-
9th October 2015, 06:48 PM
#1
Senior Member
Seasoned Hubber
தமிழகத்தின் ஒவ்வொரு குக்கிராமத்தையும் அறிந்தவர்...
தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் விஜயம் செய்தவர்..
புகை நுழையாத இடத்திலும் போலீஸ் நுழைந்து விடும் என்பார்கள் அந்தக் காலத்தில்.. அந்தப் போலீஸே நுழைந்திராத கிராமங்களிலும் கூட நுழைந்தவர் மக்கள் தலைவர் சிவாஜி..
பட்டி தொட்டியெங்கும் காங்கிரஸ் இயக்கத்தை பரப்பியவர்..
பட்டி தொட்டியெங்கும் காங்கிரஸ் கொடி ஏற்றியவர்..
சென்ற இடமெல்லாம் பெருந்தலைவரை அறிமுகப் படுத்தியவர்..
திராவிட இயக்க சுனாமியைத் தன்னந்தனியாய் சந்தித்து தன் சக்தியென்னும் மாபெரும் சுவற்றால் எதிர் கொண்டு காங்கிரஸ் என்னும் வீட்டைக் காப்பாற்றியவர்...
ஊட்டி மலை உச்சியானாலும் சரி, தெக்கண பள்ளத்தாக்காக இருந்தாலும் சரி..
அங்கே வெளிச்சம் இருக்கிறதோ இல்லையோ... சிவாஜி என்னும் பெயர் இருக்கும்...
எந்த மூதாட்டியைக் கேட்டாலும் தவறாமல் அடையாளம் காணும் முகம் ...
எந்த சலூனில் பார்த்தாலும் போர்டில் இடம் பெற்றிருக்கும் முகம்...
எந்த ஜவுளிக்க்டையானாலும் போர்டில் இடம் பெற்றிருக்கும் முகம்...
ஒவ்வொரு கிராமும் சென்று பார்த்தால்.. அங்கே திரும்பிய திசையெல்லாம் சிவாஜியின் திருமுகம் தான் காட்சியளிக்கும்..
இந்த அளவிற்கு தமிழ் சமுதாயத்தோடும் தமிழ் இல்லங்களோடும் இரண்டறக் கலந்து விட்ட
அந்த மாபெரும் தலைவன் மக்கள் தலைவன் நடிகர் திலகம் என்பதை நிரூபிக்கும் வண்ணம் வெளிவந்துள்ளது..
கங்கை அமரனின் கட்டுரை..
உளமார்ந்த நன்றி ஐயா...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
9th October 2015 06:48 PM
# ADS
Circuit advertisement
Bookmarks