெஷரா இருந்தா வியாசமே எழுதலாம்.. இப்போதைக்கு முன்பெழுதிய வெண்பா..
பாரில் இருப்பதென்ன பார்ப்பதெலாம் வண்ணமயத்
தேரில் பவனிவரும் தெள்ளமுதம் - வாரியே
வள்ளலெனத் தான்வழங்கி வாகாய்ச் சிரித்தபடி
அள்ளும் இயற்கையே ஆம்
*
இசையோடு தெய்வம் வந்து விளையாடும் வீடு.. வாணிஸ்ரீ ஜெய்ஷங்கர்.. போட்டாச் இல்லைன்னு நினைகக்றேன்.. அழகியபாடல்
Last edited by chinnakkannan; 15th August 2015 at 04:34 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
15th August 2015 04:14 PM
# ADS
Circuit advertisement
-
15th August 2015, 04:22 PM
#2652
Senior Member
Senior Hubber
இங்கே சமர்த்தா இயற்கை எழிலைப் பாடுவது ஜெயசித்ரா
இயற்கை எழில் கொஞ்சுகின்ற ..எழில் மடந்தை..
அப்புறம் வானிலே மண்ணிலே வழியிலே ஒளியிலே எல்லாம் நீ தானம்மா ..வாணிஸ்ரீ இன் இருளும் ஒளியும்..
இயற்கை எனும் இளைய கன்னி ஏங்குகிறாள்
அப்புறம் இன்னும் நிறைய இருக்கே..
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
15th August 2015, 07:34 PM
#2653
Senior Member
Diamond Hubber
ஆமாம்.... இருக்கே சி.க..
சுசீலா குரலில் அங்கே தேன் சிந்தப் பாடிய ஜெயசித்ரா ஜானகி குரலில் கல்யாணமாம் கல்யாணத்துக்கு பாடுவது இயற்கை எனும் இளமை நாட்டிய சாலையைப் பற்றி
-
Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
-
15th August 2015, 08:11 PM
#2654
Senior Member
Senior Hubber
ஆமாம்..தாங்க்ஸ் மதுண்ணா.. ஆனா இந்த இளமை நாட்டியச் சாலைல எனக்கொருகுறை உண்டு.. முதல்ல இ. நா.சா பாடிமுடிச்சவொடனே ஆத்தங்கரையில் காத்திருந்தா பாமா ..ன்னு வேகமா ஆரம்பிக்கறது.. வைகை நதி பெருகி வர... ந்னு ஜெய்சங்கர் பாடறது என்னவோ ஒட்டாதது போல ஃபிலிங்க்..
காட்டுக்குள்ளே திருவிழா கன்னிப்பொண்ணு மணவிழா
காட்டு ராணி க் கோட்டையிலே கதவுகளில்லை
மூங்கில் இலை மேலே தூங்கும் பனி போலே...(ஹை.. எனக்குப் பிடிச்ச பாட்டாச்சே)
இன்னும் சட்னு நினைவுக்கு வல்லியே..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th August 2015, 09:14 PM
#2655
Junior Member
Seasoned Hubber
செய்நன்றிக்கடன் ( Gratitude ) :
பதிவு 1
நம் பிறந்தது முதல் இந்த உலகத்தை விட்டு செல்லும் வரை பலருக்கு நன்றி சொல்ல கடன் பட்டுள்ளோம் - நம்மை பெற்றவர்களுக்கு , மனைவிக்கு , நம் குழந்தைகளுக்கு ,நம்முடன் வளரும் உடன் பிறப்புக்களுக்கு , நம் ஆசிரியை , ஆசிரியர்களுக்கு , உறவினர்களுக்கு , நண்பர்களுக்கு , அடுத்த வீட்டில் இருப்பவர்களுக்கு , இன்னும் கண்களுக்கு தென் படாமல் நம் வாழ்க்கையில் நாட்டம் கொள்பவர்களுக்கு - சொல்லிக்கொண்டே போகலாம் - முடிவில்லாத ஆனால் இனிப்பான செயல் - மறந்துவிடக்கூடிய பல சமாச்சாரங்களில் இதுவும் முக்கியமான ஒன்று - நன்றி என்று உச்சரிக்கும் பொழுது உடனே நினைவில் வருவது நாய் தான் - எந்த மனிதனும் நினைவில் வருவதில்லை . சிலர் வருகிறார்கள் - அவர்களை பற்றிய ஒரு சின்ன தொகுப்பு இது - ஒரு புதிய கண்ணோட்டத்தில் -----
ஒரு சிறுவன் ஒரு ஓடையில் தனியாக மீன் பிடித்துக்கொண்டிருந்தான் - பல மீன்கள் அவனின் திறமை மூலம் அவனிடம் வந்து சரணடைந்தன . ஒரு வழிப்போக்கன் அந்த சிறுவனின் திறமையை மிகவும் ரசித்தான் - இந்த சிறு வயதில் என்ன திறமை !! - பலருக்கும் கிடைக்காத மீன்கள் இவனிடம் மிகவும் எளிதாக தஞ்சம் அடைகின்றதே என்று வியந்த வண்ணம் அந்த சிறுவனிடம் சென்றான் - அவனிடம் பேச்சுகொடுத்தான் " தம்பி - உன் திறமை என்னை வெகுவாக வியக்க வைத்தது - ஒருவரின் உதவியும் இல்லாமல் தனியாக மீன் பிடிக்கிறாயே - எப்படி இந்த திறமையை வளர்த்துக்கொண்டாய் ? " என்றான்
" ஐயா ! மிக்க நன்றி என்னை புகழ்வதற்கு - ஆனால் நீங்கள் சொல்வதில் ஒரு திருத்தம் தேவை - "ஒருவரின் உதவி இல்லாமல் என்று சொன்னீர்கள் - அது தவறு - ஒருவரின் உதவியுடன் தான் மீன் பிடித்துக்கொண்டுருக்கிறேன் ... "
" சுற்றும் முற்றும் பார்த்த அந்த வழிப்போக்கன் அங்கே யாருமே இல்லாததைப்பார்த்து " தம்பி , ஏன் பொய் சொல்கிறாய் - இங்கு கண்ணுக்கு எட்டும் தூரம் வரை யாருமே இல்லையே என்னைத்தவிர " என்றான் .
" ஐயா ! இதோ பாருங்கள் - இந்த ஹூக் யை பாருங்கள் , அதில் கட்டப்பட்டுள்ள பைட் ( சிறு புழு ) யைப்பாருங்கள் - இதன் உதவியுடன் தான் மீன் பிடிக்கிறேன் - யாருமே பிறர் உதவி இல்லாமல் இந்த உலகத்தில் வாழவே முடியாது - நம்மில் பலர் இதை ஒப்புக்கொள்வதில்லை " என்றான் அந்த சிறுவன் - வாயடைத்துப்போனான் அந்த வழிப்போக்கன் .
பதிவு 2.
பாரதப்போர் முடிவடைந்தது - பாசறையில் தூக்கம் வராமல் உலாத்திக்கொண்டிருந்தான் அர்ஜுனன் - சொல்ல முடியாத துக்கம் - நிம்மதி இல்லாத வெற்றி !! தூக்கம் வர மறுத்தது . கண்ணன் அவனின் வேதனையை புரிந்துக்கொண்டு அவனிடம் வந்தான் .
" அர்ஜுனா வெற்றியின் உச்சியில் இருக்கிறாய் - சந்தோஷமாக இல்லாமல் உன் முகம் ஏன் இத்தனை வேதனை பிடுங்குகிறது ? " எல்லாம் உணர்ந்தவன் எதுவுமே தெரியாதவன் போல வினாவினான் .
" கண்ணா - நாம் ஜெயித்தது உண்மை ! ஆனால் இந்த வெற்றி கர்ணனுக்குத்தான் செல்லவேண்டும் - என்னை தம்பி என்று தெரிந்தும் என்னுடன் போர் புரிந்தான் - அவன் நிலைமையில் நான் இருந்திருந்தால் என்னால் இவ்வளவு அழகாக அற்புதமாக போர் செய்திருக்க முடியுமா ? உன் கபடம் மூலம் தானே நான் அவனை வென்றேன் ! - அவன் செய்த தர்மம் அவனை காத்தும் உன் தந்திரத்தால் அவனை வீழ்த்தினேன் - இது வெற்றியா கண்ணா ? இதனை நான் கொண்டாட வேண்டுமா ?? "
உலகை வென்றவன் சிரித்தான் .. " அர்ஜுனா நான் உனக்கு சொன்ன கீதை முழுவதும் கர்ணனுக்கு சொல்லியிருக்க வேண்டும் - நான் சொல்லி நீ இன்னும் புரிந்துக்கொள்ள வில்லை - நான் சொல்லாமல் கர்ணன் புரிந்துகொண்டான் .. அவன் செய்த தர்மத்தை விட அவனின் செய்நன்றி குணம் அவனை உன்னை விட புகழ் உள்ளவனாக ஆக்கியது - உலகத்தில் கங்கையை விட புனிதமானது இந்த செய்நன்றி குணம் தான் - இது இல்லாதவன் வாழ்ந்தும் ஒரு உபயோகமும் இல்லை - இதை மறந்தவன் என்னை மறந்தவன் - நான் சொன்ன கீதையை புரிந்துக்கொள்ளாதவன் .
பதிவு 3.
நம் வாழும் நாட்கள் மிகவும் குறைவு - நன்றி எல்லோருக்கும் சொல்ல வேண்டுமானால் இந்த ஒரு பிறவி போதாது - இருந்தாலும் பிறகு சொல்லிக்கொள்ளலாம் , நேரம் இருக்கிறது என்று இருந்து விடாதீர்கள் - எப்ப எப்ப முடியுமோ அப்ப அப்ப உங்களுக்கு சிறிய உதவி செய்தவர்களையும் மறக்காமல் நன்றி சொல்லுங்கள் - மனைவியோ , நம் குழந்தைகளோ , நம்மை பெற்றவர்களோ , நண்பர்களோ , நம் வாழ்வில் அக்கறை காட்டிய , காட்டிக்கொண்டிருக்கும் அந்த உன்னத ஆத்மாக்களுக்கு நன்றி சொல்ல மறந்து விடாதீர்கள் . உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்குவதில்லை நன்றிக்கடன் செய்து முடிக்கும் வரை ....
பதிவு 4
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது..
ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகயும் கொடுத்தாலும் சமம் ஆகாது
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
நமக்கு நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிறியது என்றாலும், உதவிய நேரத்தை எண்ண அது இந்தப் பூமியை விட மிகப் பெரியதாகும்.
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.
தினை அளவாக மிகச் சிறிய உதவியே செய்யப்பெற்றிருந்தாலும் உதவியின் பயனை நன்கு அறிந்தவர் அதைப் பனை அளவு மிகப் பெரிய உதவியாய்க் கருதுவர்.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு வழியே இல்லை.
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா
தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை
தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை
ஊர் பழி ஏற்றாயடா
நானும் உன் பழி கொண்டேனடா
நானும் உன் பழி கொண்டேனடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா
மன்னவர் பனி ஏற்கும்
கண்ணனும் பனி செய்ய
உன்னடி பணிவானடா கர்ணா..
மன்னித்து அருள்வாயடா
கர்ணா, மன்னித்து அருள்வாயடா..
செஞ்சோற்று கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா
வஞ்சகன் கண்ணனடா
கர்ணா, வஞ்சகன் கண்ணனடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா
கர்ணா, வருவதை எதிர்கொள்ளடா.
இந்த பதிவை படித்த உங்கள் எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றி.
அன்புடன்
ரவி
Last edited by g94127302; 16th August 2015 at 08:35 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
15th August 2015, 11:21 PM
#2656
Junior Member
Seasoned Hubber
திரு செந்தில் சார் - 2000 பதிவுகள் என்பது உங்களுக்கு ஒரு ஜுஜிபி - ஒரு கொசுவிர்க்காக கைத்தட்டினால் போல ---- மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் நாங்கள் கொடுக்கும் குளுக்கோஸ் தான் இந்த பாராட்டுக்கள் - இதை வாங்கிக்கொள்ளாமலும் உங்களால் இன்னும் வேகமாக ஓட முடியும் என்பது எல்லோரும் இங்கு அறிந்ததே . எந்த சலசலப்பிர்க்கும் அலட்டிக்கொள்ளாமல் வித விதமாக யோசித்து , ஆராய்ச்சிகள் பல செய்து இங்கு நீங்கள் போடும் பதிவுகள் காலத்தால் அழிக்க முடியாதவைகள் . உங்கள் வலுவான மறு பக்கமான எழுத்து வலிமையையும் எங்களுக்கு காண்பிக்கலாமே வீடியோ பதிவுகளுக்கு சற்றே ஒய்வு கொடுத்து ---- ( எந்த கடையிலும் எந்த வீடியோ வுமே இப்பொழுதெல்லாம் கிடைப்பதில்லை - உங்கள் பெயர்த்தான் எல்லா கடையிலும் , youtube லிம் சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள் - செந்தில் என்ற ஒருவரே ஆராய்ச்சிகளுக்காக வந்த படங்கள் , இன்னும் வர வேண்டிய படங்கள் , இன்னும் ஆரம்பிக்காத , பூஜை போடாத படங்கள் எல்லா வீடியோ உரிமைகளையும் வாங்கிவிட்டார் என்று - கேட்பதற்கே பெருமையாக இருக்கின்றது ) - மனமார்ந்த பாராட்டுக்கள் , வாழ்த்துக்கள் - உங்கள் அருமைகள் நிற்காமல் தொடர .
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
15th August 2015, 11:39 PM
#2657
Senior Member
Senior Hubber
வாருங்கள் ரவி .. நன்றி தொடர் நன்றாக இருக்கிறது நன்றி....
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
16th August 2015, 03:43 AM
#2658
Senior Member
Diamond Hubber
ரவி சார்...
உங்கள் அருமையான பதிவுக்கு நன்றி சொல்லாமல் போனால் ரொம்ப தப்பு... மனமார்ந்த நன்றி..
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
16th August 2015, 08:02 AM
#2659
Senior Member
Senior Hubber
-
16th August 2015, 08:33 AM
#2660
Junior Member
Veteran Hubber
ரவியின் ஈடுபாடு மிக்க மீள்வருகை மகிழ்வு தருகிறது
வாசு என்னும் எழுத்தோவியரின் பலம் அவரது இதயத் தூரிகை குழைத்திடும் வண்ணமயமான எண்ணங்களிலே ..
சின்னக்கண்ணன் என்னும் எழுத்தா(ணி)(னை)யின் பலம் அ(வர்)தன் நகைச்சுவைத் தும்பிக்கையிலே .....
ரவிகிரண் வெளிச்சம் அவரது எண்திசை எழுத்துக் கிரணங்களின் பாய்ச்சலிலே ..
முரளி என்னும் கடலின் அலைகள் அதன் அளப்பற்ற ஆழத்தினாலே .
ராகவேந்தரின் இடியோசையும் மின்னல் கீற்றுக்களான எழுத்தாற்றலே ..
ரவியின் எழுத்துமர நிழலோ நான் இளைப்பாறிடும் புத்தனின் போதி மரத்தடி ..
கலை அவ்வப்போது ஒரு பாலையில் நான் மாலையில் கண்டிடும் சோலை ..
எஸ் வீயோ எண்ணிக்கையிலடங்காத மழைத்துளிகளை ஒட்டுமொத்தமாகக் கொட்டித் தீர்த்திடும் மழை மேகம் ..
சிவாஜி செந்திலாகிய.... நானோ...நீரை விட்டு வெளியே வந்தால் நீந்த முடியாத ஒரு சிறிய மீன்குஞ்சே! வீடியோக்கள்தான் இந்த மீன்குஞ்சின் பிராணவாயு செவுள்கள் அன்புள்ள நண்பரே!
ஷொட்டுக்கள் குட்டுக்களாக மாறி தட்டுவதற்குள் ...
கொஞ்சம் மாறிவிட்டேன் ..அன்புள்ளங்களின் வேண்டுகோளுக்காக...இனிமேல் ஒரு பதிவில் ஒரு காணொளி மட்டுமே!!!!!
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பாக .....செந்தில்
Last edited by sivajisenthil; 16th August 2015 at 08:53 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
Bookmarks