-
1st October 2015, 06:28 AM
#1
Senior Member
Seasoned Hubber
அன்பு நண்பர் பேராசிரியர் செல்வகுமார்,
தங்களுடைய ஆதரவான அன்பான பதிவிற்கு என் உளமார்ந்த நன்றி. தாங்கள் தங்களுடைய அனைத்து அலுவலக சலுகைகளையும் புறந்தள்ளி, தங்களுடைய சொந்த செலவில் த.மு.மு. விற்காகப் பணியாற்றியது உளமார்ந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தாங்கள் மட்டுமல்ல தங்களைப் போன்ற பல எம்.ஜி.ஆர். ரசிகர்கள் த.மு.மு. விற்காக உழைத்ததை நாங்கள் என்றும் மறக்க மாட்டோம். அதே போல ஜானகி அம்மையாரின் அணி சார்பாக போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் மக்கள் தலைவன் சிவாஜியின் தலைமையில் பல்லாயிரக்கணக்கான சிவாஜி ரசிகர்கள் தங்களுடைய சொந்த செலவில் உளமார்ந்த உழைப்பினை அளித்துப்பணியாற்றியதையும் தாங்கள் அறிவீர்கள். ஒரு சிலர் கேள்வி கேட்பதை நாம் புறந்தள்ளுவோம்.
இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாளையொட்டி அன்னை இல்லம் விழாக்கோலம் பூண்டிருக்கும். ஏராளமான ரசிகர்கள் நடிகர் திலகம் வாழும் போதும் சரி, அவர் பூவுடலால் இவ்வுலகை விட்டுச் சென்று 14 ஆண்டுகளாகியும் இன்றும் சரி, அவர் அங்கு இருப்பதாகத் தான் உணர்கிறார்கள். இதை அனைவரும் அறிவர்.
ஆனால் பலர் அறியாத ஒன்று, இதே திருவிழாக் கோலத்தை அன்னை இல்லம் ஜானகி அம்மையாருக்காக நடிகர் திலகம் காங்கிரஸை விட்டு விலகி வந்த மறுநாள் தொடங்கி தொடர்ந்து தேர்தல் வரையில் நீடித்தது என்பதை. நான் பலமுறை முன்பே இங்கு பகிர்ந்து கொண்டுள்ளேன். நடிகர் திலகத்தின் வீட்டருகில் சாலையெங்கும் லாரிகள் அணிவகுத்து நிற்கும், பல்வேறு வயதையொட்டிய ஆண்களும் பெண்களும் லாரியிலிருந்து இறங்கி நேராக அன்னை இல்லத்தில் நுழைந்து மக்கள் தலைவர் சிவாஜியின் காலடியில் விழுந்து உணர்ச்சி வசத்தோடு நன்றி கூறி கண்ணீர் விட்டு அழுததைக் கண்ணால் பார்த்தவன் நான். எத்தனையோ எம்.ஜி.ஆர். ரசிகர்கள் என்னிடமே வந்து அவரைப் பற்றி தழுதழுத்தவாறு பாராட்டியதைக் காது குளிரக் கேட்டவன். அப்போது தொடங்கிய இறுமாப்பு இன்னும் பல ஜென்மங்களுக்குத் தொடரும். புராணங்களிலும் கதைகளிலும் படித்த நட்பின் சிறப்பை அன்று நடிகர் திலகம் இந்த 20ம் நூற்றாண்டில் நிரூபித்துக் காட்டினார். கோப்பெருஞ்சோழன்-பிசிராந்தையர் உள்பட பல நட்பின் சிறப்பைப் படித்த நாம் அதை நடிகர் திலகம்-எம்.ஜி.ஆர். அவர்களிடம் கண்டோம். எம்.ஜி.ஆர். அவர்கள் நடிகர் திலகத்திடம் ஒப்படைக்க இருந்த பெரும் பொறுப்பை நடிகர் திலகம் கண்ணியமாக மறுத்து அதை அவரிடம் எடுத்துரைத்து, அவருக்குப் பிறகும் தன் முழு ஆதரவை அவருடைய வேண்டுகோளுக்கேற்ப நல்குவதாக உறுதியளித்தார். இதை அன்றைய எம்.ஜி.ஆர். ரசிகர்கள் பலரும் அறிவர்.
அந்த அடிப்படையில் இந்திய அரசியல் வரலாற்றில் தியாகத்தின் அடையாளமாக வாழ்ந்து காட்டிய நடிகர் திலகத்தின் பிறந்த நாளில் அவருடைய ரசிகர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துக்களை அளித்த தங்களுக்கு என் மனப்பூர்வமான நன்றியைக் கூறிக்கொள்கிறேன்.
அன்புடன்
ராகவேந்திரன்
Last edited by RAGHAVENDRA; 1st October 2015 at 06:32 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
1st October 2015 06:28 AM
# ADS
Circuit advertisement
-
1st October 2015, 06:50 AM
#2
Senior Member
Seasoned Hubber
அன்பு மிக்க பம்மலார்
தங்களுடைய இரு புத்தகங்களையும் விரைவில் எதிர்பார்க்கிறோம்.
அதுவும் புகழ்மாலை 2ல் மேலே காணப்படும் நிழற்படம் அபூர்வமானது. பத்திரிகைகளில் மட்டுமே வெளியாகியிருந்த இந்நிழற்படம் இதுவரையில் இவ்வளவு தெளிவாக நான் பார்த்ததில்லை. இதற்காகத் தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுக்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks