Results 1 to 10 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

Threaded View

  1. #11
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பார்த்ததில் பிடித்தது -50

    டாக்டர் சிவா :

    1975 ல் அவன் தான் மனிதன் , மன்னவன் வந்தானடி என்று இரண்டு சூப்பர் ஹிட் படங்களுக்கு பிறகு அன்பே ஆருயிரே , வைரநெஞ்சம் படங்களை தொடர்ந்து வந்த படம் தான் டாக்டர் சிவா.

    ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு லட்சியம் இருக்கும் . அதை அடைந்தாள் தான் அவன் வாழ்வில் வெற்றி அடைந்ததாக அவன் மனதில் ஒரு self satisfaction கிடைக்கும் . அதற்க்கு முக்கியமான அடித்தளம் அவன் சின்ன வயசில் நடந்த ஒரு சம்பவம் அவன் மனதில் ஆழமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்து அவன் கவனத்தை அந்த சம்பவம் ஏற்படுத்தி இருக்கும் ,அப்படி பட்ட உயர்ந்த லட்சியம் கொண்ட நபர் தான் நம் நாயகன் டாக்டர் சிவா

    தொழுநோய் நோயாளிகளை குண படுத்துவதில் தன் மருத்துவ அறிவை , பயன்படுத்தும் சிவா தன் நண்பன் நாகேஷ் குடும்பத்தை சந்திக்க நேர்கிறது , நண்பனின் அண்ணியின் ரூபத்தில் தன் அன்னையை காணும் சிவா சீக்கிரமே அவர் குடுமபத்தில் ஒருவர் ஆகி விட , கீதா(மஞ்சுளா ) மனசிலும் இடம் பிடிக்கிறார் , இதை எதிர்க்கும் கீதாவின் சகோதரர்கள் (மேஜர் & MRR வாசு ) இருவரும் , கீதாவின் பிடிவாதத்தினால் சம்மதிக்க , சிவா ,கீதா திருமணம் இனிதே நடக்கிறது

    முதலில் இனிமையாக தொடங்கும் அவர்கள் வாழ்வு சிவாவின் வளர்ப்பு தங்கை அமுதாவின் செய்கையாலும் , சிவாவின் வேலைபளுவினாலும் கீதாவுக்கு வெறுப்பு ஏற்பட காரணமாகிறது

    அமுதா கர்ப்பம் அடைய ,அந்த பழி சிவாவின் மேல் விழ , கீதாவின்
    சகோதரர்கள் விவாகரத்து வழக்கை நடத்த , இருவரும் பிரிந்து விடுகிறார்கள் ,சுரேஷ்(பிரேம் ஆனந்த் ) சிவாவின் மருத்துவமனியில் வேலைபார்க்கும் டாக்டர் ,அவன் தான் அமுதாவின் இந்த நிலைக்கு காரணம் .சுரேஷ் அமுதாவை திருமணம் செய்ய மறுக்க அமுதா தற்கொலை செய்து கொள்ளுகிறார் ,

    எல்லாவற்றையும் எழந்து சிவா நிற்கும் பொது சுரேஷ் தொழுநோய் உள்ளவராக வர சிவா அவனுக்கு அடைக்கலம் கொடுக்கிறார் .

    விவாகரத்து கிடைத்த பிறகு கீதாவை இந்த சமுகம் illtreat செய்ய அப்போது தான் கீதாவுக்கு ஆன் பாதுகாப்பு தேவை என்ற உணர்வு ஏற்படுகிறது , இதற்க்கு இடையில் ஆப்பிரிக்காவில் இருந்து வரும் கீதாவின் சின்ன அண்ணியின் சகோதரன் VKR கீதாவிடம் தப்பாக நடக்க முயற்சிக்க , கீதா வெறுத்து போய் விடுகிறார் .

    சிவாவை சந்திக்கும் கீதாவின் அண்ணியிடம் (பண்டரி பாய் ) சிவா தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை பற்றி விவரிக்கிறார்
    சிவாவின் தந்தையை தொழு நோயாளிகள் காப்பாற்றி வந்ததையும் , கொலை செய்ய போன இடத்தில தற்செயலாக ஒரு குழந்தை கிடைத்ததும் (அந்த குழந்தை தான் அமுதா) , தன் வாழ்க்கையில் தொழுநோய் உள்ளவர்களுக்கு சேவை செய்யும் படி தன் தந்தை சத்தியம் வங்கியதை பற்றியும் சொல்ல , கீதாவிடம் இந்த உண்மைகள் சொல்ல படுகிறது
    ஊருக்கு செல்ல முடிவெடுக்கும் கீதா , ஒரு கணவன் மனைவி இருவரும் பேசி கொண்டு இருக்கும் உரையாடலை கேட்க மனம் மாறி மீண்டும் சிவா உடன் சேர
    முடிவில் சுபம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •