- 
	
			
				
					5th September 2015, 03:17 PM
				
			
			
				
					#3411
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Platinum Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
							
							
						
						
				
					
						
							இனிய  நண்பர் திரு ரவி சார் 
 என் பெயரும் கண்ணன் லிஸ்டில் இடம்  பெற்று இருப்பதை  அறிந்து  மிக்க  மகிழ்ச்சி .இன்று  ஆசிரியர் தினமும்  கண்ணன் பிறந்த தினமும் மதுர  கானம்  திரியில்  மிகவும் சிறப்பாக நண்பர்களால்  கொண்டாடப்பட்டுள்ளது . மிக்க  மகிழ்ச்சி .
 
 
 
 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
	 
- 
		
			
						
						
							5th September 2015 03:17 PM
						
					
					
						
							 # ADS
						
					
			 
				
					
					
						Circuit advertisement
					
					
					  
 
 
 
 
- 
	
			
				
					5th September 2015, 04:18 PM
				
			
			
				
					#3412
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Senior Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							பாரினில் வந்துவிட்டோம் பாழும் மனத்தினிலே
 வேரிட்ட ஆசைகள் வீழ்வதெப்போ - தேர்போல்
 அசைந்தாடி அங்குமிங்கும் அல்லலுறும் வாழ்வில்
 இசைந்தாடி நிற்றல் எழில்
 
 *
 
 சகியே உன்னை நினைத்தால் நெஞ்சில்
 ..தடைகள் தகர்ந்தே எழில்கள் ஊறும்
 உரமாய் நானும் உயரத் தானே
 ..உணர்வில் கலந்தே உயிராய் நின்றாய்
 கரத்தை நீட்டி ககன வெளியில்
 ..காற்றைப் போலப் பறக்கவும் வைப்பாய்
 மரமாய் கல்லாய் இருந்த என்னை
 ..மயக்கி விட்டாய் கண்ணே தமிழே..!
 
 *
 ஹாய் குட் ஆஃப்டர் நூன் ஆல்.. ( குட்மார்னிங்க் சொல்லலாம்னு தான் எழுத ஆரம்பித்தேன்..தொகுப்பதற்கு இவ்வளவு நேரம் ஆகிவிட்டது..
 
 *
 
 ரவி,
 
 தமிழில் ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும் என்பார்கள்.. நீங்கள் உங்கள் சொற்களில் என்னை வென்று விட்டீர்கள். இறையருள் எனக்கிருக்கிறது என ச் சொல்லி.. (எல்லாருக்கும் தானே இருக்குங்காணும்) ( ஒ.சொ.வெ ஒ.சொ.கொ உதாரணம் பின்னால் சொல்கிறேன்..
 
 உங்கள் குருக்களில் என்னையும் ஒன்றாய் சேர்த்தமைக்கு மிக்க நன்றி.. பன்னிரண்டு பதின்மூன்/றாவது இடமாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்..ம்ம்..ஒன்பதாமிடத்தில் சொல்லியிருக்கலாம் ( என்னது ஒன்பதுல குரு.. லஷ்மிராய் உங்களுக்குப் பிடிக்காதா.. எனக்குத் தெரியாதே..) 
 
 *
 நண்பர்கள் அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி நல் வாழ்த்துக்கள்..
 *
 முன்பு எழுதிப் பார்த்த கண்ணனின் புதுக்கவிதை ஒன்று
 
 *
 
 ஒருத்திக்கு நடனம்
 ஒருத்தியுடன் பாடல்
 ஒருத்தியுடன் ஊடல்
 ஒருத்தியுடன் கண்ணா மூச்சி
 ஒருத்தியுடன் அழுகை
 மற்றும் பல கோபியரிடம் பலவிதமாய்..
 
 எல்லாம்
 அந்த மாயக் கண்ணனின் லீலை
 
 இருந்தும்
 ஒருத்தியின் அருகில் கண்ணன் காணோம்..
 
 மயக்கத்தில் இருந்த பக்கத்து கோபிகை
 எங்கே எனக் கண்ணால் வினவ
 
 அவள்
 ஷ்..கண்ணன் என்னுள்..
 மனதிற்குள்..
 செய்யாதே தொந்தரவு என..
 மாயக்கண்ணன் முகத்தில் புன்னகை..
 
 *
 
 முன்பு எழுதிப்பார்த்த கண்ணனுக்கான அந்தாதி..
 
 *
 முன்னால் எழுதிப் பார்த்த அந்தாதி..
 
 *
 
 எண்ணுகையில் நெஞ்சுள்ளே உற்சாகம் தான்பெருக்கும்
 சின்னக் குழவியவன் சீர்மிகுந்த நோக்கினிலே
 வண்ணமாய் எல்லோர்க்கும் வாழ வகைசெய்யும்
 கண்ணன் கழல்களே காப்பு
 
 காப்பதற் கென்றே குடையாகத் தான்பிடிக்க
 ஆக்களுடன் சேர்ந்தங்கு மாக்களும் நின்றுவிட
 பேய்மழையைப் பார்த்தே பயந்திருந்த கோகுலத்தைக்
 காத்துத்தான் நின்றவன் காண்..
 
 காண்பதோ சின்னக் குழந்தையின் தோற்றமெனில்
 தீண்டிய பூதகியைத் தாக்கியே - மண்ணில்
 விழச்செய்து வித்தைகள் வேடிக்கையாய்ச் செய்த
 குழவிக் கிணையேது சொல்
 
 சொல்ல நினைத்தாலே சோறதுவும் பானையிலே
 துள்ளியே ஆர்ப்பரித்துத் தோயாமல் பொங்குதற்போல்
 அள்ளிப் பெருகிடுதே கண்ணனவன் லீலையதும்
 பள்ளிப் பருவத்தில் பார்..
 
 பார்த்தான் பலவாறாய் பக்குவத்தைத் தானிழந்து
 ஆர்ப்பரித்த காளிங்கன் தீச்செயலை – வேர்த்து
 விறுவிறுத் தாடியே வெட்கிட வைத்தான்
 துறுதுறு கண்ணனவன் தான்..
 
 கண்ணனவன் தானங்கே கட்டிய கல்லிழுத்து
 திண்ணமாய் நேர்நோக்கிச் செல்லுகையில் – மின்னலது
 பட்டாற்போல் மரங்கள் பிரிந்தங்கே வீழவும்
 தொட்டனர் சுட்டியின் தாள்
 
 தாளால் விஷத்துடனே தீண்டிய பூதகியை
 மீளா நிலைக்கணுப்பி மீண்டவன் –கேளாமல்
 தாயிடம் தப்பித் தளிர்மண்ணைத் தின்னவும்
 வாயில் தெரிந்த வுலகு..
 
 
 உலகங்கள்: சுற்றுவதை ஒன்றாக்க் காட்டி
 கலக்கத்தைத் தாயிடம் கூட்டி – படக்கென
 அன்னையைக் கொஞ்சம் அணைத்தே அழுதிடுவான்
 சின்னஞ் சிறுகண்ணன் தான்
 
 சின்ன்ஞ் சிறுகண்ணன் தானென்று எண்ணாமல்
 நன்றாய் இழுத்தே நாலுஅடி போடென்றே
 கன்ன ஞ் சிவந்திருந்த கன்னியர்கள் சொல்கையிலே
 பின்னலைப் பின்னுவான் பார்..
 
 பார்க்கும் இடமெல்லாம் புன்னகைக்கு முன்வதனம்
 ஈர்க்கும் பலவாறாய் என்பதனால் – சேர்த்திழுத்துக்
 கண்ணிமை மூடவும் கண்ணா சிரிக்கின்றாய்
 விண்ணினைக் காட்டுவா யா.
 *
 வெகு அழகான கண்ணன் பாடல் கீழே..எழுதியவர் யார் கவியரசர்..
 
 
 https://www.youtube.com/watch?featur...&v=rzd42y0l0CQ
 
 
 கோகுலத்தில் பசுக்கள் எல்லாம்
 கோபாலன் குழலைக் கேட்டு
 நாலுபடி பால் கறக்குது இராமாரி! - அந்த
 மோகனின் பேரைச் சொல்லி
 மூடி வைத்த பாத்திரத்தில்
 மூன்றுபடி நெய் இருக்குது கிருஷ்ணாரி!
 (இராமாரி அரே கிருஷ்ணாரி - அரி அரி
 இராமாரி அரே கிருஷ்ணாரி)
 
 கண்ணன் அவன் நடனமிட்டு
 காளிந்தியில் வென்ற பின்னால்
 தண்ணிப் பாம்பில் நஞ்சுமில்லை இராமாரி! - அவன்
 கனிஇதழில் பால் கொடுத்த
 பூதகியைக் கொன்ற பின்னால்
 கன்னியர் பால் வஞ்சமில்லை கிருஷ்ணாரி!
 
 குளத்தில் முங்கிக் குளிக்கையிலே
 கோவிந்தன் பெயரைச் சொன்னால்
 கழுத்திலுள்ள தாலி நிக்குது இராமாரி! - சேலை
 திருத்தும் போது அவன்பெயரை
 ஸ்ரீரங்கா என்று சொன்னால்
 அழுத்தமான சுகம் கிடைக்குது கிருஷ்ணாரி!
 
 படிப்படியாய் மலையில் ஏறி
 பக்திசெய்தால் துன்பம் எல்லாம்
 பொடிப் பொடியாய் நொறுங்குதடி இராமாரி! - அட
 படிப்பில்லாத ஆட்கள் கூட
 பாதத்திலே போய் விழுந்தால்
 வேதத்திற்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி!
 
 வரிகள்: கண்ணதாசன்
 குரல்: எஸ்.ஜானகி
 இசை: எம்.எஸ்.வி
 தொகுப்பு: கிருஷ்ண கானம்
 *
 
 
 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
	 
- 
	
			
				
					5th September 2015, 04:19 PM
				
			
			
				
					#3413
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Senior Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							*
 தூங்குகிறான் தூளியிலே சின்னக் கண்ணன்
 ..சுற்றிநீயும் ஆட்டாதே விழித்துக் கொள்வான்
 பாங்காக அவன்முறுவல் முகத்தில் தானே
 ..பரவசத்தைக் கூட்டுதடி அடியே தோழி
 தேங்கிடுமே மென்காற்று அவனைச் சுற்றி
 ..தேகத்தை விட்டெங்கும் போகா வண்ணம்
 நீங்கிடுமே நாம்பட்ட துயரம் எல்லாம்
 ..நீலவண்ணன் தரிசனத்தில் என்றும் தானே..
 
 *
 ஆயர் பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப் போல்
 மாயக்கண்ணன் தூங்குகிறான் தாலேலோ
 
 
 
 
 *
 
 
 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
	 
- 
	
			
				
					5th September 2015, 04:20 PM
				
			
			
				
					#3414
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Senior Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							*
 தேடும் பார்வை உன்னைக் காண அங்கும் இங்கும்
 ….நாடும் மனமோ நிலையில் லாமல் முன்னும் பின்னும்
 ஓடிச் சென்றே அலைகள் போலே உந்தன் நினைவை
 ..ஊடி உணர்வை மேலும் மேலும் மயக்க வைக்கும்
 வாடும் வஞ்சி என்னை நீயும் மகிழ வைக்க
 …வாராய் கண்ணா வாவா விரைவில் இங்கே இங்கே
 பாடும் பாடல் சுவையா என்று நானும் அறியேன்
 ..பக்தி அதனுள் உண்டே உனக்கும் தெரியும் கண்ணா..!..
 
 
 
 கேட்க லாயிற்றே கண்ணனவன் குழலினிமை
 …தெள்ளத் தெளிவாக தேனமுதாய்க் காதுகளில்
 பார்க்க லாயிற்றே பரபரக்கும் விழிமலர்கள்
 …பார்த்தன் திருவுருவம் வரும்திசையை நோக்கித்தான்
 வேட்கை கொண்டவுளம் விரைவாக அங்குமிங்கும்
 …வெட்கம் தனைவிட்டே அவனணைப்பை நாடித்தான்
 வேர்த்து அலைபாயத் தவித்துநிற்க லாயிற்றே..
 .மேவி அவளிடமே கண்ணனெப்போ வருவானோ
 
 
 வாராதா கண்ணனவன் உருவம் கண்ணில்
 ..வந்துவக்க வைக்கவரும் காலம் என்றே
 ஆறாக மனமுருகி அழைத்த பெண்ணின்
 ..அழகுமிகு பாடல்கள் கேட்ட வண்ணம்
 வா ராதா என்றபடி வந்தான் அங்கே
 ..வஞ்சியவள் மனங்கவர்ந்த மாயன் மேலும்
 பேறாகத் தந்துவிட்டான் தன்னைத் தானே
 ..பெண்மயிலும் கலந்துவிட்டாள் அவனில் அன்று
 
 
 *
 https://www.youtube.com/watch?featur...&v=Z-uribm60cM
 யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே
 கண்ணனோடு தான் ஆட
 பார்வை பூத்திட பாதை பார்த்திட
 பாவை ராதையோ வாட
 
 இரவும் போனது பகலும் போனது
 மன்னன் இல்லையே கூட
 இளைய கன்னியின் இமைத்திடாத கண்
 இங்கும் அங்குமே தேட
 
 ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ
 ஆசைவைப்பதே அன்புத் தொல்லையோ
 பாவம் ராதா...
 *
 
 
 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
	 
- 
	
			
				
					5th September 2015, 04:20 PM
				
			
			
				
					#3415
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Senior Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							காண்கின்ற காட்சிகளில் தெரிகின்றாய் கண்ணாநீ
 ...கண்டுவக்க நேரினிலே வரவில்லை கண்ணாநீ
 பூண்கின்ற அணிகலன்கள் சூடுகின்ற பூச்சரங்கள்
 ..புடவையதன் வண்ணங்கள் உனக்காக த் தான்கண்ணா
 நோன்புதனை நான்கொண்டு நேர்விழிகள் பார்த்தபடி
 ..நெகிழ்ந்திருப்ப தெதற்காக உனக்காகத் தான்கண்ணா
 வேண்டுவன நாந்தருவேன் விரைவினிலே வந்திந்த
 ..வஞ்சியெந்தன் தாபமதைத் தீர்ப்பாயா கண்ணாநீ
 *
 
 
 http://www.inbaminge.com/t/r/Radha/U...Kanna.eng.html
 
 உன்னை எதிர்பார்த்தேன் கண்ணா நீ வாவா
 கண்கள் உறங்காமல் தவித்தாளே ராதா
 உள்ளம் போராடவும் கண்ணில் நீராடவும்
 இங்கு ஏங்குகிறேன் தனியாக..
 
 படம் ராதா
 *
 
 
 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
	 
- 
	
			
				
					5th September 2015, 04:22 PM
				
			
			
				
					#3416
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Senior Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							*
 
 ராஜ் ராஜ் சார், சிவாஜிசெந்தில் – ஆசிரியர் தின வாழ்த்துக்கள் ப்ளஸ் என் நமஸ்காரங்கள் டு யூ.
 
 *
 
 மக்கு மாணவி தான் அவள்..
 எதைச் சொன்னாலும்
 குறைந்தபட்சம் நாலுதடவை சொன்னபிறகுதான்
 ஏறும் என்றால் அதுவுமில்லை
 முழுக்கச் சரியாய்ப் போட்டுவிட்டு
 விடையில் தப்பு பண்ணுவாள்..
 
 தனிக்கல்வி தான் என்றாலும்
 கோபம் எனக்கு வந்ததால்
 நன்றாகக் காதைத் திருக
 பரவாயில்லை மிஸ்
 எப்படியும் வர்ற பங்குனில கல்யாணம்
 பண்ணிடுவாங்க
 எனக்கோ கூட்டக்கழிக்க தெரியும்
 அது போதும்
 
 சொன்னாற்போல
 ப்ளஸ் ஒன் முடித்த லீவில்
 அவளுக்குக் கல்யாணம்
 பெற்றோர் அழைப்பை வைக்க
 போனபோது குட்டியாய்ப் புன்னகை
 எங்க கணக்குடீச்சர் எனப் பெருமையாய்
 அறிமுகம்
 கொடுவாள் மீசை வேட்டிசட்டை மாப்பிள்ளையிடம்…
 
 திரும்பும் போது அவள் அம்மா சொன்னார்..
 நாலு நாத்தனார் மூன்று மச்சினனாம் அவளுக்கு
 இவ தான் மூத்தவளாம்
 சுதானமா இருக்குமா என்ன தெரியலையே
 அவர் கவலை
 எனக்குத் தொற்றிக்கொண்டு கல்யாண மண்டபத்திலிருந்து
 வீடுவரை இருந்தது..
 
 சில வருடங்கள் கழித்து
 வேறு ஊருக்கு மாற்றலாகி
 சென்னை எதற்கோ சென்றபோது
 சந்தித்தேன் அவளை..
 அதே மாணவிதான்..சற்றே புஷ்டியாய்
 தொங்கத்தொங்க நகைகள்..அடுக்கிய வளையல்கள்
 மின்னும் பேசரி..
 பட்டுப் புடவை..யானை பார்டர்..ஆரெம்கேவியா..
 அவள்தானா..இல்லை..
 
 அவள் தான்..
 ஹாய் மிஸ்..
 அதே புன்னகை..
 என்னடி இவளே எப்படி இருக்க
 நான்மல்லிகா இல்லை மிஸ் மாதவி
 மறந்துட்டீங்களா..பரவாயில்லை..
 நல்லா இருக்கேன் மிஸ்..
 நாலு நாத்தனாருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு
 தம்பிங்க மூணு பேருல ஒருத்தன் டோஹா ஒருத்தன் துபாய்
 ஒருத்தன் பெங்களூரு
 பொண்ணு தேடிக்கிட்டிருக்கோம்..
 இவருக்கு பிஸினஸ்..தோ… அந்த மால்ல தான்
 நாலு கடை..
 ரெண்டு கடை நாந்தான் பாக்கணுமாம்
 கணக்கு வழக்கெல்லாம் நாந்தேன்..
 அட்மினும் நல்லா செய்றேனாம்..
 குழந்தையா மிஸ்..எனக் கேட்டு கன்னஞ்சிவந்து
 இப்பத் தான் நாலுமாசம்..
 எல்லாம் செட்டிலாய்ட்டு வச்சுக்கலாம்னு
 இருந்தோமா..இப்பத் தான் வேளை..
 நீங்க செளக்கியமா..
 
 என் கொஞ்சூண்டு கசங்கிய துப்பட்டாவினால்
 கண்ணாடியைத் துடைத்த போது
 அவளைக் காணோம்
 பார்த்தால்
 அருகில் வந்த பிஎம் டபிள் யூவில் அவள்..
 மிஸ் ட்ராப் பண்ணட்டா..
 வேணாம் மல்லிகா ஸாரி மாதவி..
 
 பை மிஸ்
 ஐ வோண்ட் ஃபர்கெட் யூ இன் மை லைஃப்..
 
 நானும்…..!
 *
 
 உங்களுக்காக ஒரு ஜுகல் பந்தி (ராஜ் ராஜ் சார் பாணியில்.)
 
 
 
 பணமா பாசமா 1968, இது 1969, அப்ப தமிழ்ப்பாட்டுதான் மொத வந்திருக்கணும்.
 "மெல்ல மெல்ல மெல்ல எந்தன் மேனி நடுங்குது மெல்ல"  பாட்டை யூட்யூபில் கேட்டு மகிழலாம்..சரி..போட்டுடறேன்..சேர்ந்தும் பாக்கலாம்!
 
 
 
 
 
 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
	 
- 
	
			
				
					5th September 2015, 04:23 PM
				
			
			
				
					#3417
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Senior Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							*
 என்னவோ வெகு அழகிய பாடலான கோகுலத்தில் ஓர் இரவு.. வரவில்லை எனக்கு..எனில் தேடி எடுத்துப் பார்த்தேன்.. தாங்க்ஸ் வாசு ஜி. வா.கண்ணாவாவிற்கும்
 இது முழுக்க முழுக்க எல்.ஆர் ஈஸ்வரி போலத் தான் தெரிகிறது..யூட்யூபில் ஜானகி பெயர் போடவில்லை..
 
 ராகதேவன் ராஜ்ராஜ் ரவி,வரப்போகும் க.பாட்ஸ் தரப்போகும் மது அனைவருக்கும் நன்றி..
 
 
 
 
 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
	 
- 
	
			
				
					5th September 2015, 05:11 PM
				
			
			
				
					#3418
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Senior Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							அனைவருக்கும் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்
						 
 
 
 
				
				
				
				
					.........-`҉҉-
 -`҉҉..)/.-`҉҉-
 ....~.)/.~
 ........~.
 
 
 
 
 
 
- 
	
			
				
					5th September 2015, 05:13 PM
				
			
			
				
					#3419
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Senior Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							நூறு வருடங்கள் வாழ்ந்தும் 18 வயதிலேயே வாழ்ந்து வருபவர் ஆயிரம் பதிவுகள் இட்ட பின்பு,  தான் பதினெட்டே பதிவுகள்தான் இட்டதாக ஏன் சொல்ல மாட்டேன் என்கிறார்?  வாழ்த்துகள் கலைவேந்தரே!!!
						 
 
 
 
				
				
				
					
						Last edited by kalnayak; 5th September 2015 at 05:16 PM.
					
					
				 .........-`҉҉-
 -`҉҉..)/.-`҉҉-
 ....~.)/.~
 ........~.
 
 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
	 
- 
	
			
				
					5th September 2015, 05:15 PM
				
			
			
				
					#3420
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			
			
				  
 
 
			
				
				
						
						
							
						
				
					
						
							வாசு ஜி...
 
 குரலில் கொஞ்சம் மாற்றம் இருக்கிறது. ஜானகியோ எனும்படி இசைப்பதிவு ஆகி இருக்கலாம். ஆனாலும் அந்த "ண்டாட்டம்" ஒரிஜினல் ஈஸ்வரி ஸ்டைல்.. அதை யாராலும் காப்பி அடிக்கவே முடியாது.  அதனால் அங்கேயே முடிவு தெரிஞ்சு போச்சு.
 
 கனவு கண்டேன் கண்ணாவும் நிர்மலாவுக்குதான். கால் சரியில்லாத பெண் என்று நினைவு. எப்போதும் அந்த கண்ணன் பொம்மையை வைத்துக் கொண்டே இருப்பாராம். பரங்கிமலை ரயில்வே கேட்டருகில் நிர்மலா உட்கார்ந்து கண்ணன் விக்ரகத்தை நிமிர்ந்து பார்க்கும் போஸ்டர் ஏறக்குறைய ஆறு மாதம் ஒட்டிய இடத்திலேயே பளிச்சென்று இருந்ததாக்கும்....
 
 
 
 
 
 
 
- 
	
	
		Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
	 
Bookmarks