-
21st May 2016, 09:06 AM
#1
Junior Member
Platinum Hubber
மக்கள் இன்னமும் எம்ஜிஆரை நேசிக்கிறார்களே ?
எம்ஜிஆரை மக்கள் நேசிப்பதற்கு காரணம் அவருடைய மனித நேயம் - மக்கள் அவரை ஒரு நடிகராக பார்க்கவில்லை .
தங்கள் வீட்டு பிள்ளையாக பார்த்தார்கள் . ஏழைகளின் கண்ணீரை துடைத்தவர் . ஏழைகளில் வாழ்வு தரத்தை முன்னேற்றியவர் .அடிமட்ட சமுதாய மக்களின் கல்விக்கும் , வேலை வாய்ப்புக்கும் ,பல உரிமைகளை பெற்று தந்தமைக்கும் , பசிப்பிணி போக்கிய சத்துணவு திட்டத்தை தந்ததற்கும் ,அடிமட்ட சாதாரண தொண்டனை அரசியல்
களத்தில் சட்டமன்ற , பாராளுமன்ற உறுப்பினராக , மாநில மந்திரியாக உயர்த்தியதற்கும் மக்கள் நன்றியுடன்நினைத்து பார்த்து பார்க்கிறார்கள் .
இன்று கல்வியில் பல புரட்சிகள் உருவாகி சாமான்ய மக்கள் எல்லாம் வெளிநாடுகளில் வேலை பார்த்து முன்னேறியுள்ளார்கள் என்றால அதற்கு முதல் காரணம் எம்ஜிஆர் போட்டு காட்டியகல்வி பாதைதான் .எனவேதான்
தமிழக மட்டுமல்லாமல் உலகமெங்கும் வாழும் கோடிக்கணக்கான மக்கள் இன்னமும் எம்ஜிஆர் மீது அளவு கடந்தஅன்பும் பக்தியும் வைத்துள்ளார்கள் .
எம்ஜிஆர் படங்கள் மக்களின் மனங்களுக்கு வலிமை - நம்பிக்கை - மகிழ்ச்சி சேர்த்த பெருமை உண்டு .
சமுதாயத்திற்கு தேவையான கருத்துக்களை சொன்னார் -சமுதாயம் ஏற்று கொண்டது .
மக்களின் அன்புக்கு அடிமையானார் . எம்ஜிஆருக்கு மக்கள் மனதிலிருந்து விடுதலை என்பது என்றுமே கிடையாது .
எம்ஜிஆர வாழ்ந்த காலத்தில் அவரை நேசிக்காதவர்கள் - இன்று அவரின் பெருமைகளை உணர்ந்து பலரும் எம்ஜிஆரை நேசிக்க ஆரம்பித்து விட்டார்கள் . இதுதான் எம்ஜிஆரின் மனித நேயத்தின் வெற்றி .
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
21st May 2016 09:06 AM
# ADS
Circuit advertisement
Bookmarks