-
14th April 2016, 08:33 PM
#2321
Senior Member
Senior Hubber
வாங்க எஸ்வி சார்.. நினைக்கும் போதே தனக்குள் சிரிக்கும் மாது முன்பே ரேடியோவில் கேட்ட நினைவு.. ஆனால் உ.சு.வா எனத் தெரியாது..படமாக்கப்பட்டதா என்ன..
-
14th April 2016 08:33 PM
# ADS
Circuit advertisement
-
14th April 2016, 08:57 PM
#2322
Senior Member
Senior Hubber
நண்பர்கள் அனைவருக்கும் அவர் தம் குடும்பத்தினருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகள்..
-
14th April 2016, 10:25 PM
#2323
Junior Member
Veteran Hubber
தமிழ் புத்தாண்டு முத்திரை பதிக்கும் சித்திரை வெயிலுக்கான குளிர் வாழ்த்துக்கள் ...!
Bed of Roses and Path of thorns! Bouquet and Brickbat in GG starrers!
காதல் மன்னரின் படங்களின் மலர்மஞ்ச இன்பமும் முட்பாதை துன்பமும்!
Part 1 அவளுக்கென்று ஒரு மனம் !
மனித வாழ்வு சுழற்ச்சியில் மலர்ப் படுக்கை போன்ற இன்பமும் முள்பாதை போன்ற துன்பமும் மாறி மாறி அலைக்கழிப்பது இயல்பே!
மனித வாழ்வியலை உருவகப் படுத்தும் திரைப்படங்களிலும் சிலசமயம் கதைக் கருவுக்கேற்ற திரைக்கதை சீராக அமைந்து ஒரு மலர்படுக்கையில் நாம்புரள்வது போன்ற ரசனை இன்பத்தைத் தருவதும் வணிகரீதி கண்ணோட்டத்தில் பலசமயம் திரைக்கதை தடம் புரண்டு சீரற்ற வரிசையில் பயணிக்கும்போது
முள்பாதையாக மாறிக் குத்துவதும் காலம்காலமாக நாம் கண்ணுற்று அனுபவிப்பதே !
மலர்க்கொத்தாயினும் கல்லடியாயினும் காதல் மன்னர் பெரும்பாலும் தனது பங்கை சீராக அளித்து தனது பாத்திரப் படைப்பை மக்கள் ரசனைக்கேற்ப பதமாக மனதில் பதிப்பதில் வல்லவரே! பாலைவனத்தில் சோலைகளும்
(Oases) பயணப் பாதையில் பூங்காக்களும் (
Traffic Islands) கண்ணுக்கும் மனதிற்கும் இதமே!
தோல்வியடைந்த படங்களிலும் தனது பங்களிப்பை செவ்வனே நிறைவேற்றும் காதல் மன்னரின் படங்களின் மலர்மஞ்ச இன்பமும் முட்பாதை துன்பமும்!
இயக்குனர் செம்மல் ஸ்ரீதரின் கைவண்ணத்தில் உருவான அவளுக்கென்று ஒரு மனம் திரைப்படம் கல்யாண பரிசு அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆவலாக எதிர்பார்க்கப் பட்டு எதிர்பாராத விதமாக தோல்வியையே தழுவ நேர்ந்தது !
கல்யாணப் பரிசு திரைப்படத்தின் இளமை மந்திரத்தை ஸ்ரீதரால் மீண்டும் பிரயோகிக்க முடியவில்லை ...வயது ஏறுவது வெளிப்படையாகத் தெரியும்
ஜெமினி காஞ்சனா முத்துராமனுடன் பாலைவன சோலையாக பயணப் பாதைபூங்காவாக மச்ச கன்னி பாரதி.......ரோஜா மலர்ப்படுக்கை சுகமாக
மனதை வருடும் மெல்லிசை மன்னரின் சுகந்தமான இசையமைப்பில் காதுகளில் தேன் பாய்ந்த இனிமையான பாடல்கள் ...ஜெமினியின் இதமான
சீரான மனதை ஈர்க்கும் மிகையற்ற மிருதுவான நடிப்பின் வெளிப்பாடுகள் ....இருந்தும்.....தோல்வியே!
ரோஜா மலர் படுக்கையில் தேனை அள்ளிப் பருகும் வண்டாக நாம் !
1.இப்படத்தின் மூலம் நமக்கு ஒரு சாகாவரம் பெற்ற காதல் மனதின் உருவகப் பாடல் 'உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' கிடைத்தது!
அந்தக் கால கட்டத்தில் எனக்குத் தெரிந்து தினமும் இந்தப் பாடல் அளவு வேறு எந்தப் பாடலும் நேயர்களால் வானொலியில் விரும்பிக் கேட்கப்படவில்லை! சாதனைப் பாடல் !
ஸ்ரீதருக்கும் மெல்லிசை மன்னருக்கும் பாடலை உயிர்பித்த ஜெமினி பாரதி இணைவிற்கும் நன்றிகள்!!
2. காதல் மன்னர் என்னை அடிமையாக்கிய மிகச் சிறந்த பாடல் காட்சியமைப்பில் எஸ்பி பாலசுப்ரமணித்தின் ஜெமினிக் குழைவிலான இப் பாடலுக்கு என்றும் என் மனதில் தனியிடமே!
Enjoy the english translation of the lyrics as subtitles!!
பயணப் பாதை கரடுமுரடான முள் படுகையானதால் நொந்துநூலான நாம்!
1. திரைக்கதைத் தடுமாற்றத்தில் நம்மைக் கடித்துக் குதறிய கற்பனைப் பஞ்சமான பாடல் காட்சி!
Last edited by sivajisenthil; 14th April 2016 at 10:32 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
14th April 2016, 10:45 PM
#2324
Junior Member
Veteran Hubber
The Traffic Islands Mirages and Speed Breakers in GG Starrers!
Part 1 அவளுக்கென்று ஒரு மனம் !
நெரிசல் நிறைந்த போக்குவரத்தில் வேகத்தடைகளும் கானல்நீர் தோற்றங்களும் பாதையோர பசுமைப் பூங்காக்களும் சகஜமே !
பசுமைப் பூங்கா
பாலைச் சோலை
வேகத்தடை/கானல்நீர் தோற்றம் !
Last edited by sivajisenthil; 15th April 2016 at 06:16 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
15th April 2016, 04:47 AM
#2325
Senior Member
Diamond Hubber
அருமை சி.செ.ஜி..
அவளுக்கென்று ஒரு மனம் ( அது ஒரு மனமா அல்லது ஓர் மனமா என்று பெரிய குழப்ப கிச்சடி நடந்ததும் உண்டு )... நல்லா ஓடியிருக்க வேண்டிய படம். அதன் ஹிந்தி பதிப்பும் (துனியா க்யா ஜானே ) இதன் வழியே நடந்து விட்டது. காவியத் தலைவனாக நடித்தவர் இப்படி மழையில் குதிக்கலாமா என்று கேட்டவர்களுக்கு அதுதான் வெர்சடைல் ஆக்டிங்... அப்பராக நடித்த நடிகர் திலகம் அடுத்த படங்களில் ஜிலுஜிலு டான்ஸ் ஆடிக் காட்டவில்லையா என்று சொல்லி வாயடைத்தார்கள். படம் மறந்து போனாலும் பாடல்கள் இன்னும் ரீங்காரமிட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
உங்க லிஸ்ட் போக இன்னும் காஞ்சனா பூஜை செய்யும் "மனமெல்லாம் உன் கோவில்" மற்றும் கடைசியில் பாரதி சிறைக்குச் செல்லும்போது ஒலிக்கும் "ஒளி வழங்கி மறைகின்ற கற்பூரம்" பாடல்கள் அதிகம் ஒலித்ததில்லை..
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
15th April 2016, 05:28 AM
#2326
Junior Member
Platinum Hubber
சின்ன கண்ணன் சார்
உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காக பதிவு செய்ய பட்ட சுசீலாவின் பாடல் படத்தில் இடம் பெறவில்லை .நினைத்ததை முடிப்பவன் படத்திற்காக பதிவு செய்யப்பட்ட சுசீலாவின் பாடல் ஒன்று படத்தில் இடம் பெறவில்லை .
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th April 2016, 07:48 AM
#2327
Senior Member
Diamond Hubber
Originally Posted by
esvee
சின்ன கண்ணன் சார்
உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காக பதிவு செய்ய பட்ட சுசீலாவின் பாடல் படத்தில் இடம் பெறவில்லை .நினைத்ததை முடிப்பவன் படத்திற்காக பதிவு செய்யப்பட்ட சுசீலாவின் பாடல் ஒன்று படத்தில் இடம் பெறவில்லை .
நீ தொட்டுப் பேசினால் தங்கமாகுவேன் பாட்டு படத்தில் லேது..
சிக்கா... சுசீலா பாடி படத்தில் இடம் பெறாத பாடல் லிஸ்ட் போடுவோமா ? ம்ம்.. சில பாடல்கள் பின்னர் நீக்கப்பட்டும் இருக்கலாம்.
1. நினைக்கும்போது - உலகம் சுற்றும் வாலிபன்
2. நீ தொட்டு பேசினால் - நினைத்ததை முடிப்பவன்
3. மன்னன் ஒருவன் மஞ்சத்தில் - கலாட்டா கல்யாணம்
4. நீராடும் கண்கள் இங்கே - வெண்ணிற ஆடை.
5. மஹாராஜன் உலகை ஆளலாம் - கர்ணன் ( டி.எம்.எஸ்)
6. கண்ணழகின் சன்னதியில் - நானும் ஒரு பெண்
7. தென்றல் வரும் சேதி வரும் - பாலும் பழமும்
8. மேகம் வந்தது மின்னல் வந்தது - கவிதா
9. அத்தான் நிறம் சிவப்பு - நிறைகுடம்
10.கண்களினால் காண்பதெல்லாம் - நாடோடி (டி.எம்.எஸ் )
11. கொடுக்க கொடுக்க இன்பம் - நான் ஆணையிட்டால் ( எம்.எஸ்.வி)
தொடருங்க...
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
15th April 2016, 07:50 AM
#2328
Senior Member
Diamond Hubber
ராகவ் ஜி...
நெஞ்சிருக்கும் வரை படம் அந்தக் காலத்தில் நான் பார்த்ததில்லை. ஆனால் வானொலியில் "எங்கே நீயோ நானும் அங்கே" பாடல் இரு வெர்ஷன்கள் ( ஒன்று நார்மல் மற்றது சோகம் ) கேட்டிருக்கிறேன். அனேகமாக நார்மல் பாட்டுதான் கேட்பேன். ஆனால் பிற்காலத்தில் படம் பார்த்தபோது சோகப்பாட்டு மட்டும்தான் இருந்தது. இப்போதும் நெட்டிலும் எங்கேயும் அந்த நார்மல் வெர்ஷன் வீடியோ இல்லை. ( ஆடியோ கிடைக்குது )
அது படத்தில் இருந்துச்சா இல்லையா ?
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th April 2016, 10:40 AM
#2329
Senior Member
Senior Hubber
ஹாய் ஹாப்பி ராம நவமி டு ஆல்
மதுண்ணா.. பி சுசீலா படத்தில் வராத பாடல்களுக்கு தாங்க்ஸ்..
இந்த பாடினார் கவிஞர் பாடினார் எனக்கு ரொம்ப பிடிக்கும்..
அதே போல ஊ.வ உ லைஉம் ஒரு பாட் உண்டே மறந்து போச்..
புத்தம் புது காலையும் படத்தில் கட் பண்ணியிருந்தார்கள்..வெகு நாட்கள் கழித்து வெகு வருடங்கள் கழித்து போன வருடமோ முந்தின வருடமோ வீடியோ யூட்யூபில் பார்த்தேன்.. நல்லவேளை கட் பண்ணினார்கள் என நினைத்துக் கொண்டேன்..
ஈவன் பொதிகை மலை உச்சியிலே யில் ஒரு பாரா கட் பண்ணியிருப்பார்கள்..ஆனால் அது சென்சார்க்காக..
நானும் நெஞ்சிருக்கும் வரை அந்தக்காலத்தில் பார்த்ததோடு சரி..மேக்கப் இல்லாமல் ந.தி பார்க்கலாம்..கே.ஆர்.வி..ம்ஹுஹூம்..
ராமன் பாட்டென்று லிஸ்ட் போட்டால்
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
ராமன் எத்தனை ராமனடி
ஜகம்புகழும் புண்ணிய கதை ராமனின் கதையே
வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ (மிஸஸ் ராமன்)
சீதை அங்கு நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே..
பழகிய ராமன் வரவை எண்ணி பார்வையில் அவள் பூத்திருந்தாள்..ஸாரி டைப்போ பாதையில் அவள் காத்திருந்தாள்
ராமனுக்கு மன்னன் முடி தரித்தானே..
ராமா ராமாஸ்ரீராமா
ராமன் கதை கேளுங்கள்
சீதா ராம சரிதம்..(ஜெகம்புகழும் ரீமேக்..ஒட்டலை)
தேவர்கள் சிந்திக்க நாவெல்லாம் தித்திக்க சீதா ராமர் கதை இது ( இது ஓ.கே.. காரணம் டயானா மரியம் குரியன்!)
இன்னும் நிறைய ராம் இருக்கோன்னோ..எனக்கு நினைவுக்கு வரலை...
-
15th April 2016, 10:43 AM
#2330
Senior Member
Senior Hubber
ராகவ் ஜி.. வியட் நாம் வீடுக்கான உங்கள் கருத்து தான் அடியேனோடதும்.. தாங்க்ஸ்ங்க்ணா..
Bookmarks