Results 1 to 10 of 3994

Thread: Makkal Thilagam MGR Part - 20

Threaded View

  1. #10
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    the hindu - tamil
    makkal thilagam mgr-100
    to day's comments portion.


    இன்று வரை மக்கள் மனதில் இருப்பவர் யாரும் அவரை பிரிக்க முடியாது

    எம்.ஜி.ஆரின் அன்பை அறியும் சந்தர்ப்பம் 1981 மதுரை தமிழ்மாநாட்டில் எனக்கும் கிட்டியது! பேராதனை பல்கலை கழக-தமிழ்சங்க செயலராக இருந்த நான் (நல்லையா சண்முகப்பிரபு) இலங்கையில் தமிழ் மொழி,இனம்,நிலம் காக்க உதவும்படி கேட்டு,வாழ்த்துப்பா ஒன்றை எழுதி,அச்சிட்டு,தங்கபிரேம் இட்டு அவருக்கு மேடையில் வழங்கினேன்!
    கலைஞரின் பெயரும் அதில் குறிப்பிட்டிருந்தும் எம்.ஜி.ஆர். பெருந் தன்மையுடன் அவ்வை நடராசனை அழைத்து,கவியரசு கண்ணதாசன் அருகில் என்னை அமரவைத்தார்!கவியரசு என்னை அறிமுகம் செய்ததும்,எம்.ஜி.ஆர்.மேடைக்கு ஒரு இளைஞன் போல் துள்ளி ஏறி வந்து,கை குலுக்கி,பாராட்டி,நன்றி கூறி வாழ்த்துப்பாவை பெற்றுக்கொண்டார்!அவரது அன்பும் ,அருளும் இமாலயம் போன்றது!
    ஈழத்தமிழர் விடுதலை ஆதரவுக்கு அவரது அற்புதமான பணி மறக்க முடியாதது! அந்நிகழ்வை படம் பிடித்தவர் மேட்டூர்அணை எஞ்சினியர் பெஞ்சமின் அப்பாதுரை!ஆனால் அந்தப்படம் என் கைக்கு எட்டவில்லை!மேடையில் கவிஞர் வைரமுத்து குழுவினர் கவியரங்கு நிறைவுற்றதும் இந்நிகழ்வு இடம்பெற்றது!

    புகழ் பெற்ற நடிகர்களாக இருப்பவர்கள் இருக்கட்டும். இரண்டு படங்கள் ஒடிவிட்டால் அந்த நடிகர்களிடம் கூட இப்படி உரிமையாக ரசிகர்களும் மக்களும் பழக முடியுமா? நடிகர்கள்தான் இறங்கி வந்து ரசிகர்களிடமும் மக்களிடம் அன்பாக இருப்பார்களா?
    எம்.ஜி.ஆர். தி கிரேட்

    குடியிருந்த கோயில் படத்தில், எம்.ஜி.ஆர் ஆடிப்பாடி சொல்லிய கருத்து: "என்னைத் தெரியுமா? நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன், என்னை தெரியுமா! .... நான் புதுமையானவன்! உலகை புரிந்து கொண்டவன்! நல்ல அழகை தெரிந்து, மனத்தைக் கொடுத்து, அன்பில் வாழ்பவன்!". நடிகராய் ஆடிப்பாடி இருந்தாலும் அதுபோல் இவ்வுலகில் வாழ்ந்தும் காட்டியவர் "நவரத்னம்" தானே!

    இந்த இந்த மனிதாபிமானம் தன இன்றும் அதிமுக வுக்கு ஒட்டு கிடைக்குது

    " நான் கடவுளை பார்த்தது கிடையாது
    அவன் கறுப்பா சிவப்பா தெரியாது
    இறைவன் ஒருவன் இருக்கின்றான் - இந்த
    ஏழைகள் முகத்தில் சிரிக்கின்றான் - இதுதான் அவரின் மதம் !
    தன்னை பார்க்க வந்தது எத்தனை பேரானாலும் அனைவரையும் சந்தித்து உணவளித்து உபசரிப்பது அவருக்கு உவகையான காரியம் நடிகராய் இருந்தபோதும் பின்னர் மக்களின் முதல்வராய் ஆனபோதும் இதில் மாற்றமே இல்லை !
    Last edited by esvee; 2nd June 2016 at 07:02 PM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •