-
7th January 2016, 08:37 PM
#1481
Moderator
Diamond Hubber
விஜய் டி.வியின் புதிய தொடர் சீதையின் ராமன்
ராமாயாணத்தை எந்த கோணத்தில் சொன்னாலும், எந்த பகுதியை சொன்னாலும் அழகுதான். ராமாயணத்தை விதவிதமாக காட்டி வந்த விஜய் டி.வி. அடுத்து சீதையின் ராமன் என்ற புதிய தொடரை ஒளிபரப்புகிறது.ஸ்டார் பிளஸ் சேனலில் சீதா கி ராம் என்ற பெயரில் ஒளிபரப்பான இந்தி தொடரின் தமிழாக்கம் இது. ஜனவரி 4ந் தேதியிலிருந்து திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு இது ஒளிபரப்பாகிறது.
வால்மீகி எழுதிய ராமாயணத்தின் அடிப்பபடையிலான கதை. சீதையின் பார்வையில் ராமர் எப்படி இருந்தார் என்பதுதான் மற்ற கதைகளில் இருந்து வித்தியாசப்படும் பகுதி. ராமனுக்கும், சீதைக்கும் இடையிலான அன்பு, உறவில் ஏற்பட்ட விரிசல் பின்பு இணைதல் உள்ளிட்ட விஷயங்களை பேசும் கதை. இந்தியின் முன்னணி டி.வி.நடிகர் ஆஷிஷ் சர்மா ராமராகவும், மத்திரிகாஷி முண்டே சீதையாகவும் நடித்துள்ளனர்.
நன்றி: தினமலர்
-
7th January 2016 08:37 PM
# ADS
Circuit advertisement
-
9th March 2016, 12:12 AM
#1482
Moderator
Diamond Hubber
EMI - தவணை முறை வாழ்க்கை
SUN TV 07 - 03 2016
-
1st April 2016, 07:28 PM
#1483
Moderator
Diamond Hubber
குலதெய்வம்: வட இந்தியாவில் படப்பிடிப்பு நடத்த அனுமதி இல்லை
நாதஸ்வரம் தொடருக்கு பின் திருமுருகன் இயக்கி வரும் தொடர் குலதெய்வம். தற்போது சீரியலை வெளியூரில் எடுப்பது டிரண்ட் என்பதால் தனது நாதஸ்வரம் தொடரை காரைக்குடியில் எடுத்தார். குலதெய்வம் தொடர் சென்னை, குற்றாலம், தஞ்சாவூர் பகுதிகளில் நடந்து வந்தது. கதை எந்த பகுதியில் நடக்கிறதோ அங்கேயே சென்று படப்பிடிப்பு நடத்துவதையே வழக்கமாக வைத்திருந்தார்.
தற்போது கதை வடநாட்டில் நடக்கிறது. இதனால் ராஜஸ்தான், டில்லி, பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அங்கு அனுமதி கிடைக்கவில்லை. வட நாடுகளில் ஹோலி பண்டிகை உள்ளிட்ட பல பண்டிகைகள் தொடர்ச்சியாக வருவதால் அங்கு படப்பிடிப்பு நடத்துவது தேவையில்லாத பிரச்சினைகளை உருவாக்கும் என்ற கூறி அனுமதி தர மறுத்துவிட்டனர்.
இதனால் கதையை அண்டை மாநிலங்களில் நடப்பதாக மாற்றி தற்போது மைசூரில் படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள். அங்குள்ள நஞ்சுண்டபுரம் கோவில், அரண்மனை, பிருந்தாவன் ஆகிய பகுதிகளில் நடப்பிடிப்புகள் நடந்து வருகிறது.
நன்றி: தினமலர்
-
1st April 2016, 07:31 PM
#1484
Moderator
Diamond Hubber
விஜய் டிவியில் தெறி ஆடியோ விழா!
விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடிப்பில் தயாராகியுள்ள படம் தெறி. ராஜாராணி அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை எஸ்.தாணு தயாரித்துள்ளார். இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீடு கடந்த மார்ச்-20 ந்தேதி சென்னையிலுள்ள சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சி அனைத்தும் வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று விஜய் டிவியில் மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
மேலும், சமீபகாலமாக முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்களின் சேனல் ரைட்ஸை வாங்குவதில் ஆர்வம் காட்டி வரும் விஜய் டிவி, தெறி படத்தையும் வாங்குவதற்கு முயற்சித்து வருகிறதாம். ஏற்கனவே பல முன்னணி சேனல்கள் தெறி படத்தை கைப்பற்றும் போட்டியில் இறங்கியிருக்கிறது விஜய் டிவி.
நன்றி: தினமலர்
-
5th April 2016, 07:24 PM
#1485
Moderator
Diamond Hubber
என்வாழ்க்கை என் பயணம்: பாலிமரில் புதிய தொடர்
பாலிமர் சேனனில் வருகிற 4ந் தேதி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர் என் வாழ்க்கை என் பயணம். இந்தியில் ஒளிபரப்பான இந்த தொடர் தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகிறது
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் முதல் சினிமா தொடர்புடைய தொடர். நடுத்தர குடும்பத்து பெண்ணான பூஜாவுக்கு சினிமா இயக்குனராக வேண்டும் என்பது வாழ்நாள் கனவு. அதற்காக பெற்றவர்கள் எதிர்ப்பையும் மீறி திரைப்படக்கல்லூரியில் சேர்ந்து படிக்கிறார். கோல்ட் மெடலிஸ்டாக வெளியே வருகிறார். அவர் இயக்குகிற குறும்படங்கள் பரபரப்பாக பேசப்படுகிறது. அப்படி இருந்தும் அவர் சினிமாவில் இயக்குனராக போராட வேண்டியது இருக்கிறது. அந்த போராட்டமே தொடரின் கதை. அதில் அவர் வெற்றி பெற்றாரா என்பது முடிவு. பூஜாவாக இந்தி நடிகை ஷமா சிக்கந்தர் நடித்துள்ளார்.
நன்றி: தினமலர்
-
25th May 2016, 06:44 PM
#1486
Moderator
Diamond Hubber
பாலகுமாரன் நாவல் டி.வி.சீரியலாகிறது
பிரபல எழுத்தாளர்களின் நாவல்கள் திரைப்படமாகி இருக்கிறது. முதன் முறையாக ஒரு நாவல், சின்னத்திரை சீரியலாகிறது. பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய தலையணை பூக்கள் நாவல் எந்த மாற்றமும் இன்றி அப்படியே தொடராக எடுக்கப்படுகிறது.
பாலகுமாரன் தமிழ் இலக்கிய உலகின் பிரபலமான எழுத்தாளர். 150க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். இவர் எழுதிய 14 நாவல்கள் திரைப்படமாகி உள்ளது. பல படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார்
அவர் எழுதிய குடும்ப நாவல்தான் தலையணை பூக்கள். கிராமத்தில் விசாயம் பொய்த்து விட்டதால் அங்கிருந்து நகரத்து தனது நான்கு மகன்களுடன் பிழைப்பு தேடி சென்னை வரும் விவசாயி இங்கு தன் மனைவி பெயரில் லட்சுமி அண்ட் கோ என்ற பாத்திர கடை தொடங்குகிறார். மகன்களின் உழைப்பால் அது பெரிய நிறுவனமாக வளர்கிறது. அந்த வீட்டுக்கு மருமகள்கள் வரும்போது என்ன மாற்றங்கள் நடக்கிறது. என்பதுதான் கதை. தனித்தனியாக பிரியும் சகோதரர்கள், போட்டி நிறுவனங்கள் தொடங்குவது. ஒருரை வீழ்த்து ஒருவர் நினைப்பது என பணம் வந்த பிறகு பாசம் பறந்து போன கதையாக விரியும்.
இதில் குடும்ப தலைவராக டெல்லி குமார் நடிக்கிறர். மகன்களாக ஸ்ரீ, ஸ்ரீகர் நடிக்கிறார்கள். முதல் மருமகளாக நிஷா நடிக்கிறார். வருகிற 23ந் தேதி முதல் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பு தொடங்குகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
நன்றி: தினமலர்
-
30th May 2016, 06:47 PM
#1487
Moderator
Diamond Hubber
நிஜ காதல் ஜோடிகளான சீரியல் ஜோடிகள்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'ஆண்டாள் அழகர்' தொடர் தற்போது 'பகல் நிலவு' என்ற பெயரில் அதன் இரண்டாம் பாகமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் இளம் தலைமுறை காதலர்களாக நடிப்பவர்கள் அன்வரும், சமீராவும். சீரியலில் சீரியசாக காதலிக்கும் இவர்கள் இருவரும் நிஜத்திலும் காதலர்களாகி விட்டார்கள்.
தெலுங்கு சீரியலில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த சமீரா பகல் நிலவு மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார், அன்வர் தமிழில் ஏராளமான சீரியலில் நடித்தவர். “நான் நடிகர் என்றாலும் சமீராவின் நடிப்புக்கு நான் ரசிகன். ஒரு ஷாப்பிங் மாலில்தான் முதல் முதலில் சந்தித்தோம். பிறகு நண்பர்களானோம் பின்பு அதுவே காதலானது என்கிறார் அன்வர். நிஜ காதலர்களே சீரியல் காதலர்களாக இருப்பதால் காதல் காட்சிகளில் தனி கவனம் செலுத்துகிறது சீரியல் கதை இலாக்கா.
நன்றி: தினமலர்
-
30th May 2016, 06:52 PM
#1488
Moderator
Diamond Hubber
வேந்தர் டிவியில் சிறுவர்களுக்கான ரெட்டை வால் நிகழ்ச்சி!
வேந்தர் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய நிகழ்ச்சி ரெட்டை வால். முற்றிலும் 11 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமிகளே பங்கேற்றும் இந்த நேரடி நிகழ்ச்சியில், பள்ளியில் நடந்த சுவராஸ்யமான நிகழ்வுகள் மற்றும் கதை சொல்வது, பாட்டு பாடுவது என்று சிறுவர்கள் தங்களுக்கு பிடித்தமான விசயங்களை பகிர்ந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் அம்ரிதா தொலைபேசியில் உரையாடுகிறாராம்.
>அதுமட்டுமின்றி, சிறுவர்கள் தங்கள் சார்பில் சொல்ல வந்ததை சொல்லி முடித்ததும். அவர்களுக்கு பிடித்தமான ஹீரோ மற்றும் பிடித்த பாடலை கேட்டு அதையும் ஒளிபரப்புகிறார்களாம். மேலும், இப்படி தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் சிறுவர் சிறுமியர்களுக்கு தானும் அவ்வப்போது சின்னச்சின்ன குட்டிக்கதைகளை சொல்லி அவர்களை சந்தோசப்படுத்தப்போகிறாராம் தொகுப்பாளினி அம்ரிதா.
நன்றி: தினமலர்
-
30th May 2016, 08:57 PM
#1489
Moderator
Diamond Hubber
-
7th June 2016, 07:24 PM
#1490
Moderator
Diamond Hubber
ராஜ் டி.வியில் புதிய தொடர் ;கங்கா யமுனா
ராஜ் தொலைக்காட்சியில் ஒளிப்பரபாக இருக்கும் புதிய தொடரின் பெயர் கங்கா யமுனா. புகழ்பெற்ற இந்தி சீரியலின் டப்பிங் இது. பரபரப்பு நிறைந்த கோல்கட்டா நகரில் வாழும் கங்கா, யமுனா என்ற இரு இளம் பெண்களின் வாழ்க்கை கதை. இருதுருவங்களாக இருக்கும் இவர்கள் கடந்த கால கனவுகன் துறந்து, எதிர்கால சாதனைகளை எப்படி படைக்கிறார்கள் என்பதை சொல்லப்போகும் தொடர்.
>கதை களம் கோல்கட்டாவில் நடந்ததாலும் கோல்கட்டாவின் வாழ்க்கை முறை தமிழ்நாட்டு வாழ்க்கை முறையை ஒத்திருப்பதால் நம் கதை போலவே இருக்கும். வருகிற 6ந் தேதி ஒளிபரப்பு துவங்குகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. ஏற்னெவே ;கங்கா யமுனா சரஸ்வதி என்ற பெயரில் ஒரு தொடர் ஒளிபரப்பாகி புகழ்பெற்றது குறிப்பிடத்தக்து.
நன்றி: தினமலர்
Bookmarks