Results 1 to 10 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

Hybrid View

  1. #1
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Tamil Hindu

    சினிமா எடுத்துப் பார் 43: அறையில் அழுது கொண்டு இருந்த ஸ்ரீதேவி!


    எஸ்பி.முத்துராமன்



    வெளிநாட்டில் வித்தியாசமாக எடுக்க திட்டமிடப்பட்ட அந்தப் படத்தை, தமிழில் மட்டும் எடுத்தால் பொருட்செலவு அதிகமாகும்; நிச்சயம் கையைக் கடிக்கும். அதனால் கன்னடத்திலும் சேர்த்து எடுக்கலாம் என்ற ஐடியாவை பஞ்சு அருணாசலம் கூறினார். கன்னடத்தில் எடுக்கத் தயாரிப் பாளர் ராஜண்ணாவும் தயாராக இருந் தார். அந்தப் படம் ‘ப்ரியா’. இந்தப் படத் தைப் பற்றி இந்த வாரம் எழுதும் போது நான் சிங்கப்பூரில் இருக்கிறேன். 1978-ம் வருஷ சிங்கப்பூருக்கும் 2016 சிங்கப்பூருக்கும் எவ்வளவு மாற்றங்கள்!

    முன்னாள் பிரதமர் லீ குவான் யூ ஒரு முறை ‘‘சிங்கப்பூரின் வளர்ச்சியில் தமிழர் களுக்குப் பங்கு உண்டு. தமிழர்களின் உழைப்பும் வேர்வையும் இந்த மண்ணில் கலந்துள்ளது’’ என்றார். சிங்கப்பூரின் ஆட்சிமொழிகளில் ஒன்றாக தமிழும் இருப்பது நமக்குப் பெருமை.

    சிங்கப்பூரில் புக்கிட் பாஞ்சாங்கில் நடந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்டேன். தமிழர்களோடு, இந்தியர், சீனக்காரர், மலேசியர் என பல நாட்டு இன மக்களும் ஒன்றாகக் கூடி பொங்கல் வைத்தனர். சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் தியோ கோ பின் பட்டு வேட்டி, சட்டை, துண்டு அணிந்தும் அவர் மனைவி பட்டுப் புடவை அணிந்தும் கலந்துகொண்டனர். நான் தமிழ்நாட்டில் இருந்து வந்து கலந்துகொண்ட ஒரு மாமன்காரனாக தாய்நாட்டின் வாழ்த்து களை அவர்களுக்குக் கூறினேன். ‘ஒரே உலகம்; ஒரே இனம்’ என்று பார்க்க பூரிப்பாக இருந்தது

    பஞ்சு அருணாசலத்தின் சகோதரர் கேஎன். சுப்புதான் ‘ப்ரியா’ படத் தயாரிப் பாளர். எழுத்தாளர் சுஜாதா எழுதிய ‘ப்ரியா’ நாவலைத்தான் படமாக்கினோம். வெளிநாடுகளில் நடக்கும் கதைக்களம். நானும் ஒளிப்பதிவாளர் பாபுவும் ‘ப்ரியா’ நாவலைப் படித்து கதையை உள்வாங் கிக்கொண்டோம். சுஜாதாவின் கதைகள் பெரும்பாலும் திரைக்கதை வடிவத்தில் இருக்கும். பிரம்மாண்டமான படங்களை எடுக்கும் இயக்குநர் ஷங்கரின் படங் களில் சுஜாதாவின் பங்களிப்பு சிறப்புடன் இருந்தது. சிறந்த கணினி விஞ்ஞானியான அவர், அவ்வளவாக கணினி புழக்கத் துக்கு வராத காலத்திலேயே கமலுக்குக் கணினி கற்றுக்கொடுத்து, திரைப்பட உருவாக்க வேலைகளை அதில் செய்ய வைத்தார். எழுத்தாளர் சுஜாதாவை இந்தக் காலத்தின் ‘திருமூலர்’ என்றே சொல்லலாம். அவருடைய ‘ப்ரியா’ கதைக்கு பஞ்சு அருணாசலம் தன் எழுத் தின் மூலம் மேலும் மெருகேற்றினார்.

    ‘ப்ரியா’ பட நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். நாயகி தேவி. கன்னட நடிகர் அம்ரிஷ், மேஜர் சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன் என நடிகர்கள் தேர் வானார்கள். இளையராஜா புதுமையான பாடல்களை அற்புதமாக இசை அமைத்து, ‘இன்ரிகோ’ (INRECO) ஸ்டீரியோபோனிக் முறையில் ஒலிப் பதிவு செய்துகொடுத்தார். சூப்பர் ஸ்டா ரின் படத்துக்கு சூப்பராகவே பாடல்கள் அமைந்தன.

    ‘ப்ரியா’படத்தை சிங்கப்பூரில் படமாக் கும் வேலைகளைத் தொடங்கினோம். பொதுவாக வெளிநாடுகளில் பாடல் காட்சிகளை மட்டுமே எடுப்பது ஒரு விதம். முழு படத்தையும் எடுப்பது சாதாரணமானது இல்லை. படப்பிடிப் புக்குப் புறப்பட்டபோது, செலவோடு செலவாக மளிகை பொருட்களை எடுத் துக்கொண்டு, உடன் சமையல்காரரை யும் அழைத்துச் சென்றோம். அதிகாலையில் படப்பிடிப்புக்குப் புறப்பட்டால் டிபன் ரெடி ஆகியிருக்காது. புகழ்பெற்ற நடன இயக்குநர் சோப்ரா மாஸ்டர் பிரட்டில் ஜாம் வைத்து காலை உணவை தயார் செய்துகொடுப்பார். பஞ்சாபிக்காரரான சோப்ரா நல்ல மனிதர்.

    படத்துக்குத் தேவையான சில காட்சிகளை சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் படமாக்க நினைத்தோம். ஏர்போர்ட் நிர் வாகத்தை அணுகியபோது, ‘‘பயணிகள் அதிகம் வந்து செல்லும் நேரத்தைத் தவிர்த்து எடுத்துக்கொள்ளலாம்’’ என்று சொல்லி அனுமதி அளித்தனர். அனுமதி கிடைத்த மகிழ்ச்சியோடு ‘‘தொகை எவ் வளவு கட்ட வேண்டும்?’’ என்று கேட் டோம். ‘‘இந்தப் படம் மூலமாக எங்கள் ஏர்போர்ட் பல நாட்டு மக்களுக்கும் தெரியப்போகிறது. இன்னும் பல நாட்டுக்காரர்கள் எங்கள் நாட்டுக்கு சுற்றுலா வருவார்கள். உங்கள் மூலம் எங்களுக்கு விளம்பரம் கிடைக்கும்போது ஏன் பணம் வாங்க வேண்டும்? எதுவும் வேண்டாம்’’ என்றார்கள். சுற்றுலாத் துறைக்கு சிங்கப்பூர் கொடுக்கும் முக்கியத்துவத்தை உணர முடிந்தது.



    படப்பிடிப்புக்காக சிங்கப்பூர் ஏர் லைன்ஸ் நிறுவனம் ஒரு விமானத்தை சில மணி நேரங்களுக்கு இலவசமாகக் கொடுத்து உதவியது. சுற்றுலாவுக்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத் துவத்தை போல நமது இந்தியாவிலும் ‘இங்கே தடை; அங்கே தடை’என்று முட்டுக்கட்டை போடாமல் சுற்றுலாவின் வளர்ச்சிக்குத் திட்டமிட வேண்டும். இந்தியாவில் படப்பிடிப்புக்கு அனுமதி பெறும் கஷ்டம் இங்கு சினிமா எடுப்பவர்களுக்குத்தான் தெரியும்.

    ‘டார்லிங்… டார்லிங்… டார்லிங்’ என்ற இளமை துள்ளும் பாடலை சிங்கப்பூரில் அழகான ஒரு நீச்சல் குளத்தில் படமாக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தோம். அந்தப் பாடலுக்கு நடனம் ஆட வேண் டிய நாயகி தேவி உரிய நேரத்தில் படப்பிடிப்புக்கு வரவில்லை. விசாரித்துப் பார்த்தால் அவர் அறையில் அழுது கொண்டு இருக்கிறார் என்றார்கள்.

    ஏன்? ஏன்?

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Bhakthi - kandhan karuNai - thirupparankundrathil.....

    From kandhan karuNai

    thirupparankundrathil nee sirithaal.....

    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  5. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •