-
14th November 2015, 12:52 PM
#11
Junior Member
Veteran Hubber
இன்று (14-11-15) காலை பொதிகை தொலைக்காட்சியில், நடிகை லதாவின் பேட்டி ஒலிபரப்பாயிற்று. மக்கள் திலகத்துடன் அவர் இணைந்து நடித்த காவியங்களின் படக் காட்சிகள் பற்றி விவரித்து அவரின் பெருமைகளையும், திரைத்துறையில் சகல நுணுக்கங்களையும் தெரிந்தவர் என்றும் புகழாரம் சூட்டினார்.
குறிப்பாக. "சிரித்து வாழ வேண்டும்" காவியத்தில் இடம் பெற்ற, லாரி ஏற்றி குழந்தைகள் கொல்லப்பட்டு சடலமாக கிடக்கும் பொழுது, அவரை நம் பொன்மனச்ம்மல் எம். ஜி. ஆர். அவர்கள் தர தரவென்று இழுத்து வந்து காண்பிக்கும் காட்சி ஒரே டேக்கில் ஒகே ஆனது என்று நடிகை லதா அவர்கள் கூறிய பொழுது அந்த காட்சியை ஒளி பரப்பினர்.
தம் எங்கு சென்றாலும், நம் புரட்சித்தலைவர் அவர்கள் மேல் .மக்களுக்கு ஒரு CRAZE இருப்பதை உணர்வதாகவும், தனக்கு அவரால் பெரும் பெயரும் புகழும் இன்றும் கிடைத்து வருகிறது என்று பெருமிதத்துடன் நடிகை லதா கூறியது, அவர் நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள் மேல் , நன்றியுணர்ச்சியுடன், மாறாத அன்புடன் இருப்பது புலனாகிறது.

நடிகை லதா அவர்கள் நம் பொன்மனசெம்மலை பற்றி நினைவு கூர்ந்து இனிய நினைவுகளை நேயர்கள் மத்தியில் பகிர்ந்து கொண்டது உண்மையிலேயே மகிழ்ச்சிக்குரியது.
Last edited by makkal thilagam mgr; 14th November 2015 at 02:14 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
14th November 2015 12:52 PM
# ADS
Circuit advertisement
Bookmarks