-
14th October 2015, 04:27 PM
#101
Junior Member
Newbie Hubber
-
14th October 2015 04:27 PM
# ADS
Circuit advertisement
-
22nd October 2015, 10:51 PM
#102
Senior Member
Veteran Hubber
விஜய் சேதுபதியை இயக்குகிறார் 'வா டீல்' ரத்தின சிவா
'வா டீல்' இயக்குநர் ரத்தின சிவா தனது அடுத்த படத்தில் விஜய் சேதுபதியை இயக்க இருக்கிறார்.
'நானும் ரவுடிதான்' படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் 'மெல்லிசை' திரைப்படம் வெளியாகி இருக்கிறது. 'சேதுபதி' படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து 'காக்கா முட்டை' மணிகண்டன் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் விஜய் சேதுபதி.
இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து, 'வா டீல்' இயக்குநர் ரத்தின சிவா இயக்கவிருக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் விஜய் சேதுபதி. இப்படத்தை 'ஆரஞ்சு மிட்டாய்' படத்தைப் போல தனது நண்பருடன் இணைந்து தயாரிக்கவிருக்கிறார்.
அருண்விஜய், கார்த்திகா நடித்திருக்கும் 'வா டீல்' படத்தை இயக்கி இருக்கிறார் ரத்தின சிவா. நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.
-
26th October 2015, 03:01 PM
#103
Junior Member
Newbie Hubber
-
26th October 2015, 06:42 PM
#104
Senior Member
Seasoned Hubber
Finally he delivered a "hit movie"!
This is a very big world!
-
26th October 2015, 08:08 PM
#105
Junior Member
Devoted Hubber
padam super.. enjoyed, my mom and dad liked it too
aana 'podanum sir' comedy ellam konjam overa pattathu.. satharanama double meaning triple meaninglam kandukka mattanga censorla..
-
27th October 2015, 11:32 AM
#106
Senior Member
Veteran Hubber
மீண்டும் விஜய் சேதுபதி படத்தை தயாரிக்கும் தனுஷ்
விஜய் சேதுபதியை வைத்து தனுஷ் தயாரித்த, நானும் ரௌடிதான் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், தனது வுண்டர்பார் விஜய் சேதுபதி நடிக்கும் இன்னொரு படத்தையும் தயாரிக்கயிருப்பதாக தனுஷ் கூறியுள்ளார்.
நானும் ரௌடிதான் முதல் நாளில் 2.16 கோடிகளை வசூலித்தது. அடுத்தடுத்த தினங்களில் வசூல் அதிகரித்து, நான்கு தினங்களில் மட்டும் 10 கோடிகளை படம் தாண்டியது. படத்துக்கு ரசிகர்களின் ஆதரவு பெருகியபடியே வருகிறது.
இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த மகிழ்ச்சிகரமான செய்தியை தனுஷ் பகிர்ந்துள்ளார்.
வுண்டர்பார் ஃபிலிம்ஸுக்காக நம்ம ரவுடி விஜய் சேதுபதி மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்பதை மிக மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன் என தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.
ஜோ*டி யார் நயன்தாராவா?
-
30th October 2015, 01:25 PM
#107
Senior Member
Veteran Hubber
விஜய் சேதுபதியுடன் நடிக்கும் மலையாள நடிகை மடோனா
நானும் ரௌடிதான் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியின் பக்கம் கவனம் திரும்பியிருக்கிறது.
அவரது நடிப்பில் தயாராகியிருக்கும் மெல்லிசை படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாக படக்குழு தெரிவிக்கிறது.
அருண் குமார் இயக்கத்தில் சேதுபதி, நலன் குமாரசாமி இயக்கத்தில் காதலும் கடந்து போகும் உள்பட சில படங்களில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.
இதில் காதலும் கடந்து போகும், தென்கொரியப்படமான மை டியர் டெஸ்பரடோவின் தழுவல்.
இதில் நாயகியாக மலையாள நடிகை மடோனா நடித்து வருகிறார். மை டியர் டெஸ்பரடோ கிட்டத்தட்ட ஒரு நாயகி மையப்படம். மடோனாவுக்கு விஜய் சேதுபதிக்கு இணையான வேடம் உள்ளதாக கூறப்படுகிறது.
-
14th December 2015, 05:36 PM
#108
Senior Member
Veteran Hubber
தர்மதுரை ஃபர்ஸ்ட் லுக் அன்றே ஃபர்ஸ்ட் பிரச்னை!
விஜய்சேதுபதி நடிப்பில் சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகிவரும் படம் தர்மதுரை. அப்படத்திற்கான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. அதே நேரம் 2014ல் ஆனந்த் குமரேசன் இயக்கத்தில் விஜய்சேதுபதி ஒப்பந்தமான திரைப்படம் வசந்தகுமாரன். இவ்விரு படங்களுக்குமே தயாரிப்பு நிறுவனம் “ஸ்டூடியோ 9” .
வசந்தகுமாரன் திரைப்படத்தை பாதியிலேயே கைவிட்டதாகவும், அடுத்த படத்தை தயாரிப்பு நிறுவனம் தொடங்கிவிட்டதாகவும் பட இயக்குநர் ஆனந்த் குமரேசன் சமுகவலைதளங்களில் தயாரிப்பு தரப்பிற்கு ஐந்து கேள்விகளை முன்வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர்கூறும்போது,
“வசந்தகுமாரன்” திரைப்படத்தை எழுதி இயக்குவதற்காக கடந்த டிசம்பர் 2012-ல் நான் ஒப்பந்தமாகினேன். பணிகளும் நடந்தன. பிரச்சினைகள் பேச்சுவார்த்தைகள் என்று வருடங்கள் நகர்ந்தன. தற்போது அத்திரைப்படம் கைவிடப்பட்டதாக ஊடகங்களின் மூலம் அறிகிறேன். “வசந்தகுமாரன்” திரைப்படத்திற்குப் பதிலாக “தர்மதுரை”என்கிற திரைப்படம் இன்று (டிசம்பர் 2015) படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளதாக மீண்டும் ஊடகங்களின் மூலமே அறிகிறேன்.
பல்வேறு குழப்பங்களுக்கு ஆட்பட்டு, இதை நான் பதிவிட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளேன்…
1. வசந்தகுமாரன் திரைப்படம் நடைபெறாமல் இருப்பதற்குக் காரணம் கதாநாயகருக்கும் தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட பிரச்சினை என்றே அறியப்படுகிறது. அது என்ன பிரச்சினை?
2. அந்த பிரச்சினை எப்படி முடிவுக்கு வந்தது?
3. பிரச்சினை முடிவுக்கு வந்திருந்தால், சம்மந்தப்பட்ட படம்தானே ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும். மாறாக ஏன் ”வசந்தகுமாரன்” கைவிடப்பட்டது?
4. அதற்குப் பதிலாக தர்மதுரை என்கிற திரைப்படம் எப்படி ஆரம்பிக்கப்பட்டது?
5. இவை எதுவுமே தொழில் அடிப்படையிலோ அல்லது குறைந்தபட்சம் மனிதாபிமான அடிப்படையிலோ கூட தயாரிப்பாளரோ அல்லது கதாநாயகரோ, தகவலாகவோ அல்லது என்னை அழைத்து நேரிலோ ஏன் என்னிடம் இதுவரை தெரிவிக்கவில்லை.?
நான் பலமுறை தொடர்புகொள்ள முயற்சித்தபொழுதும் அவர்களிடம் சரியான பதில்கள் கிடைக்கவில்லை. பதில்களே இல்லை என்பதுதான் உண்மை.
இப்பொழுது என்னுடைய எதிர்பார்ப்பு ஒன்றே ஒன்றுதான். மூன்று வருடங்களாகக் காத்திருந்த எனக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. சுமார் பன்னிரெண்டு வருட சினிமா வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.
ஒரு திரைப்படம் கைவிடப்பட்டு அதற்குப்பதிலாக இன்னொரு திரைப்படம் நடக்கும்பொழுது அது ஏன் என்று விளக்கமளித்து துறை சார்ந்தவர்களுக்கும், ஊடகங்களுக்கும் “அறிவிக்க” வேண்டியது அவசியம். குறைந்தபட்சம் எனக்காவது விளக்கமளிக்கவேண்டியது தார்மீக அடிப்படையில் உங்களது கடமை என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
நான் உங்களிடம் படமோ, பணமோ அல்லது பரிதாபமோ வேண்டி நிற்கவில்லை. தயாரிப்பாளருக்கும் கதாநாயகருக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினையில், ஒரு முதல் பட இயக்குனராகிய நான் ஏன் சம்மந்தமே இல்லாமல் பலியாக்கப்பட்டேன் என்பது குறித்த ஒரு முறையான விளக்கம் மட்டுமே” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
சீனுராமசாமியுடன் இடம்பொருள்ஏவல் படத்தைத் தொடர்ந்து இரண்டாவதாக இணைந்திருக்கும் தர்மதுரை படத்திற்கான முதல்பார்வை வெளியான முதல்நாளே சர்ச்சையிலும் சிக்கியிருக்கிறது.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
mappi thanked for this post
-
14th December 2015, 09:42 PM
#109
Junior Member
Newbie Hubber
-
15th December 2015, 11:55 AM
#110
Senior Member
Veteran Hubber
Bookmarks