-
10th September 2015, 05:49 PM
#3461
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் திரு ராமமூர்த்தி

மக்கள் திலகத்தின் ''நம்நாடு '' 26.12.1969 அன்று தமிழ் நாட்டில் 36 திரை அரங்குகளிலும் பெங்களூர் நகரில் 2 அரங்குகளிலும் 50 நாட்கள் கடந்தது . வேலூர் நகர மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றம் சார்பாக வெளியிட்ட சிறப்பு
நோட்டீஸில் வெற்றிகரமாக 50 நாட்கள் ஓடிய அத்தனை அரங்குகள் பட்டியலுடன் இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது பெங்களூர் நகரில் கீதா , ஸ்ரீ இரண்டு அரங்கில் 50 நாட்களுக்கு மேல் ஓடியது .
ஏறத்தாழ 46 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆவணத்தை காணும் வாய்ப்பை தந்த திரு வேலூர் ராமூர்த்தி மற்றும் திரு பாஸ்கர் அவர்களுக்கு என்னுடைய நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் .
BANGALORE - SHREE TALKIES.
Last edited by esvee; 10th September 2015 at 06:03 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
10th September 2015 05:49 PM
# ADS
Circuit advertisement
-
10th September 2015, 05:50 PM
#3462
Junior Member
Seasoned Hubber
திரு.ஆர்.கே.எஸ்.
நவரத்தினம் 100 நாட்கள் ஓடியது என்று நாங்கள் சொல்லவில்லையே. மக்கள் திலகத்தின் சில படங்கள் 100 நாட்கள் ஓடாமல் இருந்திருக்கலாம். அவர் படங்களால் எந்த தயாரிப்பாளரும் நஷ்டப்பட்டதில்லை. ஏ.பி.என். நஷ்டமடைந்தார். அதனால்தான் மாரடைப்பு வந்து இறந்தார் என்று சொல்வது சரியல்ல.
தர்மராஜா திரைப்படம் எடுத்து திரு.சின்ன அண்ணாமலை நஷ்டமடைந்தார். இதுபற்றி ஏற்கனவே சகோதரர் திரு.ராஜ்குமார் அவர்கள் தினத்தந்தியில் ஆரூர்தாஸ் எழுதியிருந்ததை பதிவிட்டிருந்தார். இத்தனைக்கும் ஆரூர்தாஸ் உங்கள் முகாமை சேர்ந்தவர்தான். உங்கள் படத்துக்கு அதிகமாக வசனம் எழுதியவர் (27 படங்கள் என்று நினைக்கிறேன்) அவர்தான். பாசமலர் படம் டிஜிட்டலில் வெளியானபோது அவரைக் கூப்பிட்டுதான் மலர் வெளியிட்டனர். சொன்னால், ஆரூர்தாஸ் பொய் சொல்கிறார் என்பீர்கள். ஆனால், அவர் உங்களைப் பற்றி புகழ்ந்தால் அதை உங்கள் திரியில் பதிவிடுவீர்கள்.
தர்மராஜா நஷ்டம் தந்த அதிர்ச்சியில்தான் மணிவிழாவின்போது மாரடைப்பு வந்து அவர் இறந்தார் என்று சொன்னால் அது சரியாக இருக்குமா? அதுபோலத்தான் ஏ.பி.என். மாரடைப்பால் இறந்தார் என்பதும்.
நான் ஏற்கனவே சொன்னபடி உங்கள் வசூல் சாதனைகளை நீங்கள் ஆதாரத்துடன் பதிவிடுங்கள். பிறகு நான் கல்கியை பதிவிடுகிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
10th September 2015, 05:52 PM
#3463
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
MGRRAAMAMOORTHI
திரு கலைவேந்தன் சார்
நமது தலைவர் நம்மையெல்லாம் வாய்ச்சொல்லில் வீரனாக வளர்க்கவில்லை செயல்வீரர்களாக உருவாக்கினார்.அதனால்தான் நாம் இன்று வரை நமது தலைவருக்கு களப்பணிகள் செய்து கொண்டுளோம்
எனவே தேவையில்லாமல் வாதம் பேசுபவர்களுக்கு தாங்கள் விளக்கம் தரவேண்டாம்.அப்படி அவர்கள் வாதம் செய்ய வேண்டும் என்றாள் அவர்கள் திரியில் செய்யட்டும் நமது திரிக்கு அவர்களின் விளக்கம் அவசியமில்லை
வேலூர் records
நம் நாடு 50 நாட்கள் ஓடிய38 அரங்குகள் நமது நண்பர்களின் பார்வைக்கு மற்றும் பாதுகாக்கவும்

நம்நாடு திரைப்படம் வெளியான காலகட்டத்தில் மற்ற படங்களை விட, அதிக அரங்குகளில் (38 திரையரங்குகளில்) 50 நாட்கள் ஓடிய விவரத்தை பதிவிட்ட ஆவணச் செம்மல் திரு.ராமமூர்த்தி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
சில உண்மைகளை எல்லாருக்கும் புரிய வைக்க விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. வீணாக வாதம் செய்பவர்கள் நமது திரிக்கே வந்து வாதம் செய்யட்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் படிப்பவர்களுக்கும் நாம் உண்மைகளை நிறுவியிருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Last edited by KALAIVENTHAN; 10th September 2015 at 06:55 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
10th September 2015, 05:59 PM
#3464
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Yukesh Babu
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை -தலைவரின் சாதனைகளை
ஆர் கே எஸ் போல ஆயிரம் பேர்கள் தெரிந்தே ஏற்க மறந்தாலும் தலைவரின் சாதனை சிகரத்தை
எவராலும் எக்க்காலதிலும் முறியடிக்க முடியாது .
உண்மைதான்.....ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்....ஆதவன் மறைவதில்லை....
தனிமனித காழ்புணர்ச்சி என் மீது உங்களை போல யார் காட்டினாலும் அலைகடல் ஓய்வதில்லை !
உலகம் இதிலே அடங்குது....உண்மையும் பொய்யும் விளங்குது.....கலகம் வருது தீருது.....அச்சுதொழிலால் நிலைமை மாறுது....

இது ரசிகர் மன்றம் அச்சடித்த நோட்டீஸ் அல்ல !
தினசரியில் வந்த விளம்பரம்....அதாவது....எவராலும் ஏற்றுக்கொள்ளகூடிய ஆவணம் - இதற்க்கு பெயர் தான் ஆதாரம் ! -
அதிக அரங்குகளில் 50 நாட்களுக்கு மேல் ஓடிய படம் எது என்று மக்கள் உங்கள் ரசிகர் மன்ற நோடிசையும் பார்த்து நான் பதிவிட்டுள்ள பத்திரிகையில் வந்த தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் கொடுத்துள்ள விளம்பரத்தை பார்த்து எண்ணி தெரிந்துகொள்வார்கள் !
-
10th September 2015, 06:04 PM
#3465
Junior Member
Veteran Hubber

Originally Posted by
KALAIVENTHAN
நம்நாடு திரைப்படம் வெளியான காலகட்டத்தில் மற்ற படங்களை விட, அதிக அரங்குகளில் (37 திரையரங்குகளில்) 50 நாட்கள் ஓடிய விவரத்தை பதிவிட்ட ஆவணச் செம்மல் திரு.ராமமூர்த்தி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
சில உண்மைகளை எல்லாருக்கும் புரிய வைக்க விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. வீணாக வாதம் செய்பவர்கள் நமது திரிக்கே வந்து வாதம் செய்யட்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் படிப்பவர்களுக்கும் நாம் உண்மைகளை நிறுவியிருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
நான் பதிவிட்டுள்ள ஆதாரத்தை பார்த்த பிறகாவது திரு கலைவேந்தன் அவர்களே ...வீணாக விவாதம் செய்பவர் யார் என்று புரிந்துகொள்ளுங்கள் !
விவாதம் எல்லோராலும் ஏற்றுகொள்ளபடுகிற ஆவணத்தை பதிவு செய்ய எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி திரு கலைவேந்தன் அவர்களே...இசைவு இருந்தால் நூறாவது நாள் விளம்பரத்தை பதிவு செய்யுங்கள் !
நீங்கள் கூறுவதை போல...எதிர்காலம் என்ன...நிகழ்காலத்திலும் யார் உண்மையை பதிவு செய்கிறார்கள் என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ள நீங்கள் கூறியபடியே வசதியாக இருக்கும் !
சிவந்தமண் வெளியான காலகட்டத்தில் மற்ற எந்தப்படத்தையும் விட அதிக அரங்கில் 50 நாட்கள் கண்ட திரைப்படம் இது ஒன்றே என்பதை விளக்கும் ஆவணம் - இதனை மையத்தில் பதிவு செய்த ஆவண சாம்ராட் பம்மலார் அவர்களுக்கு நன்றி
ஒரு பானை சோற்றுக்கு இந்த ஒரு சோறு பதம் !
Last edited by RavikiranSurya; 10th September 2015 at 06:11 PM.
-
10th September 2015, 06:04 PM
#3466
Junior Member
Seasoned Hubber
நன்றி திரு.ஆர்.கே.எஸ்.
சிவந்த மண் பட விளம்பரத்தை வெளியிட்டதற்கு. சிவந்த மண்ணைவிட நம்நாடு படம் 3 அரங்குகளில் கூடுதலாக, அதாவது 38 அரங்குகளில் 50 நாட்கள் ஓடியிருப்பது உறுதியாகியுள்ளது. தங்களுக்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
10th September 2015, 06:16 PM
#3467
Junior Member
Veteran Hubber

Originally Posted by
kalaiventhan
நன்றி திரு.ஆர்.கே.எஸ்.
சிவந்த மண் பட விளம்பரத்தை வெளியிட்டதற்கு. சிவந்த மண்ணைவிட நம்நாடு படம் 3 அரங்குகளில் கூடுதலாக, அதாவது 38 அரங்குகளில் 50 நாட்கள் ஓடியிருப்பது உறுதியாகியுள்ளது. தங்களுக்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
உங்களைவிட ஒருபடி மேல் தான் ! மீண்டும் சரியாக பொறுமையாக எண்ணுங்கள் !
எண்ணும்போது ...உங்களுடையது நீங்கள் அச்சடித்த நோட்டீஸ் என்பதை நினைவில் வைத்துக்கொண்டும் எண்ணுங்கள் !
Rks
Last edited by RavikiranSurya; 10th September 2015 at 06:19 PM.
-
10th September 2015, 06:18 PM
#3468
Junior Member
Platinum Hubber
சிறு விளக்கம் .
நம்நாடு தமிழகத்தில் 37 அரங்கிலும் பெங்களூர் நகரில் 2 அரங்கிலும் சேர்த்து மொத்தம் 39 அரங்கில் 50 நாட்கள் ஓடியது . சிவந்த மண் தமிழகம்,32 கேரளா 5 மற்றும் பெங்களூர் 2 சேர்த்து 39 அரங்கில் 50 நாட்கள் ஓடியது .
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
10th September 2015, 06:29 PM
#3469
Junior Member
Veteran Hubber

Originally Posted by
esvee
சிறு விளக்கம் .
நம்நாடு தமிழகத்தில் 37 அரங்கிலும் பெங்களூர் நகரில் 2 அரங்கிலும் சேர்த்து மொத்தம் 39 அரங்கில் 50 நாட்கள் ஓடியது . சிவந்த மண் தமிழகம்,32 கேரளா 5 மற்றும் பெங்களூர் 2 சேர்த்து 39 அரங்கில் 50 நாட்கள் ஓடியது .
திரு எஸ்வி அவர்களே...
உங்களுக்கும் ஒரு சிறு விளக்கம் :
சிவந்தமண் (10-11-69) ஓடிகொண்டிருக்கும்போது , நீங்கள் குறிப்பிட்ட திரை அரங்குகள் தவிர
நடிகர் திலகத்தின் தெய்வ மகன் திரைப்படமும் (05-09-69) ,
திருடன் திரைப்படமும் (10-10-69) ஓடிக்கொண்டுதான் இருந்தன .....
ஆக திரும்பும் திசை எல்லாம் நடிகர் திலகத்தின் படங்கள்தான் திரையரங்குகளில் ஓடிகொண்டிருந்தது....அதனையும் மீறி...சிவந்தமண் இத்தனை திரை அரங்குகள் என்றால்...- இதற்க்கு மேலும் இலக்கியத்தில் வார்த்தை ஏது சொல்ல ?
Rks
-
10th September 2015, 06:31 PM
#3470
Junior Member
Veteran Hubber
நண்பர்களே
நம்முடைய இந்த பட்டிமன்றம் ..தின தந்தி சிந்துபாத் கதை போல..போய் கொண்டே தான் இருக்கும்...
கலைவேந்தன் சார்...பிரயாணம் செய்ய இருப்பதால் விடைபெறுகிறேன்...முடிந்தால் ரயில் ஏறி...பங்குகொள்கிறேன்...
நன்றி...
Bookmarks