-
17th December 2015, 01:31 PM
#441
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Muthaiyan Ammu
அன்பு சகோதரர் திரு. முத்தையன் அம்மு அவர்களே !
தாங்கள் பதிவிடும் பொன்மனசெம்மலின் நிழற் பட பதிவுகள் வெகு அற்புதம்.
ஆஹா ..... ஓஹோ .......பேஷ் ...... பேஷ்.
தொடரட்டும் தங்களின் சீரியபணி . ! தங்களின் உடல் நிலையையும் கவனித்து கொள்ளவும். புரட்சித்தலைவரின் ஆசிகள் தங்களுக்கு என்றும் உண்டு !
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
17th December 2015 01:31 PM
# ADS
Circuit advertisement
-
17th December 2015, 01:36 PM
#442
Junior Member
Veteran Hubber

Originally Posted by
kaliaperumal vinayagam
மக்கள் திரியின் அனைத்து நண்பர்களுக்கும் ஓர் வேண்டுகோள். நான் எப்போதும் கூறுவது போல், நம் ஆண்டவன் ஒப்பரும் மிக்காரும் இல்லா ஆண்டவன். சராசரி வேலையை செய்பவன் , மனிதன். சக்திக்கு மீறிய வேலையை செய்பவன் ஆண்டவன். நம் தலைவன் எவராலும் நினைத்து பார்க்க கூட முடியாத செயல்களைப் புரிந்த 'விந்தைகளுக்கெல்லாம் தந்தை'.
அவருக்கு யாரும் ரோல் மாடல் கிடையாது. அப்படி இருந்திருந்தால் அவரைப் பார்த்து இவர் இப்படி செய்தார் - அப்படி செய்தார் என்று சொல்லலாம். ஆனால் அவருக்கு அவரே ரோல் மாடல். நம் தலைவரைப்பர்த்துதான் அன்று முதல் இன்று வரை அவராய் ஆகி விடமாட்டோமா என்று மனப்பால் குடித்தனர்...குடிக்கின்றனர். சிலர் நானும் கட்சி ஆரம்பிக்கிறேன் என்று சொல்லி காணாமலும் போனார்கள். நம் மக்கள் திலகத்தின் உள்ளம் தொண்டுள்ளம்..பிரதி பலன் பாராதது. அதனால்தான் மக்கள் உள்ளத்தில் இடம் பிடித்து மக்கள் திலகம் ஆனார். பின்னர் இதய தெய்வம் ஆனார்.
இரட்டை குதிரையில் சவாரி செய்ய முடியுமா என்ற கேள்விக்கு
சவாரி செய்யவும் முடியும். வெற்றியும் காண முடியும் என்று சாதித்து காட்டியவர் நம் புரட்சித்தலைவர். திரையுலகம், அரசியல் என்னும் இரட்டை குதிரையில் சவாரி செய்து, இரண்டிலும் முதலிடம் பெற்று, வசூல் சக்கரவர்த்தி என்று திரையிலும், நிரந்தர முதல்வர் என அரசியலிலும் கோலோச்சி, இருக்கும் வரை, இறக்கும் வரை தோல்வியே காணமல் வாழ்ந்தார். இன்றளவிற்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அன்றிலிருந்து இன்று வரை அவரது திரைப்படங்கள் சாதனை படைத்துகொண்டிருக்கின்றன என்பது மற்றவர் சொல்லி தெரிய தேவையில்லை. அங்கைப்புண்ணுக்கு ஆடியும் வேண்டுமோ என்பது போல, அவரது திரைப்படங்கள் இன்றும் பெரும்பாலான திரையரங்குகளில் வலம் வந்துகொண்டே இருக்கின்றன. வசூலில் சாதனை புரிகின்றன. கோவையில் இந்த ஆண்டு மட்டும் புரட்சித்தலைவரின் 40 படங்கள் வெளியாகி உள்ளன. 265 நாட்களில் 230 நாட்கள் தலைவரின் படங்கள் திரையிடப்பட்டுள்ளன. இதன் புள்ளி விவரங்களை என் அன்பு சகோதரர் திருப்பூர் திரு ரவிச்சந்திரன் அவர்கள் வெளியிடுவார். இந்த சாதனைகளை யாரால் செய்ய முடியும். இப்போதுள்ள ஸ்டார்களால் கூட செய்ய முடியாத சாதனை இது. இன்றைக்கல்ல, அன்றைக்கும் நம் புரட்சி நடிகர்தான் வசூல் சக்கரவர்த்தி என்பது நாடறிந்த ஒன்று.. பல ஏடுகளில் வெளி வந்த உண்மை இது. மற்ற நடிகர்களின் படங்கள் 100 நாட்களில் எடுக்கும் வசூலை, தலைவர் படங்கள் 50 நாட்களில் குவித்ததுதன் திரையுலக வரலாறு
இப்படிப்பட்ட சாதனைகளுக்கெல்லாம் சொந்தக்காரரை நம் திரியின் நண்பர்கள் ஏன்தான் மற்றவர்களுடன் ஒப்பீடு செய்கிறீர்களோ தெரியவில்லை. தயவு செய்து இதோடு இதைவிட்டு விட்டு நம் தலைவர் புகழ் ஒன்றையே நோக்கமாக கருதி செயல்பட உங்களை இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன். மற்ற திரியில் தவறாய் போடுகிறார்கள் அதற்கு பதில் போடுகிறோம் என்று நம் திரியின் தரத்தை தாழ்த்த வேண்டாம் என்று மீண்டும் கேட்டுகொள்கிறேன். அது அந்தந்த திரியின் தன்மையைப் பொருத்தது. அதே போல் நாம் செய்து நம் திரியின் புனிதத்தைக் கெடுக்க வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் வேண்டுகிறேன்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
மக்கள் திலகம் திரி நெறியாளர் சகோதரர் திரு. ரவிச்சந்திரன் மற்றும் இந்த பாகம் 18 திரியை துவக்கி வைத்திருக்கும் அன்பு சகோதரர் திரு. கலியபெருமாள் அவர்கள் அறிவது ----
நமது மக்கள் திலகம் திரி அன்பர்களின் நோக்கம் புரட்சித்தலைவரின் புகழ் பரப்புவது மட்டுமே. வீண் சர்ச்சைகளையும், விவாதங்களையும் நாம் விரும்பாதவர்கள். பொன்மனச்செம்மலின் நற்பெயருக்கு குந்தகம் விளைவிக்கும் எந்த செயலையும், களங்கம் ஏற்படுத்தும் எந்த செய்திகளையும் அனுமதிக்க மாட்டார்கள். அது மட்டுமல்ல, அவ்வாறு, அவதூறு பதிவுகள் இடப்படும் போது, அதற்கு நெத்தியடி பதிலாக சில உணர்ச்சிகரமான, ஆக்ரோஷமான பதிவுகளை வருத்தத்தோடு மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக நேரிடுகின்றது.
நமது திரி அன்பர்களுக்கு, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை விமர்சிக்க வேண்டும் என்ற எண்ணம் முற்றிலும் கிடையாது. நடிகர் திலக திரியின் சில அன்பர்கள், நம்மை சீண்டும்போது, அவர்களி ன் அபிமான நடிகர் பற்றிய பல எதிர்மறையான செய்திகள் பதிவிடுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிறது. அதுவும் அப்போதுதான் நமது உணர்வுகள் எப்படி பாதிக்கப்படுகின்றன என்பது அவர்களுக்கும் புரியும் என்பதற்காக நாம் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் சிவாஜி கணேசன் அவர்களது படங்கள் பற்றி விமர்சிக்க வேண்டிய துரதிர்ஷ்டவசமான நிலை ஏற்படுகிறது.
உண்மையிலேயே அவர்களுக்கு தங்கள் அபிமான நடிகர் மீது பற்றும் பாசமும் இருப்பின், அவர் (நடிகர் சிவாஜி கணேசன்) தனது இறுதி கால கட்டத்தில், மிகவும் போற்றிய தனது அருமை அண்ணன் எம். ஜி. ஆர். அவர்கள் மீது இவ்வாறு அவதூறு பரப்பும் செய்திகளை வெளியிட மாட்டார்கள். நாமும்,நம் வழக்கமான பதிவுகளில் கவனம் செலுத்துவோம்.
-
Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
-
17th December 2015, 01:52 PM
#443
Junior Member
Regular Hubber

சென்னையில் 10 நாளுக்கு ரூ.2 லட்சத்துக்கு மேல் வசூல் என்றால், தமிழகம் மொத்தமும் 2 வாரத்தில் என்ன வசூல் என்பதற்கு அனுமானம் வேண்டாம். கணக்கு போட தெரிந்தால் போதும்.
நம்நாடு ஒரு வாரம் வசூல் பல லட்சம் வருகிறது. தமிழகத்தின் சில தியேட்டர்களில் மட்டுமே.
அப்புறம் நாங்கள் உலகம் சுற்றும் வாலிபன் பற்றி பேசுவோம். இதற்கு முடிவே இல்லை. சாதனைகளை அவர் அவர்கள் திரிகளில் பதிவிடலாம். யாரும் விவாதத்தை வளர்க்க வேண்டாம்.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
17th December 2015, 01:55 PM
#444
Junior Member
Veteran Hubber
மலரும் நினைவுகள் :
1987 ம் ஆண்டு, இதே போன்று வைகுண்ட ஏகாதசி அன்று, சென்னை சத்யம் திரையரங்கில், பொற்கால ஆட்சி தந்த நம் பொன்மனசெம்மலின் "அரச கட்டளை " திரையிடப்பட்டு HOUSE FULL ஆனது.

அதே நேரத்தில், சாந்தம் அரங்கில், மக்கள் திலகத்தின் மற்றோர் காவியம் "அன்பே வா " திரையீடப்பட்டு, அதுவும் HOUSE FULL ஆனது.

-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
17th December 2015, 02:03 PM
#445
Junior Member
Veteran Hubber

Originally Posted by
mgr rajkumar
சென்னையில் 10 நாளுக்கு ரூ.2 லட்சத்துக்கு மேல் வசூல் என்றால், தமிழகம் மொத்தமும் 2 வாரத்தில் என்ன வசூல் என்பதற்கு அனுமானம் வேண்டாம். கணக்கு போட தெரிந்தால் போதும்.
சார்
ஒரே ஒரு கேள்வி - இதற்க்கு நான் பதில் எழுதவேண்டும் என்று எதிர்பார்கிறீர்களா ?
Rks
-
17th December 2015, 02:08 PM
#446
Junior Member
Regular Hubber

Originally Posted by
MGR RAJKUMAR
அப்புறம் நாங்கள் உலகம் சுற்றும் வாலிபன் பற்றி பேசுவோம். இதற்கு முடிவே இல்லை. சாதனைகளை அவர் அவர்கள் திரிகளில் பதிவிடலாம். யாரும் விவாதத்தை வளர்க்க வேண்டாம்.
[/COLOR][/SIZE]
இந்த வரியை பார்க்கவில்லையா?
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
17th December 2015, 02:12 PM
#447
Junior Member
Veteran Hubber

Originally Posted by
ravikiransurya
dear suharaam sir,
the only reason why i did not respond to those statistics of prof. Sir is, that it would start fresh debate / arguments, which i mentioned already.
Even now, i would not have put up the above ads, but, am doing only to clear your mind and explain you that every veteran will have such details.
I too "மன கிலேசங்கள் உண்டாக்க வேண்டாம் என கருதி " keeping quiet and want to move to next level on our friendship / relationship rather than ponder over who was better etc., etc., which are increasing the blood pressure levels of all of us as we are very sensitive and true to our demi gods !
There is no answer to whether lord shiva is greater (or) lord vishnu is greater !
That question itself is wrong and should never arise is what my contention is !
Regards
rks
நீங்களும் இதை படிக்கவில்லையா ?
-
17th December 2015, 02:14 PM
#448
Junior Member
Veteran Hubber
-
17th December 2015, 02:24 PM
#449
Junior Member
Regular Hubber
[அது சுகராம் நேற்று விவாதத்துக்கு போட்டது. குழிப்பிள்ளையை எடுத்து இப்போது எதற்கு எழவு கொண்டாட வேண்டும்?
நீங்கள் ஆயிரம்தான் உங்கள் நடிகரை தூக்கி வைத்து பேசினாலும் ஹிட்லர் உமாநாத் படம் திருச்சியில் ரிலீசே ஆகவில்லை. ஏன்? படத்தை வாங்க ஆளில்லை. அதுதான் உங்கள் மார்க்கெட். இதுபோல பல சொல்ல முடியும். மீண்டும் வம்பு விவாதம் வேண்டாம்.பொறுமைக்கு எல்லை உண்டு. வாயை கிளறாதீர்கள். நிறுத்திக் கொள்ளுங்கள்.
Last edited by MGR RAJKUMAR; 17th December 2015 at 03:23 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th December 2015, 02:51 PM
#450
Junior Member
Veteran Hubber

Originally Posted by
mgr rajkumar
[
நீங்கள் ஆயிரம் சொன்னாலும் ஹிட்லர் உமாநாத் படம் திருச்சியில் ரிலீசே ஆகவில்லை. ஏன்? படத்தை வாங்க ஆளில்லை. அதுதான் உங்கள் மார்க்கெட். இதுபோல பல சொல்ல முடியும். மீண்டும் வம்பு விவாதம் வேண்டாம்.பொறுமைக்கு எல்லை உண்டு. வாயை கிளறாதீர்கள். நிறுத்திக் கொள்ளுங்கள்.
சார் ,
சுகாரம் அவர்கள் நேற்று போட்டார் ...நான் இன்றுதான் பார்த்தேன் ! சுகாரம் அவர்களுக்கு தான் நான் விளக்கவுரை அளிதேனே தவிர ...உங்களுக்கு நான் எதுவுமே பதிவு செய்யவில்லையே சார் !
நீங்கள் ஏன் என் மீது அனாவசியமாக கோபபடுகிறீர்கள் சார் ?
நான் என்ன தவறாக எழுதினேன் நீங்க இவ்வளவு வாருவதற்க்கு !
உங்களுடைய பதிலுக்கு என்னால் பதில் கொடுக்க உடனே முடியும்...ஆனால் விருப்பமில்லை !
எல்லோருடைய பொறுமைக்கும் எல்லை உண்டுதானே சார் !
ஆயிரம் விடுங்கள் சார் ...நான் ஒரு வாட்டி கூட ஹிட்லர் உமாநாத் திரைப்படம் பற்றி வாயே திறக்கவில்லையே ?
அப்படி இருக்க ஹிட்லர் உமாநாத் படம் பற்றி எதற்கு இப்போது நீங்களாக வலிய எழுதுகிறீர்கள் ?
ஹிட்லர் உமாநாத் திருச்சியில் ரிலீஸ் ஆனால் எனக்கு ஒரு நஷ்டமும் இல்லை.. ஆகவில்லை என்றால் உங்களுக்கு ஒரு லாபமும் இல்லை !
நீங்கள் கூறுவது மிகவும் சரிதான் ...அவருக்கு மார்க்கெட் இல்லை தான் ! இப்போது திருப்தியா ?
தமிழகத்தில் 1982இல் மொத்தம் ரிலீஸ் செய்யப்பட்ட படங்களின் எண்ணிக்கை 130.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு மார்க்கெட் இல்லாததால் தான் அவர் 1982 ஆம் வருடம் வெறும் 13 படங்களில் மட்டுமே நடித்தார் !
அதாவது 10% (பத்து சதவிகிதம்) படங்கள் அவரை வைத்து தயாரித்து வெளியிடப்பட்டவை ! )
அடுத்த உங்கள் பதிவில் " அனைத்துமே தோல்வி படங்கள் ...வசூலே இல்லாமல் திரை அரங்குகளில் இருந்து பரிதாபமாக தூகபட்டது.." என்பது வேறு விதமாக எழுதுவீர்கள் என்பதும் எனக்கு தெரியும் ! விடுங்க..சார்..விடுங்க ..!
நடிகர் திலகம் அவர்களுடைய மார்கெட்...அதுபற்றி நான் எதற்கு 2015 இல் கவலை படவேண்டும் சார் ?
பாவம், நீங்கள் தான் சிவாஜி மார்க்கெட் பற்றி இன்னும் கவலை பட்டு கொண்டிருக்கிறீர்கள் !
தயவு செய்து ஒரு திறந்த மனதுடன் என்னை பாருங்கள் என்பதுவே எனது விண்ணப்பம் !
Rks
Last edited by RavikiranSurya; 17th December 2015 at 03:54 PM.
Bookmarks