Results 3,621 to 3,630 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

Threaded View

  1. #11
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



    வெறும் பாட்டல்ல.. இது!

    அழகான வாழ்க்கைத் தத்துவம்
    எளிதாக விளக்கப்படும்
    இசைப் பாடம்.

    கற்றுச் சிறந்த ஞானத்திற்கும்,
    கர்வத்திற்கும் நடக்கும்
    சங்கீதச் சண்டை.
    -----------
    கர்வம் பொல்லாதது.

    'என்னால் முடியும்' என்கிற
    நம்பிக்கை, "என்னால் மட்டுமே
    முடியும்" என்கிற நிலைக்கு
    மாறும் போது, அங்கே கர்வம்
    என்பது வந்து விடுகிறது.

    எதிலும் தன்னையே முன்னிலைப்படுத்தி, எப்போதும் தன்னையே
    பெரிதெனச் சொல்லும் மனிதரின் குடுமி,கர்வத்தின்
    கையிலிருக்கிறது என்று
    பொருள்.
    ----------
    மற்றவரை மட்டம் தட்டி
    இன்பம் காணுவோரின் கர்வம்
    அடக்கப்படும் என்பதற்கு
    உதாரணமாய் ஒரு கதை
    கேட்டதுண்டு.

    ஒடுங்கிய பாலமொன்றில்
    நல்லவனொருவன் நடந்து
    வந்து கொண்டிருந்தான்.

    எதிரே, கர்வம் பிடித்தவன்
    ஒருவன் வந்து கொண்டிருந்தான்.வந்தவன்,நல்லவன் செல்ல வழியில்லாமல் பாதையை
    அடைத்துக் கொண்டு நின்றான்.

    நல்லவன் அமைதியாகக்
    கேட்டான்.."எனக்கு வழி
    விடுகிறாயா?"

    கர்வி கொக்கரித்தான்.. "நான்
    முட்டாள்களுக்கு வழி விடுவதில்லை.."

    நல்லவன் அமைதியாக..

    "ஆனால்,நான்
    முட்டாள்களுக்கு வழி விடுவதுண்டு" என ஒதுங்கி
    நின்றான்.
    ---------
    கதையின் நல்லவனைப்
    போலவே இந்தப் பாடலில்
    நடிகர் திலகம், திறமையால்
    கர்வம் அடக்கும் அழகை
    சுவாரஸ்யமாக ரசிக்கலாம்.

    மின்னும் ரோஸ் நிறச் சட்டையும், மீசை இல்லாத
    உதடுகளில் திறமைப் புன்னகையும், அட்டகாசமான
    அமர்வும், தோள்கள் உருட்டி,
    திசைகள் அத்தனைக்கும் தன்
    திருமுகத்தின் பாவனைகள்
    காட்டும் பேரழகும்..

    நடிகர் திலகம், வெகு சுலபமாய்
    நம் நெஞ்சில் குடியேறுகிறார்.

    உதடு பிதுக்கி, முகத்தைக்
    கோணலாக்கிக் கொண்டு
    "குப்பா.. முனியா" என்று
    அடியாட்களை அழைக்கும்
    வழக்கமான வில்லத்தனங்கள்
    இல்லாத, வித்தியாசமான
    வில்லன் பாத்திரங்கள்,அமரர்
    நம்பியார் சாமிக்கு நடிகர்
    திலகத்தின் படங்களில்தான்
    கிட்டின என்றே சொல்லலாம்.

    "இதில் தேவை என்ன பக்கமேளம்?" - ஆணவ த்வனியில் நம்பியார் பாட..
    வாசிப்பை நிறுத்தி,
    மிருதங்கத்தை நிமிர்த்தி
    வைத்து விட்டு, வெற்றிலைச்
    செல்லம் திறந்து சாவகாசமாய்
    பாக்கு மெல்லும் அழகு..

    வேறு யார் செய்தாலும் வராது..
    நடிகர் திலகம் தவிர்த்து.

    ---------
    கர்வங்கள் ஒடுங்கிய நாளைய
    சுத்தமான காலவெளியில்
    கேட்கத்தான் போகிறோம்..

    அய்யாவின் நம்பிக்கை
    வாசிப்பை..நிரந்தரமாய்.



  2. Thanks vasudevan31355 thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •