-
2nd September 2015, 01:01 PM
#3091
Junior Member
Platinum Hubber
-
2nd September 2015 01:01 PM
# ADS
Circuit advertisement
-
2nd September 2015, 01:03 PM
#3092
Junior Member
Platinum Hubber
-
2nd September 2015, 01:23 PM
#3093
Junior Member
Platinum Hubber
செப்டம்பர் மாதத்தின் பெருமைகள் .
பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் 15.9.1909
மக்கள் திலகத்தின் 100 வது வெற்றி காவியம் - ஒளிவிளக்கு 20.9.1968
பாரத் எம்ஜிஆர் என்ற பட்டதுடன் வெளிவந்த படம் ''அன்னமிட்ட கை '' 15.9.1972
தந்தை பெரியார் பிறந்த நாள் -17.9. 1879
-
2nd September 2015, 01:30 PM
#3094
Junior Member
Platinum Hubber
-
2nd September 2015, 01:49 PM
#3095
Junior Member
Platinum Hubber
சொந்தப்படம் தோல்வி அடைந்ததால் நிலை குலைந்து போன மருதகாசி, சிறிது இடைவெளிக்குப்பின், எம்.ஜி.ஆர்., சாண்டோ சின்னப்ப தேவர் ஆகியோர் மூலமாக திரை உலகில் மறுபிரவேசம் செய்தார்.
இதுகுறித்து மருதகாசியின் தம்பி பேராசிரியர் அ.முத்தையன் கூறியதாவது:-
“1950-ம் ஆண்டில் என் அண்ணன் “மந்திரிகுமாரி”க்கு பாட்டு எழுதியதில் இருந்தே, எம்.ஜி.ஆருடன் நட்பு கொண்டிருந்தார்.
அந்தக் காலக்கட்டங்களில் எம்.ஜி.ஆர். நடித்த படங்களுக்கு, பெரும்பான்மையான பாடல்களை என் சகோதரர் மருதகாசிதான் எழுதி வந்தார். சர்வாதிகாரி, அலிபாபாவும் 40 திருடர்களும், பாக்தாத் திருடன், தாய்க்குப்பின் தாரம், தாய் மகளுக்குக் கட்டிய தாலி, மாடப்புறா, நினைத்ததை முடிப்பவன், மன்னாதி மன்னன், மகாதேவி, விவசாயி போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை.
கவிஞர் சொந்தப்படம் எடுத்து அது தோல்வியில் முடிந்ததால், சம்பாதித்ததை எல்லாம் இழந்தார். கடன் தொல்லையால், வெளியார் படங்களுக்கு பாடல் எழுத முடியாத நிலை ஏற்பட்டது.
கவிஞர் கடன் தொல்லையால் அவதிப்படுவதையும், தொழிலை படிப்படியாக இழப்பதையும் அவினாசி மணி மூலம் அறிந்த எம்.ஜி.ஆர்., என் சகோதரரை அழைத்துப்பேசி, தொல்லைகளில் இருந்து அவரை மீட்டார்.
இந்த சந்தர்ப்பத்தில் பட அதிபர் ஜி.என்.வேலுமணி, சின்னப்ப தேவரின் தம்பி திருமுகம் ஆகியோர் செய்த உதவிகளும் மறக்க முடியாதவை.
1963-ல் இருந்து 1967 வரை என் அண்ணன் சென்னை வீட்டை காலி செய்து விட்டு எங்கள் ஊருக்கே வந்துவிட்டார்கள். 1967-ல் எம்.ஜி.ஆர். குண்டடி பட்டு, குணம் அடைந்தவுடன், பலரும் அவரை நடிக்க அழைத்தனர். ஆனால், தேவர் படத்தில் நடிப்பதற்குத்தான் எம்.ஜி.ஆர். ஒப்புக்கொண்டார். “பாடல்களை மருதகாசியை வைத்தே எழுதுங்கள்” என்று தேவரிடம் சொல்லிவிட்டார்.
அதைத்தொடர்ந்து, மருதகாசிக்கு தேவர் கடிதம் எழுதினார். “நான் அடுத்து எடுக்கப்போகும் படத்தின் பெயர் “மறுபிறவி.” எம்.ஜி.ஆர். எடுத்திருப்பதும் மறுபிறவி. பட உலகைத் துறந்துவிட்ட உங்களுக்கும் மறுபிறவி. அதாவது 4 ஆண்டுகளுக்குப்பின் மறுபிரவேசம் செய்கிறீர்கள். உடனே புறப்பட்டு சென்னைக்கு வாருங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி கவிஞர் உடனே புறப்பட்டுச் சென்று, சென்னையில் எம்.ஜி.ஆரையும், தேவரையும் சந்தித்தார். எம்.ஜி.ஆரின் ஆதரவோடு, என் அண்ணன் மருதகாசியின் திரையுலக மறுபிரவேசம் நிகழ்ந்தது.
“மறுபிறவி” படம், ஒரு பாடலோடு நிறுத்தப்பட்டது. ஆனால், அதற்கு பதிலாக, “தேர்த்திருவிழா” படத்தை தேவர் தயாரித்தார். அந்தப் படத்தின் எல்லாப் பாடல்களையும் அண்ணன் மருதகாசியே எழுதினார்.
தேவருக்கு பெரும்பொருளை அள்ளித் தந்தது, அந்தப்படம். பாதிப்படத்தின் படப்பிடிப்பு எங்கள் கிராமப் பகுதியில் அமைந்த கொள்ளிடம் கரையில்தான் நடந்தது. எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா இணைந்து நடித்தார்.
எம்.ஜி.ஆர். என் அண்ணனுக்கு எல்லா சந்தர்ப்பங்களிலும் உதவியிருக்கிறார். ஒவ்வொரு மகன் திருமணத்திற்கும் உதவியிருக்கிறார்.”
இவ்வாறு பேராசிரியர் முத்தையன் கூறினார்.
-
2nd September 2015, 02:26 PM
#3096
Junior Member
Senior Hubber

Originally Posted by
Muthaiyan Ammu
super..............................
-
2nd September 2015, 02:30 PM
#3097
Junior Member
Diamond Hubber
" எம்.ஜி.ஆர். அவர்கள் சிம்லாவைப் பார்த்து ரசித்து பாடும் விதமாக உருவானதுதான் புதிய வானம் புதிய பூமி பாடல். இந்தப் பாட்டில் கவிஞர் வாலி, உதய சூரியனின் பார்வையிலே
என்று ஒரு இடத்தில் எழுதியிருந்தார். அதை பார்த்த செட்டியார், சென்சாரில் வெட்டி விடுவார்களே? என்றார். எம்.ஜி.ஆர் அவர்கள் இப்படி பாடினால்தான் கைதட் டல் விழும் என்று சமாதானம் செய்தார் வாலி. அப்படியே படமாக்கப்பட்டது.
ஆனால். செட்டியார் சொன்னது போலவே சென்சாரில் அந்த வரியை நீக்க வேண்டும் என்று கூறிவிட்டார்கள். அதன் பிறகு உதய சூரியனின் பார்வையிலே என்ற வார்த்தைக்கு பதிலாக புதிய சூரியனின் பார்வையிலே என்று வார்த்தையை மாற்றினோம். படத்தில் மட்டும் புதிய சூரியனின் பார்வையிலே என்றுதான் இருக்கும். ஆடியோவில்தான் உதய சூரியனின் பார்வையிலே என்று இருக்கும். இதெல்லாம் சென்சார் லீலைகள்.
உதய சூரியன் என்று வரும் இடத்தில் எம்.ஜி.ஆரை குன்றின் உச்சியில் ஏறி நிற்க வைத்து சூரியனையும் எம்.ஜி.ஆரை யும் இணைத்து ஷாட் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று இயக்குநர் திருலோக சந்தர், பி.என்.சுந்தரத்திடம் சொல்ல, எம்.ஜி.ஆரால் ஏற முடியுமா? என்று யோசித்துக் கொண்டிருந்தார்கள்.
கொஞ்ச நேரத்தில் டைரக்டர் சார்..! என்று எங்கிருந்தோ ஒரு குரல் கேட்டது. எல்லோரும் குரல் வந்த திசையில் பார்த்தோம். குன்று உச்சியில் எம்.ஜி.ஆர் அவர்கள் நின்றுகொண்டிருந்தார். படக் குழுவே அவரைப் பார்த்து திகைக்க மலை மேல என்னால ஏற முடியுமான்னு நீங்க பேசிட்டிருந்தீங்க
நான் ஏறியே வந்துட்டேன் என்றார் எம்.ஜி.ஆர் புன் சிரிப்போடு. அதுதான் எம்.ஜி.ஆர்! "
( இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் , தி இந்து )
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
2nd September 2015, 08:53 PM
#3098
Junior Member
Diamond Hubber
சோதனைகள் வந்தால் பின்னாலேயே சுகம் தேடி வரும். சிரமங்களைக் கண்டு மனம் இடிந்துவிடக் கூடாது. தைரியமாக இரு. எதுவாக இருந்தாலும் என்ன நடந்தாலும் கவலைபடாதே. நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்துகொள்.
-புரட்சித்தலைவர்
-
2nd September 2015, 09:09 PM
#3099
Junior Member
Diamond Hubber
யார் இருக்கா சொல்லு என்
எதிரே வந்து நில்லு
தீமைக்குரல் கேட்டவுடன்
தாயைப்போலவோடி வந்தே
தீமைதனை தடுத்து நிற்கும்
எம்.ஜி.ஆரை போல நாட்டில் யார் இருக்கா
-
2nd September 2015, 09:31 PM
#3100
Junior Member
Diamond Hubber
Bookmarks