-
8th December 2015, 09:14 AM
#1451
Junior Member
Senior Hubber
வருங்காலத்தில் மக்கள்தலைவரின் புகழ் காக்க புறப்பட்டிருக்கும் அன்னை இல்லத்தின் வம்சவிளக்கு கலையுலகின் வின் ஸ்டார் விக்ரம் பிரபு அவர்கள் அன்னை இல்லத்திற்கு அருகில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கினார்.

சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
8th December 2015 09:14 AM
# ADS
Circuit advertisement
-
8th December 2015, 09:19 AM
#1452
Senior Member
Seasoned Hubber
மக்கள் தலைவர் நடிகர் திலகத்தின் படை வீரர்கள் ஆங்காங்கே தங்கள் பகுதியில் ஆரவாரமில்லாமல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்து வருவது மிகவும் பாராட்டுக்குரியது. மயிலாடுதுறையில் நண்பர் சேகர் அவர்கள் அகில இந்திய சிவாஜி மன்றம் சார்பில் தனிப்பட்ட முறையில் கிட்டத்தட்ட ரூ.25,000 மதிப்பிலான உதவிகளை செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இது போல் ஒவ்வொரு ஊரிலும் உள்ள சிவாஜி ரசிகர்கள் தாங்கள் செய்யும் பணியை உளமாரப்பாராட்டுகிறேன்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
8th December 2015, 10:54 AM
#1453
Junior Member
Seasoned Hubber
Great news for Madurai fans. It will be a gala show at Central. Share the celebrations here for the
benefit of all the fans.
-
8th December 2015, 12:06 PM
#1454
Junior Member
Diamond Hubber
வாழ்த்து தெரிவித்த
ராகவேந்திரா சார்,வாசு சார்,ஆதவன் சார்,கோபு சார்,சுந்தரராஜன் சார்
ஆகியோருக்கு என் நன்றிகள்.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
8th December 2015, 12:25 PM
#1455
Junior Member
Diamond Hubber
நமது நண்பர் பொள்ளாச்சி கிருஷ்ணமூர்த்தி சென்னைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்தார் 
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
8th December 2015, 03:03 PM
#1456
Junior Member
Veteran Hubber
1955ம் வருடம் டிசம்பர் மாதம் காமராஜ் முதல்வராய் இருந்த காலம் தென் மாவட்டங்களில் திடீரென்று புயலும் பேய் மழையும் தாக்கின. வானம் பார்த்த சீமை எனப்படும் ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கால் பலர் வீடிழந்தனர். தங்கள் உடமைகளை எல்லாம் இழந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் தேவையில் துடித்தனர். அப்போது முதல்வர் காமராஜ் பாதிக்கபட்ட பகுதிகளை பார்வையிடவும், பாதிக்கபட்டவர்களுக்கு ஆறுதல் கூறவும் வந்தார்.
ஒரு கிராமத்தை முற்றிலும் நீர் சூழ்ந்து கொண்டது, வெளி தொடர்பே அற்றுப்போனது. உணவுக்கு கூட வழியில்லாமல் மக்கள் பட்டினியால் தவித்தனர். அதைக் கேள்விபட்ட காமராஜ், அவர்களுக்கு நிவாரணம் வழங்க அதிகாரிகளோடு புறப்பட்டார்.
ஆனால் ஊசாலிடிக் கொண்டிருந்த பாலமும் உடைந்து போனது. அதிகாரிகள் காமரஜிடம் “அய்யா இதற்கு மேல் கார் செல்லாது, அந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளை நாங்கள் சில பேர் கவனித்துக் கொள்கிறோம். நீங்கள் வேறு இடத்துக்கு செல்லுங்கள்” என்றார்கள்.
ஆனால் காமராஜ் “அதிகாரிகளே எல்லாத்தையும் கவனிக்கச் சொல்லி கோட்டையிலிருந்தே நான் உத்தரவு போடலாமே. மக்கள் கஷ்டத்தை நான் நேரடியாப் பாக்கணும். தேவையானா நிவாரணத்துக்கு உடனே ஏற்பாடு செய்யனும். அவங்களுக்கு ஆறுதல் சொல்லணும். அதனால்தான் நானே வந்தேன்” என்று சொலியபடியே வேட்டியை மடித்துக் கட்டி கொண்டு தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு தண்ணீரில் இறங்கிவிட்டார்.
சாரக் கயிரை பிடித்துக் கொண்டு மார்பளவு நீரில் கால்வாயைக் கடந்து மறு கரைக்கு சென்றார்.முதல்வரே தணணீரில் இறங்கி விட்டதால், அதிகாரிகளும் வேறு வழியின்றி அவரைப் பின் தொடர வேண்டியதாயிற்று. மறுநாளும் காமராஜ் திட்டமிட்டபடியேசெயல்பட்டுக் கொண்டிருந்தார்.
பெருந்தலைவரின் இந்த சேவையைப் பாராட்டி பேரறிஞர் அண்ணா (கவனிக்கவும்..... அன்று அறிஞர் அண்ணா எதிர் கட்சி) திராவிட நாடு இதழில் ஒரு கடிதம் எழுதியிருந்தார்.“சேரிகள் பாட்டாளிகளின் குடிசைக்கள், உழவர் உழன்று கிடக்கும் குச்சுகள். இவை யாவும் நாசமாகிவிட்டன. வீடில்லை, வயலில்லை, உள்ளத்தில் திகைப்பின்றி வேறில்லை. ஆனால் தம்பி, நமது முதலமைச்சர் காமராசர் அந்த மக்கள் மத்தியில் இருக்கிறார். பெருநாசத்ததுக்கு ஆளான மக்களின் கண்ணீரைத் துடைத்திடும் காரியத்தில் தீவிரமாக் ஈடுபட்டிருக்கிறார் என்பதை என்னும் போது இதோ எமக்கு ஆறுதல் அளிக்க எமது முதலமைச்சர் வந்துள்ளார். எமது கண்ணீரை காணுகிறார். தமது கண்ணீரை சிந்துகிறார். ஆறுதலை அள்ளித் தருகிறார்.கோட்டையிலே அமர்ந்து கொண்டு உத்தரவுகள் போடும் முதலமைச்சர் அல்ல இவர். மக்களை நேரில் சந்திக்கும் தலைவர் என்று மக்கள் வாழ்த்துகின்றனர். தம்பி! சொல்லித்தானே ஆக வேண்டும் முதலமைச்சர் காமராசரின் பொறுப்புணர்ச்சிகண்டு நாம் பெருமைப்படுகிறோம்.
Rks
குறிப்பாக உணரவேண்டியது யாதெனில் :
முதல்வராக இருந்தாலும் அதிகாரிகளுடன் வெள்ளத்தில் அது மார்பளவு வெள்ளம் ஆக இருந்தாலும் அந்த இடத்திற்கு சென்று பார்த்து அறிந்து வருவதில் கூட கர்ம வீரர் காமராஜர் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் முன்னோடியாக ஒரு உதாரண புருஷராக விளங்கினார் !
ஆகையால் தான் கர்ம வீரரின் ஆட்சியினை ராஜ ராஜ சோழனின் ஆட்சிக்கு பிறகு தமிழகம் கண்ட ஒரே ஒரு முழுமையான ஒரு பொற்கால ஆட்சியாக இன்றும் மக்கள் பெருமை போங்க பேசுகின்றனர் !
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
8th December 2015, 03:23 PM
#1457
Senior Member
Devoted Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
8th December 2015, 07:08 PM
#1458
Senior Member
Devoted Hubber
Dear senthilvel sir,
congratulations for crossing 2000 valuable posts
TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
8th December 2015, 07:25 PM
#1459
Junior Member
Devoted Hubber
Congrats Mr. Senthilvel for your 2000 postings.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
8th December 2015, 08:31 PM
#1460
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 5 Likes
Bookmarks