-
10th June 2016, 08:55 AM
#661
Junior Member
Platinum Hubber
தெய்வத்தாய் சினிமா விமர்சனத்தில் ஆனந்த விகடன் எழுதியவை, சரோ - எம்.ஜி.ஆர். ஜோடியை ஒவ்வொரு பாராவிலும் உச்சி குளிர வைத்தது.
மாணிக்கம் - -: எம்.ஜி.ஆரைப் பற்றிச் சொல்லுப்பா!
முனுசாமி - : தெய்வத்தாயில் எம்.ஜி.ஆர். பிரமாதமா இங்கிலீஷ் டான்ஸ் ஆடியிருக்கார் பார்த்தியா? ஏன் நடிப்புக்கும் தான் என்ன குறைச்சல்?தனக்குக் கல்யாணம் ஆன மாதிரி சரோஜாதேவியோட நாடகம் ஆடறாரே, அந்த சீன்லே சிரிப்பை அடக்க முடியலே!
மாணிக்கம் - : அந்தக் காட்சி மட்டுமா, முதல்லருந்தே ஸ்கூட்டர் மாறிப் போறதும், போன்ல ரெண்டு பேரும் பேசிக்கறதும் ‘பார்க்லே’ சந்திக்கிறதும் எல்லா காட்சிகளும் நல்லாத்தான் இருந்தது.
முனுசாமி : - சரோஜாதேவியும் குறும்புக்கார பொண்ணா நல்லா நடிச்சிருக்காங்க. வெடுக்குப் பேச்சும், துடுக்குத்தனமும், பாட்டி மாதிரி இருமி நடிக்கிறதும் ரொம்ப ஜோர்.
‘இந்தப் புன்னகை என்ன விலை, வண்ணக்கிளி சொன்ன மொழி’ ரெண்டு டூயட்டும் கேட்க சுகமாயிருந்தது. எனக்கு ரொம்பப் பிடிச்சது.’
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
10th June 2016 08:55 AM
# ADS
Circuit advertisement
-
10th June 2016, 08:59 AM
#662
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
-
10th June 2016, 09:03 AM
#663
Junior Member
Platinum Hubber
08/06/2016 புதனன்று சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
நடித்த " நீதிக்கு பின் பாசம் " ஒளிபரப்பாகியது .
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
10th June 2016, 09:04 AM
#664
Junior Member
Platinum Hubber
இன்று (10/06/2016) பிற்பகல் 1 மணிக்கு ஜெயா மூவிஸில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.
நடித்த " தாயை காத்த தனயன் " ஒளிபரப்பாகிறது
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
10th June 2016, 09:34 AM
#665
Junior Member
Veteran Hubber
Originally Posted by
esvee
தன் தலைமையிலான அரசு என்று இல்லாமல் பேரறிஞர் அண்ணாவின் அரசு அரியணையில் அமர்ந்தது என்று அடக்கத்துடன், நம் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்கள் தான் நிறுவிய "அண்ணா" பத்திரிகையில் செய்தி வெளியிட்டு, தன் தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்களை பெருமைப்படுத்தியது, நெஞ்சை நெகிழ்ச்சியடைய செய்தது.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
10th June 2016, 09:42 AM
#666
Junior Member
Platinum Hubber
1963ல் எம்.ஜி.ஆர். -சரோஜாதேவி ஜோடியின் மிகப் பெரிய வசூல் சித்திரம் ஆர்.ஆர். பிக்சர்ஸின் பெரிய இடத்துப் பெண்.
டி.ஆர். ராமண்ணாவின் தயாரிப்பு இயக்கத்தில் உருவானது.
பட்டி தொட்டிகளில் கமலை முதன் முதலாக வசூல் ராஜாவாக்கிய சினிமா ‘சகலகலாவல்லவன்’. பெரிய இடத்துப் பெண்ணின் அப்பட்டமான காப்பி.
‘புனிதா’ என்கிற மாறுபட்ட வேடத்தில் நடிப்பில் சரோ சாதித்துக் காட்டிய படம் அது.
எம்.ஜி.ஆர். - சரோ ஜோடி ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை மக்கள் மத்தியில் உருவாக்கியிருந்தது.
‘ஆனந்த விகடன்’ தனது விமர்சனத்தில் ரசிகர்களின் உணர்வைப் படம் பிடித்துக் காட்டியது.
முனுசாமி - ‘எம்.ஜி.ஆர். ஜோரா நடிச்சிருக்காராமே...?
மாணிக்கம் - ‘ஆமாம் அண்ணே. அவர் ஆடற இங்கிலீஷ் டான்ஸ் நல்லா இருக்குது.
முனுசாமி - லவ் சீன்ஸ் எப்படி?
மாணிக்கம்- ஏன் அதை மட்டும் தனியா கேக்கற?
முனுசாமி-எம்.ஜி.ஆர். - சரோஜாதேவி ஜோடின்னாலே காதல் காட்சிகள் எப்படின்னு கேட்கத் தோணுது.
மாணிக்கம்- ரசிக்கும் படியா இருக்கண்ணே. கண்ணுக்குக் குளிமையான காமிரா, காதுக்கு இனிமையான பாடல்கள்...
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th June 2016, 12:53 PM
#667
Junior Member
Platinum Hubber
வென்றாரும் இல்லை வெல்வாரும் இல்லை
எம்.ஜி.ஆரின் பெருமைகளையும் அவரது பண்புகளையும் பாராட்டி, இன்னொரு முக்கியமான தமிழறிஞரும் அவரை வாழ்த்தி, ‘‘குன்றனைய புகழ் கொண்ட குணக்குன்றே...’’ என்று தொடங்கி கவிதை எழுதியுள்ளார். அந்தக் கவிதையில்,
‘‘வென்றாரும் வெல்வாரும் இல்லா வகையில்
எந்நாளும் ஒளிவீசும் தண்மதியே!
தென்னாடும் தென்னவரும் உள்ளவரை
மன்னா! உன் திருநாமம் துலங்க வேண்டும்!
உன்னாலே உயர்வடைந்த என் போன்றோர்
உள்ளங்கள் அதைக் கண்டு மகிழ வேண்டும்!’’
என்று அந்தத் தமிழறிஞர் வாழ்த்தியுள் ளார். அவர்... கலைஞர் மு.கருணாநிதி!
Last edited by esvee; 10th June 2016 at 12:57 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
10th June 2016, 09:13 PM
#668
Junior Member
Platinum Hubber
MAKKAL THILAGAM MGR -100 - THE HINDU TAMIL
COMMENTS PORTION TODAY
எம்.ஜி.ஆரின் பெருமைகளையும் அவரது பண்புகளையும் பாராட்டி,
.......உன்னாலே உயர்வடைந்த என் போன்றோர்
உள்ளங்கள் அதைக் கண்டு மகிழ வேண்டும்!......
என்று கலைஞர் மு.கருணாநிதி எழுதியுள்ளார் என்றுள்ளது மேலே. அப்பட்டமாக உண்மையை எழுதியுள்ளாரே?? கவிதை என்றால் புனைவுகள் தான் அதிகமிருக்கும் (விதிவிலக்குகள் மகாகவி பாரதி போன்றோர்) என நினைத்திருந்த எனக்கு இது ஆச்சர்யமே. அதிலும் கலைஞர் மு.கருணாநிதி எழுதியுள்ளார் என்றால், really double delight.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களை புரிந்து கொள்ள, நல்ல மனம் கொண்டோரால் மட்டுமே இயலும்!
வென்றாரும் , வெல்வாரும் மட்டுமில்லை, இவரை பழி சொல்வாரும் இந்த புவியில் இன்றுவரை இல்லை !
‘உன்னாலே உயர்வடைந்த என் போன்றோர்’ என்று திமுக தலைவர் கருணாநிதியால் பாராட்டப்பட்ட தலைவர் எம்.ஜி.ஆர். என்று இந்தக் கட்டுரையை படித்தபின்தான் தெரிந்து கொண்டேன்.
எம்.ஜி.ஆரின் பெருமைகளையும் பண்புகளையும் இந்தக் கட்டுரைகளில் தினமும் படித்து அதிசயப்படுகிறேன். எம்.ஜி.ஆர். புகழ் உலகம் உள்ளவரை மறையாது.
இந்தக் கட்டுரைகளை 100 உடன் நிறுத்தாதீர்கள். குறைஞ்சது 200 ஆவது போடுங்கள். ஆதாரபூர்வமான ஆவணங்களாக இந்தக் கட்டுரைகளை தயவு செய்து புஸ் தகமாக போடுங்கள். அது எதிர்கால தலைமுறைகள் நல்ல பண்புகளோடு வளர்வதற்கு உதவும்.
ஆண்டவனே எனக்கு வாத்தியாரை புகழ்வதற்கு வார்த்தைகள் வரவில்லையே...? என் செய்வேன்..
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
10th June 2016, 11:22 PM
#669
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
10th June 2016, 11:28 PM
#670
Junior Member
Platinum Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
Bookmarks