-
10th October 2015, 11:14 AM
#1
Junior Member
Seasoned Hubber
நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை !!
பதிவு 4
இந்த பாடல் எவ்வளவு அமைதியான , அழகான பாடல் - எவ்வளவு வாய்ப்புக்குள் வாழ்க்கையில் வந்தாலும் அதற்காக அலட்டிக்கொள்ளாத , நாணல் , படகு - வளைந்து கொடுத்து வாழ்க்கையை கெட்டியாகப்பிடித்துக்கொள்கின்றன --- தென்னல் இளம் கீற்றை தாலாட்டும் தென்றலை பாருங்கள் - சிறிதே உயர்வு வந்தவுடன் அதற்க்கு கூடவே கர்வமும் வந்து விடுகிறது - தன்னுடன் நண்பானாக பழகிய தென்னம் கீற்றை கொஞ்சம் கூட கருணையே இல்லாமல் சாய்த்து வீழ்த்திவிடுகிறது . கடைசியில் அமைதியுடன் வாழ்வது அந்த சீற்றம் மிகுந்த தென்றல் அல்ல - வளைந்து கொடுத்த அந்த படகும் , நாணலும் தான் ---- கர்வம் தலையிலிருந்து இறங்கினால் , அங்கே கருணை மனதில் குடியேறும் என்பதை உணர்த்தும் அழகிய பாடல் - பல அழுகிய பாடல்களின் நடுவே அழியா வரத்தைப்பெற்ற பாடல் - கேட்டுக்கொண்டே இருக்கலாம் .
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th October 2015 11:14 AM
# ADS
Circuit advertisement
Bookmarks