-
16th August 2015, 03:47 PM
#2081
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
ravichandrran
திருநின்றவூர் புரட்சித் தலைவர் ஆலய விழாவில் நாங்கள் கலந்து கொள்ள முடியாமல் போனாலும், விழாவில் கலந்து கொண்ட பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கும் திருப்பூர் திரு.ரவிச்சந்திரன் அவர்களுக்கும் நன்றி. விழாப் படங்களை காணும் பாக்கியத்தை உலகம் முழுவதும் உள்ள தலைவரின் பக்தர்கள் காணும் வகையில் அவற்றை தரவேற்றியமைக்காகவும் திரு.ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
16th August 2015 03:47 PM
# ADS
Circuit advertisement
-
16th August 2015, 03:59 PM
#2082
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
RavikiranSurya
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்...!
இதுபோல ஒரு சம்பவம் எந்த கட்சியின் தலைவருக்கும் இருந்ததாக சரித்திரம், வரலாறு இந்த பூகோளத்தில் இல்லை.
இந்த அன்புகளை எல்லாம் ஒன்று திரட்டி, மக்கள் திலகம் அவர்களுக்கு ஆளுங்கட்சி போஸ்டராக இருந்தாலும் சரி எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி...முக்கால் வாசி முக்கியத்துவமாவது கொடுத்து, உரிய மரியாதை கொடுத்தால் தான் இனி அதிமுக ஆட்சி கட்டிலில் அமரமுடியும் !
காரணம் அவரால் தானம் கொடுக்கப்பட்ட பதவி, கட்சி இரண்டையும் உண்மையான முறையில் அவர் இல்லாத சமயத்தில், மதித்திருந்தால், மரியாதை செலுத்தி இருந்தால், ஆட்சியினை அவர் வழியில் நடத்தி இருந்தால், சில முறை அதிமுக தேர்தல் தோல்வியை தழுவி இருக்காது.
அந்த மரியாதை கொடுக்கபடாததால்தான் தோல்வி வந்தது என்பது எனது கருத்து...!
அது சரியான கருத்தா தவறான கருத்தா என்று தெரியாது...எனது கருத்து அவ்வளவே..!
Rks
நன்றி திரு.ஆர்.கே.எஸ். என் கருத்தும் இதுவே.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
16th August 2015, 04:02 PM
#2083
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
RavikiranSurya
திரு கலைவேந்தன் சார்
ஒரு நடிகரின் சம்பளம் என்பது இரண்டு வகைப்படும்.....ஒன்று முழு தொகையும் பணமாக வாங்கிகொள்வது....இரண்டு குறிப்பிட்ட தொகை முன் பணமாக வாங்கி...மீதம் உள்ள தொகைக்கு AREA விநியோக உரிமை பெற்றுகொள்வது.!
இரண்டிற்கும் என்ன வித்தியாசம் ?
முன்பணம் + ஏரியா விநியோக உரிமை = நாயகனின் சம்பளம்
தயாரிப்பாளர் முழுதொகையும் புரட்டி காசாக கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை நாயகருக்கு..அட்வான்ஸ் தொகை போக மீதி தொகையை விநியோக உரிமை கொடுத்துவிட்டால் கையில் உள்ள பணத்தை மற்ற திரைப்பட படபிடிப்பு மற்றும் இதர நடிகர் நடிகை சம்பளத்திற்கு, செலவிற்கு பயன்படுத்தி கொள்ள வசதியாக இருக்கும்..பண பிரச்சனை முக்கால்வாசி வராது !
தயாரிப்பாளரின் கஷ்டங்களை நன்றாக புரிந்துகொண்ட நாயகர்களால் மட்டுமே இந்த METHOD ஐ கடை பிடிக்க இயலும்.
09-12-1954 இல் திரு ஸ்ரீதர் கதை வசனத்தில் வெளிவந்த நடிகர் திலகத்தின்
எதிர்பாராதது திரைப்படத்தில் இருந்து நடிகர் திலகம் முன்பணம் + ஏரியா விநியோக உரிமை முறையில் திரைப்படங்களில் நடிக்கலானார். அதாவது நடிக்க வந்த 2 வருடம் 2 மாதத்திலேயே ! எதிர்பாராதது திரைப்பட சென்னை நகர விநியோக உரிமை நடிகர் திலகத்தின் சம்பளத்திற்கு ஈடாக கொடுக்கப்பட்டது.
எதிர்பாராதது திரைப்படம் சென்னையில் சித்ரா, ப்ரோட்வே, காமதேனு, பாரத் மற்றும் பெரம்பூர் லக்ஷ்மி (இன்றைய மகாலட்சுமி)யில் வெளியானது...ஒரு திரை அரங்கு வரி நீங்கலாக 50,000 வசூல் (விநியோகஸ்தர் பங்கு)என்று தோராயமாக கம்மிக்கு கம்மியாக வைத்தாலும்...2,50,000 ருபாய் பிளஸ் முன்பணம் ருபாய் 25,000 வைத்தாலும் நடிகர் திலகம் நடிக்க வந்த இரண்டு வருடத்தில் சம்பளம் ருபாய் 2,75,000
இதிலிருந்தே...யாருக்கு அதிகம் சம்பளம் என்பது விளங்கும் !
Regards
RKS
நண்பர் திரு.ஆர்.கே.எஸ். அவர்களுக்கு,
தங்களது விளக்கத்துக்கு நன்றி. தேவர் அவர்கள் மக்கள் திலகத்தை வைத்து படம் எடுக்காததற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? இது பற்றி ஒரு புத்தகத்தில் தேவரிடம் மக்கள் திலகம் சத்தியம் வாங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது அதை எழுதியவர் அருகில் இருந்திருக்கப் போவதில்லை. மக்கள் திலகமும் சரி, தேவரும் சரி இந்த செய்தியை உறுதிப்படுத்தியதில்லை. அப்போதெல்லாம் இரு முகாம்கள் உண்டு. தேவர், பாலாஜி, முக்தா ஆகியோர்தான் தங்கள் முகாம்களில் கடைசிவரை உறுதியாக நின்றவர்கள்.
மக்கள் திலகம் பற்றி கிண்டலாக கூறியதால் நானும் ராஜராஜசோழன் பற்றி கிண்டலாக குறிப்பிட வேண்டி வந்தது. அது உங்களை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். ஆனாலும், அந்தப் படம் 100 நாட்கள் ஓடவில்லை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
சம்பளம் பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள். மக்கள் திலகமும் படங்களை விநியோகம் செய்தது உண்டு. நான் சொல்வது கையில் வாங்கும் சம்பளப் பணம் குறித்து. இதில் மக்கள் திலகம் அதிகம் சம்பளம் வாங்கியவர் என்பதற்கு பல உதாரணங்களை குறிப்பிட முடியும்.
உதாரணத்துக்கு ஒன்று மட்டும் சொல்கிறேன். அன்பேவா படம் 1965ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1966ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியானது. அந்தப் படத்திலேயே புரட்சித் தலைவர் 3 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கியிருக்கிறார். திரு.ஏ.வி.எம் செட்டியாரும் மறுப்பு சொல்லாமல் கொடுத்திருக்கிறார். பொங்கலுக்கு படம் வெளியாக வேண்டும் என்பதால் கால்ஷீ்ட்களை கூடுதலாக கேட்டுள்ளனர். அப்படி கொடுக்க வேண்டுமானால், கூடுதலாக ரூ.25,000 வேண்டும் என்று மக்கள் திலகம் கூறி, அண்ணன் திரு.ஆர்.எம்.வீரப்பன் மூலம் கேட்டு அனுப்பியுள்ளார். அதையும் செட்டியார் கொடுத்துள்ளார்.
அதே நேரம், 1968ம் ஆண்டு வெளியான உயர்ந்த மனிதன் படத்துக்கு நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் நடிப்பதற்காக திரு.சண்முகம் அவர்கள் செட்டியாரிடம் ரூ.2 லட்சம் பணம் கேட்டுள்ளார். ஏ.பி.நாகராஜன் ரூ.2 லட்சம் தருகிறார். அதே தொகையை தர வேண்டும் என்று கோரியுள்ளார். அதற்கு செட்டியார் அவர்கள், ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு மேல் தரமுடியாது என்று கூறிவிட்டார். குழந்தையும் தெய்வமும் படம் இந்தியில் தயாரிக்கப்பட்டதன் காரணமாக உயர்ந்த மனிதன் படப்பிடிப்பு துவங்குவதில் தாமதமாகி விட்டது.
இதனால், படம் தயாரிக்கப்படுமா? அல்லது சிவாஜி புரொடக்க்ஷன்ஸ் மூலம் தாங்களே எடுக்கலாமா? என்று ஏவிஎம்மிடம் திரு.சண்முகம் கேட்டுள்ளார். நிச்சயம் படம் எடுக்கப்படும் என்று உறுதியளித்த செட்டியார், சந்தேகத்தை போக்குவதற்காக, திரு.ஏவி.எம்.சரவணன் அவர்கள் மூலம் ரூ.50,000 முன்பணமாக திரு.சண்முகத்திடம் அளித்துள்ளார்.
திரு.ஆரூர்தாஸ் அவர்கள் இந்த தகவல்களை விகடன் பிரசுரம் வெளியிட்ட சிவாஜி வென்ற சினிமா ராஜ்ஜியம் என்ற புத்தகத்தில் கூறியுள்ளார். பக்கம் 167, 168 என்று நினைவு. இந்தப் புத்தகம் உங்களிடம் இருக்கலாம். மேலும் பல சிவாஜி ரசிகர்களிடமும் இருக்கலாம்.
அந்தப் புத்தகத்தில் இந்தத் தகவல் இல்லை என்றால் ‘ஏன் சார் பொய் சொல்கிறீர்கள் ?’ என்று நீங்கள் என்னை தாராளமாக கேட்கலாம்.
மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திரு.ஆரூர்தாஸ் குறிப்பிட்டுள்ள திரு.ஏவிஎம். சரவணனும் திரு.ஆர்.எம்.வீ. அவர்களும் இந்தப் புத்தகம் வெளியானபோது மட்டுமல்ல, இப்போதும் இருக்கின்றனர்.
இதன் மூலம் தெரிந்து கொள்ள வேண்டியது,
1966-ம் ஆண்டிலேயே புரட்சித் தலைவர் சம்பளமாக ரூ.3,25 லட்சம் பெற்றுள்ளார்.
1968-ம் ஆண்டு வெளியான உயர்ந்த மனிதன் படத்துக்கு திரு.சிவாஜி கணேசன் அவர்கள் ரூ.1.5 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளார்.
உயர்ந்த மனிதன் திரைப்படத்துக்கு திரு.சிவாஜி கணேசன் அவர்கள் ரூ.1.5 லட்சம் சம்பளமாக பெற்றது பற்றி விக்கி பீடியாவிலும் உயர்ந்த மனிதன் படத்தைப் பற்றிய குறிப்பில் உள்ளது.
அதற்கான, இணைப்பு கீழே கொடுத்துள்ளேன்.
When M. Saravanan asked about Ganesan's salary to Ganesan's younger brother V. C. Shanmugham, who spoke on Ganesan's behalf, Shanmugham said that Ganesan was willing to accept any amount that AVM Productions could afford to offer. Taking this to be a vague statement as Shanumgham did no state Ganesan's salary properly, Saravanan discovered that Ganesan accepted ₹200,000 (US$26,667 in 1968)[Note 1] for one of A. P. Nagarajan's latest films.[Note 2] Since Thiruvilaiyadal (1965), Nagarajan's films were made in Eastman Colour, and because Uyarndha Manidhan was made in Black-and-white and costume designing for the film was less as compared to those of Nagarajan's films, M. Saravanan decided to pay ₹150,000 (US$20.000 in 1968)[Note 1] to Ganesan.[8]
https://en.wikipedia.org/wiki/Uyarndha_Manithan
இதையும் கூட நீங்கள் ஒப்புக் கொள்ள மாட்டீர்கள் என்று தெரியும் திரு.ஆர்.கே.எஸ். பரவாயில்லை. அதற்காக, நீங்கள் பொய் சொல்கிறீர்கள் என்று நான் சொல்ல மாட்டேன். உங்கள் நேர்மை மீது எனக்கு நம்பிக்கை உண்டு. ஆனால், உங்களுக்கு கிடைத்திருக்கும் தகவல்கள் சரியானவை அல்ல என்று கூறுகிறேன். மற்றபடி உங்கள் நேர்மையை மதிக்கிறேன்.
மக்கள் திலகம் அதிகம் சம்பளம் வாங்கிய நடிகர் என்பதையும் எது உண்மை என்பதையும் பொதுவானவர்கள் தெரிந்து கொள்ளட்டும். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Last edited by KALAIVENTHAN; 16th August 2015 at 05:09 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
16th August 2015, 04:05 PM
#2084
Junior Member
Seasoned Hubber
நண்பர்களுக்கு ஒரு விளக்கம்,
நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்களைப் பற்றியோ, அவரது நடிப்புத் திறமை பற்றியோ நாம் என்றுமே குறை கூறியதில்லை. அவரது சாதனைகளை அவர்களது திரியில் சொல்லிக் கொள்வதிலும் நமக்கு என்ன ஆட்சேபம் இருக்கப் போகிறது? ஆனால்,..
* திரு.சிவாஜி கணேசன் அவர்கள் திரையுலகில் இருந்தவரை அவர் காலத்தில் வேறு எந்த நடிகனும் அவரது சாதனையை முறியடிக்க முடியவில்லை...
* அரசியலில் வெற்றி பெற்றவர்தான் சினிமாவிலும் வெற்றி பெற்றதாக நம்புகின்றனர்.....
* 10 படங்கள் ஒரு கோடி வசூலை பெற்றன என்றால் மாபெரும் நடிகரான மக்கள் திலகம் ஏன் 6 வெள்ளி விழா படங்களை மட்டுமே கொடுத்தார்?...
* மக்கள் திலகத்தை வானளாவப் புகழும் முக்தா சீனிவாசன் ஏன் அவரை வைத்து ஒரு படம் கூட எடுக்கவில்லை....
என்றெல்லாம் மறைமுகமாகவும் நேரடியாகவும் சீண்டல்கள், தாக்குதல்கள் வரும்போது அதற்கு பதில் சொல்ல வேண்டிய துரதிர்ஷ்டவசமான நிலை நமக்கு ஏற்பட்டு விடுகிறது. வேண்டுமென்றே சிலர் சுமூக சூழலை கெடுக்கும் வகையில், உள்நோக்கத்தோடு கொளுத்திப் போட்டு விட்டு போகிறார்களோ என்று கூட எனக்கு சந்தேகம்.
நேரடியாகவே குற்றம் சாட்டுகிறேன். உதாரணத்துக்கு திரு.ஆதிராம் என்ற நண்பர். அவ்வப்போது வந்து பிரச்சினைகளை கிளப்பி விட்டு சென்று விடுவார். பிறகு, 3 மாதங்களுக்கு வரமாட்டார். இந்தப் பதிவை பார்த்து விட்டு ஒருவேளை அவர் வந்தாலும் வரலாம். வரட்டும்.
அப்படி வந்து ஏன் இப்படி என் மீது அபாண்டமாக பழி சுமத்துகிறீர்கள் என்று கேட்டால் ஆதாரங்களை கொடுக்கத் தயார். மேலும், ‘சமீபத்தில் கூட மதுர கானம் திரியில் இதுபோன்ற வேலையில் ஈடுபட்டது உண்டா? இல்லையா? அதற்காக நண்பர்கள் உங்களைக் கண்டித்தது உண்மையா? இல்லையா?’ என்ற கேள்விகளோடு அவரை வரவேற்க காத்திருக்கிறேன்.
நாங்களாக சர்ச்சையை கிளப்புவதில்லை. மறைமுகமாகவோ, நேரடியாகவோ சீண்டுவதில்லை, தாக்குவதில்லை. அதுபோன்ற செயல்கள் அங்கிருந்து வரும்போது அதற்கு பதில் சொல்ல வேண்டி வந்து விடுகிறது.
அது உங்களைப் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். அதே நேரம், தவறு எங்கள் பக்கம் இல்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறோம்.
கலைஞானி திரு.கமல்ஹாசன் அவர்களின் திரியில் நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் பற்றி விமர்சனங்கள் வந்தால் நீங்கள் அதைத் தாங்க முடியாமல், எப்படி விளக்கம் அளிக்கிறீர்களோ, அதேபோன்ற உணர்வு எங்களுக்கும் இருக்கும் என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.
இதை நண்பர்கள் எல்லாரும் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
16th August 2015, 04:19 PM
#2085
Junior Member
Platinum Hubber
சென்னை சரவணாவில் தற்போது வெற்றி நடை போடுகிறது
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் "நல்ல நேரம் " தினசரி 3 காட்சிகள்.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
16th August 2015, 04:22 PM
#2086
Junior Member
Platinum Hubber
-
16th August 2015, 04:27 PM
#2087
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் திரு கலைவேந்தன் சார்
இன்றைய தங்கள் பதிவுகள் மிகவும் அருமை .மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் திரை உலகில் அதிக சம்பளம் வாங்கிய நடிகர் என்பது உலகறிந்த விஷயம் .அதேபோல் 1977 வரை வசூலில் அதிகளவில் சாதனைகள் புரிந்தவர் மக்கள் திலகமே என்பதும் உண்மையே. சிலரின் மறை முக பதிவுகள் அவர்களின் உள் நோக்கம் நமக்கு தெரிந்ததே .
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
16th August 2015, 05:56 PM
#2088
Junior Member
Platinum Hubber
-
16th August 2015, 06:06 PM
#2089
Junior Member
Veteran Hubber
Dear Kalaivendhan Sir
Please read what YOU have written and What is written in Wikipedia...Is your translation inline with what is written? Or Would you want me to Translate the same ?
2) Who is Mr. Aroordhas to say about Nadigar Thilagam's Salary? Is Mr. Aroordhas, the official Auditor of Nadigar Thilagam (or) Did Nadigar Thilagam or his brother V.C. Shanmugam entrusted Mr.Aroordhas, the responsibility of collecting the salary from Clients? - Do you think people with some common sense believe this Rubbish Imagination of Mr.Arrordhas for your kindself to take it and quote? Nadigar Thilagam's own house people itself will not know his salary details other than Mr.V.C, Smt.Kamala Ammal, & may be his Parents.
The same case may be applied for Makkal Thilagam too sir..!!! Finance and Money Matters are so sensitive and confidential sir. I think most of the people will agree with me on this.
Nadigar Thilagam's bonding with AVM is not like the relationship Makkal Thilagam and AVM. And, No point in time ever in Nadigar Thilagam's career that he was denied the money that he charged as remuneration and that too by AVM. Nadigar thilagam does not follow footsteps of Makkal Thilagam in asking additional money to complete a film, quickly.
Nadigar Thilagam holds very high respect and esteem for AVM and Everybody knows that in film Industry. He never placed any demand x money as remuneration with AVM and National Pictures. The Tamil cinema world knows that.
As per your statement itself, the Man who denied ( AVM) as per your statement, 50,000 bucks for Nadigar Thilagam who always finishes his portion on time, do you mean to say that he paid 1,50,000 plus another 25,000 bucks more for the same social theme and costume?? (Or) Do you mean to say that AVM paid 50,000 bucks less than the remuneration already in place? No Businessman especially of AVM caliber will do it and especially for an internationally recognised actor like Nadigar Thilagam, who had completed 16 years of service and for 125th milestone film.
Where is the Logic / truth in your statement quoted by Aroordhas Sir???
Do not give this absurd screenplay dialogue of Aroordhas as if they are true and genuine happenings. Film industry People know about Aroordhas sir !
Do not comment such illogical news. And your wickkipedia spoof, do you want me to put an updated note? Which means, anybody can write and update anything, anytime.
Please try to publish AVM Saravanan's speech about NT salary or any scanned document confirming the same from AVM establishment. Since You had quoted Mr. Aroordas's name, he should be having the bank deposit slip xerox , let him publish that and then we can come to conclusion.
1968 la Nadigar Thilagam 1.5 lakhs sambalam vaanginaarunnu, 2,00,000 kaettu kudukka mudiyaadhunnu AVM sonnarunnu eppudi sir oru poi ungalaala Logic kooda yosikkaame jodikka mudiyudhu?
You don't have to stoop low this much to hold your forte..!!! Sorry that I am writing this.
Regards
rks
Last edited by RavikiranSurya; 16th August 2015 at 07:06 PM.
-
16th August 2015, 06:16 PM
#2090
Junior Member
Veteran Hubber
Esvee Sir
Ulagam enbadhan porul neengalum ungalaicherndhavargalum enbadhai ungal padhivin moolam thelivu paduthiyadharkku nandri.
Poonai kanmoodinaal ulagam iruttu endru ninaikumaam. Ungal padhivai padiththabodhu ungalin andha nambikkai ellorukkum therigiradhu
Poi thagavalaal Nadigar Thilagathin unmayaana saadhanai seidhigalai yaar maraikkum noakkudan padhivittaalum...adhu neengale jaadai maadayaaga suttle aaga padhivu sedhaalum, Ennudaya endha padhivum neridayaagave vilakaththudan irukkum, at least ungal padhivai compare seidhavariyilaavadhu.
Rks
Last edited by RavikiranSurya; 16th August 2015 at 06:42 PM.
Bookmarks