Results 1 to 10 of 4009

Thread: Makkal Thilagam MGR - PART 17

Threaded View

  1. #11
    Junior Member Newbie Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வணக்கம் மய்யம்….. இந்த மய்யத்தில்….. எனக்கு இடம் அளித்த அனைத்து ரத்தத்தின் ரத்தங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் ……

    ஏன் …….? தமிழில் இது மிக முக்கியமான கேள்விக்குரிய வார்த்தை ……!!!
    மிகவும் சக்தி வாய்ந்த கேள்வியும் கூட ……!!!

    என்ன ….? எங்கே ….? எப்படி …? எவ்வளவு ….? யார் …..? என்று ஆயிரம் கேள்விகள் நம் தமிழ் கூறும் நல்லுலகில் இருந்தாலும் ஏன் …..? என்ற கேள்விக்கு உள்ள சக்தி மகத்தானது ……
    அதனால் தான் அந்த கேள்வியில் ஒரு காவிய பாடல் … காவிய கவிஞர் வாலியால் நம் திரை உலகத்திற்கு கிடைத்து உள்ளது …..
    இந்த கேள்விக்கு மிக முக்கிய சக்தி உள்ளதை கவிஞர் வாலிக்கு சொன்னது யார் தெரியுமா …..?

    கவிஞர் வாலியே சொன்னது ……

    ஆயிரத்தில் ஒருவன் டிஷ்கஷனில் வைத்து சில அடிமை கதாபாத்திரங்கள் பேசுவதாக வசன கர்த்தா r.k.சண்முகம் எழுதிய வசனத்தை பேடில் வைத்து கொண்டு எம் .ஜி .ஆர் . அவர்கள் உட்கார்ந்து யோசித்துக்கொண்டு இருந்தார் …..

    அப்போது நானும் நாகேஷும் அங்கே போய்….. எம் .ஜி .ஆரை கலாய்க்கிற மாதிரி …. “என்ன வசனம் எழுத போறீங்களா …..?” - என்றோம் ….. ஜாலியாக …..

    சிரித்து கொண்டே அவர் சொன்னார் ….…….

    “ஆயிரத்தோரு கேள்விகள் நம் தமிழில் இருந்தாலும் ஏன் …. கவிஞரே …. ஏன் - ங்கற கேள்வி இல்லைனா வாழ்க்கையே இல்லைல …..???!!!” - என்றார் ….

    “நான் அப்போதும் ஜாலியாக – நாகு …. அண்ணன் வசனம் எழுதல…. பாட்டு எழுத போறாரு …..” – என்றேன் …..

    எம் .ஜி .ஆரின் முகம் சூரியனாய் பிரகாசித்தது …..

    கவிஞரே …. இதையே சரணமா வச்சு …. பாட்டு போடுங்க …… என்று சொல்லி விட்டு நேரே டைரக்டர் இடம் போய் “ இந்த சிட்சுவேசன்ல ஒரு பாட்டு வைக்கிறோம் …. வாலி ரெடி பண்றாரு …. “ அப்படின்னு சொல்லிட்டு திரும்பி என்னை பார்த்து கண்ணடித்து விட்டு போய் விட்டார் …..

    அடுத்த அரை மணி நேரத்துல பாட்டு ரெடி …. போனில் சொன்னேன் ….
    “ எங்கே இருக்கீங்க … ?” என்றார் ….
    சொன்னேன் …. எனக்கு ஒரே ஆச்சர்யம் ….. அடுத்த கால் மணி நேரத்துல எம் .ஜி .ஆர் . ஸ்பாட்டுக்கு வந்து என்னை கட்டி பிடிச்சு ….. முத்தம் குடுத்தார் …. இப்படி நான் நிறைய முத்தம் வாங்கி இருக்கேன் ……

    சரி …. இப்போ எதுக்கு இந்த மலரும் நினைவு ….. என்று கேட்குறீங்களா ….?.... நம் மக்கள் திலகத்தின் புகழ் பரப்பும் பணியில் ஏன் மயில்ராஜ்க்கு நாம் இவ்வளவு கால தாமதமாய் இந்த மய்யத்தில் சேர்த்தோம் என்று நம் ரத்தத்தின் ரத்தங்கள் கவலைபடும் விதமாகவும் ……

    ஏன் …. இந்த மயில்ராஜ் ஐ மய்யத்தில் சேர்த்தார்கள் ???? என்று நம் எதிர்கூட்டம் கவலை படும் விதமாகவும் இருக்கும் இந்த மக்கள் திலகத்தின் மயில்ராஜ் - ன் பதிவுகள் …….

    இப்போ புரிகிறதா ….? ஏன் என்ற கேள்வியின் மகிமை ……………

    மக்கள் திலகத்தின் மயில்ராஜ் …….
    Last edited by GOVINDARAJRAM; 2nd October 2015 at 10:34 PM. Reason: added

  2. Thanks orodizli thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •