Results 471 to 480 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

Threaded View

  1. #11
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    ஒரு வார்த்தை பல லட்சம் புண்ணியங்கள் !!!

    மது சார் - இந்த பதிவு உங்களுக்காக !

    ஒரே வார்த்தையைக்கொண்டு மாயா ஜாலம் செய்தவர்கள் நம் முன்னோர்கள் - அதில் புதைந்திருக்கும் கருத்துக்கள் நம்மையெல்லாம் இன்னும் வாழ வைத்துக்கொண்டிருக்கின்றன .


    பதிவு 1

    கிருஷ்ணம் , கிருஷ்ணாஷிரியம் கிருஷ்ணம்
    கிருஷ்ணம் , கிருஷ்ணாஷிரியம் ததா
    கிருஷ்ணம் , கிருஷ்ணாஷிரியம் கிருஷ்ணம்
    கிருஷ்ணம் , கிருஷ்ணாஷிரியம் பஜே

    ஒவ்வொரு கிருஷ்ணனுக்கும் ஒவ்வொரு அர்த்தம் . கிருஷ்ணம் என்ற சொல்லுக்கு பல வேறு அர்த்தங்கள் உண்டு . இந்த பாடலை எடுத்துக்கொள்ளுங்கள் - எவ்வளவு கிருஷ்ணர்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றார்கள் என்று தெரிய வரும் . நம் கண்ணதாசனும் இந்த பாடலைக்கேட்டபின் தான் " கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா " என்ற காலத்தினால் அழிக்க முடியாத உன்னத பாடலை தந்துள்ளார் . ஒரு வித்தியாசம் - கண்ணதாசனின் அந்த பாடலில் கிருஷ்ணன் ஒன்று ஆனால் கோரிக்கைகள் பல . நாம் எடுத்துக்கொண்ட இந்த பாடலில் கோரிக்கை ஒன்று , கிருஷ்ணர்கள் பல .

    இந்த பாடலில் 8 மொத்தம் கிருஷ்ணர்கள்

    1. கிருஷ்ணன் : மஹா பாரதத்தை எழுதிய வியாசரின் பெயரும் "கிருஷ்ணன் " தான் .

    2. அர்ஜுனனுக்கும் " கிருஷ்ணன் " என்ற பெயர் உண்டு .

    3. திரௌபதிக்கும் " கிருஷ்ணா " என்று பெயர் .

    4. யமுனை நதிக்கும் " கிருஷ்ணா " என்று பெயர் உண்டு .

    5. கிருஷ்ணன் என்றால் " சியாமள வர்ணன் " - கருமை நிறம் கொண்டவன் .

    6. கிருஷ்ணன் என்பதற்கு " மற்றவர்களை மயங்க வைப்பவன் " என்றும் ஒரு பொருள் உண்டு .

    7. சதானந்த ரூபன் - எப்பவும் ஆனந்தமாக இருப்பவன் ஆனந்தத்தை மற்றவர்களுக்கும் அள்ளி அள்ளித் தருபவன் என்பதால் பெயர் "கிருஷ்ணன் . "

    8. பரமாத்மாவானவன் என்பதால் கிருஷ்ணன்

    அவனை பூஜிக்கிறேன் .


    பதிவு 2

    யாம் ஆமா? நீ ஆம் ஆம்; மாயாழீ! காமா! காண் நாகா!
    காணா காமா! காழீயா! மா மாயா! நீ, மா மாயா!

    இந்த வரிகள் திருஞானசம்பந்தர் - திருக்கடைக்காப்பில் , கௌசிகம் , மூன்றாம் "திருமுறையில் " வருகிறது .

    யாம் - ஆன்மாக்களாகிய நாங்கள் கடவுளென்றால்.

    ஆமா - அதுபொருந்துமா?

    நீ : நீயே கடவுளென்றால்.

    ஆம் ஆம் - முற்றிலும் தகுவதாகும்.

    மாயாழீ - பேரியாழ் என்னும் வீணையை வாசிப்பவனே.

    காமா - யாவரும் விரும்பத்தக்க கட்டழகனே.!

    காண் - (தீயவும் நல்லவாம் சிவனைச் சேரின் என்பதை யாவரும்) காணுமாறு பூண்ட---

    நாகா - பாம்புகளையுடையவனே. !

    காணா காமா - கை, கால் முதலிய அவயவங்கள் காணாதனவாச் செய்தகாமனையுடையவனே. (காமனை யுருவழித்தவனே.)

    காழீயா! : சீர்காழிப் பதியில் எழுந்தருளியிருப்பவனே!!

    மாமாயா - இலக்குமிக்குக் கணவனான திருமாலாகவும் வருபவனே (நான்க னுருபும்பயனும் தொக்க தொகை) “நாரணன்காண் நான்முகன்காண்” என்பது திருத்தாண்டகம்.

    மா - கரியதாகிய.

    மாயா - மாயை முதலிய மலங்களினின்றும். நீ - எம்மை விடுவிப்பாயாக.
    Last edited by g94127302; 9th October 2015 at 08:04 AM.

  2. Thanks madhu thanked for this post
    Likes Russellmai, madhu liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •