Page 181 of 401 FirstFirst ... 81131171179180181182183191231281 ... LastLast
Results 1,801 to 1,810 of 4009

Thread: Makkal Thilagam MGR - PART 17

  1. #1801
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    chennai
    Posts
    0
    Post Thanks / Like
    நமது பதிவுகளுக்கு வாழ்த்து தெரிவித்த திரு.ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி . புரட்சித் தலைவர் கண்டெடுத்த மக்கள் இயக்கமான அ இ அ தி மு க தனது 43 ஆண்டுகள் வெற்றி பயணத்தை 44 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்நன்நாளில் மேலும் பல பதிவுகளை பதிவிடுவதில் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்.
    ஆர்.கோவிந்தராஜ்

  2. Likes orodizli liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1802
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    chennai
    Posts
    0
    Post Thanks / Like
    1972 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ம் நாள் புரட்சித் தலைவரை தி மு க விலிருந்து தற்காலிகமாக நீக்கினார்கள் -
    14 ம் தேதியன்று நிரந்தரமாகவே {டிஸ்மிஸ் } நீக்கினார்கள் ; புரட்சித் தலைவர் 16 ம் தேதியன்று தனிக்கட்சி தொடங்க முடிவெடுத்தார் ;
    17 ம் தேதியன்று அது பற்றி அறிவித்தார் ; 18 ம் தேதியன்று அதிகாரப் பூர்வமாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப் பட்டது;
    நவம்பர் மாதம் 3 ம் தேதிக்குள் அதாவது எண்ணி பதினைந்தே நாட்களுக்குள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தமிழகம் முழுவதிலுமிருந்து
    6000 கிளைகள் தொடங்கப் பட்டன.--10 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சேர்க்கப் பட்டனர்--
    15 நாள்களில் 10 லட்சம் உறுப்பினர்களை சேர்த்த சாதனையை உலகில் எந்த ஒரு அரசியல் அதற்கு முன்னர் சாதித்ததேயில்லை ;-
    1949 ல் தொடங்கப் பட்ட தி மு க விற்கு 23 ஆண்டுகளுக்குப் பின்னர் --அதாவது 1972 ல் தான் -18000 கிளைகளும் , 15 லட்சம் உறுப்பினர்களும்
    இருப்பதாக தி மு க தலைவர் கருணாநிதி அவர்களே அந்த சமயத்தில் ஒப்புக் கொண்டார் -
    அதனோடு ஒப்பிட்டுப் பார்த்தால் 15 நாள்களில் 10 லட்சம் உறுப்பினர்களையும் 6000 கிளைகளையும் உருவாக்கியது எவ்வளவு பெரிய
    சாதனை என்பதை புரிந்து கொள்ளலாம்-
    சரித்திர நாயகர் புரட்சித் தலைவரின் சாதனை இது என்றே கூற வேண்டும் -
    அதுபோல் ரசிகர் மன்ற தோழர்களின் உறுதியான உழைப்புடன் ஆட்சி பிடித்த சாதனைக்கு சொந்தக்காரரும் புரட்சித் தலைவர் ஒருவரே.

  5. Likes orodizli, mgrbaskaran liked this post
  6. #1803
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Govindraj Kpr View Post
    1972 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ம் நாள் புரட்சித் தலைவரை தி மு க விலிருந்து தற்காலிகமாக நீக்கினார்கள் -
    14 ம் தேதியன்று நிரந்தரமாகவே {டிஸ்மிஸ் } நீக்கினார்கள் ; புரட்சித் தலைவர் 16 ம் தேதியன்று தனிக்கட்சி தொடங்க முடிவெடுத்தார் ;
    17 ம் தேதியன்று அது பற்றி அறிவித்தார் ; 18 ம் தேதியன்று அதிகாரப் பூர்வமாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப் பட்டது;
    நவம்பர் மாதம் 3 ம் தேதிக்குள் அதாவது எண்ணி பதினைந்தே நாட்களுக்குள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தமிழகம் முழுவதிலுமிருந்து
    6000 கிளைகள் தொடங்கப் பட்டன.--10 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சேர்க்கப் பட்டனர்--
    15 நாள்களில் 10 லட்சம் உறுப்பினர்களை சேர்த்த சாதனையை உலகில் எந்த ஒரு அரசியல் அதற்கு முன்னர் சாதித்ததேயில்லை ;-
    1949 ல் தொடங்கப் பட்ட தி மு க விற்கு 23 ஆண்டுகளுக்குப் பின்னர் --அதாவது 1972 ல் தான் -18000 கிளைகளும் , 15 லட்சம் உறுப்பினர்களும்
    இருப்பதாக தி மு க தலைவர் கருணாநிதி அவர்களே அந்த சமயத்தில் ஒப்புக் கொண்டார் -
    அதனோடு ஒப்பிட்டுப் பார்த்தால் 15 நாள்களில் 10 லட்சம் உறுப்பினர்களையும் 6000 கிளைகளையும் உருவாக்கியது எவ்வளவு பெரிய
    சாதனை என்பதை புரிந்து கொள்ளலாம்-
    சரித்திர நாயகர் புரட்சித் தலைவரின் சாதனை இது என்றே கூற வேண்டும் -
    அதுபோல் ரசிகர் மன்ற தோழர்களின் உறுதியான உழைப்புடன் ஆட்சி பிடித்த சாதனைக்கு சொந்தக்காரரும் புரட்சித் தலைவர் ஒருவரே.
    super ....

  7. #1804
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like
    Today 7.00am Watch Jmovie


  8. Thanks orodizli thanked for this post
  9. #1805
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like
    Today 1.00pm Watch Jmovie


  10. Thanks orodizli thanked for this post
    Likes Richardsof liked this post
  11. #1806
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like
    Today 1.30pm Watch Jaya Tv


  12. Thanks orodizli thanked for this post
    Likes Richardsof liked this post
  13. #1807
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like
    தலைவரின் அ இ அ தி மு க 44 ஆண்டின் துவக்கத்திற்கு வாழ்த்துக்கள்..



    Last edited by Muthaiyan Ammu; 17th October 2015 at 03:19 AM.

  14. Thanks orodizli, Richardsof thanked for this post
    Likes orodizli liked this post
  15. #1808
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    கோவை நகரில் மக்கள் திலகத்தின் இதயவீனை 2வத வாரமாக நடைபெறுவது அறிந்து மிக்க மகிழ்ச்சி . தகவலுக்கு நன்றி திரு ரவிச்சந்திரன் .
    அதிமுக இயக்கம் தோன்றிய உடன் நிகழ்ந்த வரலாற்று செய்திகளையும் , அருமையான மக்கள் திலகத்தின் நிழற்படங்கள் மற்றும் கட்டுரைகளை பதிவிட்ட திரு கோவிந்தராஜன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் .

  16. Likes orodizli liked this post
  17. #1809
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    அரசியல் மக்கள் திலகம் மிகக் கடுமையாக எதிர்நீச்சல் போட வேண்டியதாயிற்று. 1977ம் ஆண்டு தமிழ்நாட்டில் பொது தேர்தல் நடக்க இருந்தது. இதில் அண்ணா திமுக கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தினார்கள். தேர்தல் பிரச்சாரம் தொடங்கியது. தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரத்திற்கு புரட்சித் தலைவர் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இதில் மக்கள் மத்தியில் இரட்டை இலையா? உதயசூரியனா? என்று வைக்கப்பட்டது. தேர்தல் முடிவில் இரட்டை இலையை மக்கள் வெற்றி பெறச் செய்தார்கள். பெரும்பான்மையில் மக்கள், மக்கள் திலகம் அவர்களை அரசு ஆட்சியில் அமர்த்தினார்கள். 1957ல் நாடோ டி மன்னன் புரட்சி நடிகரின் புரட்சி படைப்பு நாடோ டியா? மன்னனா என்ற கேள்விக்கு மக்கள் அதில் மக்கள் திலகம் அவர்களை மன்னனாக்கினார்கள். மன்னன் ஆட்சியா? மக்கள் ஆட்சியா? என்ற சொல்லின்படி பத்து ஆண்டுகளாக மக்கள் ஆட்சி நடத்தினார். நெருப்பிலே நடந்து நீரிலே நீந்தி சாதனைகள் புரிந்த மக்கள் திலகம் அவர்களுக்கு 1984ல் ஒரு பெரிய சோதனை ஏற்பட்டது, உடல் நலக்குறைவு அமெரிக்காவிற்கு சென்று வைத்தியம் பார்க்கும் அளவிற்கு நான் செத்துப் பிழைத்தவன்டா எமனைப் பார்த்து சிரித்தவன்டா என்று சொல்லிக் கொண்டே 1987ல் இறைவனடி சென்று விட்டார்.

    மக்கள் திலகம் அவர்களுடைய அரசியல் வாழ்க்கையில் 1947ல் இருந்து 1953வரை காங்கிரஸில் இருந்து காமராஜரை குருவாக ஏற்று கதர் வேட்டி, கதர் ஜிப்பா அணிந்தவர். பிறகு, 1954ல் அண்ணாவினுடைய திராவிட முன்னேற்றக் கழகத்தில் அண்ணாவின் அன்பைப் பெற்றார். அவருடைய வழியில் அரசியலில் முன்னேற்றம் அடைந்தார். திமுக அரசியல் பொதுக் கூட்ட மேடைகளில் மாநாடு மேடைகளில் பேச்சாளர் ஆனார். பிறகு, கட்சியின் தலைமைப் பொருளாளராக பொறுப்பு வகித்தார். இதே போல் சிறுசேமிப்புத் தலைவர். பிறகு, 1972ல் திமுக வில் இருந்து விலகி அண்ணா அவர்களுடைய பெயரில் தனிக்கட்சி ஆரம்பித்தார். கட்சியின் கொடியில் அண்ணாவின் உருவம் பதித்த கொடியை அமைத்தார். அவர் தனிகட்சி ஆரம்பித்த பிறகு 1977ல் தமிழகத்தை ஆட்சி செய்யத் தொடங்கினார். வருடத்திற்கு வருடம் அரசியலில் வெற்றி வாகை சூடிவந்த மக்கள் திலகம் அவர்களுக்கு 1980ல் பெரிய சோதனை ஏற்பட்டது. 1980ல் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. அந்த சமயம் மக்கள் திலகம் அவர்கள் தமிழக முதல் அமைச்சராய் ஆட்சி நடத்தி வருகிறார். அதிமுக கட்சி ஆட்சி, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிடுகிறது. எதிர்தரப்பில் திமுகவும் இந்திரா காங்கிரசும் இணைந்து தேர்தலில் போட்டியிடுகிற 39 எம்.பிக்களை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    இதில் அதிமுகவிற்கு இரண்டு இடம் தான் கிடைத்தது. இதை ஒரு காரணமாக வைத்துக் கொண்டு காங்கிரசம், திமுகவும் வள்ளல் எம்.ஜி.ஆர். அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை எனவே அந்த அதிமுக ஆட்சியை கலைத்து விட்டு மீண்டும் சட்ட மன்றத்திற்கு புதியதாக பொதுத் தேர்தல் நடத்த வேண்டும் என்று முடிவு எடுத்து 1980ல் மக்கள் திலகம் அவர்களுடைய ஆட்சியை கலைத்து விட்டார்கள். அரசாங்கத்தை எந்த வித குறைகளும் இல்லாமல் நேர்மையோடு நடத்தி வந்த நம்மை கலைத்து விட்டார்களே என்ற கவலை இருந்தது. ஆயினும் எதையும் தாங்கும் இதயம் உள்ள மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் தேர்தல் வரட்டும் மக்களை சந்திப்போம் என்ற விஷயத்தை தன் கட்சியில் உள்ள (பொறுப்பில்) அத்தனை பேர்களையும் அழைத்து பேசினார். தோல்வியே காணாத மக்கள் திலகம் அவர்கள் சற்றும் சோர்வு இல்லாமல் மிகவும் சுறுசுறுப்போடு, மனதிடத்தோடு தேர்தலை பற்றி பேசினார். கட்சியில் எந்த குறைபாடும் இல்லாமல் பார்த்துக் கொண்டார். ஆட்சியைக் கலைத்த மூன்றாவது மாதத்திலேயே தேர்தலை வைத்து விட்டார்கள். இந்த எம்.எல்.ஏ. தேர்தலில் பிரச்சாரம் நடந்தது. இதில் திமுக, இந்திரா காங்கிரசும், இணைந்து போட்டியிட்டது. அதிமுக தனித்து போட்டியிட்டது மற்ற சில கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக கலந்து கொண்டனர். மக்கள் திலகம் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இம்முறை தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களை பார்த்து நான் என்ன தவறு செய்தேன்? ஏன் என் ஆட்சியை கலைத்தார்கள்? என்று நியாயம் கேட்டார். தேர்தல் முடிவில் பொதுமக்களின் நியாயம் புரட்சித் தலைவர் பக்கம் நின்றது. மீண்டும் மக்கள் திலகம் ஆட்சியில் அமர்ந்தார்கள்.



    பிறகு 1984ல் நடந்த பொதுத் தேர்தலில், "நான் செத்துப் பிழைத்தவன்டா. மக்கள் மனதில் குடி இருப்பவன்டா" என்பது போல் அமெரிக்கா மருத்துவமனையில் இருந்து கொண்டே 1985ல் மூன்றாவது முறையாக முதல்வரானார். அண்ணாவுடைய தம்பிகள் ஐந்து பேர் 1963ல் மதுரையில் திமுக மாநாடு நடந்தது. மிக பிரம்மாண்டமாக நடந்த இந்த மாநாட்டில் சிறப்பு பேச்சாளராக மக்கள் திலகம், வளையாபதி, முத்து கிருஷ்ணன், எஸ்.எஸ்.ஆர். கே.ஆர்.ஆர், டி.வி. நாராயணசாமி இவர்கள் அத்தனை பேர்களும் பிரபல சினிமா நடிகர்கள். இவர்கள் அப்போது திமுக வில் சிறப்பு பேச்சாளர்களாக இருந்து வந்தார்கள். கட்சியில் இவர்களுக்கு எந்த பதவியும் எதுவும் இல்லை. இந்த ஐந்து பேர்களும் கட்சித் தலைவர் அண்ணா அவர்களுடைய விசுவாசிகளாகவும், பக்தர்களாகவும் இருந்தவர்கள். இவர்களை அண்ணா தன் இதயத்திற்குள் வைத்துக் கொண்டார். பிறகு, ஒரு சமயத்தில் அண்ணா அவர்கள் நாராயணசாமி, ராமசாமி, வளையாபதி, முத்துகிருஷ்ணன். இவர்கள் அண்ணா அவர்கள் கதை, வசனம் எழுதிய சினிமா, நாடகங்களில் நடித்தவர்கள். இவர்களை தன்னுடைய வலது, இடது கரமாக வைத்து இருந்தார். ஆனால், வள்ளல் எம்.ஜி.ஆர். அவர்களை தன் இதயத்திலேயே வைத்துக் கொண்டார். மேலும் எம்.ஜி.ஆரை இதயக்கனி என்றும் சொன்னார். 1963ல் மதுரைக்கு மாநாட்டுக்கு சென்று இருந்த இந்த ஐந்து பேர்களும், மாநாட்டுப் பந்தலுக்குள் சந்தித்துக் கொண்டார்கள். பஞ்ச பாண்டவர்கள், அண்ணன் தம்பிகள் ஒரே நேரத்தில் சந்தித்துக் கொண்டது போல் இருந்தது. இந்த நேரத்தில் திடீரென்று வளையாபதி முத்து அவர்களுக்கு ஒரு யோசனை தோன்றியது. அது என்றுமே, எங்கேயும் இப்படி ஒரே இடத்தில் சந்தித்தது அல்ல. இப்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் நின்று ஒரு போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும். இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்துக் கொண்டு மாநாட்டு விழாவை போட்டோ எடுக்க வந்திருந்த போட்டோ கிராபரை வளையாபதி அழைத்து வந்து விட்டார். இதை அறிந்த மற்ற நால்வரும் ஆச்சரியப்பட்டார்கள். உடனே இந்த ஐந்து பேரும் வரிசையாக நின்று போட்டோ எடுத்துக் கொண்டார்கள். இந்த ஐந்து பேர்களும் நாடகத் துறை, சினிமா துறையில் அப்போதைய முன்னணி நடிகர்கள். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் அண்ணா இதயத்தில் "இதயக்கனி" ஆக இருப்பவர் மற்ற நால்வரும் அண்ணாவின் அன்பை பெற்றவர்கள் என்பது குறிப்பிட்டதக்க விஷயம்.

    courtesy - M.G. R MUTHU .

  18. Likes orodizli liked this post
  19. #1810
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    ஆயுத பூஜையை முன்னிட்டு கோவை ராயல் திரைஅரங்கில் அன்பே வா திரைக்காவியம் திரையிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  20. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •