-
21st May 2016, 11:19 PM
#1
Senior Member
Seasoned Hubber
கார்த்திக்
தங்களை வரவழைத்த நமது சாந்திக்கு என் உளமார்ந்த நன்றி.
சென்ற ஞாயிறன்று மாலை இறுதி நாளாக சாந்திக்கு சென்றபோது முரளி சாருக்கு இந்த இடத்தையெல்லாம் காண்பித்தேன். டிக்கெட் வாங்கிக் கொண்டு தியேட்டருக்குள் வரும் வழியையும் காட்டினேன். அப்போது அவர் மன்னன் படத்தை நினைவூட்டி, அதில் நீங்கள் பெயிண்டிங் வரைந்த சுவரைக் காட்டுவார்கள் என்று கூறினார். அன்று முழுதும் நினைவுகள் சாந்தியையே சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருந்தது. இன்னமும் அதிலிருந்து மீள முடியவில்லை. இருந்த போதிலும் சுற்றிலும் மிகச் சிறந்த வடிவமைப்புடன் பல்வேறு புதிய வளாகங்கள் வரும் போது நம்முடைய அரங்கம் இன்னும் பழைய அமைப்பிலிருந்து மீளாமல் இருப்பது ஒருவகையில் வருத்தமாகத் தான் உள்ளது. அதிலும் உள்கட்டமைப்புகள் முற்றிலும் மாற்றப்பட்டே ஆக வேண்டிய நிலையில் தான் அரங்கமும் உள்ளது.
புதிய வளாகத்தில் மூன்று அல்லது நான்கு திரையரங்குகள் வர இருப்பதாகவும் அவற்றுக்கு பெயர்கள் கூட தீர்மானிக்கப்பட்டு செயல் வடிவம் பெறுவதற்கான முதற்கட்ட பணிகள் துவங்க உள்ளதாகவும் கேள்விப்பட்டோம். அதில் நிச்சயமாக ஒரு திரையரங்கம் பழைய தமிழ்த்திரைப்படங்களுக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்கிற என் விருப்பத்தினை என்னிடம் பேட்டி கண்ட நிருபர்களிடம் நான் கூறியுள்ளேன்.
எது எப்படியோ, நம்மால் சாந்தியின் நினைவுகளிலிருந்து மீள்வது என்பது இயலாத காரியம்.
தங்களுடைய பதிவுகள் எத்தனையோ கடந்த கால நிகழ்வுகளை மனதில் அசை போட வைக்கின்றன.
என்றும் மலரும் சாந்தியின் நினைவுகளுடன் வாழ்வதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது...
புதிய பறவையில் தலைவர் சொல்லுவார். நான் உன்னை மனம் ஒப்பியா போகச் சொல்கிறேன். நீ இல்லாத அந்த நாட்களில் உன் நினைவோடு வாழ்ந்து அதில் ஒரு சந்தோஷம் கிடைக்குமே அது போதும் என்கிற எண்ணத்தினால் தான் போகச் சொல்கிறேன் என்பார்.
அது போல் இந்தக் கட்டிடத்திற்கு பிரியா விடை கொடுத்து மனதில் பழைய நினைவுகளை அசை போட்டு வாழ்ந்திருப்போம்...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 3 Thanks, 5 Likes
-
21st May 2016 11:19 PM
# ADS
Circuit advertisement
Bookmarks