-
27th February 2016, 11:36 AM
#1981
Senior Member
Senior Hubber
ஆடறது பாரதியா என்ன..ம்ம் மறந்தே போச்சு..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
27th February 2016 11:36 AM
# ADS
Circuit advertisement
-
27th February 2016, 01:08 PM
#1982
Junior Member
Seasoned Hubber
Super melody from Kannil Therindha Kadhaigal
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
27th February 2016, 01:13 PM
#1983
Junior Member
Seasoned Hubber
Viji song from Parvaiyin Marupakkam.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
27th February 2016, 06:19 PM
#1984
Senior Member
Veteran Hubber
மோகமுள்
இதற்கு முந்திய பதிவொன்றில், தி.ஜானகிராமனின் 'மோகமுள்' நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் பற்றிக்குறிப்பிட்டபோது, அதைப்பற்றிய குறிப்பொன்றை தனிப்பதிவாக இட்டால் என்ன என்று தோன்றியது. தி.ஜானகிராமனின் அவ்வளவு பெரிய நாவலைப்படித்து, அதன் உணர்வுகளை உள்வாங்கியவர்களுக்கு, படத்தைப் பாக்கும்போது ஏமாற்றம் தோன்றுமே தவிர, புதிதாக படத்தை மட்டும் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் படம் பிடித்துப்போகக்கூடும். நாவலில் சொல்லப்பட்டிருக்கும் பல உணர்ச்சிப் பூர்வமான இடங்களை காட்சியமைப்பில் கொண்டுவருவது என்பது சிரமமான காரியம் மட்டுமல்ல, பல சமயங்களில் இயலாத காரியமும் கூட. அதெப்படி மனதில் நினைப்பதையெல்லாம் காட்சியில் கொண்டுவர முடியும்?.
அதுவும் 686 பக்கங்களைக்கொண்ட ஒரு நாவலை வெறும் இரண்டரை மணி நேரத் திரைப்படமாக்குவது என்பது பகீரதப்பிரயத்தனம். அதனாலேயே பல விஷயங்களை அவசரப்பட்டு முடிக்க வேண்டிய நிலையும், இன்னும் சிலவற்றை தொங்கலில் விடவேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை வருடக்கணக்கில் அல்லது குறைந்தபட்சம் மாதக்கணக்கில் இழுக்கக்கூடிய தொலைக்காட்சித்தொடராக எடுக்கப்பட்டிருந்தால் சற்று முழுமையாக சொல்லப்பட்டிருக்க முடியுமோ என்னவோ. ஆனால் இவற்றையும் மீறி படத்தை ரசிக்க முடிகிறதென்றால், அதில் ஒட்டியிருக்கும் யதார்த்தம் எனும் மிகைப்படுத்தப்படாத நிலை, செயற்கைத்தனமில்லாத காட்சியமைப்புக்கள்.
இவ்வளவு பெரிய கதையை படமாக சுருக்க வேண்டியிருந்ததாலோ என்னவோ கதாபாத்திரங்களும், நிகழ்வுகளும் துண்டு துண்டாக நின்றன. யமுனாவைப்பார்க்க வரன்கள் வருகிறார்கள், போகிறார்கள்.. ஆனால் அவளுக்கு மட்டும் திருமணம் ஆகவேயில்லை. அதற்கான காரணங்கள் அழுத்தமாகச் சொல்லப்படவில்லை படத்தில். இறுதியில் தஞ்சாவூரில் இருந்து ஒரு மைனர் வருகிறார், திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்க்கை நடத்துகிறேன் என்று. பாபுவின் மனம் யமுனாவினால் ஈர்க்கப்படுவது தெரிகிறது.
படத்தின் முக்கிய பாத்திரமாக வரும் பாபுவின் கேரக்டரில் சற்று குழப்பம் அதிகம். அதைப்புரிந்துகொள்கிற நேரத்திலேயே ஒருபகுதி போய்விடுகிறது. கிழவரைத் திருமணம் செய்துகொண்டு எந்த சுகமும் காணாத தங்கம்மாவின் வலைவீச்சில் விழுந்து பலியாகிவிடும் பாபு, பின்னர் அவளுக்கு அட்வைஸ் பண்ணுவது பாபு கேரக்டரை கீழே சரித்து விடுகிறது. அத்தகைய நிகழ்வு நேராமல் சுதாரித்து கழன்றுகொண்டு, பின் அட்வைஸ் செய்தானென்றால் இன்னும் அந்த கேரக்டர் எடுபட்டிருக்கும். பாவம் இயக்குனர் என்ன செய்வார். கிடைத்த நேரத்துக்குள் எல்லாவற்றையும் சொல்லி முடிக்க வேண்டும்.
பாபு கேரக்டரில் நடித்திருப்பவர், இன்று சின்னத்திரை அபிஷேக். அப்போது சின்னப்பையன்.
கதையில் ரொம்ப சிலாகித்துச்சொல்லப்படுகிற நண்பன் ராஜம் கேரக்டர் ரொம்ப சின்னதாகக் குறைக்கப்பட்டுள்ளது. தங்கம்மாவின் சாவு சட்டென்று ஒரு வசனத்தில் சொல்லி முடிக்கப்படுகிறது. அவளுக்காக பாபு ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்துவதாகக்கூடக் காண்பிக்கப்படவில்லை. தங்கம்மா அலங்கார பூஷிதையாக அலங்கரித்துக் கொண்டு வந்து நிற்க, கிழட்டுக்கணவன் உறக்கத்தில் ஆழ்ந்துவிடும் காட்சியிலெல்லாம் நம் மனது ரொம்பவே வலிக்கிறது. இன்னொருபக்கம் யமுனாவுக்கு முப்பத்து நாலு வயது வரை திருமணம் ஆகாத நிலை
இவற்றைப்பார்க்கும்போது மேட்டுக்குடிகளில் ரொம்பவே கொடுமைகள் நடந்திருப்பது தெரிகிறது.
அதனால் கதையில் அழுத்தமாகச்சொல்லப்பட்டிருக்கும் பாபுவின் தந்தை வைத்தி ரோல் எல்லாம், போகிறபோக்கில் வந்து போகிறது. ஆனால் பாபுவின் சங்கீதகுருவான ரெங்கண்ணா, கதாநாயகியான யமுனா மற்றும் அவள் அம்மா என்ற நான்கு கேரக்டர்கள் மட்டும் சற்று விலாவரியாக சொல்லப்படுகிறது, இடையில் வந்து மாண்டுபோகும் தங்கம்மாவை தவிர்த்து விட்டுப்பார்த்தால். தங்கம்மாவின் மரணத்தைப்பார்த்தபின், அவள் பாபுவை தன் ஆசைக்குப்ப்லி கொண்டது தவறு என்று தோன்றாது. மாறாக ஒரு அனுதாபமும் அக்கால சம்பிரதாயங்களின் மீது எரிச்சலும் ஏற்படும்.
படத்துக்கு செலவு என்றால், நடித்தவர்களுக்கு சம்பளமும், பிலிம்ரோல் வாங்கிய காசும் மட்டும்தான் ஆகியிருக்குமோ என்று சொல்லுமளவுக்கு, அப்படியே கேமரா கும்பகோணத்து தெருக்களில் புரண்டு எழுகிறது. அந்த அளவுக்கு யதார்த்தம், இயற்கைத்தன்மை எல்லாம் கொடிகட்டிப்பறக்கிறது. ஸ்டுடியோ செட் என்பதெல்லாம் எப்படியிருக்கும் என்று கேட்டிருக்கிறார்கள் படத்தில். கும்பகோணம் வீடுகள் கோயில்கள், குளங்கள் என்று எல்லாம் அப்படியே கண்முன்னே.
படத்தை பெரும்பங்கு ஆக்கிரமித்துக்கொண்டு, ஒரு பெரிய இசை சாம்ராஜ்யமே நடத்தியிருப்பவர் 'இசைஞானி' இளைய்ராஜா. நம் உயிரோடு ஒன்றிப்போகும் இசை. அவருக்கு பக்க பலமாக நின்றிருப்பவர்கள் ஜேசுதாஸ், எஸ்.ஜானகி மற்றும் அருண்மொழி. கலக்கியெடுத்து விட்டார்கள் என்ற கடின வார்த்தைப் பிரயோகத்தை விட, மனதை மென்மையாக வருடி, மயக்கியிருக்கிறார்கள் என்பது பொருத்தமாக இருக்கும்.
அன்றைய நாட்களில் பிராமணப்பெண்களுக்கு திருமணம் நடப்பது என்பதை ஒரு எவரெஸ்ட்டில் ஏறுவது போன்ற கடினமாக்கிக் காட்டியிருப்பது ஏன்?. கடைசியில் கூட யமுனா, திருமணம் செய்துகொள்ளாமல்தான் பாபுவிடம் தன்னை இழக்கிறாள். அவனுள்ளிருக்கும் இசைக்கு உயிர்ப்பூட்டுவதற்காம். புரியவில்லை என்பதைவிட ஒப்பவில்லை என்பது கொஞ்சம் அதிகம் பொருந்தும். அதுமட்டுமல்ல, பாபுவிடம் தன்னை இழந்ததுமே, உடனே தம்பூராவை அவன் கையில் கொடுத்து இசைக்கச்சொல்கிறாள். படம் வெளிவந்த நேரத்தில் இது எப்படி ஆட்சேபிக்கப்படாமல் போனது?. இசையென்பது சுத்தமானது அல்லவோ?. அதை இசைப்பவர்களும் சுத்தமாக இருக்க வேண்டாமோ?.
படத்தை இயக்கியிருப்பவர் ஞான ராஜசேகரன். ரொம்பவே கவனமாக கத்திமேல் நடப்பதுபோல கதையைக் கையாண்டிருக்கிறார். கையாண்ட விதத்தில் வெற்றியடைந்து விட்டார் என்றே சொல்ல வேண்டும். நேர்த்தியான இயக்கம்.
'மோகமுள்' படத்தைப் பார்க்க விரும்புபவர்கள், தி.ஜானகிராமன் எழுதிய நாவலைப்படிக்கும் முன் பார்த்து விடுங்கள். நிச்சயம் புதிய அனுபவமாக இருக்கும்.
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
27th February 2016, 06:45 PM
#1985
Junior Member
Diamond Hubber
கதையோடு இணைந்த, ஹாஸ்யத்தை மையப்படுத்திய தாலாட்டுப்பாடல் என்று தமிழ்சினிமாவில் தேடினால்அப்படிப்பட்ட
பாடல்களை தேடுவது சற்று சிரமமாகத்தானிருக்கிறது.
பெரும்பாலும் மகிழ்ச்சியாகவோ சோகத்தை கலந்தோதான் தாலாட்டுப்பாடல்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
ஹாஸ்யம் கலந்த தாலாட்டுப்பாடல் என்றதும் இந்த பாடலை தவிர வேறேதுவும் நினைவுக்கு வருவதில்லை.
இரண்டு நாட்களுக்கு முன்பு டி.வி.யில் பார்த்த பாதிப்பால் இந்தப்பாடலை ஆய்வு செய்து எழுதலாம் என்றும் முடிவு செய்து மேற்கண்ட பாராவை எழுதி முடித்தபின் பாடல்வரிகளுக்காக, நெட்டில் தேடியபோது...
ஏற்கெனவே ஏராளமான பேர் இதை அனுபவித்து எழுதியதைப் பார்த்தபின் மேற்கண்ட பாராவோடு நிறுத்திவிட்டேன்.நமது வாசு சார்,சின்னக்கண்ணன்,கார்த்திக்அவர்களும் எழுதியுள்ளதைப் படித்து ரசித்தேன்.மீள்பதிவுகளாக இருந்தாலும் மறுபடியும் ரசிக்க...
வாசு சாரின் பார்வையில்:
கடன்காரன் வந்தால் நடுங்காத நெஞ்சம்
அடங்காத பிள்ளை அழுதாலே அஞ்சும்'
முடிந்ததும் முழங்கைகளை மடக்கி, இரு உள்ளங்கைகளையும் ஒன்றின் மேல் ஒன்று வைத்தாற்போன்று தலைக்கு பின் பக்கம் கோர்த்து, இடுப்பை ஒடித்தபடி தலையை வெட்டி, வெட்டி நடந்து வரும் அந்த 7 ஸ்டெப்ஸ்.
அது என்ன ஒயிலா
அது என்ன அழகா
அது என்ன அற்புதமா
அது என்ன நளினமா
அது என்ன வெறுப்பா
அது என்ன துன்பமா
அது என்ன ஸ்டைலா
அது என்ன நடையா
முடிந்தால் சொல்லுங்கள்.
சின்னக்கண்ணன் அவர்களின் எழுத்துகளில்:
கலாட்டா கல்யாணத்தில் ந.தி வெகு இளமையாய் இயல்பான நகைச்சுவை பாடிலேங்க்வேஜ் ரொமான்ஸ் எனப் பின்னியிருப்பார்..அதுவும் அப்பப்பா நான் அப்பனல்லடா விற்கு முகபாவங்கள்,
கார்த்திக் சாரின் பாணியில்:
பணக்காரன் வீட்டு பச்சைக்குழந்தையை கடத்தியாச்சு. ஆனால் அதை வைத்துக்கொண்டு எப்படி சமாளிப்பது?. அதுவும் இரண்டு ஆண்களால்?. படாத பாடு படுகிறார்கள் இருவரும். அந்த குழந்தையை சமாதானப்படுத்தும் சாக்கில் தங்கள் அவஸ்தையை சொல்லத்தான் இந்தப்பாட்டு. பாட்டு கதாநாயகனுக்கு மட்டும்தான். இந்த பாடல் முழுக்க கொஞ்சம் கூட சிரிக்காமல் முகத்தை சீரியசாக வைத்துக் கொள்வதுதான் நடிகர்திலகத்தின் அசாதாரண திறமை. உடன் இருக்கும் நாகேஷ் கூட இதில் சறுக்கி விடுவார்.
பாடகர் திலகத்தின் குரலில்...
லு...லு..லு...ஆரி ஆரி ஆரி ஆரிரரோ
அப்பப்பா நான் அப்பனல்லடா
தப்பப்பா நான் தாயுமல்லடா
எங்கே எவனோ பெத்த பிள்ளையோ
இங்கே வந்த தத்துப் பிள்ளையோ
ஆரிராரோ ஆரி ராரி ராரோ
கல்யாணம் இன்னும் ஆகாத வேளை
கைமீது பிள்ளை தீராத தொல்லை
தாலாட்ட சொன்னால் பாட்டொன்று சொல்வேன்
பாலூட்ட சொன்னால் நான் எங்கு போவேன்
அப்பப்பா நான் அப்பனல்லடா
தப்பப்பா நான் தாயுமல்லடா
எங்கே எவனோ பெத்த பிள்ளையோ
இங்கே வந்த தத்துப் பிள்ளையோ
ஆரிராரோ ஆரி ராரி ராரோ
கணக்காக பிள்ளை பெறுகின்ற திட்டம்
உனக்காகத்தானோ ஏற்பட்ட சட்டம்
கடன்காரன் வந்தால் கலங்காத நெஞ்சும்
அடங்காத பிள்ளை அழுதாலே அஞ்சும்
அப்பப்பா நான் அப்பனல்லடா
தப்பப்பா நான் தாயுமல்லடா
எங்கே எவனோ பெத்த பிள்ளையோ
இங்கே வந்த தத்துப் பிள்ளையோ
ஆரிராரோ ஆரி ராரி ராரோ
திராவிட மன்மதன் மெலிந்து அழகோவியமாக திகழ்ந்த காலகட்டத்தில் வந்த படம்தான் இது. இப்பாடலில் ஜஸ்ட் ஒரு வெள்ளை பேன்ட், வெள்ளை அரைக்கை சட்டை, சுருள் சுருளான சொந்த தலைமுடியில் சிம்பிளாக ஆனால் வெகு அழகாக இருப்பார். கையில் கைக்குழந்தை.
***************************************
அவஸ்தையை காட்டும் முகபாவங்கள்,
முழங்கால்களை விரித்து இணைத்து என்றாடும் ஆட்டம்,
புல்லாங்குழல் வாசித்துக்கொண்டே ஆடும் போது போடும் ஸ்டெப்ஸ்,
நாகேஷை உதைத்துக்கொண்டே ஆடுவதும் அதே சமயம் முகபாவனைகளில் படும் அவஸ்தையை இயல்பாக வெளிப்படுத்துவது,
நாகேஷ் தூங்குவதைப் பார்த்து காட்டும் ரியாக்சன்,
என்று எல்லாமே
எல்லோருக்குமே பிடிக்குமே.
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
27th February 2016, 11:47 PM
#1986
Senior Member
Senior Hubber
வாவ்.. வாங்க சாரதா வாங்க.. அடியேனும் உங்கள் எழுத்துக்களின் பல தீவிர ரசிகர்களில் ஒரு தம்மாத்தூண்டு ரசிகன்.. இன்னும் இன்னும் எழுதுங்கள்..
செந்தில்வேல்,.. ம்ம் அப்பப்பா நான் அப்பனல்லடா.. மறக்க இயலாத பாடல்.. நினைவுட்டலுக்கு நன்றி..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th February 2016, 07:05 AM
#1987
Senior Member
Veteran Hubber
Bhakthi and fishing
From thigambara saamiyaar (1950)
kaakka veNdum kadavuLe........
Last edited by rajraj; 28th February 2016 at 08:20 AM.
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
28th February 2016, 08:49 AM
#1988
Junior Member
Veteran Hubber
From GG Island with Love!
Nostalgia on the Second to None GG!
அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் நெருங்கி வரும் நினைவு நாள் March 22 நினைவலைகள் !
Moon Raker Gemini Ganesan!
நிலவு....நிதர்சனமான வானவியல் அற்புதம்....சுதர்சனமான வாழ்வியல் தத்துவமும் கூட.....
பூமியின் துணைக்கோளாக பூமியிலிருந்து சூரியனின் ஒளியின் பிரதிபலிப்பைப் பெற்று ஒளிரும் நிலவால் காதல் நெஞ்சங்கள் குளிரும்!
நிலவு என்றதும் தமிழ் மக்களுக்கு நினைவு வருவது நமது பாட்டியம்மா நிலவு வட்டத்துக்குள் கால் நீட்டி அமர்ந்து வடை சுட்டுக்கொண்டு இருக்கிறார் என்பதே !
அதற்கப்புறம் நிலவொளியில் அந்தப் பாட்டியைக் காட்டி பால் சோறூட்டிய அம்மா......நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடி வா....பள்ளிப் பாடல்.......நிலவில் ஆர்ம்ஸ்ட்ராங் கால் பதித்த மனித குல சாதனை....நிலவைச் சுற்றி மினுமினுக்கும் விண் தாரகைகள்......இரவில் மொட்டை மாடியில் மல்லாந்து வானை நோக்கி டார்ச் அடித்து விண் மீன்களை எண்ணிய சுவாரஸ்யமான வெட்டி வேலைகள்......நிலவு கூட வளர்ந்து தேய்ந்து மீண்டும் வளர்ந்து.... வளர்பிறை, தேய்பிறை , மூன்றாம் பிறை..... பௌர்ணமி... அமாவாசை ஜாலங்கள்......
இதெல்லாம்
ஜெமினிகணேசன் என்னும்
காதல் மன்னர் திரைக்காதல் சிம்மாசனத்தைக் கைப்பற்றி காதல் சாம்ராஜ்யத்தை உருவாக்கி இந்த நொடிவரை எவராலும் நெருங்கமுடியாத காதல் சக்கரவர்த்தியாக அரியாசனம் அமரும் வரையே .....அப்புறம்.....நிலவு என்பது காதலர்களின் கைப்பந்தாக மாறிவிட்ட அதிசய நிகழ்வு....நிலவோடு நம்மால் பேச முடியும்....நமக்கான காதல் தூதுவராக நிலவை பயன்படுத்தலாம் காதல் தோல்வியை பகிர்ந்து கொள்ளலாம் என்பது போன்ற வாழ்வியல் கண்டுபிடிப்புக்கள் உயிரோட்டம் பெற்று
இன்று காதல் வாழ்வின் வழிகாட்டும் ஒளிவிளக்காக காதல் ஜோதி ஏற்றி வைத்த பெருமை ஜெமினியையே சாரும்!! நிலவையே அசத்தி தனது கைப்பிடிக்குள் கொண்டுவந்த
Moonraker ஜெமினியின் நெருங்கி வரும்
நினைவுநாள் நினைவலைகள் மன வலைக்குள்
ஆரம்பம்!
Part 1 : Missiamma....miss not kind of song and romance!
Moon as the Ambassador of Love Kingdom owned by the one and the only Emperor of Love Gemini Ganesan!
தானொரு பண்பான காதலன் என்பதை தன்னைப் பற்றி தவறாகவே எண்ணிக் கொண்டு வறுத்தெடுக்கும் மிஸ்ஸியம்மா சாவித்திரிக்கு புரிய வைக்க நிலவோடு ஒப்பந்தம் செய்து கொண்டு நிலவொளிக்குள் காதலியைக் கொண்டுவந்து கிறங்க வைக்கும் காதலின் மாமன்னர் ஜெமினி!
அவர் நிலவோடு பேசக்கூடியவர் என்பது தெரிய வந்ததும் பிரமித்துப் போன அசட்டு சாவித்திரி தனது மனப்பூட்டை திறக்கும் சாவியை காதல் மன்னரிடம் ஒப்படைத்து ஜெமினி தனது அசடு வழியும் முக எண்ணையில் காதல் திரியை பற்ற வைக்கும் ஜாலம் ஹாலிவுட் வரை தெரியாமல் போனது அவர்களுக்குத்தானே இழப்பு !!
வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையை ...பாடலும் பாடல் சூழலும் நிலவை காதல் தூதுவராக்கிட மையப்படுத்திய காட்சியமைப்பும்...காலத்தால் மறையாத காதலுணர்வுகளின் கண்ணியமான வெளிப்பாடுகளும்....Gemini The Greatest!
Last edited by sivajisenthil; 28th February 2016 at 09:06 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
28th February 2016, 10:01 AM
#1989
Junior Member
Veteran Hubber
Nostalgia on the Second to None GG!
அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் நெருங்கி வரும் நினைவு நாள் நினைவலைகள் !
Part 1/1.2
Addendum to Vaaraayo Vennilaave song : lyrics, color improvisation and karaoke!
colour tried version!But cue did not glue properly!!
A Karoake too!!
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
28th February 2016, 02:27 PM
#1990
Junior Member
Veteran Hubber
From GG Island with Love!
Nostalgia on the Second to None GG!
அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் நெருங்கி வரும் நினைவு நாள் நினைவலைகள் !
Part 1/1.3
Addendum to Missiammaa!
மிஸ்ஸியம்மா (1955) தமிழில் வெளிவந்த தலைசிறந்த என்றும் ரசித்து மகிழத் தக்க நகைச்சுவைத் திரைப்படங்களில் நம்பர் ஒன் காதலிக்க நேரமில்லை திரைக் காவியத்தை அடுத்து என்றும் இரண்டாமிடத்தில் வீற்றிருக்கிறது!
வண்ணக் கலவை இல்லையே என்ற காலம் தொழில்நுட்பம் சார்ந்த சிறு குறையைத்
தவிர்த்து நோக்கினால் ஸ்ரீதரின் வாழ்நாள் சாதனைத் திரைப்படமான இசையாலும் தொழில்நுட்பத்தாலும் பாடல்களாலும் நகைச்சுவைத் தெளிப்பினாலும்
நடிகர்களின் பங்கேற்பினாலும் முதலிடம் வகிக்கும் காதலிக்க நேரமில்லையை விட எந்த விதத்திலும் குறைவில்லாத இழுவையற்ற கச்சிதமான காட்சி
அமைப்புக்களால் விறுவிறுப்பாகச் செல்லும் மனமகிழ் காவியமே !
வேலைதேடி வந்த இடத்தில் வீடு கிடைக்க வேண்டிய சங்கடமான சூழலில் ஒரே வீட்டில் ஜெமினிசாவித்திரி தம்பதிகளாக தங்கவேண்டிய நிலையில் ஏற்படும் குழப்பங்களும் சாவித்திரியின் பிளாஷ் பேக் மர்மங்களை விடுவிக்க தங்கவேலுவின் சரவெடி காமெடிகளும் ரங்கராவ் தம்பதியினரின் ஆதுரமான அன்பும் இரண்டுங் கெட்டான் ஜமுனாவின் காதல் அம்புகளும் சாவித்திரியின் கடுப்பிலி ருந்து தப்பிக்க காதல் மன்னரின் பிராண்ட் உத்திகளும் நம்பியாரின்கோணங்கித்தனமும் சாரங்கபாணியின் டைமிங் பஞ்சுகளும் தெளிந்த நீரோடையான ராஜேசுவரராவின் இசையில் நீந்தும் செவிக்கினிய பாடல்களும் கண்ணுக்கும் மனதுக்கும் இதமான இனிமை ததும்பும் பாடல் காட்சியமைப்பும் ஜெமினியின் ஆளுமை மிக்க நடிப்பும் நிறைந்த அற்புதக் காவியம் !
பெண்களின் பாஷையில் வார்த்தைகளின் உள்ளர்த்தங்களே வேறுதான் என்பதைப் புரிந்து காதல் கனி கவரும் ஜெமினிக் கள்வர்!
முடியுமென்றால் படியாது படியுமென்றால் முடியாது வஞ்சியரின் வார்த்தையிலே அர்த்தமே வேறுதான் ...ஜெ(மினியி)ன் காதல்துறை வெற்றி ரகசியம் 1
Gemini Ganesan ILS (Indian Love Service)!
Last edited by sivajisenthil; 28th February 2016 at 02:31 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks