-
9th June 2016, 02:32 PM
#651
Junior Member
Platinum Hubber
9.6.1972
நான் ஏன் பிறந்தேன்
நான் ஏன் பிறந்தேன்' என்ற தலைப்பில் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஆனந்த விகடன் இதழில் தனது சுயசரிதையை எழுதி வந்தார். இதே பெயரில் ஜி.என்.வேலுமணி, எம்ஜிஆரைக் கதாநாயகனாக வைத்து வண்ணப்படம் ஒன்றைத் தயாரித்தார். சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன், மேற்படிப்பு முடித்து ஊருக்குத் திரும்புகிறான். படிப்புக்கு வாங்கிய கடனால் குடும்பம் மோசமான நிலையில் உள்ளதைக் காண்கிறான்.
.
மனைவி, குழந்தை, சிற்றன்னை, அவளது குழந்தைகள், தங்கையின் குடும்பம் என மிகப் பெரிய குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு அந்த இளைஞனின் தலையில் விழுகிறது. ஏதாவதொரு வேலையில் சேர வேண்டிய கட்டாயத்தில், ஒரு எஸ்டேட்டில் மேனேஜர் வேலைக்கு தான் திருமணமானவன் என்பதை மறைத்து வேலைக்குச் சேருகிறான். எஸ்டேட் முதலாளியின் மகளுக்கு கால்கள் திடீரென விளங்காமல் போய்விட அவளுக்கு மனத் தைரியத்தைக் கொடுத்து அவளது கால்கள் மீண்டும் செயல்பட வைக்கிறான்.
அந்தப் பெண்ணோ இளைஞனை விரும்புகிறாள். இதனால் ஏற்படும் குழப்பங்களை எப்படி தீர்க்கிறான் அந்த இளைஞன் என்பதே கதை. நல்ல குணங்களைக் கொண்ட இளைஞனாக எம்ஜிஆர் நடித் திருந்தார். அவரது ஜோடியாக கே.ஆர்.விஜயா, எஸ்டேட் முதலாளியின் பெண்ணாக காஞ்சனா ஆகியோர் நடித்தனர்.
மேலும் சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன், நாகேஷ், நம்பியார், வீரராகவன், வி.கோபாலகிருஷ்ணன், எஸ்.என்.லட்சுமி, ஜி.சகுந்தலா, பேபி இந்திரா மற்றும் பலர் நடித்திருந்தனர். ஒரு குழந்தைக்கு தந்தையாக வரும் பாத்திரத்தில் எம்ஜிஆர் நீண்ட நாட்களுக்கு பிறகு நடித்தார். தனக்கு குடும்பம் இருப்பதை வெளியே சொல்ல முடியாமலும், பணக்கார பெண் தன்னை காதலிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கும் போது அவர் சிறந்த நடிப்பை வெளிப் படுத்தி இருந்தார். காஞ்சனாவும் சிறப்பாக நடித்தார்.
படத்தின் சிறப்பம்சம் மிகச் சிறந்த பாடல்கள் ஆகும். வாலி, புலமைப்பித்தன் உள்ளிட்ட கவிஞர்கள் எழுதிய பாடல்களுக்கு இனிமையான இசையை சங்கர் கணேஷ் இரட்டையர்கள் வழங்கி இருந்தனர். எம்ஜிஆர் படத்திற்கு முதன் முதலாக இந்தப் படத்தில்தான் அவர்கள் இசையமைத்தனர்.
கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி அவர்கள் இசையமைத்த கருத்தாழம் மிக்க பாடல்கள் வருமாறு:
"நான் ஏன் பிறந்தேன்;
நாட்டுக்கு நலமென புரிந்தேன் என்று நாளும்,
பொழுதும் வாழும் வரையில் நினைத்திடு என் தோழா,
நினைத்து செயல்படு என் தோழா, உடனே செயல்படு என் தோழா'
"தம்பிக்கு ஒரு பாட்டு
அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு
வாழ்வில் நம்பிக்கை வளர்வதற்கு
தினமும் நான் சொல்லும் கதை பாட்டு'
"நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்
இசை வெள்ளம் நதியாக ஓடும்
அதில் இளநெஞ்சம் படகாக ஆடும்'
"உனது விழியில் எனது பார்வை
உலகை காண்பது
என் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது'
"என்னம்மா சின்னப் பொண்ணு
என்னவோ தேடும் கண்ணு
நானும் உந்தன் ஜோடி அல்லவோ'
"தலைவாழை இலை போட்டு
விருந்து வைத்தேன்
என் தலைவா உன் வருகைக்கு
தவமிருந்தேன்'
இந்த பாடல்கள் அனைத்தும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அருமையான இசையை கொண்டவை என்றால் அது மிகையாகாது. இந்தப் பாடல்களை டி.எம்.சௌந்தர் ராஜன், சுசீலா ஆகியோர் அனுபவித்து பாடி அசத்தியிருப்பார்கள்.
இந்த பாடல்களுடன் பாரதிதாசனின்,
"சித்திரச் சோலைகளே உம்மை நன்கு திருத்த இப்பாரினிலே இங்கு எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ உங்கள் வேரினிலே ' என்ற பாடலையும் டி.எம்.சௌந்தர் ராஜனின் குரலில் மிக சரியான இடத்தில் பயன்படுத்தி இருப்பார்கள்.
எம்.கிருஷ்ணன் இயக்கிய இந்தப் படம் குடும்பத்தினர் அனைவரும் காணும் வகையில் படமாக்கப் பட்டிருந்தது.
இந்த படத்தை பார்த்த தாய்மார்கள் ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தியுடன் சென்றதை திரையரங்குகளில் காண முடிந்தது.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
9th June 2016 02:32 PM
# ADS
Circuit advertisement
-
9th June 2016, 02:33 PM
#652
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
9th June 2016, 02:34 PM
#653
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th June 2016, 02:43 PM
#654
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகத்தின் நான் ஏன் பிறந்தேன் முதல் நாள் பார்த்த அனுபவம் .
9.6.1972
அண்ணா சாலையில் இருந்த குளோப் திரை அரங்கில் முதல் நாள் மேட்னி காட்சி பார்க்கும் வாய்ப்பு
கிடைத்தது .ரசிகர்கள் வெள்ளத்தில் ஆரவாரங்களுடன் படம் துவங்கிய முதல் காட்சி முதல் இறுதி காட்சி வரை ரசித்து பார்த்தேன் .
அறிமுக காட்சியில் தாய்குலத்திற்கு பெருமை சேர்த்த விதம்
நான் ஏன் பிறந்தேன் பாடலில் சமூக சீர்திருத்த கருத்துக்கள்
தன்னுடைய தாய் - மனைவி - உடன் பிறந்தோர் செய்யும் கடின வேலைகளை பார்த்து மக்கள் திலகம் கண் கலங்கும் காட்சிகள்
அனைவரையும் அழைத்து உரிமையுடன் பேசுமிடம்
வீட்டை விற்கும் காட்சியில் காட்டும் நேர்மை .தம்பி தங்கைகளுக்கு அறிவுரை பாடல் .
வேலை தேடி சென்னையில் அடையும் ஏமாற்றங்கள் . நண்பர் கோபால் மூலம் மேஜரை சந்திக்குமிடம் .
அழுபவர்களை சிரிக்க வைக்க வேண்டும் . சிரிப்பவர்களை சிந்திக்க வைக்க வேண்டும் என்று
மக்கள் திலகம் கூறுமிடத்தில் பலத்த கைதட்டல்கள் .
காஞ்சனா சந்திப்பில் இடம் பெற்றமக்கள் திலகத்தின் நான் படும் பாடல் ....வர்ணிக்க வார்த்தைகள் இல்லை . அத்தனை அற்புதம் .
என்னம்மா சின்ன பொண்ணு - பாடலில் மக்கள் திலகத்தின் நடன அசைவுகள் - நடிப்பு பிரமாதம் .
தன்னுடைய தம்பி தங்கைகள் சோகத்துடன் பாடும் பாடலை கேட்டு சந்தர்ப்ப சூழ் நிலையால் உடனே அவர்களை சந்திக்க முடியாத நிலையில் அவர் காட்டும் முக பாவங்கள் அருமை .
கே .ஆர் .விஜயாவுடன் படும் உனது விழியில் எனது பார்வை ......காவிய பாடல் .
படம் மக்கள் திலகத்தின் கச்சிதமான நடிப்பு ரசிகர்களுக்கு விருந்து .இரண்டு சண்டை காட்சிகள் அளவோடு இருந்தது
மக்கள் திலகத்திற்கு சிறந்த நடிகருக்கான விருது இந்த படத்திற்கு கிடைத்திருக்க வேண்டும் .
மிகபெரிய வெற்றி அடைந்திருக்க வேண்டிய படம் .ரசிகர்களால் சுமாராக ஓடிய வெற்றி படம் .
44 ஆண்டுகள் கடந்தாலும் நான் ஏன் பிறந்தேன் படம் - இன்று பார்த்தாலும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்குகிறது
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
9th June 2016, 02:46 PM
#655
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
9th June 2016, 02:54 PM
#656
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
9th June 2016, 03:07 PM
#657
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
9th June 2016, 08:18 PM
#658
Junior Member
Diamond Hubber
போளூர் - களம்பூர் மீனாட்சி திரை அரங்கில்
நம் நாடு.
தகவல் - திரு கலியபெருமாள் - பாண்டிசேரி.
Last edited by ravichandrran; 10th June 2016 at 09:39 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
10th June 2016, 08:53 AM
#659
Junior Member
Platinum Hubber
படகோட்டி 1964 தீபாவளிக்கு ரிலிசானது. படகோட்டி நூறு நாள்களைக் கடந்து வெற்றி பவனி வந்தது.
படகோட்டிக்கு அநேகப் பெருமைகள் உண்டு.
சரவணா பிலிம்ஸின் முதல் வண்ணத் தயாரிப்பு!
குப்பத்து மீனவர் வாழ்க்கையைத் தமிழ்த் திரையில் காட்டிய முதல் படம்.
‘செம்படவப் பெண் முத்தழகியாக சரோவும், படகோட்டி மாணிக்கமாக மக்கள் திலகமும் உலகத் தமிழர்களுக்குத் தங்கள் அற்புதத் திறமையால் இன்று வரை நவரஸ விருந்து படைக்கிறார்கள்.
கண்ணதாசனுக்கு இணையாக கவிஞர் வாலிக்குத் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய அங்கீகாரத்தை எம்.ஜி.ஆர். ஏற்படுத்தித் தந்த முதல் படம்.
எம்.ஜி.ஆர்.- சரோ ஜோடி நடித்த படங்களில் இனிமையான சூப்பர் ஹிட் பாடல்களில் என்றும் படகோட்டிக்கே முதல் இடம்!
‘பாட்டுக்கு பாட்டெடுத்து’ மாதிரியான காதல் ஏக்கப் பாடல் எம்.ஜி.ஆர்.- சரோ வெற்றிச் சித்திரங்களில் படகோட்டிக்கு முன்போ பின்போ இடம் பெறவே இல்லை.
எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் தயாரிப்புகள் உள்படப் பொன்மனச்செம்மல் - அபிநய சரஸ்வதி இணைந்து நடித்த பெரும்பாலான படங்கள் சின்னத்திரையில் அன்றாடம் இடம் பெறுகிறது.
அவற்றில் படகோட்டிக்கான உரிமை மட்டும் இன்னமும் வழங்கப்படவில்லை. காரணம் படகோட்டி விநியோக உரிமையை வைத்திருக்கும் தேவி பிலிம்ஸ் இன்றைய முன்னணி நட்சத்திரங்களின் வெற்றிச்சித்திரங்களுக்கு நிகராக கேட்கும் மதிப்பு மிக்கத் தொகை!
அதுவே படகோட்டியின் தனிச் சிறப்பு!
எப்போது மீண்டும் திரைக்கு வரும் என்று சகலரையும் ஏங்க வைத்துக் கொண்டிருக்கும் வெற்றிச்சித்திரம் படகோட்டி.
‘கன்னடத்துப் பைங்கிளியைக் கேரளத்து மண்ணில் விளையாட விட்டிருக்கிறார்கள்.சதங்கை ஒலி நடையும் வனப்பும் ஓரளவு நடிப்பும் நன்றாக அமைந்துள்ளன.
தென்னஞ்சோலைகள், உப்பங்கழிகள், சூரிய அஸ்தமனக் காட்சிகள்... - ஒளிப்பதிவாளர் பி.எல். ராய்க்கு பாராட்டுதல்கள்.
புரட்சி நடிகரின் ரசிகர்களுக்கு ஒரு விருந்து! ’
என்றது ‘கல்கி’யில் வெளியான விமர்சனம்.
courtesy - kanavukannigal -
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
10th June 2016, 08:54 AM
#660
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
Bookmarks