-
5th October 2015, 11:03 PM
#1471
Moderator
Diamond Hubber
சின்னத்திரையின் பேய் சூசன்.
இப்போதெல்லாம் சின்னத்திரையாக இருந்தாலும் சரி, பெரிய திரையாக இருந்தாலும் சரி நடிகைகளுக்கு பேயாக நடிப்பதற்கு பிடித்திருக்கிறது. பெரிய திரையில் ஹன்சிகா, த்ரிஷா, நயன்தாரா, அனுஷ்கா போன்ற பெரிய நடிகைகளே பேயாக நடிக்கிறார்கள். சின்னத்திரையில் அப்படி ஒரு வாய்ப்பு சூசனுக்கு கிடைத்திருக்கிறது.
வேந்தர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஏழாம் உயிர் தொடரில் அவர்தான் பேயாக நடிக்கிறார். ஏழு பெண்களின் உயிரைக் குடிக்க வேண்டும் என்பது சூசன் பேயின் திட்டம். இதுவரை மூன்று பெண்களை கொன்று உயிரை குடித்துவிட்டார் அடுத் எபிசோடிலிருந்து 4வது உயிரை குடிக்க திட்டம் போடுகிறார். அவரது பட்டியிலில் சீரியலின் நாயகி லட்சுமி விஸ்வநாத்தும் ஒருவர். அவரையும் கொல்கிறாரா. இல்லை அவர் இவரை அழிக்கிறாரா என்பதுதான் சீரியலின் கிளைமாக்ஸ்.
"பெரிய திரையில் பேயாக நடிப்பது ரொம்ப சிம்பிள் 2 மணி நேரம் பயமுறுத்தினால் போதும் சின்னத்திரையில் அப்படியில்லை. தினமும் 30 நிமிடம் பயமுறுத்த வேண்டும். அதனால் இது சவாலான விஷயம்தான்" என்கிறார் சூசன்.
நன்றி: தினமலர்
-
5th October 2015 11:03 PM
# ADS
Circuit advertisement
-
5th October 2015, 11:06 PM
#1472
Moderator
Diamond Hubber
வில்லி வேடம் கேட்கும் தேவிப்பிரியா!
ஒரு காலத்தில் சின்னத்திரை சீரியல்களை கலக்கி வந்தவர் தேவிப்பிரியா. நாயகி, வில்லி என பலதரப்பட்ட வேடங்களில் நடித்தார். அதோடு, சினிமாவிலும் சில படங்களில் முக்கிய வேடங்களில் தோன்றினார். என்றாலும் அவரது கவனம் சீரியல்களிலேயே அதிகமாக இருந்ததால் சினிமாவில் பெரிய அளவில் வளர முடியவில்லை. ஆனால் இப்போது அவர் சீரியல்களிலும் வில்லி வேடங்களில் நடித்துக்கொண்டிருந்தபோதும், சினிமா வாய்ப்புகளையும் அதிகமாக வரவேற்கிறார். காரணம், என்னதான் சீரியல்களில் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடித்தாலும் சினிமா நடிகை என்கிறபோதுதான் மரியாதையும், சம்பளமும் சின்னத்திரை உலகில் அதிகமாக கிடைக்கிறதாம்.
அதன்காரணமாக, கத்துக்குட்டி படத்தில் ஒரு நடிகை கதாபாத்திரத்தில் நடித்த தேவிப்பிரியா தற்போது மேலும் சில படங்களிலும் நடித்து வருகிறார். அதேசமயம் சீரியல்களைப் பொறுத்தவரை, வில்லி வேடங்களுக்கே அவர் முதலிடம் கொடுக்கிறாராம்.
என்னைக்கேட்டால், சீரியல்களில் வில்லிதான் கதாநாயகியே. கதையை நகர்த்தி செல்லும் மொத்த பொறுப்பும் வில்லியிடமே இருப்பதால் அதில்தான் நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கும். அதனால்தான் நான் வில்லி வேடத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன் என்று கூறும் தேவிப்பிரியா, சினிமாவில் வில்லி வேடம் கிடைத்தாலும் நடிப்பதற்கு தயாராக இருக்கிறாராம். அந்த வகையில், சினிமா-சின்னத்திரை இரண்டு மீடியாக்களிலும் மெகா வில்லியாக ஒரு பெரிய ரவுண்டு வரவேண்டும் என்பதுதான் தேவிப்ரியாவின் ஆசையாக உள்ளதாம்.
நன்றி: தினமலர்
-
5th October 2015, 11:09 PM
#1473
Moderator
Diamond Hubber
புதிய சரித்திர தொடர் வீர மார்த்தாண்டன்
திரைப்படங்களைப்போல சின்னத்திரையிலும் சரித்திர தொடர்களுக்கு தனி மவுசு இருக்கிறது. எல்லா சேனல்களுமே சரித்திர தொடர்களை ஒளிபரப்ப ஆர்வம் காட்டுகிறது. ஆனால் அதனை தயாரிப்பதற்கு பெரிய பட்ஜெட் ஆகும் என்பதால் டப்பிங் சீரியல்களை வாங்கி ஒளிபரப்புகிறார்கள்.
ஜீ மராட்டி டி.வியில் ஒளிபரப்பான ஜெய் மல்ஹார் என்ற தொடரை ஜீ தமிழ் வீர மார்த்தாண்டன் என்ற பெயரில் டப் செய்து ஒளிபரப்புகிறது. தேவத்த நாகே, சுரபி ஹண்டா, இஷா கேஷ்கர் நடித்துள்ளனர். கார்த்திக் கெண்டே இயக்கி உள்ளார்.
வீர மார்த்தாண்டன் மாபெரும் வீரன் மற்றும் சிவபக்தன். சிவனின் ஆசியோடும், அருளோடும் அவன் மக்களுக்கு ஆற்றும் சேவை எதிரிகளை வெல்லும் போர் என ஆன்மீகமும், சரித்திரமும் கலந்த கற்பனை கதை. திங்கள் முதல் வெள்ளி வரை ஜீ தமீழ் சேனலில் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது
நன்றி: தினமலர்
-
9th October 2015, 12:10 AM
#1474
Moderator
Diamond Hubber
-
9th October 2015, 12:11 AM
#1475
Moderator
Diamond Hubber
-
9th October 2015, 12:11 AM
#1476
Moderator
Diamond Hubber
-
9th October 2015, 12:11 AM
#1477
Moderator
Diamond Hubber
-
5th November 2015, 12:42 AM
#1478
Moderator
Diamond Hubber
மெல்ல திறந்தது கதவு: ஜீ தமிழில் புதிய தொடர்
மோகன் நடித்த பிரபலமான படம் மெல்ல திறந்தது கதவு. அந்த படத்தின் பெயரில் ஜீ தமிழ் சேனல் புதிய தொடர் ஒன்றை கடந்த 2ம் தேதி முதல் ஒளிபரப்புகிறது. வாரம்தோறும் திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 8 மணிக்கு இது ஒளிபரப்பாகிறது.
சீரியல்களின் வரலாற்றில் இந்த தொடர் ஒரு முக்கியமானதாக இருக்கும். காரணம் முழுக்க முழுக்க காதல் கதை என்பதோடு. பார்வைதிறன் இல்லாத சந்தோஷ், செல்வி என்ற இரண்டு இளம் ஜோடிகளின் காதல் கதை. இதில் சந்தோஷ் கோடீஸ்வர வீட்டு மகன் பல கோடி சொத்துக்களுக்கு அதிபதி அதை விட அவன் நேசிப்பது செல்வியை. செல்வி சாதாரண குடும்பத்து பெண். சந்தோஷ் கோடீஸ்வரன் என்பது தெரியாமலேயே காதலிப்பவள். இந்த காதலர்களுக்கு வரும் பிரச்னையும், அதன் தீர்வுகளும்தான் கதை.
புதுமுகங்கள் நடிக்கிறார்கள். என்.கண்ணன் இசை அமைக்கிறார். வி.சங்கர்ராமன் ஒளிப்பதிவு செய்கிறார், திவ்யா விஷ்வநாதன் தயாரிக்கிறார், பிரம்மா ஜி.தேவ் இயக்குகிறார். பலத்த எதிர்பார்ப்புகளுடன் தொடங்கியிருக்கிறது மெல்ல திறந்தது கதவு
நன்றி: தினமலர்
-
5th November 2015, 12:45 AM
#1479
Moderator
Diamond Hubber
விஜய் டி.வியின் புதிய தொடர் களத்து வீடு!
திரைப்படங்களின் தரத்துக்கு நிகராக வித்தியாசமான தொடர்களை ஒளிபரப்புவது விஜய் டி.வியின் வழக்கம். அந்த வரிசையில் அடுத்து வரும் தொடர் களத்து வீடு.
திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் இது.
சங்கரபாண்டியன், தேவிப்ரியா, சிவன் ஸ்ரீனிவாசன், அனிலா, மாணிக்கம், ராஜேஷ், காயத்ரி, ஹேமா, மனோகரன், பாலன், ஜீத்து, ரீமா, சம்பத், ஜெயபிரகாஷ் பிரபு கண்ணன் நடிக்கிறார்கள். அருள் அரசன் இயக்குகிறார், சாய் ஸ்ரீனிவாஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.
மதுரை அருகில் உள்ள ஒரு கிராமத்தில் நடக்கும் கதை. அந்த கிராமத்தில் களத்து வீடு, காரை வீடு, கம்மா வீடு என்கிற மூன்ற பெரிய வீடுகள் இருக்கிறது. அதில் மூன்று பெரிய குடும்பங்கள் வசிக்கிறது. அதில் களத்து வீட்டு செல்வாக்கை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று கார வீட்டுக்காரர்களும், கம்மா வீட்டு காரர்களும் முயற்சிக்கிறார்கள். அதை களத்து வீட்டுக்காரர்கள் எப்படி முறியடிக்கிறார்கள் என்பது கதை.
நன்றி: தினமலர்
-
5th November 2015, 12:49 AM
#1480
Moderator
Diamond Hubber
கலைஞர் டிவியில் இன்று (நவம்பர் 2-ந்தேதி) முதல் புதிய மெகா தொடர் கண்ணம்மா வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
இந்த தொடர் பழிவாங்கும் கதையில் உருவாகிறது.
அதாவது, தனது கம்பெனியில் வேலை செய்யும் ஸ்ரீனிவாஸ் என்பவன் பண மோசடி செய்ததாக அவனை வேலையில் இருந்து நீக்குகிறார் தொழிலதிபர் சங்கர நாராயணன். இதையடுத்து அவரை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவரது மகள் கண்ணம்மாவை காதலித்து திருமணம் செய்யும் ஸ்ரீனிவாஸ், நான்கு பிள்ளைகள் பிறந்த பிறகு கண்ணம்மாவை தவிக்க விட்டு பழிதீர்க்கிறான்.
இதையடுத்து கண்ணம்மா என்னென்ன நடவடிக்கை எடுக்கிறாள் என்பதுதான் இந்த தொடரின் கதையோட்டம். முற்றிலும் குடும்ப பின்னணியில் உருவாகும் இந்த கண்ணம்மா தொடரில் சோனியா லீடு ரோலில் நடிக்கிறார். அவருடன் பொள்ளாச்சி பாபு, கிருத்திகா, ராஜசேகர், சுமங்கலி, அழகு உள்பட பலர் நடிக்கின்றனர். என்.கிருஷ்ணசாமி கதை திரைக்கதை வசனம் எழுத, மூலக்கதை எழுதி இயக்குகிறார் வேதபுரி மோகன். என்.எஸ்.பாலசுப்ரமணியன் ஒளிப்பதிவு செய்ய, மரியா மனோகர் இசையமைக்கிறார்.
வேல் மீடியா தங்கவேல் தயாரித்துள்ள கண்ணம்மா தொடரின் டைட்டீல் பாடலை பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன் பாடியுள்ளார்.யில் புதிய தொடர் கண்ணம்மா!
நன்றி: தினமலர்
Bookmarks