Page 372 of 400 FirstFirst ... 272322362370371372373374382 ... LastLast
Results 3,711 to 3,720 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #3711
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    தாலாட்டு பிள்ளை எனை த் தாலாட்டு

    தாலாட்டு மாறி ப் போனதே

    ம்ம் யாரோ பாடின ஆரீ ரோ...ஆரா ரோ...என்ற ஐ ஓப்பனர் பாட்டும் நினைவுக்கு வருகிறது

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3712
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    ஜி! வணக்கம். எங்கே காணவே காணோம்? பிஸியா? நலம்தானே! தலையை காண்பித்து வாலைக் காண்பித்து பின் காணாமல் போய் விடுகிறீர்களே! கியா சமாச்சார்?
    அப்படியெல்லாம் இல்லை .. கொஞ்சம் பெர்ஸனல் வேலைகள் அதனால் தான் வர இயலவில்லை

    வரேன் ஆனால் வரல ... ஹி ஹி

  4. Likes chinnakkannan liked this post
  5. #3713
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படும் கிராமம்..இன்னும் ஒரு செயலில் கொந்தளித்து ஆளாளுக்குக் கிளம்ப
    ஒரு குடிசையிலிருந்து சீறிப்பாயும் தேன்குரல்..தாலாட்டு தான்.. சொல்லும் செய்திகள் எத்தனை..
    கொந்தளிக்கும் அனைவரும் அடங்கி அவரவர் வீட்டுக்குச் செல்வர்..

    தண்ணீர் தண்ணீர்.. சுசீலாம்மாவின் குரல் அப்படியே உலுக்கும்.. இப்போது கேட்டாலும் குட்டியாக
    ஒரு சோகம் மனதோரம் எட்டிப் பார்க்கிறது..

    *


    கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே
    கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே
    கண்ணுறங்கு சூரியனே

    ஆத்தா அழுத கண்ணீர் ஆறாக பெருகி வந்து
    தொட்டில் நனைக்கும்வரை உன் தூக்கம் கலையும்வரை
    கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே
    கண்ணுறங்கு சூரியனே

    ஊத்துமலை தண்ணீரே என் உள்ளங்கை சக்கரையே
    நீ நான் பெத்த தங்கரதம் இடுப்பிலுள்ள நந்தவனம்
    காயப்பட்ட மாமனின்று கண்ணுறக்கம் கொள்ளவில்ல
    சோகப்பட்ட மக்களுக்கு சோறு தண்ணி செல்லவில்ல
    ஏகப்பட்ட மேகமுண்டு மழை பொழிய உள்ளமில்ல



  6. Likes Russellmai, eehaiupehazij liked this post
  7. #3714
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே
    யாரடிச்சாரோ... நாயகன் இளைய ராஜா குரல்

    *

    பெண்ணாகப்பிற்ந்தவர்க்கு கண்ணுறக்கம் இரண்டுமுறை
    பிறக்கையில் ஒரு தூக்கம்
    இறக்கையில் மறு தூக்கம்
    இப்போது விட்டுவிட்டால் எப்போதும் தூக்கமில்லை
    என்னினிய கண் மணியே கண்ணுறங்குகண்ணுறங்கு..

    சித்தி..பத்மினி..சுசீலாம்மா.

    *

    இன்னொரு தாலாட்டுப் பாட்டு..தன் மனதில் பதிந்த சின்னம்மாவிற்கு - எஜமானியம்மாவிற்குப் பாடுவது..

    தாலாட்டுப் பாடி தாயாக வேண்டும்
    தாளாத என்னாசை சின்னம்மா - வெகு
    நாளாக என்னாசை சின்னம்மா..

    http://yourlisten.com/kethikanth/tha...asai-chinnamma

  8. Likes Russellmai, eehaiupehazij liked this post
  9. #3715
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா..வால்டர் வெற்றிவேல் உமா ரமணன்..

    கற்பூர பொம்மை ஒன்று

    அழகு நிலவே கதவு திறந்து - பவித்ரா

    அழகுக் குட்டிச் செல்லம் - சத்தம் போடாதே..

    இந்தப்பச்சைக் கிளீக்கொரு செவ்வந்திப் பூவில் தொட்டிலைக் கட்டிவைத்தேன்..


    *

    ஆலாய்ப் பறந்தே அழுதே ஆர்ப்பரித்து
    ...அடமாய் வாயை மூடியே திறக்காமல்
    ஓல மெனவே உதட்டை குவித்துத்தான்
    ..ஒலித்தே கண்ணீர் கன்னத்தில் விடுமழலை
    சேலாள் பதறி கொஞ்சி அமுதூட்ட
    ..சேயும் குடித்தே சற்றே கண்சொருக
    நாலா புறமும் நடந்தே தோளிலிட்டு
    ..நங்கை பாட மூடி உறங்கிடுமே..

    ஆரடிச்சு நீ அழறே அடிச்சாரைச் சொல்லியழு..ம்ம் இந்த வரி மட்டும் மாறாது என நினைக்கிறேன்..வேண்டுமானால் மொழி மாற்றம் கொள்ளும்..


  10. Likes Russellmai, eehaiupehazij liked this post
  11. #3716
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ரொம்ப நாளாக இறந்து போன அண்ணனை நினைத்து இந்தப் பெண் பாடுவதாக நினைத்திருந்தேன். படம் பார்த்த போதும் அப்படியே (தெய்வத்தின் தெய்வம்) இன்று முக நூலில் ஒருவர் எழுதியிருந்ததைப் படித்த பிறகு தான் கொஞ்சம் புரிந்தது.. பாட்டைப் பார்த்த பிறகும்.. ( தாலியைத் தொட்டு பாடுகிறார் வி.கு.அதாவது எஸ் எஸ் ஆரை நினைத்தே).. அந்த வகையில் இந்தப் பாடலின் மீது ஈர்ப்பு இன்னும்கூடுகிறது..


    இந்தப் பாடலை இனிய நண்பர் பாவலர் நாவலர் நெய்வேலி வைரம- யார் எந்தப் பாட் கேட்டாலும் வாரி தகவல்கள் பக்கெட்கள் வழங்கும் வள்ளல்,இதுவரை விஜயகுமாரி பாடல் கொடுக்கிறேன் கொடுக்கிறேன் என்று ஏமாற்றிய காளை - அண்ணன் வாசு தேவனுக்கு வழங்குகிறேன்.. (பாட் ஸ்பான்ஸர் ட் பை சி.செ,மது, ராகவேந்த்ரா, ராஜ்ராஜ் (பின்ன எனக்கு சப்போர்ட் வேணாமா )


  12. Likes Russellmai liked this post
  13. #3717
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    From Facebook

    இசைஞானி புதுமைகள் 28 !
    1. ஒரு பாடலை உருவாக்க வெளிநாட்டு பயணமோ, அழகான லொகேஷன்களோ, வார அல்லது மாதக்கணக்கில் நேரமோ இளையராஜாவுக்குத்
    தேவைப்பட்டதில்லை. தென்றல் வந்து தீண்டும்போது... என்ற பாடலை உருவாக்க இசைஞானி எடுத்துக் கொண்டது வெறும் அரை மணி நேரம்தான்.
    2. இளையராஜா வெறும் அரைநாளில் மொத்த ரீரிகார்டிங்கையும் செய்துமுடித்த படம் ''நூறுவாது நாள்"
    3. சிகப்பு ரோஜாக்கள் படத்திற்கான ரீரிகார்டிங்கிற்கு ஆன மொத்த செலவு வெறும் பத்தாயிரம்.. மூன்றே நாளில் வெறும் ஐந்தே ஐந்து இசைக்கலைஞர்களை கொண்டு அந்த படத்திற்கு இசை சேர்க்கப்பட்டது
    4. எல்லோரும் இசையை வாசித்துதான் காட்டுவார்கள். ஆனால் ராஜா மட்டும்தான் இசையை 'பக்கா' நோட்ஸாக இசைக் கலைஞர்களுக்கு எழுதியே கொடுப்பவர். அவர் நோட்ஸ் எழுதும் வேகம் பார்த்து சர்வதேச இசை விற்பன்னர்களே மிரண்டு போனது வரலாறு.
    5. அமிர்தவர்ஷினி என்ற மழையை வரவழைப்பதற்கான தனித்துவமுடைய ராகத்தை ஒரு கோடைப்பொழுதின் பிற்பகலில் "தூங்காத விழிகள்
    ரெண்டு" பாடலை அமைத்து மழையையும் வரவழைத்தவர் இசைஞானி
    6. பாடலின் மெட்டும் அதற்கான 100% orchestration ஐயும் ஒருவரே செய்யும்போது கிடைக்கும் அத்தனை முழுமை! அத்தோடு ஒவ்வொரு வாத்தியத்தையும் வித்தியாசமாய் கையாளும் ஆளுமை மற்றும் பாங்கு, அதுவும் மற்றவர்களிடமிருந்து இவரை வேறுபடுத்திக்
    காட்டுகிறது
    7. இசைஞானி தான் முதல்மிறையாக ரீதிகௌளை என்ற ராகத்தை சினிமாவில் பயன்படுத்தினார் ."கவிக்குயில்" என்னும் படத்தில் "சின்ன
    கண்ணன் அழைக்கிறான்" என்ற பாடல்தான் அது.
    8. Counterpoint என்ற யுக்தியை சர்வதேச இசையின் நுட்பங்களை இசைஞானி சிட்டுக்குருவி படத்தில் இடம்பெற்ற "என் கண்மணி" என்ற பாடலில் பயன்படுத்தி வெற்றி கண்டவர்.
    9. இந்தியத் திரை இசையில் காயத்ரி என்ற படத்தில்தான் முதன் முதலாக இசைஞானி "எலெக்ட்ரிக் பியானோ" உபயோகபடுத்தினார்.
    10. இசைஞானி செஞ்சுருட்டி ராகத்தில் இசையமைத்த ஒரே பாடல் ஆட்டுக்குட்டி முட்டையிட்டு.
    11. உலகில் வேறு எந்த இசையமைப்பாளரும் முயற்சி செய்திருக்கவே முடியாத விஷயம்., ஓர் இசையமைப்பாளர் ஏற்கனவே இசையமைத்து,
    பாடல் வரிகள் எழுதப்பட்டு, படமாக்கப்பட்டு, அந்த சவுண்ட் ட்ராக்கை அப்படியே நீக்கிவிட்டு, அந்தக் காட்சியை மட்டும் அப்படியே வைத்துக்கொண்டு, உதட்டசைவு, உடலசைவு, காட்சித்தேவை அனைத்துக்கும் பொருத்தமாக புதிய இசையை எழுதி வியப்பின் உச்சிக்கு நம்மை அழைத்து சென்றவர் இசைஞானி ( ஹேராம் )
    12. முன்பெல்லாம் பின்னணி இசைச்சேர்ப்பில் ஒரு ரீல் திரையிட்டு காண்பித்ததும் இயக்குனரோ மற்றவர்களோ இசையமைப்பாளரிடம் வந்து அமர்ந்து அந்த படத்தில் வந்ததுபோல போடுங்கள், இந்த படத்தில் வந்தது போல போடுங்கள் என்றெல்லாம் சொல்லிப் பின் இசைச்சேர்ப்பு முடிந்து, அது சரியில்லாமல் மறுபடி இசையமைப்பாளரே வேறு மாதிரி இசை சேர்ப்பார். ஆனால் இளையராஜாவிடம் அப்படி இல்லை. ஒரு ரீல்
    திரையில் பார்த்தால் போதும் உடனே இசைக்குறிப்புகளை எழுத ஆரம்பித்து விடுவார். அதை வாசித்தாலே போதும். இப்படி வேண்டாம்,
    வேறுமாதிரி போடுங்கள் என்று சொல்வதற்கான வாய்ப்பே இருக்காது.
    13. இந்தியாவில் அல்ல ஆசியாவிலே முதன் முறையாக சிம்பொனி இசை அமைத்தவர் இசைஞானி, சிம்போனி கம்போஸ் பண்ண குறைஞ்சது
    ஆறு மாசமாவது ஆகும். வெறும் 13 நாளில் மற்ற கம்போஸர்களை மிரள செய்தவர் இசைஞானி.
    14. விசிலில் டியூன் அமைத்து அதை ஒலினாடாவில் பதிவு செய்து பின்பு பாடகரை வைத்து பாடிய பாடல் "காதலின் தீபம் ஒன்று".
    15. படத்தின் கதையை கேட்காமல் பாடலுக்கான சூழ்நிலைகளை மட்டும் கேட்டு இசையமைத்த ஒரே படம், "கரகாட்டக்காரன்".
    16. வசனமே இல்லாத காட்சியில் கூட, அந்த காட்சியை இசையால், மௌனத்தால் செழுமைபடுத்தி பார்வையாளர்களுக்கு கொண்டு போய்
    சேர்க்க முடியும் என்பது ராஜாவிற்கு நன்றாக தெரியும். அதில் ராஜா கிரேட். இரண்டு பேர் மௌனமாக இருக்கும் காட்சியாக இருந்தால் கூட, அவர்களின் மன உணர்வுகளை கூட புரியாதவர்களுக்கும் புரிய வைத்துவிடுவார் ராஜா. அந்த அற்புதமான ஆற்றல் இளையராஜாவிற்கு உண்டு. இந்திய சினிமாவில் பின்னணி இசையில் நம்பர் ஒன் ஜீனியஸ் இளையராஜா.
    17. ராஜா சார் ரீ-ரெக்கார்டிங் பண்றதுக்கு முன்னாடி ஒரு முறைக்கு இரண்டு முறை படத்தை பார்ப்பார், மூன்றாவது முறை படம் திரையில் ஆரம்பிக்கும்போது நோட்ஸ் எழுத ஆரம்பிச்சிடுவார், அவர் ஆரம்பிச்சு முடிக்கும்போது படம் கரெக்டா முடியும். அந்த அளவுக்கு எந்த இசையமைபாளராலும் நோட்ஸ் எழுத முடியாது.
    18. இந்தியாவிலேயே பின்னணி இசை கேசட்டாக வந்து ஹிட்டான ஒரே படம் ‘பிள்ளை நிலா’
    19. பருவமே புதிய பாடல் பாடு என்ற பாடலுக்கு தொடையில் தட்டி தாளத்திற்கு புதிய பரிமாணத்தை கொடுத்தவர் இசைஞானி
    20. இந்தியாவில் முதல் முறையாக சிறந்த பிண்ணனி இசைக்கான விருதை வாங்கியவர் இசைஞானி ( பழசிராஜா )
    21. இசைஞானி முதன் முதலாக 'ஸ்டீரியோ'' முறையில் பாடல்களை பதிவு செய்த படம் பிரியா.
    22. 137 வாத்தியங்கள் பயன்படுத்தப்பட்ட பாடல் "சுந்தரி கண்ணால் ஒரு சேதி"
    23. இசைஞானியின் பாடலுக்காக கதை எழுதிய வெற்றிக்கண்ட படங்கள் "வைதேகி காத்திருந்தால்", "அரண்மனைக்கிளி".
    24. இந்தியாவுக்கு கம்ப்யூட்டர் இசையை அறிமுகப்படுத்தியவர் இசைஞானி ( புன்னகை மன்னன் )
    25. “பஞ்சமுகி” என்றொரு ராகம் நமது ராகதேவனால் இயற்றப்பட்டுள்ளது.. ஆனால் இதுவரை அவர் இந்த ராகத்தினை எந்த பாடலிலும் பயன்படுத்தாமல் ரகசியமாக வைத்துள்ளார்..
    26. பொதுவாக 2 அல்லது 3 நாட்களிகல் படத்திற்கான இசையமைப்பை முடித்துவிடுவார் ராஜா, ஆனால் அதிகபட்சமாக, அதாவது 24 நாள் பின்னணி இசைகோர்ப்புக்காக எடுத்துக்கொண்ட படம் ( காலாபாணி ) தமிழில் ( சிறைச்சாலை )
    27. முன்பெல்லாம் கிட்டார், தபேலாக் கலைஞர்கள் உதவியுடன் ஆர்மோனியத்தை இசைத்து டியூன் உருவாக்குவார். அதற்கு பிறகு ஆர்மோனியத்தில் வாசித்துப் பார்ப்பதில்லை, கண்களை மூடிச் சிந்திப்பார், இசை வடிவங்கள் அவர் மூளையில் இருந்து புறப்படும். அவற்றை அப்படியே இசைக் குறிப்புகளாக எழுதிவிடுவார். ஆர்மோனியம் இல்லாமல் இசை அமைக்கும் இந்த ஆற்றல், இந்திய சினிமா இசை
    அமைப்பாளர்களில் இவரிடத்தில் மட்டுமே இருக்கிறது என்பது பிரமிப்பான உண்மை.
    28. ராஜா இசை வித்தகர் மட்டுமல்ல... அற்புதமான கவிஞர். காவியக் கவிஞர் வாலிக்கே வெண்பா கற்றுக் கொடுத்தவர். அதனால் ராஜாவை தனது 'குரு' என்றும் கூறி மகிழ்ந்தவர் வாலி.

  14. #3718
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    நான் பெற்ற செல்வம் நலமான நலமான செல்வம் .....பிஞ்சும் தூங்கிட வாஞ்சை மிஞ்சும் கண்களுடன் நடிகர்திலகத்தின் தொட்டிலாட்டம்!



    Enjoy the animated lullaby song....not to miss category!

    மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி ...வாவ்!

    Last edited by sivajisenthil; 11th September 2015 at 12:12 PM.

  15. Likes Russellmai, chinnakkannan liked this post
  16. #3719
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பதின் மூன்றோ பதினான்கோ வருடம் தவம் கிடந்து பெற்ற மகள் ஆறாவதோ ஐந்தாவதோ வயதில் மரித்த ஒரு மிகப்பெரிய சோகம் சித்ராவிற்கு.. மறக்கவும் இயலாது..தாலாட்டைத் தேடியதில் கிடைத்தது அவரின் இந்த மனமுருக்கும் சோகத் தாலாட்டு..


  17. Likes Russellmai liked this post
  18. #3720
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கோபு 1954 - தங்களது பார்வையிடல் விருப்பங்கள் சரி தமிழிலேயே சொல்கிறேன் லைக்ஸ் எங்களுக்கு மிகப் பெரிய சப்போர்ட்...கொஞ்சம் வந்து நீங்களும் எழுத வேண்டும் என்பது எங்களது எல்லோரின் ஆசையும்

  19. Thanks Russellmai thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •