-
28th September 2015, 09:39 AM
#911
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் இணைந்திருக்கும் திரு மயில் ராஜ் அவர்களை அன்புடன் வரவேற்கிறேன் .
அக்னி மலர்கள் - திரு கோவிந்தராஜ் அவர்களின் பதிவுகள் மகவும் அருமையாக உள்ளது .
திருவண்ணாமலையில் நடைபெற்ற மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றம் பொன்விழா பற்றிய நிழற்படங்கள் அனைத்தும் அருமை . நன்றி திரு லோகநாதன் சார் .
இனிய நண்பர் திரு கலைவேந்தனின் கட்டுரை - யதார்த்தத்தை எடுத்து காட்டியது . நன்றி .
இனிய நண்பர் திரு செல்வகுமாரின் அபூர்வ தகவல்கள் , நிழற்படங்கள் எல்லாமே சூப்பர் .
-
28th September 2015 09:39 AM
# ADS
Circuit advertisement
-
28th September 2015, 12:21 PM
#912
Junior Member
Platinum Hubber
படகோட்டி
கவிதைபோல் தமிழ் மணம் கனிந்துருக வைத்துவிடும்
இளமைபோல் இனிமைநலம் என்றென்றும் பாடிவிடும்
அருமையெனச் சொல்லாதார் எவர் இருக்க முடியும்? கவிஞர்
திறமைதனை மெச்சித்தான் ஊர் புகழும் உன்னை!!
படகோட்டி என்னும் ஒரு திரைப்படத்தில் எட்டுப் பாட்டு
மெட்டுக்குள் நம்மையும் கட்டிப்போடும் முத்துப் பாட்டு
வட்டமிடும் வாலிபர் முதல் பாங்கான காளையர் வரை
வஞ்சியர் முதல் வளையல் கொஞ்சிடும் மங்கையர் வரை
மனதுக்குள் கொண்டாடும் மயக்கம் தரும் பாட்டு.
இதுவரைக்கும் வந்த பாடல்களையெல்லாம் வென்றெடுக்கும் பாட்டு!!!!
தொட்டால் பூ மலரும்தொட்டால் பூ மலருமாம்! தொட்டவர்கள் அறிவார்கள். இசை மெட்டால் நமை மீட்டும் இருவர் விஸ்வநாதன் ராமமூர்த்தி, திரையில் தோன்றிய வெற்றிச் சரித்திரம் எம்.ஜி.ஆர். சரோஜாதேவி. கற்பனைகளின் உச்சம் தொட்டு கவிஞரின் எழுதுகோல் நகர, அற்புத இயக்கம் தந்த பிரகாஷ்ராவ் இயற்கையின் வனப்பைக்காட்டும் காமிரா இத்தனையையும் கூட்டணி அமைத்து நம்மைக் கொள்ளையடிக்க, பாடலின் தொடக்கத்தில் ஓடிவந்த நாயகன் நாயகியைத் தொட்டுவிடும் அழகு.
பாடல் முழுவதும் ஓடிவருகிற வண்ணத்தை என்ன சொல்ல? கைகளால் காதலனும் காதலியும் தட்டிக்கொள்ள. ஒவ்வொரு வரியும் உள்ளத்தில் ஓராயிரம் சுகம் பிறக்க வைக்கிற உண்மையை மீண்டும் இப்பாடலைக் கேட்கும்போது உணரலாம். வண்ணத்தில் வரைந்து வைத்த காவியமாம் இத்திரைப் படம் நம் எண்ணத்தில் என்றும் முன்னணியில்
இது போன்ற இனிய பாடல்களால்.
படம்: படகோட்டி (1964)
வரிகள்: வாலி
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடியவர்கள்: டி.எம். சௌந்தரராஜன், பி.சுசீலா
ராகம் : சுத்ததன்னியாசி
தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்
தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்
கண்கள் படாமல் கைகள் தொடாமல்
காதல் வருவதில்லை
நேரில் வராமல் நெஞ்சைத் தராமல்
ஆசை விடுவதில்லை ஹோ!
ஆசை விடுவதில்லை
[தொட்டால்
]
இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால்
இளமை முடிவதில்லை ஹோ!
இளமை முடிவதில்லை
எடுத்துக் கொண்டாலும் கொடுத்துச் சென்றாலும்
பொழுதும் விடிவதில்லை ஹோ!
பொழுதும் விடிவதில்லை
[தொட்டால்
]
பக்கம் இல்லாமல் பார்த்து செல்லாமல்
பித்தம் தெளிவதில்லை ஹோ!
பித்தம் தெளிவதில்லை
வெட்கம் இல்லாமல் வழங்கிச் செல்லாமல்
சொர்க்கம் தெரிவதில்லை ஹோ!
சொர்க்கம் தெரிவதில்லை
[தொட்டால்
]
பழரச தோட்டம் பனிமலர் கூட்டம்
பாவை முகமல்லவா ஹோ!
பாவை முகமல்லவா
அழகிய தோள்கள் பழகிய நாட்கள்
ஆயிரம் முகமல்லவா ஹோ!
ஆயிரம் முகமல்லவா
[தொட்டால்
courtesy - கவிஞர் காவிரிமைந்தன்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th September 2015, 02:23 PM
#913
Junior Member
Senior Hubber

Originally Posted by
puratchi nadigar mgr
நக்கீரன் -26/09/2015
உண்மை அதுவல்ல. தற்போது சுவரொட்டிகளில் , பேனர்களில் நிலா வடிவத்தில் முதல்வருக்கு பயந்து புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவத்தை பயன்படுத்தும் அ. தி.மு.க. வினர் தேர்தல் நேரங்களில் சற்று பெரிதாகவும், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பாடல்களையும் , பேச்சுகளையும் , அவர் திருஉருவப்படங்களையும், பயன்படுத்தாமல் இருந்தால் தான் பணால் ஆகிவிடுவர் . இதுவும் ஜோசியருக்கு
தெரியும். ஏனோ சொல்ல மறந்துவிட்டார்.
சின்னக் குழந்தைக்கு கூட தெரியும்
இரட்டை இலையும் தலைவரின் திரு உருவப் படமும் பாடல்களும் இன்றி இவர்கள் மண்ணுக்கு சமம்
எல்லாம் காலம் செய்யும் கோலம்
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
28th September 2015, 02:27 PM
#914
Junior Member
Senior Hubber

Originally Posted by
KALAIVENTHAN
(அமெரிக்க) நரி பரியான கதை
திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்ற சொற்றொடர் ஈசனாரை போற்றிப்பாடும் திருவாசகத்தின் பெருமையை உணர்த்தும். அந்த திருவாசகத்தை எழுதியவர்தான் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர். தலைவருக்கு பல வகையில் பெருமையும் சிறப்பும் வெற்றிகளும் பெற்றுத் தந்த, தீரர் கோட்டமாம் மதுரையில் மேலூர் அருகே வாதவூர் என்ற ஊரில் பிறந்தவர்.
நான் எல்லாரையும் அழைப்பது போல பெயருக்கு முன்னே மரியாதை விகுதியாக திரு சேர்த்ததால் திருவாதவூர். அதனால், திருவாதவூரார் என்று அழைக்கப்படுபவர். பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த அரிமர்த்தன பாண்டியன் என்ற மன்னனிடம் அமைச்சராக பணியாற்றினார்.
தனது படைக்கு உயர்ந்த ரக குதிரைகள் வாங்கி வர அமைச்சர் வாதவூராரிடம் பொன் கொடுத்து அனுப்புகிறான் மன்னன். மதுரையில் இருந்து குதிரை வாங்க சோழநாட்டுக்கு செல்லும் வழியில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே திருப்பெருந்துறையை (அதுதான் இன்றைய ஆவுடையார் கோயில்) அடைந்தபோது இறைவனைக் கண்டு உபதேசம் பெற்று மந்திரி பதவியை துறந்து துறவு பூண்டார் வாதவூரார். ஆவுடையார் கோயில் என்ற புகழ்பெற்ற கோயிலை கட்டினார், குதிரை வாங்க மன்னன் கொடுத்த பணத்தில்தான்.
ஆத்திரமடைந்த மன்னன் இவரை கொடுமைப்படுத்த, இறைவன் அருளால் காட்டில் இருந்த நரிகள் எல்லாம் பரிகளாகி (குதிரையாகி) மதுரை சேர்ந்தன. மன்னனின் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. அன்றிரவு பரிகள் (குதிரைகள்) மீண்டும் நரியாக மாறி, ஏற்கனவே இருந்த குதிரைகளை கடித்து விட்டு ஓடின.
பின்னரும் மன்னன் கோபம் கொண்டு வாதவூராரை வைகை ஆற்று சுடு மணலில் நிறுத்தி வதைக்க வைகையில் தண்ணீர் வந்து ....... அதெல்லாம் பெரிய கதை . முடிவு சுபம்தான். இல்லாவிட்டால் திருவாதவூராரான மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகம் நமக்கு கிடைத்திருக்குமா? நமக்கு நரி பரியான கதை வரை இப்போதைக்கு போதும்.
எதற்கு சொல்கிறேன் என்றால், திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளான சிவபெருமான், நரிகளை பரிகளாக்கி (குதிரைகளாக்கி)யும் கூட, அவை மீண்டும் நரிகளாக மாறி காட்டுக்கே ஓடிவிட்டன என்கிறது புராணம்.
அமெரிக்க நரியின் கதையும் இப்படித்தான் இருக்கிறது. இலங்கையில் நடந்த இறுதிப் போரில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதை ஐ.நா. மனித உரிமை ஆணையம் அம்பலப்படுத்தியது.
இதை அமெரிக்காவும் வரவேற்று போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியது. ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலிலும் சில மாதங்களுக்கு முன் முதன்முதலில் தீர்மானம் கொண்டு வந்தது. அட, அமெரிக்காவுக்கும் நியாயம் தெரிகிறதே? அமெரிக்க நரி, ஒருவேளை பரியாகி விட்டதா? என்ற வியப்பு அடங்குவதற்கு முன்பே, பரியான அமெரிக்கா வழக்கம் போல மீண்டும் நரியாகி விட்டது.
இலங்கை போர் குற்றங்கள் தொடர்பாக அந்நாட்டின் உள்நாட்டு விசாரணையே போதும். சர்வதேச விசாரணை தேவையில்லை என்று கூறி தனது சுயரூபத்தை காட்டிவிட்டது அமெரிக்க ஏகாதிபத்யம். போர்க்குற்றங்கள் தொடர்பாக பன்னாட்டு பிரதிநிதிகளும் இலங்கை நீதிபதிகளும் கொண்ட கலப்பு விசாரணை நடத்த வேண்டும் என்ற ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கருத்து பற்றி அமெரிக்கா மூச்சு விடவில்லை.
இலங்கையில் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும் என்று தமிழக சட்டமன்றம் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றியது பாராட்டுக்குரியது. தீர்மானத்தை கொண்டு வந்த முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற ஆதரவு கொடுத்த எல்லா கட்சிகளின் தலைவர்களும் பாராட்டுக்குரியவர்கள். காங்கிரசும் தீர்மானத்தை ஆதரித்திருப்பது முரண் நகை.
இந்த விவகாரத்தில் மத்திய அரசும் தீவிரம் காட்ட வேண்டும். இலங்கையில் அநியாயமாக தமிழர்கள் அநியாயமாக கொல்லப்பட்ட விவகாரத்தில் நீதி கிடைக்க வேண்டும்.
சர்வதேச விசாரணைக்கு முதலில் ஆதரவு கொடுப்பது போன்று நடித்த அமெரிக்கா, பின்னர் மீண்டும் தனது சுயரூபத்தை காட்டியுள்ளது. இதுதான் நவீன, நரி பரியாகி மீண்டும் நரியான கதை. என்ன இருந்தாலும் எந்த வேடம் போட்டாலும் சுயரூபம் மாறுமோ? மாறாது.
இதைத்தான் 1962ம் ஆண்டு வெளியாகி அமோக வெற்றி பெற்ற குடும்பத் தலைவன் படத்தில் தலைவர் பாடுகிறார் மாறாதய்யா மாறாது... என்று.
ஓவல் வடிவத்தில் ரேபான் ஏவியேட்டர் கூலிங் கிளாஸ் அணிந்து மவுத் ஆர்கன் இசைத்தபடி வரும் ஸ்டைல் சக்ரவர்த்தியின் அழகில் மயங்காதார் இருக்க முடியுமா? மேலே உள்ள படம் அந்த பாடல் காட்சிதான். (படத்தை பதிவிட்ட சகோதரர் திரு.லோகநாதன் அவர்களுக்கு நன்றி.)தலைவரின் பின்னனியில் விசிறிவாழை பேரறிஞர் அண்ணா கண்ட உதயசூரியன் சின்னம் கதிர்பரப்பி நிற்பது போல காட்சி தரும். அதற்கே தனியாக கைதட்டல் அள்ளும். ஸ்டண்ட் மாஸ்டர் ஷியாம் சுந்தர் உலகம் சுற்றும் வாலிபனுக்கு முன்பே இந்தப் படத்தில் நடித்துள்ளார். கபடி விளையாட்டு போட்டி காட்சியில் நடுவராக வருவார்.
திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்களின் இசையில், கவியரசர் கண்ணதாசனின் காலத்தை வென்ற வரிகளில், பாடகர் திலகத்தின் குரலில் காலத்தை வென்றவர் திரையில் பாடிய சிந்தையை விட்டு அகலாத பாடல்;
மாறாதய்யா மாறாது மனமும் குணமும் மாறாது
மாறாதய்யா மாறாது மனமும் குணமும் மாறாது
காட்டுப் புலியை வீட்டில் வச்சாலும்
கறியும் சோறும் கலந்து வச்சாலும்
குரங்கு கையில் மாலையைக் கொடுத்து
கோபுரத்தின் மேல் நிக்க வச்சாலும் (மாறாதய்யா மாறாது)
திட்டும் வாயை பூட்டி வச்சாலும்
திருடும் கையை கட்டி வச்சாலும்
தேடும் காதை திருகி வச்சாலும்
ஆடும் கண்களை அடக்கி வச்சாலும்
மாறாதய்யா மாறாது மனமும் குணமும் மாறாது.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
புரட்சித் தலைவன் இன்று நம்மிடம் இல்லையே என்று ஏங்குகின்றது மனம்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
28th September 2015, 02:28 PM
#915
Junior Member
Senior Hubber

Originally Posted by
esvee
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் இணைந்திருக்கும் திரு மயில் ராஜ் அவர்களை அன்புடன் வரவேற்கிறேன் .
அக்னி மலர்கள் - திரு கோவிந்தராஜ் அவர்களின் பதிவுகள் மகவும் அருமையாக உள்ளது .
திருவண்ணாமலையில் நடைபெற்ற மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றம் பொன்விழா பற்றிய நிழற்படங்கள் அனைத்தும் அருமை . நன்றி திரு லோகநாதன் சார் .
இனிய நண்பர் திரு கலைவேந்தனின் கட்டுரை - யதார்த்தத்தை எடுத்து காட்டியது . நன்றி .
இனிய நண்பர் திரு செல்வகுமாரின் அபூர்வ தகவல்கள் , நிழற்படங்கள் எல்லாமே சூப்பர் .
எனது வாழ்த்துக்கள் உங்கள் எல்லாருக்கும்
-
28th September 2015, 02:29 PM
#916
Junior Member
Senior Hubber

Originally Posted by
makkal thilagam mgr
Courtesy : Facebook
குழந்தையை அரவணைக்கும்
குதூகலம் தலைவனின் முகத்தில்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th September 2015, 05:39 PM
#917
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
MGRRAAMAMOORTHI
புரட்சித் தலைவரின் புகழ் பாட வந்திருக்கும் சகோதரர் திரு.மயில்ராஜ் அவர்களை மகிழ்ச்சி பொங்க வரவேற்கிறேன்.
முகநூலில் உங்கள் பதிவுகளை திரு.சைலேஷ் சார் நமது திரியில் பதிவிட்டிருக்கிறார். அவற்றை படித்து ரசித்திருக்கிறேன். குறிப்பாக பெற்றால்தான் பிள்ளையா படப்பிட்டில் மூக்கு ஒழுகிக் கொண்டிருந்த குழந்தையின் மூக்கை தலைவர் சுத்தம் செய்தது பற்றி திருமதி.சரோஜா தேவி அவர்கள் கூறியதைப் பற்றிய உங்கள் பதிவு. இவர் திரிக்கு வந்து தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன். வந்துவிட்டீர்கள். மிக்க மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 2 Thanks, 0 Likes
-
28th September 2015, 05:41 PM
#918
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
makkal thilagam mgr
நம்நாடு படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படம். பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
28th September 2015, 05:46 PM
#919
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
makkal thilagam mgr
நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி, சொல்லின் செல்வர் சம்பத் ஆகியோருடன் தலைவர் (கீழ்படம்). மிகவும் அரிய புகைப்படத்துக்கு நன்றி திரு.செல்வகுமார் சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
28th September 2015, 05:47 PM
#920
Junior Member
Seasoned Hubber
//படகோட்டி என்னும் ஒரு திரைப்படத்தில் எட்டுப் பாட்டு
மெட்டுக்குள் நம்மையும் கட்டிப்போடும் முத்துப் பாட்டு
வட்டமிடும் வாலிபர் முதல் பாங்கான காளையர் வரை
வஞ்சியர் முதல் வளையல் கொஞ்சிடும் மங்கையர் வரை
மனதுக்குள் கொண்டாடும் மயக்கம் தரும் பாட்டு.
இதுவரைக்கும் வந்த பாடல்களையெல்லாம் வென்றெடுக்கும் பாட்டு!!!!
தொட்டால் பூ மலரும்தொட்டால் பூ மலருமாம்! தொட்டவர்கள் அறிவார்கள். இசை மெட்டால் நமை மீட்டும் இருவர் விஸ்வநாதன் ராமமூர்த்தி, திரையில் தோன்றிய வெற்றிச் சரித்திரம் எம்.ஜி.ஆர். – சரோஜாதேவி. கற்பனைகளின் உச்சம் தொட்டு கவிஞரின் எழுதுகோல் நகர, அற்புத இயக்கம் தந்த பிரகாஷ்ராவ் இயற்கையின் வனப்பைக்காட்டும் காமிரா இத்தனையையும் கூட்டணி அமைத்து நம்மைக் கொள்ளையடிக்க, பாடலின் தொடக்கத்தில் ஓடிவந்த நாயகன் நாயகியைத் தொட்டுவிடும் அழகு.//
திரு.எஸ்.வி. சார்,
தொட்டால் பூ மலரும் பாடல் குறித்து இணையத்தில் இருந்து தாங்கள் எடுத்து போட்டிருக்கும் பதிவு அற்புதம். ஓடிவந்து மூச்சிறைக்க சரோஜாதேவி அவர்களைப் பார்த்து தலைவர் ‘ஏன் தொடக்கூடாதா?’ என்று ரகசிய குரலில் கேட்டு பாடலை ஆரம்பிக்கும் அழகு கண்களில் நிற்கிறது. நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Last edited by KALAIVENTHAN; 28th September 2015 at 07:54 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
Bookmarks