-
4th April 2016, 10:24 AM
#1
Senior Member
Senior Hubber
//இது நம்ம சின்னாவுக்கு. 'பாவ மன்னிப்பு' வழங்குக சின்னா.// ம்ஹூஹூம் மாட்டேன்..வாஸ்ஸூ
//ஆனாலும் சிக்காவுக்கான ஸ்பெஷல் படம்தான் சூப்பர்.
கண்ணன் மன நிலையை தங்கமே தங்கம்... ஆங். // காலங்கார்த்தாலே நற நற பண்ண வெச்சுட்டீங்களே..![Smile](images/smilies/icon_smile.gif)
நினைத்தால் போதும் பாடுவேன் பிடிக்கும்..ஆக்சுவலா கீதாஞ்சலியையும் ஷீலுவையும் நான் கன்ஃப்யூஸ் பண்ணிக்குவேன்..
கீதாஞ்சலியோட கீ பாட் ஒண்ணு இருக்கே
என்ன தான் ரகசியமோ இதயத்திலே
நினைத்தால் எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே..(சமயத்திலே கே ஆர் விவேற வந்து பாடறது கொஞ்ச்சூண்டு கடுப்பா இருக்கும்)
விழி பார்க்கச் சொன்னாலும் மனம் பேசச்சொல்லாது
மனம் பேசச் சொன்னாலும்
வாய் வார்த்தை வராது
அச்சம் பாதி ஆசை பாதி பெண்படும் பாடு
நினைத்தால்
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே
மலர்ப் பஞ்சணை மேலே உடல் பள்ளி கொள்ளாது - அது
பள்ளி கொண்டாலும் துயில் கொள்ள விடாது (அப்படியாம்மா)
ஒரு நேரம் கூட ஆசை நெஞ்சம் அமைதி கொள்ளாது
அமைதி கொள்ளாது நினைத்தால்
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே
பேரழகிருந்தென்ன ஓர் ரசிகன் இல்லாமல் - தேன்
நிறைந்திருந்தென்ன பொன் வண்டு வராமல்
என்ன பெண்மை என்ன மென்மை இன்பம் இல்லாமல்- நினைத்தால்
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே..
முதல் இரவு வந்ததும் இன்ப உறவு வந்ததும்
நீ அருகில் வந்ததும் நான் உருகி நின்றதும் - என்
கன்னத்தின் மேல் கோலம் போட்டுத்துடிக்க வைத்ததும்
துடிக்க வைத்ததும் - நினைத்தால்
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே
ம்ம் பெண்மையோட உணர்வுகளைச் சொல்லும் வரிகள் அதற்கு உயிர் கொடுத்த சுசீலாம்மாவின் குரல் போனஸாய் கீத்து (கேஆர்வி சொல் மாட்டேன்..ஏனோ
இந்தப் படத்தில் சோகையாய் இருப்பார்) (இரண்டாவது படம் தெரியும்..அதனாலென்ன கொஞ்சம் சாப்பிட்டிருக்கலாமில்லை
)
காலங்கார்த்தால வரிகளை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மாத்தினேன்...ம்ம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
4th April 2016 10:24 AM
# ADS
Circuit advertisement
Bookmarks