-
21st October 2015, 11:30 AM
#11
Junior Member
Regular Hubber

Originally Posted by
makkal thilagam mgr
மக்கள் திலகத்தைப் பற்றி ஒன்றும் அறியாமல், தெரியாமல், சினிமாவிலும் அரசியலிலும் அவர் வெற்றி பெற்றதன் பின்னணி பற்றி புரியாமல், புரிந்தாலும் ஏற்றுக்கொள்ளாமல் மனம் போன போக்கில் எழுதும் அரைவேக்காடுகள் " திண்ணை " என்ற தளத்தில் கண்டபடி உளறுகின்றன. 1957-ல் வெளிவந்த நாடோடி மன்னன் என்று உளறியிருப்பதே இந்த அரைவேக்காடுகளின் ‘ஞானத்தை’ சொல்லும். ஒரு வருடம் முன்னமே ரீலீஸ் செய்து விட்டது. கட்டுரையில் பல சம்பவங்களில் வருடங்கள் தவறு. முதல்வரான பிறகு மக்கள் திலகம் ருத்ராட்சம் அணிந்தாராம். (எப்போது?) இதுவும் அந்த பைத்தியக்காரனின் உளறல். அதுவரை ஆத்திகர் என்பதை சாமர்த்தியமாய் மறைத்து வைத்தாராம்
எப்பவுமே மக்கள் திலகம் தன்னை நாத்திகர் என்று சொன்னதில்லை. ஆத்திகர் என்பதை மறைத்ததும் இல்லை. அண்ணா இருந்தபோதே தனிப்பிறவி படத்தில் முருகன் வேடத்தில் தோன்றினார். அண்ணா இருந்தபோதே தேவரின் வேண்டுகோளுக்காக, மருதமலை முருகன் கோயிலுக்கு சென்று அங்கு தேவர் செலவில் அமைக்கப்பட்டிருந்த மின்விளக்குகளை தொடங்கி வைத்தார். இருவரும் இணைந்திருக்கும் அந்த படம் கூட நமது திரியில் முன்னர் பதிவாகி உள்ளது.
துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பின், ஒரு பத்திரிகையில் கேள்வி-பதில் பகுதியில் ‘உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?’ என்ற கேள்விக்கு ‘துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பிறகும் நான் உயிருடன் இருப்பதிலிருந்தே தெரியவில்லையா?’ என்று நம் புரட்சித்தலைவர் அவர்கள் பதிலளித்தார்.
வழக்கம் போல், பொறாமையில் பாரத் பட்டத்தை பற்றியும் உளறல். நல்லவேளை கமலஹாசன் அரசியலில் இல்லை. இருந்தால அவருக்கும் அரசியலால்தான் கிடைத்தது என்பார்கள்.
வயிற்றெரிச்சல்தான்.
திண்ணை பத்திரிகையில் ‘சமஸ்கிருதம் கற்றுக் கொள்வோம்’ என்ற தொடர் இருக்கிறது. இதிலிருந்தே அதன் பின்னணியை புரிந்து கொள்ளலாம்.
கட்டுரையை எழுதிய இந்த அறிவுஜீவி (??????) மக்கள் திலகம் படத்தை எல்லாம் எங்கே பார்த்திருக்கப்போகிறது? பார்த்தால் தீட்டு பட்டு விடுமே ?
அந்த திண்ணை பத்திரிகை கட்டுரைக்கு கீழேயே சஞ்சய் என்பவர் பதில் சொல்லிருக்கார். 1977ல் தேர்தல் வெற்றிக்கு காரணம் மக்கள் திலகமே என்று கூறியுள்ளார்.
http://puthu.thinnai.com/?p=30659sanjay says:
October 19, 2015 at 8:31 am
தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல் செய்யப்பட்ட ஜனவரி 88லிருந்து சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்ற ஜனவரி 89 வரை ராஜிவ்காந்தி 37 முறை தமிழகம் வந்து மூப்பனாருக்காக பிரச்சாரம் செய்தார். ஆயினும், மூப்பனாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்திய காங்கிரசும் படுதோல்வி அடைந்தது. இத்தனைக்கும் அப்போது தமிழக ஆளுநராக இருந்த P.C .அலெக்சாண்டரின் ஆட்சி காங்கிரஸ் ஆட்சியாகவே பாவிக்கப்பட்டது. ஆகவே ஒருவகையில், 1989 தேர்தலை காங்கிரஸ் ஆளும் கட்சியாகவே சந்தித்தது எனலாம். அந்தத் தேர்தலின்போது காங்கிரஸ் ஒருவேளை மூப்பனாருக்கு பதிலாக சிவாஜியை முதல்வர் வேட்பாளராக முன்னிருத்தியிருந்தால்? வரலாற்றின் ifs and buts தருணங்களில் இதுவும் ஒன்று.
Comment by Mr. Sanjay
This is a wrong assessment. Sivaji’s popularity as an actor was dimmed by this time. He also lost the elections in 1989. Also, he happened to be in the winning side in some elections & it was not because of him, his party won the elections
.
For instance, though MGR & Sivaji were in parties which were electoral allies in 1977, the alliance won primarily because of MGR & not for Sivaaji. Sivaji never stood up for his fans when they were insulted in the congress party. He simply kept quiet. He should have quit politics after he lost the elections & disbanded his party.
But he chose to become the leader of a party which no one in Tamil Nadu had heard of Janata Dal. He gave interviews that he would strive & bring Janata Dal to power.
Sivaji was a failure & unlucky in politics.
சூப்பர் சார். உங்கள் பதில் கல்வெட்டில் பொறிக்கனும். யாரோ பொறம்போக்கு தேவை இல்லாம தலைவர பாத்து குலைக்குது.
-
21st October 2015 11:30 AM
# ADS
Circuit advertisement
Bookmarks