-
13th June 2016, 10:08 PM
#1471
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
13th June 2016 10:08 PM
# ADS
Circuit advertisement
-
13th June 2016, 11:05 PM
#1472
வாசு,
தாமதமாக சொல்வதற்கு மன்னிக்கவும்.
மொத்தம் இரண்டு நன்றிகள்.
ஒன்று, அந்த நாள் ஞாபகம் தொடருக்கு அளித்த பாராட்டிற்கு! முன்பே சொன்னது போல் நான் விரும்பி எழுதும் தொடர். நமது தகவல்களை பயன்படுத்திவிட்டு 3-க்கு பதில் 4, தேங்காய்க்கு பதிலாக மாங்காய் என எழுதி விட்டீர்கள் [இவற்றால் எந்த உண்மை தகவலும் மாறிவிடப் போவதில்லை என்ற போதிலும்] ஆகவே வரலாறு தெரியாத நபராக நம்மை அடையாளப்படுத்த துடிப்பவர்கள் மத்தியில் உங்களைப் போன்றவர்கள் பாராட்டுவது நிரம்ப மகிழ்ச்சியளிக்ககூடியது.
இரண்டாவது நன்றி சந்தேகமென்ன? நிச்சயமாக ராஜாவிற்குதான்! தொடருங்கள்!
அன்புடன்
-
Post Thanks / Like - 2 Thanks, 4 Likes
-
14th June 2016, 12:16 AM
#1473
Junior Member
Veteran Hubber
நெஞ்சம் நிறைந்த மதுர கீதங்களின் அணிவகுப்பு!
அன்பு நேசம் காதல் பரிவு பாசம் எல்லாம் குடிபுக நினைக்கும் இடங்களே மனம் இதயம் நெஞ்சம் .....என்ன வித்தியாசம் என்பதை என்னால் அறுதியிட்டுக் கூற இயலவில்லை. ஆனாலும்
நேசம் நேராக தஞ்சம் புகும் இடமே நெஞ்சம்...அன்பு மிஞ்சும் மனமே நெஞ்சம் ...காதல் கொஞ்சும் இதயமே நெஞ்சம் ...என்று நம்புகிறேன் !
நெஞ்சம் நிறைந்த நெஞ்சத்தைத் துளைத்த நெஞ்சம் தொலைந்த நெஞ்சம் கிஞ்சித்தும் மறக்கவோன்னாத மதுர கானங்கள் ...எனது
நெஞ்சிருக்கும் வரை !
No.1 :நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் நேற்றுவரை ஓர் நினைவு தந்தாய் ....சாந்தி !
பாடலின் தெளிந்த நீரோடை வரிகளாகட்டும் இசை நேர்த்தியாகட்டும் சுசீலாம்மாவின் தேனினுமினிய குரல் குழைவாகட்டும் நடிகர்திலகத்தின் சதனார் விசிலின் உதட்டுக் குவிப்பசைவாகட்டும் தேவிகாவின் எழிலாகட்டும் எனது நெஞ்சைவிட்டு நீங்காத பாடல்களில் தனியிடமே !
Last edited by sivajisenthil; 14th June 2016 at 05:08 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
14th June 2016, 12:31 AM
#1474
Junior Member
Veteran Hubber
நெஞ்சம் நிறைந்த மதுர கீதங்களின் அணிவகுப்பு!
No.2
அன்புக்கும் காதலுக்கும்தான் நெஞ்சம் என்றில்லாமல் கோபத்தின் கொள்ளிடமாகவும் அது மாறிவிடும் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் பொறுமையை சோதித்திடும் போது ! நடிகர்திலகத்தின் அகக்கோபம் முகபாவத்திலே ....பராசக்தி
No.3 :
எதிர்மறை எண்ணங்கள் உதிர்ந்து நேர்சிந்தனைகள் நெஞ்சிருக்கும் எங்களுக்கு எதிர்காலத்தில் நம்பிக்கையைப் புகுத்தும்போதும் ....நெஞ்சிருக்கும் வரை ..
Last edited by sivajisenthil; 14th June 2016 at 08:09 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
14th June 2016, 07:56 AM
#1475
Junior Member
Veteran Hubber
நெஞ்சம் மறக்கவோன்னாத மதுர கானங்களின் அணிவகுப்பு ...மரியாதை நடிகர்திலகத்துக்கு !
தமிழ்த் திரை கண்ட மிகச்சிறந்த காதல் காட்சிய்மைப்புக்களில் இதமானது !
நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு கண்ணில் குடியிருக்கும் காதலியின் நிலைமை உணர்த்தும் கண்ணியமான காட்சியமைப்பு !!
No. 4 வெள்ளித்திரையோ வண்ணத்திரையோ பெண்ணின் மனமென்னும் புரியாத புதிரை உள்ளடக்கிய காதல் நெஞ்சத் திரை இரும்புத்திரையா பனித்திரையா பட்டுத் துணித்திரையா ?! ....இல்லை வெறும் மண்குதிரையா?!
Last edited by sivajisenthil; 14th June 2016 at 05:11 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
14th June 2016, 11:32 AM
#1476
Junior Member
Veteran Hubber
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறனுமின்றி ....பாரதியின் பாரதிரும் நெஞ்சின் நிலைப்பாடு நடிகர்திலகத்தின் நெஞ்சில் தஞ்சம் !
No.5 கப்பலோட்டிய தமிழன்
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
14th June 2016, 11:55 AM
#1477
Junior Member
Veteran Hubber
மனித வாழ்வில் மறதி என்னும் கசப்பு மருந்தே மனதின் ரணங்களை ஆற்றும் ஆற்றல் படைத்தது படைத்தவனாகிய இறைவனின் படைப்பு வினோதமே !
ஆனாலும் பழையதை மறந்து புதிய பறவையாக வட்டமிட திட்டமிடும்போது மறந்ததைஎல்லாம் நெஞ்சத்தின் நினைவில் மீட்டுக் கட்டம்கட்டிட வந்ததையாஒரு பழைய பறவை !! எந்த திரைக் கதாபாத்திரமும் இவ்வளவு நெஞ்சுவலி தரும் இன்னல்களை சந்தித்ததில்லை ! அந்த வேதனைகளை வெளிப்படுத்தியதில் உலகநடிகர் எவரும் நமது திலகத்தை மிஞ்சியதுமில்லை !
அவர் நமது இதயக் குடிலில் வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ..... மறந்ததே என்ன நெஞ்சமோ !
No. 6 : புதிய பறவை!
Last edited by sivajisenthil; 14th June 2016 at 05:04 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
14th June 2016, 09:43 PM
#1478
Senior Member
Devoted Hubber

Originally Posted by
vasudevan31355
அருமை! அருமை! சிவா சார்! பம்மலார், ராகவேந்திரன் சார் செந்தில்வேல் வரிசையில் தாங்களும் ஆவணங்களை அள்ளி வழங்கி அசத்தி வருகிறீர்கள். குறிப்பாக நடிகர் திலகத்தின் கோட்டையான (எதுதான் நமது கோட்டை இல்லை?) இலங்கையில் பைலட் பிரேம்நாத்தின் விஜயம் பற்றிய செய்திகளையும், படங்களையும் அவருக்குக் கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பையும், மரியாதையையும் நோக்குகையில் சிலோன் மக்கள் அவர் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தனர் என்பது புலனாகிறது. சாதனை பண்ணுவதற்கென்றே பிறந்த சரித்திர நாயகரல்லவோ நம் 'ராஜா'. அற்புதமான ஆவணங்களுக்கு தலை சாய்க்கிறேன்.
(ஒரு சிறு அன்பு வேண்டுகோள். பேப்பர் கட்டிங்குகளை அதே அளவில் ஒரிஜினலாக அதாவது இமேஜை பெரிது பண்ணாமல் பதிவிட்டால் இன்னும் விளம்பரங்கள் தெளிவாக இருக்கும். என்லார்ஜ் செய்வதால் ஒரிஜினல் தெளிவு குறைகிறது. ஒருவேளை விளம்பரங்கள் சிறிய அளவிலே இருந்தால் சற்று பெரிதாக்கலாம். இது என்னுடைய எண்ணம் மட்டுமே. தவறாக கொள்ள வேண்டாம்)
வாசு சார்
ஆவணங்களை பாதுகாத்து என்கைக்கு கிடைக்க
காரணமான திரு சீனிவாசகோபாலன் அவர்களுக்கு
கோடான கோடி நன்றிகள்
இதில் தவறாக கொள்ள ஒன்றுமில்லை
படங்களை நான் என்லார்ஜ் செய்யவில்லை
அவற்றை தனியாக கட் பண்ணி பேஸ்ட் செய்யும்பொழுது
அப்படியாகிவிட்டன.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
14th June 2016, 09:51 PM
#1479
Senior Member
Devoted Hubber

Originally Posted by
RAGHAVENDRA
தமிழனின் பெருமையை மாண்பை கலாச்சாரத்தை உலகறியச் செய்த ஒரு உன்னதக் கலைஞனை கடல் கடந்த தமிழர்கள் எப்படியெல்லாம் போற்றியிருக்கிறார்கள் என்பதற்கு ஆணித்தரமான சாட்சியை அள்ளி வழங்கியுள்ள சிவா தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள். சிங்கத்தமிழனின் பெருமையை,
தமிழர்களிடம் அவருக்கிருக்கும் செல்வாக்கை இருட்டடிப்பு செய்த அந்நாளைய நம் ஊர் ஊடகங்களுக்குப்
பாடமாக விளங்கும் அளவிற்கு இலங்கை ஊடகங்கள் அந்த உத்தமனைப் போற்றிப் புகழ்ந்துள்ளது உள்ளபடியே நமக்கெல்லாம் உவகையூட்டுவதாகும்.
சிவா அவர்களுக்கும் இந்த ஆவணங்களைப் பாதுகாத்து அளித்த நண்பருக்கும் உளமார்ந்த நன்றி
அந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டு பத்திரிகைகள்
விபரமாக செய்திகளை பிரசுரிக்கவில்லையா?
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
14th June 2016, 09:54 PM
#1480
Senior Member
Devoted Hubber
பைலட் பிரேம்நாத் பத்திரிகைகளின் தொகுப்பு தொடர்கிறது.....
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
Bookmarks