Results 1 to 10 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

Threaded View

  1. #11
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இனி டாக்டர் சிவா பற்றி

    சின்ன வயதில் தன் தந்தையிடம் தான் கொடுத்த வாக்குக்காக தொழுநோய் உள்ளவர்களை சிறிதும் அருவெறுப்பு இன்றி அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் தர்மகுனம் உள்ள டாக்டர் . அவர் ஏங்குவது அன்புக்காக . அது பண்டரிபாய் ரூபத்தில் கிடைக்கும் பொது அவர் கண்ணில் தெரியும் கண்ணீர் அனந்த கண்ணீர் நம் மனமும் நெகிழ்கிறது .

    அதவும் பண்டரிபாய் காலுக்கு சிகிச்சைக்கு அளிக்கும் பொது அவர் பேசும் வசனமும் , தன்னை தானே அன்புக்கு எங்கும் பிச்சைகாரன் என்று self depreciate செய்து கொள்ளும் காட்சியும் நன்றாக அமைந்து இருந்தது

    மஞ்சுளா நெருங்கி வரும் பொது தன் கடமையை நினைத்து விலகி நிற்பதும் , பிறகு காதலிக்கும் பொது ஒரு பெண் வந்து தன் குழந்தைக்கு தொழுநோய் வந்து விட்டதாக சொல்லி அழும் பொது இவர் காதலை நிராகரித்து விலகி ஓடுவதும் தன் படிப்பு சரியாக உபயோக படுத்த படவில்லை என்று சொல்லி குமுறுவதும் என்று தன் ஏற்று கொண்ட பாத்திரத்தை அறிந்து நடித்து இருப்பார் நடிகர் திலகம்

    திருமணத்துக்கு பிறகு வேலை காரணமாக தன் மனைவிக்கு நேரம் ஒதுக்க முடியாமல் , மனைவியை தாஜா செய்யும் பொது வரும் பாடலில் அவர் expressions க்கு once more கேட்க தூண்டும்

    அதே போல் அவர் கையில் இருக்கும் bracelet / chain இப்போது லேட்டஸ்ட் trend . அதை அணிந்து கொண்டு அவர் pipe smoke பண்ணும் பொது அவர் ஸ்டைல் - டாப்

    அதுவும் மஞ்சுளா உடன் நடக்கும் முதுஅல் சந்திப்பில் மஞ்சுளா ச்வீட் உடன் இருக்க , இரண்டு கைகளிலும் அதை வாங்கும் சிவாஜி சார் , விழிக்கும் காட்சியும் , மஞ்சுளா pipe யை விட்டு சென்ற சிவாஜிடம் மீண்டும் அதை கொடுக்க , அதை மறந்து விட்டு அவர் செல்லும் பொது அவர் செல்லமாக அலுத்து கொள்ளுவதும் அழகு

    நல்லவன் குரலுக்கு மதிப்பிருக்கும் இந்த நாட்டிலே பாடல் தொடக்கத்தில் அவர் கேமரா வை நோக்கி கண் அடித்து விட்டு , பிறகு நடந்து வரும் பொது ஒளிபதிவாளர் விஸ்வநாத் ராய் அதை ஒரு கோணத்தில் இருந்து படம் பிடித்து , பிறகு மெதுவாக அவர் நடையை மட்டும் focus செய்து ரசிக்க செய்து இருப்பார் .

    தன் மனைவி தன்னிடம் கோபித்து கொண்டு இருக்கும் பொது அவரை சமாதானம் செய்து சமாளித்து விடுவதும் , அதுவே எல்லை மீறி போகும் பொது மனைவியை அவள் வீட்டில் சந்திக்கும் பொது மஞ்சுளாவின் அண்ணன் மேஜர் கோபத்துடன் ஆங்கிலத்தில் கத்தும் பொது இவர் ஆத்திரத்தை அடக்கி கொண்டு , அதே பாணியில் பதில் கூறும் காட்சி -TIT FOR TAT

    கடைசியில் மனைவி வீடு திரும்பும் பொது சகஜமாக பேசி கொண்டு இருந்து விட்டு மனைவி கேட்ட உடன் - இவர் சொல்லும் காரணம் - அதை ஆங்கிலத்தில் உச்சரிக்கும் பாங்கு கடைசியில் அவர் கணவன் மனைவி ஒற்றுமை பற்றி பேசும் வசனம் அனைத்தும் படத்தின் பலம்

    தன் மனைவிக்கு abortion என்ற செய்தி கேட்ட உடன் தன்னை வாழ்தியவரை பார்த்து dead pan expression உடன் பேசுவதும் , பிரேம் ஆனந்த் உடன் வாக்குவாதம் செய்யும் காட்சிகள் - typical சிவாஜி ஸ்டைல்

    கீதாவாக மஞ்சுளா கொஞ்சம் glamour கலந்த பாத்திரம் . முதலில் சிவாவின் தியாகம் கண்டு அவரை காதலிக்கும் அவர் ,அதுவே அவளுக்கு பிரச்சனை என்ற பொது அவர் சராசரி பெண்ணாக நடந்து கொண்டு அவசரப்பட்டு விவாகரத்து , பின் வாழ்கை கசக்கும் பொது தெளிவு பிறந்து கணவர் உடன் சேர்வதும் என்று பாத்திரம் அறிந்து நடித்து இருக்கிறார்

    பண்டரி பாய் - ஸ்டார் mother

    சவுத் இந்தியாவில் பல ஹீரோக்களின் அம்மா ,அண்ணி பாத்திரத்தில் முத்திரை பதித்தவர் - இந்த படத்திலும் அவர் தனித்து தெரிகிறார் , ஹீரோ அவரிடத்தில் கொண்டு உள்ள மரியாதை நம்மளுக்கும் வருகிறது

    பிளாஷ் back காட்சிகள் இன்னும் அழுத்தமாக இருந்து இருக்கலாம்

    எனக்கு மிகவும் பிடித்த நடிகர் திலகம் படங்களில் இதுவும் ஒன்று

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •