-
15th May 2016, 10:02 AM
#101
Junior Member
Platinum Hubber
Parakkum Paavai - 1966
Star cast: M.G. Ramachandran, B. Saroja Devi, Kanchana, Rajasulochana, M.N. Nambiar, R.S. Manohar, S.A. Asokan, K.A. Thangavelu, J.P. Chandra Babu, C.R. Manorama
Parakkum Paavai was a film set against the backdrop of a circus and was inspired by many Hollywood films like It Happened One Night and Roman Holiday . After the Gemini Studios–S. S. Vasan box-office bonanza Chandralekha (1948), this Tamil film was among the earliest to incorporate circus scenes, especially the flying trapeze sequences.
The film is about Jeeva (MGR), the son of a businessman. He is cheated by another businessman (Chittoor V. Nagaiah), who on his deathbed asks Jeeva to take care of his daughter Kala (Saroja Devi), the heiress to his wealth. Kala’s elder sister (Rajasulochana) leaves home and joins a circus, where she meets with an accident. Her husband (Manohar), after her money, tries to trap Kala too.
Kala leaves home and joins the same circus. Jeeva follows her and joins the circus as a flying trapeze artiste. The family nurse (Kanchana) is in love with Jeeva, but he does not reciprocate and she becomes inimical towards him.
A masked man tries to kill Kala at night, but Jeeva saves her. Finally, the masked man turns out to be a killer hired by the nurse.
Parakkum Paavai has melodious songs composed by M. S. Viswanathan, which include ‘Kalyana naal paarka sollalama’ (T. M. Soundararajan and P. Susheela), ‘Mutthamo mogamo’ (T. M. Soundararajan and L. R. Eswari), ‘Sugam ethiley’ (K. J. Yesudas, T. M. Soundrarajan and L. R. Eswari). Lyrics were by Kavignar Kannadasan.
Despite the high-profile cast and ran for 80 days.
Remembered for : The spectacular circus sequences, especially the flying trapeze scenes, and pleasing music. Also remembered for Chandra Babu’s performance as the circus clown, with Manorama as his love interest, and Thangavelu as the circus manager.
randor guy
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
15th May 2016 10:02 AM
# ADS
Circuit advertisement
-
15th May 2016, 10:22 AM
#102
Junior Member
Platinum Hubber
7 வது முறையாக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நிறுவிய இயக்கம் அதிமுக ஆட்சியில் அமரும் என்ற நம்பிக்கை இருக்கிறது .மக்கள் செல்வாக்கும் , புரட்சித்தலைவரின் பெயரும் , அவருடைய இரட்டை இலை சின்னமும் , 10 ஆண்டுகள் மேல் தொடர்ந்து ஆட்சியில் அமர்ந்து செய்த சாதனைகள் மூலம் கிடைக்கபெற்ற புகழும் ஒரு முக்கிய காரணம் என்பது உண்மை .
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
15th May 2016, 11:03 AM
#103
Junior Member
Diamond Hubber
தற்பொழுது
ஜெயா மூவி தொலைக்காட்சியில்
மக்கள் திலகத்தின்
புதிய பூமி
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
15th May 2016, 12:16 PM
#104
Junior Member
Platinum Hubber
COMMENTS PORTION FROM MGR 100- THE HINDU
இவ்வுலகில் "மக்களால் நான் ! மக்களுக்காவே நான் !" - என்று சொல்லத் தகுதி உடையவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மட்டுமே !
புரட்சி நடிகர் அன்று பேசிய வசனங்கள் இப்போதுள்ள சூழலிலும் பொருந்துவது அவை எல்லாமே உண்மை என்பதால் மட்டுமே ! அவர் எப்போதுமே தன் கதா பத்திரத்தை வாழ்கையில் இருந்தே வடித்தார் , வசனங்களை எளியவருக்கென்றே படித்தார் , படங்களை எளியவரை உயர்த்தும் வகையில் மட்டுமே படைத்தார் இப்படியான கதைகளில் மட்டுமே நடித்தார் ஊருக்கு உழைத்து உதவிய உத்தமர் M G R .
உலகத்தில் சிறந்த தலைவர் Dr.M G R
படகோட்டி பட வசனமும் , திரு தமிழ்வாணனின் கணிப்பும் சொல்வது ஒன்றுதான் ! மக்களுக்காகவே தலைவன் ! உண்மையாய் இதை உணர்ந்து வாழ்ந்தவர் மக்கள் திலகம் . இன்னும் நூறு ஆண்டுகளுக்கு பின்னும் அவரின் புகழ் மாறாது ,குறையாது நீடித்து வாழும் ! வாழ்க MGR
உண்மையான மக்கள் தலைவர் எங்கள் புரட்சி தலைவர் ..... அன்னார் வாழ்ந்த காலத்திலேயே நானும் வாழ்ந்து கொண்டிருப்பதை எண்ணி எண்ணி பூரிப்படைகிறேன் ....
அருமையான மனிதர்....அன்புள்ளம் மிக்க தலைவர் ....யாராலும் அவர் போல வாழ முடியாது....
மிக சிறந்த மாமனிதர் , இவரை பழி வாங்கியது தி மு க செய்த மாபெரும் தவறு.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
15th May 2016, 12:23 PM
#105
Junior Member
Platinum Hubber
வாத்தியார் மாணாக்கர்களுக்கு போதிப்பது போல அவருடைய திரைப்படங்களிலும்.பாடல்களிலும் மக்கள் நல்வழி நடப்பதற்கான போதனைகள் இடம் பெற்றிருக்கும் நான் ஏன் பிறந்தேன் என்று ஒரு பாடலில் சிலர் கூட்டாக அமர்ந்து மது அருந்திக்கொண்டிருப்பர் அதை பார்த்த அவர் ஏம்பா இப்படி நாளெல்லாம் குடிச்சு நேரத்த வீணாக்குறீங்களே அந்த நேரத்துக்கு இந்த நாட்டிற்கு ஏதாவது செய்யலாமே என்று கேட்பார் அதற்கு அவர்கள் நாடாம்ல நாடு அது எங்களுக்கு என்ன செய்தது என்பார்கள் அதற்கு வாத்தியார் நாடென்ன செய்தது நமக்கு என்று கேள்விகள் கேட்பது எதற்கு நீ என்ன செய்தாய் அதற்கு என்று நினைத்தால் நன்மை உனக்கு என்பார் அதே பாடலில் பத்து திங்கள் சுமந்தாளே அவள் பெருமை பட வேண்டும் உனை பெற்றதினால் அவள் மற்றவராளே போற்றப்படவேண்டும் கற்றவர் சபையில் உனக்காக தனி இடமும் தரவேண்டும் என்று தாயையும் கல்வியையும் உயர்த்தி போதித்திருப்பார் இந்த பாடலை பார்த்தால் நம் கண்களில் நீர் தானாகவே வரும் அதுதான் வாத்தியார்
உலகம் உள்ளளவும் வாத்தியார் புகழ் நிலைத்து நிற்கும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
15th May 2016, 12:29 PM
#106
Junior Member
Platinum Hubber
மக்கள் தலைவர்களின் குணமே எதனையும் இயல்பாக அணுகுவது. கமராசாரிடம் ஒருமுறை அவரது ஆதரவாளர்கள் இப்படி குறைபட்டுக் கொண்டார்கள். "... தலைவரே உங்களை எதிர்கட்சியினர் படிக்காதவர் என்று ஏளனமாக சொல்கிறார்கள் " என்று. அதற்கு பெருந்தலைவர் இவ்வாறு பதிலளித்தார். ".... அது உண்மைதானே! நான் படிக்கவில்லை, அதனால் அவர்கள் படிக்காதவர் என்கிறார்கள்" அதனால் என்ன? என்று சாதாரணமான பதில் அளித்தார். எம்ஜியாரும் " நான் பொருளாதார நிபுணன் அல்ல. பொருளாதார விசயங்களை எனது ஆலோசகர்களிடமிருந்து அறிந்து கொள்கிறேன்" என்று இயல்பாக சொல்லியிருகிறார். அதனால் தான், அவர்கள் மறைந்து மறையாத தலைவர்களாக மக்களின் மனதில் நிலைத்து நிற்கிறார்கள்.
என்றும் மக்கள் மனதில் இருப்பவர் இந்த உலகம் உள்ளவரை
அதைக் கேட்டு எம்.ஜி.ஆர். கோபமோ, வருத்தமோ அடையவில்லை. நிதானமாகச் சொன்னார்… ‘‘திமுக தலைவர் கூறுவது உண்மைதான். நான் பெரிய படிப்பு படித்தவன் அல்ல. பொருளாதாரம் பற்றி எனக்கு சொல்ல, அதுபற்றி நன்கு அறிந்த உயர் அதிகாரிகள் இருக்கிறார்கள். ஆனால், பல முதல் அமைச்சர்களுக்குத் தெரியாத விஷயம் எனக்குத் தெரியும். பசி என்றால் என்னவென்று எனக்குத் தெரியும். அந்தக் கஷ்டம் புரியும். மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய முதல் அமைச்சருக்கு இது தெரிந்தால் போதும்.’’ -- அற்புதமான கருத்து - mgr அவர்களை உங்கள் தொடரை படிக்க அவர் மீதான மதிப்பு கூடிக்கொண்டே போகிறது.
" பல முதல் அமைச்சர்களுக்குத் தெரியாத விஷயம் எனக்குத் தெரியும். பசி என்றால் என்னவென்று எனக்குத் தெரியும். அந்தக் கஷ்டம் புரியும். மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய முதல் அமைச்சருக்கு இது தெரிந்தால் போதும்.’’ ஆஹா என்ன ஒரு வார்த்தை..... என்றென்றும் வாழ்க மக்கள் திலகத்தின் புகழ்....
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
15th May 2016, 12:35 PM
#107
Junior Member
Platinum Hubber
எம்ஜியார் சுடப்பட்டு பின்னர் தெய்வாதீனமாக உயிர் பிழைத்து வந்தபோதும், அவர் எம்.ஆர். ராதாவைபற்றி தவறாக சொல்லவில்லை. தாம் சுடப்பட்ட நிலையிலும் கூட, "என்னன்னே இப்படி செய்திட்டீங்க?" அன்று கேட்டதாகவும் - ராதா அண்ணன் எப்படி இருக்கிறார்? என்று விசாரித்ததாகவும் செய்தி உண்டு. ஒரு மனிதன் எப்படிப்பட்ட வாழ்வு வாழவேண்டும் என்பதை அனைத்து மதங்களும், அனைத்து இலக்கியங்களும் வரையறுக்கின்றன. அப்படிப்பட்ட வாழ்வு வாழ்ந்த பலரில் எம்ஜியாரும் ஒருவர் என்பது நிஜம்.
"ஒரு தாய் மக்கள் நாம் என்போம் ! ஒன்றே எங்கள் குலமென்போம் ! தலைவன் ஒருவன் தானென்போம் ! சமரசம் எங்கள் வாழ்வென்போம் !" - ஆனந்த ஜோதி படத்தில் பள்ளி மாணவர்களோடு சேர்ந்து பாடி நடித்த எம்.ஜி.ஆர், அனைவரோடும் நல்ல எண்ணத்தோடு தான் பழகினார் ! அரசியல் எனும் சூதாட்டம், நண்பர்களையும் எதிரியாக மாற்றி விடும் என்பதற்கு எடுத்துக்காட்டு தான், எம்.ஆர். ராதா அவர்களின் செயல் ! தி,மு.க - வின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த எம்.ஜி.ஆருக்கு எதிராகவே, தி.மு.க - வினர் எப்படியெல்லாம் கீழ்த்தரமாக நடந்து கொண்டார்கள் என்பது ஊர் அறிந்த ஒன்றுதான் ! என்ன செய்ய ? அரசியல் மானிடரை நல்லவராக வாழ விடாது ! அதனால் தான், இந்தியாவின் விடுதலைக்கு பின், மகாத்மா காந்தி அரசியலை விட்டு விலகி ஆசிரம வாழ்க்கை மேற்கொண்டார் !
இன்றளவும் உலக திரை வரலாற்றில் இந்த குறிப்பிட்ட பாடலை
" தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் - கூட
இருந்தே குழி பறித்தாலும் கொடுத்தது காத்து நிற்கும் " பாடிட மக்கள் திலகம் ஒருவருக்கே தகுதி உண்டு !
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
15th May 2016, 12:39 PM
#108
Junior Member
Platinum Hubber
கண்ணியமான மனிதர் M G R அவர்கள்
எவ்வளவு அழகாண வார்தைகள் ...இந்த வார்தைகளுக்கு மிக பொருடமானவர் மறைந்ட மக்கள் திலகம் , பொன்மண்செமல், புரட்சி தலைவர் அவர்கள்..
யாரையும் தரக்குறைவாக அவர் பேசியதாக பதிவெங்கும் இல்லை ! திரு கனகராஜ் அவர்களின் பதிவு MGR மேல் நான் கொண்ட அன்பை வான் உயரதுக்கு கொண்டு சென்று விட்டது. தேங்க்ஸ்..
இதை நானும் என் வாழ்கையில் follow செய்வேன்.
எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத திரைப்படங்களுள் ஒன்று எம்ஜியாரின் உலகம் சுற்றும் வாலிபன்...மிக சரியாக சொல்லி இருக்கிறார் திரு சுகுமார் அவர்கள்.
போஸ்டரில் வித்தியசமான தொப்பியுடன் நிற்கும் ஸ்டைலே கண்ணை கவரும். சிறிய கை உள்ள மேல் சட்டை மற்றும் ட்யிட் பான்ட் , கலர் shoes
அனைதும் மேலாக பொன்மன செம்மலின் புன்முகம்.
ஒவ்வரு கட்டுரைஉலும் அவர் செயும் உதவிகள்ளை படிக்கும் போடு ஆனந்தமாக இருகிறது...மறக்க முடியாதா மனிதர் ...
எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத திரைப்படங்களுள் ஒன்று எம்ஜியாரின் உலகம் சுற்றும் வாலிபன்.
பால்யம் முதலே மற்றவரை மதிக்கும் , திறமையை மதிக்கும் ,நல்லவர்களையும் , நல்ல செயலையும் ஊக்குவிக்கும் உத்தம உள்ளம் அவரிடம் இருந்தது . தன்னைப்போல் பிறனையும் நேசி என்ற இயேசுவின் வார்த்தையை வழுவாமல் வாழ்வில் கடைபிடித்த கண்ணியமான மனிதர் M G R அவர்கள் .
"செய்யும் தொழிலே தெய்வம்" என்பதில் கருத்தாய் வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர் ! முதல்வரான பின்னும் நடிபபுக் கலையினை மறந்து விடவில்லை ! திரை உலக தொழிலாளர்களுக்காக பல உதவிகளை செய்தார் ! " உலகமனும் நாடக மேடையில் நானொரு நடிகன் ! உரிமையுடன் வாழ்ந்திடும் வாழ்க்கையில் உங்களில் ஒருவன் !" - சிரித்து வாழ வேண்டும் படத்தில் பாடி நடிப்பார் எம்.ஜி.ஆர் ! எப்போதும் தன்னிலை உணர்ந்தே வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர் ! யாரையும் தரக்குறைவாக அவர் பேசியதாக பதிவெங்கும் இல்லை !
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
15th May 2016, 12:44 PM
#109
Junior Member
Platinum Hubber
கடைநிலை மனிதனை நினைத்து வாழ்ந்த முதல் மனிதர் ! அந்த உயர்ந்த உள்ளம் இருந்த காரணம்தான் இன்றும் மக்களின் மனதில் முதல்வராய் முழுதும் வாழ்கிறார் கலியுக வள்ளல் !
எம்.ஜி.ஆரின் குரல் எப்போதுமே சமு தாயத்தில் ஏளனத்துக்கு உள்ளாகி கடை நிலையில் இருக்கும் பாதிக்கப்பட்டவர் களுக்கு ஆதரவாகத்தான் ஒலிக்கும். அது உரிமைக்குரல்! ----- ஆஹா அருமை..... பொன்மனச்செம்மல் எம் ஜி ஆர் என்றும் மக்கள் மனதில் வாழ்வார்....
"மூன்றழுத்தில் என் மூச்சிருக்கும் ! அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் ! உள்ளம் என்றொரு ஊரிருக்கும் ! அந்த ஊருக்குள் எனக்கொரு பேரிருக்கும் !" - என் கடமை படத்தில் பாடிய எம்.ஜி.ஆர், தன் கடமையை சரியாய் செய்தனாலேயே, என்றும் அவர் பெயர் இருக்கும் தமிழ் நெஞ்சங்களில் !
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
15th May 2016, 12:47 PM
#110
Junior Member
Platinum Hubber
எங்கவீடுபிள்ளை படத்தில் வரும் நான் ஆணை இட்டால் பாடலில் mgr ஒரு கையை தரையில் ஊன்றி மறு கையில் சாட்டை எடுத்து சுற்றுவார். இப்பொது பார்த்தாலும் அந்த காட்சி மிக அற்புதமாக இருக்கும். அந்த பாடல் முழுவதும் இங்கே அங்கே என்று தாவி தாவி அவர் சாட்டை எடுத்து விளாசுவார். அந்த பாடல் பார்க்கும்போது , பாடல் பார்பத இல்லை mgr action பார்பதா என்று நமக்கு தோன்றும்
பெரிய இடத்து பெண் படத்தில் வரும் "அன்று வந்ததும் அதே நிலா..." பாடலுக்கு எம்ஜியார் சிறப்பாக மேற்கத்திய டான்ஸ் மூவ்மெண்ட் செய்திருப்பார். அந்த படத்துக்கு இந்த நடனத்தை உருவாகிய போது, எம்ஜியார் சற்று தயங்கினார். "இந்த டான்ஸை நீங்கள் நன்றாக செய்வீர்கள் என்று இயக்குனர் ராமண்ணா சொல்ல, அந்த பாடலுக்கு எம்ஜியார் சிறப்பாக ஆடி, அது இன்னமும் வெற்றிப் பாடலாக இருக்கிறது.
Mgr மகா சக்தி
'அன்று வந்ததும் அதே நிலா' என்ற மிக அருமையான பாடலுக்கும், மேற்கத்திய நடன அசைவுகளை மிகப் பிரமாதமாகச் செய்தவர்.
"ஓடி ஓடி உழைக்கணும் ! ஊருக்கெல்லாம் கொடுக்கணும் ! ஆடிப் பாடி நடிக்கணும் ! அன்பை நாளும் வளர்க்கணும் ! ... நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும் படிப்பினை தந்தாகணும் ! நாட்டுக்கு படிப்பினை தந்தாகணும் !" - நல்ல நேரம் படத்தில், தெருவில் வித்தை காட்டுபவரை போல் ஆடினார் எம்.ஜி.ஆர் ! பின்னணியில் பாடினார் டி.எம்.எஸ் ! நம் எல்லோருக்கும் நல்ல வாத்தியார், எம்.ஜி.ஆர் !
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
Bookmarks