-
16th August 2015, 04:02 PM
#11
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
RavikiranSurya
திரு கலைவேந்தன் சார்
ஒரு நடிகரின் சம்பளம் என்பது இரண்டு வகைப்படும்.....ஒன்று முழு தொகையும் பணமாக வாங்கிகொள்வது....இரண்டு குறிப்பிட்ட தொகை முன் பணமாக வாங்கி...மீதம் உள்ள தொகைக்கு AREA விநியோக உரிமை பெற்றுகொள்வது.!
இரண்டிற்கும் என்ன வித்தியாசம் ?
முன்பணம் + ஏரியா விநியோக உரிமை = நாயகனின் சம்பளம்
தயாரிப்பாளர் முழுதொகையும் புரட்டி காசாக கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை நாயகருக்கு..அட்வான்ஸ் தொகை போக மீதி தொகையை விநியோக உரிமை கொடுத்துவிட்டால் கையில் உள்ள பணத்தை மற்ற திரைப்பட படபிடிப்பு மற்றும் இதர நடிகர் நடிகை சம்பளத்திற்கு, செலவிற்கு பயன்படுத்தி கொள்ள வசதியாக இருக்கும்..பண பிரச்சனை முக்கால்வாசி வராது !
தயாரிப்பாளரின் கஷ்டங்களை நன்றாக புரிந்துகொண்ட நாயகர்களால் மட்டுமே இந்த METHOD ஐ கடை பிடிக்க இயலும்.
09-12-1954 இல் திரு ஸ்ரீதர் கதை வசனத்தில் வெளிவந்த நடிகர் திலகத்தின்
எதிர்பாராதது திரைப்படத்தில் இருந்து நடிகர் திலகம் முன்பணம் + ஏரியா விநியோக உரிமை முறையில் திரைப்படங்களில் நடிக்கலானார். அதாவது நடிக்க வந்த 2 வருடம் 2 மாதத்திலேயே ! எதிர்பாராதது திரைப்பட சென்னை நகர விநியோக உரிமை நடிகர் திலகத்தின் சம்பளத்திற்கு ஈடாக கொடுக்கப்பட்டது.
எதிர்பாராதது திரைப்படம் சென்னையில் சித்ரா, ப்ரோட்வே, காமதேனு, பாரத் மற்றும் பெரம்பூர் லக்ஷ்மி (இன்றைய மகாலட்சுமி)யில் வெளியானது...ஒரு திரை அரங்கு வரி நீங்கலாக 50,000 வசூல் (விநியோகஸ்தர் பங்கு)என்று தோராயமாக கம்மிக்கு கம்மியாக வைத்தாலும்...2,50,000 ருபாய் பிளஸ் முன்பணம் ருபாய் 25,000 வைத்தாலும் நடிகர் திலகம் நடிக்க வந்த இரண்டு வருடத்தில் சம்பளம் ருபாய் 2,75,000
இதிலிருந்தே...யாருக்கு அதிகம் சம்பளம் என்பது விளங்கும் !
Regards
RKS
நண்பர் திரு.ஆர்.கே.எஸ். அவர்களுக்கு,
தங்களது விளக்கத்துக்கு நன்றி. தேவர் அவர்கள் மக்கள் திலகத்தை வைத்து படம் எடுக்காததற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? இது பற்றி ஒரு புத்தகத்தில் தேவரிடம் மக்கள் திலகம் சத்தியம் வாங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது அதை எழுதியவர் அருகில் இருந்திருக்கப் போவதில்லை. மக்கள் திலகமும் சரி, தேவரும் சரி இந்த செய்தியை உறுதிப்படுத்தியதில்லை. அப்போதெல்லாம் இரு முகாம்கள் உண்டு. தேவர், பாலாஜி, முக்தா ஆகியோர்தான் தங்கள் முகாம்களில் கடைசிவரை உறுதியாக நின்றவர்கள்.
மக்கள் திலகம் பற்றி கிண்டலாக கூறியதால் நானும் ராஜராஜசோழன் பற்றி கிண்டலாக குறிப்பிட வேண்டி வந்தது. அது உங்களை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். ஆனாலும், அந்தப் படம் 100 நாட்கள் ஓடவில்லை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
சம்பளம் பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள். மக்கள் திலகமும் படங்களை விநியோகம் செய்தது உண்டு. நான் சொல்வது கையில் வாங்கும் சம்பளப் பணம் குறித்து. இதில் மக்கள் திலகம் அதிகம் சம்பளம் வாங்கியவர் என்பதற்கு பல உதாரணங்களை குறிப்பிட முடியும்.
உதாரணத்துக்கு ஒன்று மட்டும் சொல்கிறேன். அன்பேவா படம் 1965ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1966ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியானது. அந்தப் படத்திலேயே புரட்சித் தலைவர் 3 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கியிருக்கிறார். திரு.ஏ.வி.எம் செட்டியாரும் மறுப்பு சொல்லாமல் கொடுத்திருக்கிறார். பொங்கலுக்கு படம் வெளியாக வேண்டும் என்பதால் கால்ஷீ்ட்களை கூடுதலாக கேட்டுள்ளனர். அப்படி கொடுக்க வேண்டுமானால், கூடுதலாக ரூ.25,000 வேண்டும் என்று மக்கள் திலகம் கூறி, அண்ணன் திரு.ஆர்.எம்.வீரப்பன் மூலம் கேட்டு அனுப்பியுள்ளார். அதையும் செட்டியார் கொடுத்துள்ளார்.
அதே நேரம், 1968ம் ஆண்டு வெளியான உயர்ந்த மனிதன் படத்துக்கு நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் நடிப்பதற்காக திரு.சண்முகம் அவர்கள் செட்டியாரிடம் ரூ.2 லட்சம் பணம் கேட்டுள்ளார். ஏ.பி.நாகராஜன் ரூ.2 லட்சம் தருகிறார். அதே தொகையை தர வேண்டும் என்று கோரியுள்ளார். அதற்கு செட்டியார் அவர்கள், ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு மேல் தரமுடியாது என்று கூறிவிட்டார். குழந்தையும் தெய்வமும் படம் இந்தியில் தயாரிக்கப்பட்டதன் காரணமாக உயர்ந்த மனிதன் படப்பிடிப்பு துவங்குவதில் தாமதமாகி விட்டது.
இதனால், படம் தயாரிக்கப்படுமா? அல்லது சிவாஜி புரொடக்க்ஷன்ஸ் மூலம் தாங்களே எடுக்கலாமா? என்று ஏவிஎம்மிடம் திரு.சண்முகம் கேட்டுள்ளார். நிச்சயம் படம் எடுக்கப்படும் என்று உறுதியளித்த செட்டியார், சந்தேகத்தை போக்குவதற்காக, திரு.ஏவி.எம்.சரவணன் அவர்கள் மூலம் ரூ.50,000 முன்பணமாக திரு.சண்முகத்திடம் அளித்துள்ளார்.
திரு.ஆரூர்தாஸ் அவர்கள் இந்த தகவல்களை விகடன் பிரசுரம் வெளியிட்ட சிவாஜி வென்ற சினிமா ராஜ்ஜியம் என்ற புத்தகத்தில் கூறியுள்ளார். பக்கம் 167, 168 என்று நினைவு. இந்தப் புத்தகம் உங்களிடம் இருக்கலாம். மேலும் பல சிவாஜி ரசிகர்களிடமும் இருக்கலாம்.
அந்தப் புத்தகத்தில் இந்தத் தகவல் இல்லை என்றால் ‘ஏன் சார் பொய் சொல்கிறீர்கள் ?’ என்று நீங்கள் என்னை தாராளமாக கேட்கலாம்.
மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திரு.ஆரூர்தாஸ் குறிப்பிட்டுள்ள திரு.ஏவிஎம். சரவணனும் திரு.ஆர்.எம்.வீ. அவர்களும் இந்தப் புத்தகம் வெளியானபோது மட்டுமல்ல, இப்போதும் இருக்கின்றனர்.
இதன் மூலம் தெரிந்து கொள்ள வேண்டியது,
1966-ம் ஆண்டிலேயே புரட்சித் தலைவர் சம்பளமாக ரூ.3,25 லட்சம் பெற்றுள்ளார்.
1968-ம் ஆண்டு வெளியான உயர்ந்த மனிதன் படத்துக்கு திரு.சிவாஜி கணேசன் அவர்கள் ரூ.1.5 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளார்.
உயர்ந்த மனிதன் திரைப்படத்துக்கு திரு.சிவாஜி கணேசன் அவர்கள் ரூ.1.5 லட்சம் சம்பளமாக பெற்றது பற்றி விக்கி பீடியாவிலும் உயர்ந்த மனிதன் படத்தைப் பற்றிய குறிப்பில் உள்ளது.
அதற்கான, இணைப்பு கீழே கொடுத்துள்ளேன்.
When M. Saravanan asked about Ganesan's salary to Ganesan's younger brother V. C. Shanmugham, who spoke on Ganesan's behalf, Shanmugham said that Ganesan was willing to accept any amount that AVM Productions could afford to offer. Taking this to be a vague statement as Shanumgham did no state Ganesan's salary properly, Saravanan discovered that Ganesan accepted ₹200,000 (US$26,667 in 1968)[Note 1] for one of A. P. Nagarajan's latest films.[Note 2] Since Thiruvilaiyadal (1965), Nagarajan's films were made in Eastman Colour, and because Uyarndha Manidhan was made in Black-and-white and costume designing for the film was less as compared to those of Nagarajan's films, M. Saravanan decided to pay ₹150,000 (US$20.000 in 1968)[Note 1] to Ganesan.[8]
https://en.wikipedia.org/wiki/Uyarndha_Manithan
இதையும் கூட நீங்கள் ஒப்புக் கொள்ள மாட்டீர்கள் என்று தெரியும் திரு.ஆர்.கே.எஸ். பரவாயில்லை. அதற்காக, நீங்கள் பொய் சொல்கிறீர்கள் என்று நான் சொல்ல மாட்டேன். உங்கள் நேர்மை மீது எனக்கு நம்பிக்கை உண்டு. ஆனால், உங்களுக்கு கிடைத்திருக்கும் தகவல்கள் சரியானவை அல்ல என்று கூறுகிறேன். மற்றபடி உங்கள் நேர்மையை மதிக்கிறேன்.
மக்கள் திலகம் அதிகம் சம்பளம் வாங்கிய நடிகர் என்பதையும் எது உண்மை என்பதையும் பொதுவானவர்கள் தெரிந்து கொள்ளட்டும். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Last edited by KALAIVENTHAN; 16th August 2015 at 05:09 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
16th August 2015 04:02 PM
# ADS
Circuit advertisement
Bookmarks