-
23rd October 2015, 08:13 AM
#101
Senior Member
Seasoned Hubber
ad image from nadigarthilagam website:
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
23rd October 2015 08:13 AM
# ADS
Circuit advertisement
-
23rd October 2015, 08:14 AM
#102
Senior Member
Seasoned Hubber
ad image from nadigarthilagam website:
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
23rd October 2015, 08:15 AM
#103
Senior Member
Seasoned Hubber
image from nadigarthilagam website:
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
23rd October 2015, 08:15 AM
#104
Senior Member
Seasoned Hubber
ad image from nadigarthilagam website:
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
23rd October 2015, 09:37 PM
#105
Junior Member
Diamond Hubber
-
24th October 2015, 02:26 AM
#106
Senior Member
Devoted Hubber
பாக்ஸ் ஆபீஸில் 'பாலும் பழமும்'
பதிபக்தி(1958)[100 நாள்], பாகப்பிரிவினை(1959)[31 வாரம்], படிக்காத மேதை(1960)[22 வாரம்], பாவமன்னிப்பு(1961)[25 வாரம்], பாசமலர்(1961)[25 வாரம்] ஆகிய ஐந்து மெகாஹிட் காவியங்களுக்குப் பிறகு, அதே "ப" வரிசையில், வெள்ளிவிழா டைரக்டர் பீம்சிங், சிவாஜி கூட்டணியுடன் வழங்கிய ஆறாவது மெகாஹிட் காவியம் "பாலும் பழமும்". [ராஜா ராணி(1956) மற்றும் பெற்ற மனம்(1960) ஆகிய காவியங்களை சேர்த்துக் கணக்கிட்டால் பாலும் பழமும்(1961) வரை பீம்சிங் இயக்கிய சிவாஜி படங்கள் 'எட்டு' எனப் புள்ளி விவரம் கூறும்.]
தையல் மற்றும் உடையலங்கார நிபுணராக விளங்கிய ஜி.என்.வேலுமணி அவர்களை 'சரவணா பிலிம்ஸ்' என்கின்ற படக் கம்பெனியின் முதலாளியாக, திரைப்படத் தயாரிப்பாளராக உயர்த்திய பெருமை சிவாஜி பெருமானையே சாரும். இவர் மட்டுமல்ல. இவரைப் போல பல சாமானியர்களை சீமான்களாக உருவாக்கிய, உயர்த்திய பெருமை, பெருந்தன்மை என்றென்றும் சிங்கத்தமிழனுக்கே!
'சரவணா பிலிம்ஸ்' நிறுவனத்தின் முதல் தயாரிப்பு பாகப்பிரிவினை(1959). இரண்டாவது தயாரிப்பு பாலும் பழமும்(1961). இரண்டுமே மகத்தான இமாலய வெற்றிக்காவியங்கள். வேலுமணி "மணி(Money)" உள்ளவர் ஆனார். கணேச கடாட்சத்தால் அவருக்கு லட்சுமி கடாட்சம் கிட்டியது. சாதாரண நிலையில் இருந்தவர், இந்த இரு காவியங்களின் மகத்தான வெற்றியினால் லட்சாதிபதியாக, மிகப் பெரிய செல்வந்தராக உயர்ந்தார்.
இனி "பாலும் பழமும்" முதல் வெளியீட்டில் ஏற்படுத்திய பாக்ஸ் ஆபீஸ் சாதனைப் பிரளையத்தை சற்று விரிவாகக் காண்போம்.
"பாலும் பழமும்" - கலைக்குரிசிலின் 73வது திரைக்காவியம், 71வது கருப்பு-வெள்ளைக் காவியம், இருபது வாரங்கள் ஓடிய இமாலய வெற்றிக் காவியம்.
வெளியான தேதி : 9.9.1961 (சனிக்கிழமை)
வெளியான ஊர்கள் / திரையரங்குகள் : 39 / 42
100 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய ஊர்கள் / அரங்குகள் : 8 / 10
[ஊர் - அரங்கம் (இருக்கைகள்) - ஓடிய நாட்கள் என்கின்ற ஃபார்மெட்டில்]
1. சென்னை - சாந்தி (1214 இருக்கைகள்) - 127 நாட்கள்
2. சென்னை - ஸ்ரீகிருஷ்ணா (1198 இருக்கைகள்) - 127 நாட்கள்
3. சென்னை - உமா (762 இருக்கைகள்) - 111 நாட்கள்
4. மதுரை - சென்ட்ரல் (1662 இருக்கைகள்) - 127 நாட்கள்
5. திருச்சி - பிரபாத் (1289 இருக்கைகள்) - 127 நாட்கள்
6. சேலம் - பேலஸ் (1222 இருக்கைகள்) - 127 நாட்கள்
7. கோவை - கர்னாடிக் - 139 நாட்கள்
8. திண்டுக்கல் - சோலைஹால் (1117 இருக்கைகள்) - 105 நாட்கள்
9. பெங்களூர் - ஸ்டேட்ஸ் - 112 நாட்கள்
10. கொழும்பு - கிங்ஸ்லி - 103 நாட்கள்
50 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய ஊர்கள் / அரங்குகள் : 25 / 25
[ஊர் - அரங்கம் (இருக்கைகள்) - ஓடிய நாட்கள் என்கின்ற ஃபார்மெட்டில்]
1. நெல்லை - ரத்னா (1064 இருக்கைகள்) - 75 நாட்கள்
2. நாகர்கோவில் - பயோனீர்பிக்சர்பேலஸ் (1088 இருக்கைகள்) - 75 நாட்கள்
3. குடந்தை - ராஜா (1100 இருக்கைகள்) - 75 நாட்கள்
4. தஞ்சாவூர் - நியூடவர் (1101 இருக்கைகள்) - 75 நாட்கள்
5. வேலூர் - நேஷனல் (1330 இருக்கைகள்) - 75 நாட்கள்
6. பெங்களூர் - ஆபெரா - 75 நாட்கள்
7. பழனி - ஜெயராம் (975 இருக்கைகள்) - 59 நாட்கள்
8. விருதுநகர் - நியூமுத்து (939 இருக்கைகள்) - 59 நாட்கள்
9. மாயவரம் - சுந்தரம் (1135 இருக்கைகள்) - 59 நாட்கள்
10. திருவாரூர் - அம்மையப்பா (1045 இருக்கைகள்) - 59 நாட்கள்
11. புதுக்கோட்டை - பழனியப்பன் (882 இருக்கைகள்) - 59 நாட்கள்
12. கரூர் - லைட் ஹவுஸ் (1375 இருக்கைகள்) - 59 நாட்கள்
13. தூத்துக்குடி - சார்லஸ் (1383 இருக்கைகள்) - 59 நாட்கள்
14. தென்காசி - பாக்யலக்ஷ்மி (1608 இருக்கைகள்) - 59 நாட்கள்
15. ஈரோடு - ராஜாராம் (1104 இருக்கைகள்) - 59 நாட்கள்
16. ஊட்டி - ஏடிசி (706 இருக்கைகள்) - 59 நாட்கள்
17. திருப்பூர் - கஜலக்ஷ்மி (1055 இருக்கைகள்) - 59 நாட்கள்
18. நாமக்கல் - ஜோதி (1077 இருக்கைகள்) - 59 நாட்கள்
19. தர்மபுரி - கணேஷ் (960 இருக்கைகள்) - 59 நாட்கள்
20. பாண்டி - ராஜா (2000 இருக்கைகள்) - 59 நாட்கள்
21. சிதம்பரம் - வடுகநாதன் (1240 இருக்கைகள்) - 59 நாட்கள்
22. கடலூர் - பாடலி (874 இருக்கைகள்) - 59 நாட்கள்
23. விழுப்புரம் - சீதாராம் (1141 இருக்கைகள்) - 59 நாட்கள்
24. காஞ்சி - கிருஷ்ணா - 59 நாட்கள்
25. பல்லாவரம் - ஜனதா (1034 இருக்கைகள்) - 59 நாட்கள்
6 வாரங்கள் ஓடிய ஊர்கள் / அரங்குகள் : 7 / 7
[ஊர் - அரங்கம் (இருக்கைகள்) - ஓடிய நாட்கள் என்கின்ற ஃபார்மெட்டில்]
1. பரமக்குடி - தங்கம் - 41 நாட்கள்
2. காரைக்குடி - ராமவிலாசம் (1106 இருக்கைகள்) - 41 நாட்கள்
3. பட்டுக்கோட்டை - முருகையா - 41 நாட்கள்
4. பொள்ளாச்சி - கலைமகள் (912 இருக்கைகள்) - 41 நாட்கள்
5. உடுமலைப்பேட்டை - கல்பனா - 41 நாட்கள்
6. ஆத்தூர் - ஸ்ரீதரன் (1112 இருக்கைகள்) - 41 நாட்கள்
7. ஆற்காடு - ஜோதி (1344 இருக்கைகள்) - 41 நாட்கள்
பாவமன்னிப்பு, பாசமலர் திரைக்காவியங்களுக்குப் பின் அதே 1961-ம் ஆண்டில் மூன்றாவது பெரிய இமாலய வெற்றிக்காவியமாக திகழ்ந்தது "பாலும் பழமும்". தமிழ் சினிமா சரித்திரத்திலேயே, இன்னும் சொல்லப் போனால் உலக சினிமா சரித்திரத்திலேயே, ஒரே ஆண்டில் (1961), மூன்று Blockbusterகளை (மெகாஹிட் இமாலய வெற்றிக் காவியங்களை), கொடுத்த முதல் நடிகர் என்ற பெருமைக்குரியவரானார் நமது கலையுலக முதல்வர்.
சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே!
அன்புடன்,
பம்மலார்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
24th October 2015, 07:20 AM
#107
Senior Member
Devoted Hubber
பாவமன்னிப்பு 51
26. "பாவமன்னிப்பு", நடிகர் திலகத்தின் 67வது திரைக்காவியமாக, 66வது கருப்பு-வெள்ளைக்காவியமாக. 16.3.1961 வியாழனன்று சென்னையில் சாந்தி, ஸ்ரீகிருஷ்ணா, ராக்ஸி முதலிய 3 திரையரங்குகளிலும் மற்றும் இந்தியாவெங்கும் வெளியானது. [பொன்விழா நிறைவு பெற்று 51வது ஆண்டு ஆரம்பிக்கும் 16.3.2011, பொன்னுக்கும் மேலான புதன்கிழமை].
27. சென்னை சாந்தி திரையரங்கில் வெளியான முதல் சிவாஜி படம் என்கின்ற பெருமையைப் பெரும் இக்காவியம் இங்கே வெள்ளிவிழாக் கொண்டாடியது. தவிர, சென்னை மற்றும் தென்னகமெங்கும் 14 திரையரங்குகளில் 100 நாட்களைக் கடந்தது. முதல் வெளியீட்டில் சற்றேறக்குறைய 40 பிரிண்டுகள் போடப்பட்ட இக்காவியத்தின் கிட்டத்தட்ட அனைத்து பிரிண்டுகளும் 50 நாட்களைக் கடந்தது. அயல்நாடான இலங்கையிலும் 100 நாள் விழாக் கொண்டாடியது.
28. "பாவமன்னிப்பு" 100 நாட்களைக் கடந்த அரங்குகள்:
1. சென்னை - சாந்தி - 177 நாட்கள்
2. சென்னை - ஸ்ரீகிருஷ்ணா - 127 நாட்கள்
3. சென்னை - ராக்ஸி - 107 நாட்கள்
4. மதுரை - சென்ட்ரல் - 141 நாட்கள்
5. சேலம் - ஓரியண்டல் - 127 நாட்கள்
6. திருச்சி - ராஜா - 120 நாட்கள்
7. கோவை - கர்னாடிக் - 100 நாட்கள்
8. காஞ்சிபுரம் - கண்ணன் - 100 நாட்கள்
9. வேலூர் - ராஜா - 100 நாட்கள்
10. நெல்லை - ராயல் - 101 நாட்கள்
11. நாகர்கோவில் - பயோனீர்லக்ஷ்மி - 101 நாட்கள்
12. ராமனாதபுரம் - சிவாஜிடூரிங் - 100 நாட்கள்
13. பெங்களூர் - ஸ்டேட்ஸ் - 133 நாட்கள்
14. பெங்களூர் - ஆபெரா - 133 நாட்கள்
15.திருவனந்தபுரம் - பத்மனாபா - 100 நாட்கள்
16. கொழும்பு - கிங்ஸ்லி - 115 நாட்கள்
29. உலக சினிமா வரலாற்றில், ஒரு டூரிங் டாக்கீஸில் 100 நாட்கள் ஓடிய ஒரே திரைப்படம் "பாவமன்னிப்பு" [ராமனாதபுரம் - சிவாஜி டூரிங்].
30. தமிழ்த் திரைப்பட வரலாற்றில், ஒரு ஏர்கண்டீஷண்ட்(ஏசி) டீலக்ஸ் திரையரங்கில், வெள்ளிவிழாக் கொண்டாடிய முதல் திரைப்படம் "பாவமன்னிப்பு". [அரங்கம் : சென்னை - சாந்தி]
31. சிங்காரச் சென்னை மாநகரின் வரலாற்றில், முதன்முதலில், ஒரு தமிழ்த் திரைப்படம், அதன் முதல் வெளியீட்டில், மொத்த வசூலாக ரூ.10,00,000/- ஈட்டியது இந்தப்படத்தில் தான். சாந்தி(177), ஸ்ரீகிருஷ்ணா(127), ராக்ஸி(107) என வெளியான மூன்று திரையரங்குகளிலும் மொத்தம் ஓடிய 411 நாட்களில் இக்காவியம் அள்ளி அளித்த மொத்த வசூல் ரூ.10,51,697-10பை. [இன்றைய பொருளாதார நிலையில் இத்தொகை பற்பல கோடிகளுக்குச் சமம்.]
32. 1961-ம் ஆண்டின் தலைசிறந்த, ஈடு இணையற்ற வசூல் சாதனைப் படமாக - Box-Office Himalayan Record படமாக - ஒரு புதிய வசூல் புரட்சியை ஏற்படுத்திய படம் "பாவமன்னிப்பு".
33. நடிகர் திலகத்தின் திரைப்பட பாக்ஸ்-ஆபீஸ் சாதனைகள் வரலாற்றில், சென்னை மாநகரில் மட்டும் அவருக்கு மொத்தம் 10 படங்கள் வெள்ளிவிழாக் கொண்டாடியுள்ளன. அவரது சென்னை மாநகர வெள்ளிவிழாப் பட்டியலுக்கு பிள்ளையார்சுழி போட்ட படம் "பாவமன்னிப்பு".
34. ஏவிஎம் நிறுவனத்தினர் தங்களது திரைப்படங்களுக்கு வித்தியாசமாக விளம்பரங்கள் செய்வதில் வல்லவர்கள். அவர்கள், "பாவமன்னிப்பு" திரைப்படத்திற்கு, மிக மிக வித்தியாசமான - அதுவரை யாரும் செய்திராத - நூதன விளம்பரயுக்தியாக, ஜப்பானிலிருந்து வரவழைக்கப்பட்ட ஒரு ராட்சத பலூனில், "AVM" என்று ஆங்கில எழுத்துக்களில் பெரிதாக எழுதி, பலூன் வாலில் "பாவமன்னிப்பு" என்ற எழுத்துக்களை ஒன்றன்கீழ் ஒன்றாக தமிழில் அமைத்து, சென்னை சாந்தி திரையரங்க வளாகத்தின் மேல் வானில் பறக்க விட்டனர். ரசிகர்களும், பொதுமக்களும் இந்த பலூனை அதிசயத்துடன் அண்ணாந்து பார்த்து வியந்தனர். இந்த ராட்சத பலூன் சிறந்த காட்சிப்பொருளாகவும், படத்திற்கு நல்ல விளம்பரமாகவும் அமைந்தது.
35. "பாவமன்னிப்பு" பாடல்கள் அனைத்தும் ஒலிப்பதிவு ஆன உடனேயே, ஏவிஎம் நிறுவனத்தார் அதனை இலங்கை வானொலிக்கு அனுப்பி வைத்தனர். இலங்கை வானொலி இப்பாடல்களை அனுதினமும் ஒலிபரப்பியது. படம் வெளியாவதற்கு முன்னரே பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட்.
36. இப்படத்தின் பாடல்கள் அடங்கிய இசைத்தட்டுகளை 'கொலம்பியா' நிறுவனம் வெளியிட்டது. இசைத்தட்டுகள் விற்பனை வரலாற்றில், "பாவமன்னிப்பு" படப்பாடல்களின் இசைத்தட்டுகள் இமாலய சாதனையை ஏற்படுத்தின.
37. "பாவமன்னிப்பு" வெளியாகி சக்கைபோடு போட்டுக் கொண்டிருந்தது. படம் மட்டுமன்றி பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் ஏற்கனவே பிரபலமாகியிருந்தன. இதனை அறிந்த ஏவிஎம் நிறுவனத்தினர் - இன்னொரு நூதன விளம்பர யுக்தியாக - "பாவமன்னிப்பு பாட்டுப் போட்டி"யை படம் வெளியான நான்காவது வாரத்தில் [7.4.1961] அறிவித்தனர்.
38. ஏவிஎம் அறிவித்த "ரசிகப் பெருமக்களுக்கு பரிசு - பாவமன்னிப்பு பாட்டுப் போட்டி" அறிவிப்பு இதுதான்:
"இப்படத்திலுள்ள பாட்டுகள் அனைத்துமே சிறப்பாக இருப்பதாய் ஏகோபித்த பாராட்டுதல்கள் வருகின்றன. இப்பாட்டுகளை அதனதன் தராதரத்தின்படி, வரிசைப்படுத்தும்போது பாட்டின் இசை, பாட்டின் கருத்து மற்றும் ஒவ்வொரு பாட்டும் எவ்விதம் அந்தந்த காட்சிக்கு உறுதுணையாய் இருக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டு படத்திலுள்ள எட்டு பாட்டுகளையும் வரிசைப்படுத்தி எழுதி பரிசு பெறுங்கள்...
முற்றிலும் சரியான விடைக்கு முதல் பரிசு ரூ.4000/-
ஒரு தவறுள்ள விடைக்கு இரண்டாவது பரிசு ரூ.2000/-
இரண்டு தவறுள்ள விடைக்கு மூன்றாவது பரிசு ரூ.1000/-
திருவாளர்கள் டாக்டர் மு.வரதராசனார், சங்கீத கலாநிதி முசிறி சுப்ரமண்ய ஐயர், ஔவை டி.கே.ஷண்முகம், தொழிலாளர் தலைவர் பட்டாபிராமன் எம்.பி. ஆக நால்வரும் தேர்வு குழுவிலிருக்க இசைந்துள்ளார்கள். அவர்களின் தீர்ப்பே முடிவானது. தீர்ப்பின் முடிவுப்படி பரிசு பெற்றவர்களுக்கு 'பாவமன்னிப்பு' 100வது நாள் விழாவன்று பரிசளிக்கப்படும். உங்கள் விடைகளை 10.6.1961 தேதிக்குள், 'பாவமன்னிப்பு பாட்டுப் போட்டி', ஏவிஎம் ஸ்டூடியோ, சென்னை - 26 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். முடிவு தேதிக்குப் பின் வரும் விடைகள் கவனிக்கப்படமாட்டாது."
39. ரசிகப்பெருமக்கள் பெருமளவில் இப்போட்டியில் கலந்து கொண்டனர். ஏவிஎம் நிறுவன அலுவலகத்தின் ஒரு பெரிய அறை முழுவதும் விடைகள் வந்து குவிந்தன. அதன் பின்னர் தேர்வுக் குழுவினரும் முடிவு செய்து தங்களது தீர்ப்பினை வெளியிட்டனர். அத்தீர்ப்பின்படி வரிசைப்படுத்தப்பட்ட படத்தினுடைய எட்டு பாடல்கள்:
"1. காலம் பல கடந்து / சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்
2. அத்தான் என் அத்தான்
3. வந்தநாள் முதல் இந்தநாள் வரை
4. காலங்களில் அவள் வசந்தம்
5. பாலிருக்கும் பழமிருக்கும்
6. ஓவியம் கலைந்ததென்று
7. எல்லோரும் கொண்டாடுவோம்
8. சாயவேட்டி தலையில கட்டி"
சரியான விடைகளை எழுதி வெற்றி பெற்ற ரசிகப் பெருமக்களுக்கு, "பாவமன்னிப்பு" 100வது நாளன்று பரிசுகளும் வழங்கப்பட்டன.
40. "பாவமன்னிப்பு" திரைப்படம்தான், தமிழ் சினிமா வரலாற்றில், முதன்முதலில், ஒரு படத்தினுடைய பாடல்களையும், ரசிகர்களைவும் சம்பந்தப்படுத்தி ஒரு போட்டி நடத்தப்பட்ட முதல் படம்.
பம்மலார்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
24th October 2015, 07:21 AM
#108
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
24th October 2015, 07:31 AM
#109
Senior Member
Devoted Hubber
பாலும், பழமும் உண்ட மகிழ்ச்சியை "பாலும் பழமும்" பதிவு ஏற்படுத்தியது. முதல் வெளியீட்டிலும் சரி, மறுவெளியீடுகளிலும் சரி, இக்காவியத்திற்கு அலைகடலென வந்த பெண்கள் கூட்டம் போல, வேறொரு நடிகர் திலகத்தின் திரைப்படத்திற்கு மட்டுமல்ல, வேறொரு தமிழ்த் திரைப்படத்திற்கும் வந்திருக்குமா என்பது சந்தேகமே. அந்த அளவுக்கு தாய்க்குலத்தின் தன்னிகரற்ற ஆதரவை முழுமையாக பெற்ற காவியம் "பாலும் பழமும்". நமது நடிகர் திலகத்திற்கு அதிக பெண் ரசிகைகள் வாய்க்க ஆரம்பித்தது இப்படத்திலிருந்து தான். பல ஊர்களின் பல அரங்குகளில் - பெண்கள், தாய்மார்களுக்கு மட்டும் - மகளிர் சிறப்புக் காட்சியாக (Ladies Special Show) அதிக அளவில் காட்டப்பட்ட படம் இதுவாகத்தான் இருக்கும்.
இன்னொன்று, நமது நடிகர் திலகம், ஒரே வருடத்தில், இரண்டு வெள்ளிவிழாப் படங்களை சரியாக ஆறு முறை கொடுத்திருக்கிறார்.
1959 : வீரபாண்டிய கட்டபொம்மன், பாகப்பிரிவினை
1961 : பாவமன்னிப்பு, பாசமலர்
1972 : பட்டிக்காடா பட்டணமா, வசந்த மாளிகை
1978 : தியாகம், பைலட் பிரேம்நாத்
1983 : நீதிபதி, சந்திப்பு
1985 : முதல் மரியாதை, படிக்காதவன்
1982-ல் Just Miss. "தீர்ப்பு" வெள்ளிவிழா, "நீவுருகப்பின நீப்பு" தெலுங்குப்படம் 20 வாரங்கள். இதே போல், 1979லும் "திரிசூலம்" பிரம்மாண்ட வெள்ளிவிழா, "பட்டாக்கத்தி பைரவன்" இலங்கையில் 20 வாரங்கள்.1960லும் நூலிழையில் இரு வெள்ளிவிழாப் படங்கள் [இரும்புத்திரை(22 வாரங்கள்), படிக்காத மேதை(22 வாரங்கள்)] தவறிப் போயின.
"படித்தால் மட்டும் போதுமா" பதிவை படித்தால் மட்டும் போதுமா. பாராட்டி பதில் பதிவும் இட வேண்டுமே. அக்காவியத்தை அப்படியே கண்முன்னே நிறுத்தி விட்டீர்கள். பாராட்டுக்கள்.இக்காவியத்திலிருந்து ஜெமினி விலகிக் கொண்டதன் காரணம், நிஜ வாழ்வில் அவரது மனைவியான சாவித்திரியை, இப்படத்தில் அவர் மணமுடிக்க, தவறான அணுகுமுறையை (மொட்டைக் கடுதாசி எல்லாம் எழுதி) கையாள்வதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்று எண்ணியதால்தான்.
தாங்கள் குறிப்பிட்ட அனைத்து பாடல்களுமே நடிகர் திலகத்தின் ஸ்டைல் நடிப்பிற்கு கட்டியம் கூறும் பாடல்கள். ஆனால் 'அண்ணன் காட்டிய வழியம்மா' பாடலில், அப்பாடலின் உணர்ச்சிமயமான தன்மைக்கேற்ப, ஸ்டைலேதும் கலக்காமல், கனக்கச்சிதமாக 'சிக்'கென்று solidஆக செய்திருப்பார்கள் பாருங்கள், HATS OFF TO NT. பாத்திரம், அதன் தன்மை, பாடல், அதன் தன்மை, காட்சி, அதன் தன்மை இவையனைத்தையும் பரிபூரணமாக உணர்ந்து உள்வாங்கி நடிக்கக் கூடிய நடிகர் எவ்வுலகிலும் இவர் ஒருவரே.
['அண்ணன் காட்டிய வழியம்மா' பாடல் அண்ணா வழியிலிருந்து விலகி வந்த பின்னர் கவியரசர் எழுதிய பாடல், ஐயா கண்ணதாசரே, படத்தின் சிச்சுவேஷனுக்கு தகுந்தாற் போலவும் அதே சமயம் உங்களின் சிச்சுவேஷனுக்கு தகுந்தாற் போலவும் பாட்டுக்களை எழுத உங்களால் மட்டுமே முடியும்.]
அன்புடன்,
பம்மலார்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
24th October 2015, 07:39 AM
#110
Senior Member
Devoted Hubber
"அவன் தான் மனிதன்" 100 நாட்களைக் கடந்த அரங்குகள்:
1. சென்னை - சாந்தி
2. சென்னை - கிரௌன்
3. சென்னை - புவனேஸ்வரி
4. மதுரை - சென்ட்ரல்
5. சேலம் - நியூசினிமா
6. திருச்சி - ராஜா
7. யாழ்ப்பாணம் - லிடோ
மேலும், சேலம் மாநகர திரைப்பட வரலாற்றில், ஒரே சமயத்தில் இரு அரங்குகளில் வெளியான படங்களில், ஒன்றில் 107 நாட்களும் [நியூசினிமா], மற்றொன்றில் 35 நாட்களும் [பேலஸ்] ஓடிய முதல் திரைப்படம் "அவன் தான் மனிதன்".
கோவை 'கீதாலயா'வில் 85 நாட்கள் ஓடி வசூல் மழை பொழிந்தது. மேலும் பற்பல ஊர்களிலும் 50 நாட்களைக் கடந்து பெருவெற்றி பெற்றது.
அயல்நாடான இலங்கையில், கொழும்பு 'கிங்ஸ்லி' திரையரங்கில் 82 நாட்களும், யாழ்ப்பாணம் 'லிடோ' திரையரங்கில் 122 நாட்களும் ஓடி இமாலய வெற்றி அடைந்தது.
சென்னை மாநகரின் சாந்தி(100), கிரௌன்(100), புவனேஸ்வரி(100) ஆகிய மூன்று திரையரங்குகளின், 300 நாள் மொத்த வசூல் ரூ.13,29,727-37பை.
1970களில் ஒரு படம், முதல் வெளியீட்டில், மொத்த வசூலாக அரை கோடியை [ரூ.50,00,000/-] ஈட்டினாலே 'சூப்பர்ஹிட்' அந்தஸ்தைப் பெற்று விடும். "அவன் தான் மனிதன்" முதல் வெளியீட்டில் மொத்த வசூலாக ரூ.55,00,000/-த்தை [ரூபாய் ஐம்பத்து ஐந்து லட்சங்களை] அளித்தது. அன்றைய சில லட்சங்கள் இன்றைக்கு பல கோடிகளுக்குச் சமம்.
"அவன் தான் மனிதன்" முதல் வெளியீட்டில் உண்டாக்கிய பாக்ஸ்-ஆபீஸ் பிரளயத்தின் முழு விவரத்தை, நமது திரியின் 8வது பாகத்தில் தனியொரு சிறப்புப் பதிவாகவே தருகிறேன்.
மேலும், மறுவெளியீடுகளாகவும், சிங்காரச் சென்னையில் "அவன் தான் மனிதன்" கணிசமான அளவுக்கு திரையிடப்பட்டுள்ளது. 1988-ல் சென்னையின் பல அரங்குகளை ரெகுலர் காட்சிகளில் அலங்கரித்த காவியம் "அவன் தான் மனிதன்". 1989 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்குப் பின் மீண்டும் சென்னையில் வெளியான இக்காவியம் பல அரங்குகளில் House-Full காட்சிகளாக அமோக வரவேற்பு பெற்றது. 'எவ்வளவு தான் உடைஞ்சாலும் ராஜா ராஜா தான்' டயலாக்கிற்கெல்லாம் அரங்குகளின் கூரைகள் பிய்த்துக் கொள்ளும். பின்னர் 1993-ம் ஆண்டிலும், 1997-ம் ஆண்டிலும் கூட சென்னையில் ரவிகுமார் வெற்றி உலா வந்திருக்கிறார். மதுரை ரசிகர்கள் எப்போதும் எதிர்பார்க்கும் படம் இதுதான். மதுரையில் பல முறை மறுவெளியீடுகளில் சக்கை போடு போட்டிருக்கிறது. ஏனைய ஊர்களிலும் ரவிகுமார் அன்றும், இன்றும், என்றும் சூப்பர் ஹீரோ தான்!
அன்புடன்,
பம்மலார்.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks