-
20th October 2015, 05:56 PM
#1951
Junior Member
Devoted Hubber
-
20th October 2015 05:56 PM
# ADS
Circuit advertisement
-
20th October 2015, 05:57 PM
#1952
Junior Member
Devoted Hubber
-
20th October 2015, 08:38 PM
#1953
Junior Member
Platinum Hubber
Madurai - Ram Theater
Makkal Thilagam MGR in
IDHYA KANI - Now Running
-
20th October 2015, 09:28 PM
#1954
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
20th October 2015, 10:00 PM
#1955
Junior Member
Veteran Hubber
மக்கள் திலகத்தைப் பற்றி ஒன்றும் அறியாமல், தெரியாமல், சினிமாவிலும் அரசியலிலும் அவர் வெற்றி பெற்றதன் பின்னணி பற்றி புரியாமல், புரிந்தாலும் ஏற்றுக்கொள்ளாமல் மனம் போன போக்கில் எழுதும் அரைவேக்காடுகள் " திண்ணை " என்ற தளத்தில் கண்டபடி உளறுகின்றன. 1957-ல் வெளிவந்த நாடோடி மன்னன் என்று உளறியிருப்பதே இந்த அரைவேக்காடுகளின் ‘ஞானத்தை’ சொல்லும். ஒரு வருடம் முன்னமே ரீலீஸ் செய்து விட்டது. கட்டுரையில் பல சம்பவங்களில் வருடங்கள் தவறு. முதல்வரான பிறகு மக்கள் திலகம் ருத்ராட்சம் அணிந்தாராம். (எப்போது?) இதுவும் அந்த பைத்தியக்காரனின் உளறல். அதுவரை ஆத்திகர் என்பதை சாமர்த்தியமாய் மறைத்து வைத்தாராம்
எப்பவுமே மக்கள் திலகம் தன்னை நாத்திகர் என்று சொன்னதில்லை. ஆத்திகர் என்பதை மறைத்ததும் இல்லை. அண்ணா இருந்தபோதே தனிப்பிறவி படத்தில் முருகன் வேடத்தில் தோன்றினார். அண்ணா இருந்தபோதே தேவரின் வேண்டுகோளுக்காக, மருதமலை முருகன் கோயிலுக்கு சென்று அங்கு தேவர் செலவில் அமைக்கப்பட்டிருந்த மின்விளக்குகளை தொடங்கி வைத்தார். இருவரும் இணைந்திருக்கும் அந்த படம் கூட நமது திரியில் முன்னர் பதிவாகி உள்ளது.
துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பின், ஒரு பத்திரிகையில் கேள்வி-பதில் பகுதியில் ‘உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?’ என்ற கேள்விக்கு ‘துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பிறகும் நான் உயிருடன் இருப்பதிலிருந்தே தெரியவில்லையா?’ என்று நம் புரட்சித்தலைவர் அவர்கள் பதிலளித்தார்.
வழக்கம் போல், பொறாமையில் பாரத் பட்டத்தை பற்றியும் உளறல். நல்லவேளை கமலஹாசன் அரசியலில் இல்லை. இருந்தால அவருக்கும் அரசியலால்தான் கிடைத்தது என்பார்கள்.
வயிற்றெரிச்சல்தான்.
திண்ணை பத்திரிகையில் ‘சமஸ்கிருதம் கற்றுக் கொள்வோம்’ என்ற தொடர் இருக்கிறது. இதிலிருந்தே அதன் பின்னணியை புரிந்து கொள்ளலாம்.
கட்டுரையை எழுதிய இந்த அறிவுஜீவி (??????) மக்கள் திலகம் படத்தை எல்லாம் எங்கே பார்த்திருக்கப்போகிறது? பார்த்தால் தீட்டு பட்டு விடுமே ?
அந்த திண்ணை பத்திரிகை கட்டுரைக்கு கீழேயே சஞ்சய் என்பவர் பதில் சொல்லிருக்கார். 1977ல் தேர்தல் வெற்றிக்கு காரணம் மக்கள் திலகமே என்று கூறியுள்ளார்.
http://puthu.thinnai.com/?p=30659sanjay says:
October 19, 2015 at 8:31 am
தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல் செய்யப்பட்ட ஜனவரி 88லிருந்து சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்ற ஜனவரி 89 வரை ராஜிவ்காந்தி 37 முறை தமிழகம் வந்து மூப்பனாருக்காக பிரச்சாரம் செய்தார். ஆயினும், மூப்பனாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்திய காங்கிரசும் படுதோல்வி அடைந்தது. இத்தனைக்கும் அப்போது தமிழக ஆளுநராக இருந்த P.C .அலெக்சாண்டரின் ஆட்சி காங்கிரஸ் ஆட்சியாகவே பாவிக்கப்பட்டது. ஆகவே ஒருவகையில், 1989 தேர்தலை காங்கிரஸ் ஆளும் கட்சியாகவே சந்தித்தது எனலாம். அந்தத் தேர்தலின்போது காங்கிரஸ் ஒருவேளை மூப்பனாருக்கு பதிலாக சிவாஜியை முதல்வர் வேட்பாளராக முன்னிருத்தியிருந்தால்? வரலாற்றின் ifs and buts தருணங்களில் இதுவும் ஒன்று.
Comment by Mr. Sanjay
This is a wrong assessment. Sivaji’s popularity as an actor was dimmed by this time. He also lost the elections in 1989. Also, he happened to be in the winning side in some elections & it was not because of him, his party won the elections
.
For instance, though MGR & Sivaji were in parties which were electoral allies in 1977, the alliance won primarily because of MGR & not for Sivaaji. Sivaji never stood up for his fans when they were insulted in the congress party. He simply kept quiet. He should have quit politics after he lost the elections & disbanded his party.
But he chose to become the leader of a party which no one in Tamil Nadu had heard of Janata Dal. He gave interviews that he would strive & bring Janata Dal to power.
Sivaji was a failure & unlucky in politics.
Last edited by makkal thilagam mgr; 20th October 2015 at 10:02 PM.
-
20th October 2015, 10:07 PM
#1956
Junior Member
Diamond Hubber

Courtesy : Cinema Express
-
20th October 2015, 10:09 PM
#1957
Junior Member
Diamond Hubber
-
20th October 2015, 10:17 PM
#1958
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Govindraj Kpr
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் களேபரங்கள் 18-10-2015 அன்று மிகவும் விசித்திரமானவையாக இருந்தன. ஒருவர் மீது ஒருவர் தனி நபர் விமர்சனங்கள் அதிகமாக இருந்ததேயன்றி சங்கத்தின் முன்னோடிகள் சங்கத்தின் ஆரம்பகால வளர்ச்சிக்கு செயலாற்றிய நிகழ்வுகள் போன்ற விவரங்களை அந்த தருணத்தில் மக்களுக்கு எடுத்துக் கூற யாரும் இல்லாத நிலை மிகவும் வருந்த தக்கது. குறிப்பாக புரட்சித் தலைவர் அவர்கள் நடிகர் சங்க வளர்ச்சிக்கு மிக அதிக அளவில் சிறப்பாக செயல்பட்டவர். இது குறித்து முன்பே நாம் பத்திரிக்கை இதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளோம். தேர்தல் நடந்து கொண்டிருந்த அந்த தருணத்தில் புரட்சித் தலைவர் நடிகர் சங்கத்திற்கு ஆற்றிய வளர்ச்சிப் பணிகள்- கொண்டிருந்த ஈடுபாடு- செய்துள்ள புதுமைகள் என பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் ஏராளம் இருக்க ஊடங்களுக்கு முன்னால் பேசிய அனைவரும் ஒருவர் மீது ஒருவர் தனிநபர் விமர்சனங்கள் வைத்தார்களேயன்றி எவரும் சங்க முன்னோடிகள் குறித்த பெருமைகளை பேசவில்லை புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் நடிகர் சங்கத்திற்கு செய்துள்ள உதவிகள் செயல்பாடுகள் போன்றவை இனி எவரும் அங்கு செய்ய முடியாத அளவிற்கு செயலாற்றியுள்ளார். இன்று நடிகர் சங்கத்தின் அடையாளசின்னமான ஒரு தாய் நான்கு குழந்தைகளை அரவணைத்து செல்வதாக உள்ள அந்த அடையாள சின்னத்திற்கு ஆலோசனை சொல்லி அதை செயல்படுத்தியதே புரட்சித் தலைவர் தான் என்பதை யாருமே நினைவு கொள்ளவில்லை --ஆம் நமது தாய் சங்கமான தமிழ் பேசும் நடிகர் சங்கம் மற்ற மொழி பேசும் கலைஞர்ளை அரவணைத்து செல்வதாக இருக்க வேண்டும் கலை தாய்க்கு இன மொழி வேற்றுமைகள் இல்லை. எனவே மற்ற மொழி பேசும் கலைஞர்களும் கலைத்தாயின் பிள்ளைகள்தான் என பழம்பெரும் இயக்குனரும் நடிகர் சங்க ஆரம்பகால முன்னோடியுமான கே.சுப்பிரமணியம் அவர்களிடம் எடுத்து கூறி அதற்கான சின்னத்தை புரட்சித் தலைவர் செயல்படுத்திய வரலாற்று நிகழ்வை ஊடகத்தின் முன் பேசிய எவரும் நினைவு கொள்ளவில்லை. நடிகர் சங்கத்திற்கென்று ஒரு பத்திரிகை வேண்டும் அப்போது தான் சங்க விவரங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள முடியும் என்ற நல் எண்ணத்தில் நடிகன் குரல் என்ற பத்திரிக்கை ஒன்றை தொடக்கி அதற்கு தானே பதிப்பாசிரியராக இருந்து மிகச் சிறப்பாக அதை செயல் படுத்தினார். புரட்சித் தலைவர். முன்பெல்லாம் ஒரு சில காட்சிகளில் நடிப்பவர்களை எக்ஸ்ட்ரா நடிகர்கள் என கூறுவர். இம் முறையை மாற்றியமைத்து அவர்களுக்கு மதிப்பளிக்கும் வண்ணம் அவர்களை துணை நடிகர்கள் { junior artist } {அ} சகநடிகர்கள் என அழைக்க வேண்டும் என்ற முறையை உருவாக்கியவர் புரட்சித் தலைவர் என்பதை எத்தனை சங்க உறுப்பினர்கள் அறிவார்கள்.? இன்றைய சூழலில் வாக்குகளுக்காக மட்டுமே நாடக நடிகர்களை தேடி சென்று அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிலையை காண முடிகிறது. ஆனால் அன்று எவ்வித பிரதி பலனுமின்றி அவர்களை அரவணைத்தவர் புரட்சித் தலைவர். குறிப்பாக வறுமையின் காரணமாக சில நடிகர்கள் மாத சந்தாவான 5 ரூபாய் கூட கொடுக்க முடியாமல் இருந்தார்கள். அவர்களின் நிலையை நன்குணர்ந்து அவர்கள் சார்பில் அந்த சந்தாவை புரட்சித் தலைவரே கட்டினார். பெண்களும் ஆண்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்லர், அவர்களும் நிர்வாகம் செய்ய இயலும் என நடிகை அஞ்சலி தேவி அவர்களை நடிகர் சங்க தலைவர் ஆக்கி பெண்களை பெருமை படுத்தியதும் புரட்சித் தலைவர் அவர்களே. சங்க உறுப்பினர்கள் மகிழும் வண்ணம் ஆண்டு தோறும் பொங்கல் விழாவை நடிகர் சங்க வளாகத்தில் தனது சொந்த செலவில் நடத்தி அனைவருக்கும் பரிசுகள் வழங்கி கௌரவித்தார். சங்கத்தில் தனக்கிருந்த ஈடுபாட்டை உணர்த்தும் வண்ணம் நடிகர் சங்க முத்திரையை தனது கை விரல் மோதிரத்தில் அணிந்து கொண்டார்.- இப்படியாக புரட்சித் தலைவர் நடிகர் சங்கத்திற்கு ஆற்றியுள்ள பணிகள் கணக்கிலடங்காதவை. நடிகர்களுக்கு மற்ற மாநிலங்களிலோ அல்லது வெளிநாடுகளிலோ பட்டங்கள் அல்லது கௌவரங்கள் கிடைக்கப் பட்டால் உடனே ஓடிச்சென்று அவர்களுக்கு விழா எடுத்து சிறப்பு செய்வார். இப்படி நடிகர் சங்கத்தில் புரட்சித் தலைவரின் செயற்கரிய நல்ல செயல்பாடுகளை சொல்லிக் கொண்டே போகலாம். உலக அரங்கில் இந்திய நடிகர்களுக்கு குறிப்பாக -தமிழ் நடிகர்களுக்கு உயர் அந்தஸ்தை ஏற்படுத்தியவர் புரட்சித் தலைவர். ஆம் தனது கலைப் பணி மற்றும் மக்கள் பணி வாயிலாக மக்களிடம் செல்வாக்கு பெற்று ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக ஒரு நடிகர் உலக அரங்கில் முதல் முறையாக பொறுப் பேற்றுக் கொண்டு நடிகர் சமுதாயத்தை உயர்த்தினார். ஆயிரக்கணக்கான நலிந்த நடிகர்களுக்கு ஏராளமான உதவிகளை பல்வேறு வழிகளில் செய்துள்ளவர்.- தான் முதல்வராக அந்த காலங்களிலும் மறைந்த ஏராளமான நடிகர்களின் இறுதி யாத்திரையில் கலந்து கொண்டவர். இப்படி நடிகர் சங்கத்திற்கான புரட்சித் தலைவரது நற்பணிகளை அடுக்கிக் கொண்டே போகலாம். எனவே புதிதாக பதவிஏற்றுள்ள பாண்டவர் அணி புரட்சித் தலைவர் சங்கத்திற்கு செய்துள்ள எண்ணிலங்கா பணிகளை நன்குணர்ந்து புதிதாக அமையவிருக்கும்---
நடிகர் சங்க கட்டடத்திற்கு மக்கள் திலகம் எம்ஜிஆர் மாளிகை என பெயர் சூட்டுவது சாலச் சிறந்ததாக இருக்கும் என்பதோடு உலக தமிழர்கள் அனைவரும் இதனால் மெத்த மகிழ்வு கொள்வார்கள் என்பதையும் நினைவு கூற விரும்புகிறோம். அப்படி ஒரு வேளை வேறு சில காரணங்களால் அப்படி செய்ய இயலாமல் போனால் புரட்சித் தலைவரின் முழு உருவ வெண்கலச் சிலையை குறைந்த பட்சம் கட்டிட வளாகத்தில் அமைக்க முன் வரலாம். அப்படி செய்யும் பட்சத்தில் எதிர்கால நடிகர் சங்க வரலாற்று ஆவணத்தில் உங்களது பெயர் நீக்கமற நிலைபெற ஒரு அற்புத வாய்ப்பாகவும் அது உங்களுக்கு அமையும் என்ற உண்மையையும் இந்த தருணத்தில் தெரிவிக்க விரும்புகிறோம். .தென்னிந்திய நடிகர் சங்கம் என்று இருந்தாலும் சரி அல்லது தமிழ்நாடு நடிகர்கள் சங்கம் என்று இருந்தாலும் சரி கூடுதலாக மக்கள் திலகம் எம்ஜிஆர் மாளிகை என பெயர் அமையப் பெறுவது கூடுதல் சிறப்பாக அமையும் என்பதே நமது கருத்து. அதுதான் அந்த மாமனிதர் சங்க வளர்ச்சிக்கு செய்துள்ள பணிகளுக்கு கைம்மாறு செய்வதாக அமையும்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள பாண்டவர் அணிக்கு புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பக்தர்கள் சார்பில் வாழ்த்துக்கள்--
அன்பன் --ஆர்.கோவிந்தராஜ்
THANK YOU MY DEAR BROTHER K.P.R. GOVINDARAJ FOR THE EXCELLENT POSTING WITH NICE SUGGESTION.
YOU CHERISHED THE OLD AND SWEET MEMORIES OF OUR BELOVED GOD M.G.R.'s DEDICATED AND COMMENDABLE WORK FOR THE NADIGAR SANGAM.
THE ACHIEVEMENTS OF OUR BELOVED GOD M.G.R. MADE WHEN HE WAS HOLDING THE KEY POSITION IN NADIGAR SANGAM, IS EVER MEMORABLE ONE.
HE (OUR BELOVED GOD M.G.R.) ALSO GAVE WAY FOR OTHERS TO HOLD POSITIONS IN THE NADIGAR SANGAM, SUBSEQUENTLY. THIS SHOWS HIS GENEROSITY & NOBILITY.
WE ARE ALL PROUD TO BE THE FANS AND DEVOTEES OF SUCH A GREAT PERSONALITY
Last edited by makkal thilagam mgr; 20th October 2015 at 10:19 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
20th October 2015, 10:31 PM
#1959
Junior Member
Veteran Hubber

Originally Posted by
makkal thilagam mgr
தனது வியாபாரத்துக்காக, நம் பொன்மனச்செம்மல் நடித்த "ராமன் தேடிய சீதை" என்ற தலைப்பில் படம் எடுத்த, அகந்தை - ஆணவம் - மண்டைக்கணம் பிடித்த சுயநலவாதி, அறிவு ஜீவி போல் தன்னை காட்டி கொள்ளும் இயக்குனர் சேரன், தென்னிந்திய நடிகர் சங்க கூட்டத்தில், நம் புரட்சித்தலைவர் அவர்களை பற்றியும், அவரது குடும்பத்தினர் பற்றியும், நடிகர் ரித்தீஷ் அவர்களை பற்றியும் விமர்சனம் செய்ததை கண்டித்து, அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று நடிகர் விஜய் கார்த்திக் தலைமை ரசிகர் மன்றம் சார்பில், சென்னை நகரின் பிரதான பகுதிகளில், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன. சுவரொட்டியின் புகைப்படம் பின்னர் பதிவிடப்படும்.
-
Post Thanks / Like - 2 Thanks, 0 Likes
-
21st October 2015, 02:35 AM
#1960
Junior Member
Senior Hubber
இன்று நவராத்திரி பூஜை இலண்டன் நியூ மோல்டன் திருத்தணிகை முருகன் ஆலயத்தில் சிறப்பாக நடை பெற்றது.
அங்கு பிரசங்கம் செய்த சிவாச்சாரியார் ராஜசேகர குருக்கள் ,
மக்கள் எல்லாரும் நீதியின் வழியில் நடந்து தன்னால் ஆன உதவிகளை மற்றவர்களுக்குச் செய்ய வேண்டும். ஆண்டவன் தேவைக்கு அதிகமாக உங்களுக்குத் தரும் பணத்தை நல வழியில் செலவிடுங்கள். வாடும் ஏழை மக்களுக்கு கொடுங்கள் . அப்படி கொடுத்தால் நீங்கள் என்றும் வாழ்வீர்கள் என்றார்.
உங்களுக்கே தெரியும்
இறந்தும் இறவாப் புகழுடன்
இன்றும் வாழும் எம் ஜி ஆர்
எப்படி வாழ வேண்டும் என்று
உங்களுக்கு வாழ்ந்து
காட்டியிருக்கின்றார்
என்று உரையை முடித்தார்.
Bookmarks