Results 1 to 10 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

Hybrid View

  1. #1
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

    Response in the form of Clarification to Mr. Akbar


    Quote Originally Posted by RavikiranSurya View Post
    இனிய நண்பர் திரு அக்பர்

    முதற்க்கண் பத்திரிகை செய்தியை controversy இருப்பின் அதனை தணிக்கை செய்யாமல் பதிவு செய்திருக்ககூடாது என்பதில் நானும் உடன்படுகிறேன். எப்படி அதற்க்கு நான் support செய்யவில்லையோ அதைப்போலவே உங்களுடய பதிவும் பதிவில் நடிகர் திலகம் சம்பந்தப்பட்ட உங்கள் கருத்து எந்த காலத்திலும் ஏற்புடையதல்ல !

    நடிகர் திலகம் அவர்கள் எந்த திரைப்படமாக இருந்தாலும் அதில் நாயகர் அவரே என்பது உலகறிந்த உண்மை. நாயகர் என்பது திரைப்படத்தில் வரும் கதாபாத்திரத்தின் தன்மையை கொண்டதே அல்லாமல் வயதினை ....கதாநாயகியுடன் டூயட் பாடுவதாலோ... பல வில்லன்களுடன் சண்டைபோடுவதாலோ மட்டுமே ஒத்த விஷயமோ... பாவம் உங்களுக்கு அது தெரிய வாய்ப்பில்லை!

    10.07.1953....திரும்பிப்பார் திரைப்படத்தில் நரசிம்ம பாரதி படம் முழுதும் வருவார் என்பதற்காக அவர் கதாநாயகரா ? கதாபாத்திரத்தின் தன்மையை பார்க்கும்பொழுது அதில் எதிர்மறை கதாபாத்திரம் புனைந்து வரும் நடிகர் திலகமே நாயகர் 13-04-1954 இல் வெளியான நடிகர் திலகத்தின் 12வது திரைப்படம் அந்தநாள். திரைப்படம் முழுதும் வருபவர்தான் கதாநாயகர் என்றால் ஜாவர் சீதாராமன் அவர்கள் திரைப்படம் முழுதும் வருவார். கதாபாத்திரத்தின் தன்மைப்படி அதில் நாயகர் நடிகர் திலகமே ! .....அவர் திரையுலகில் நுழைந்த காலம் தொட்டு மறைந்த காலம் வரை அவர் தான் நாயகர் ! கதையின் தன்மையும் கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் மட்டுமே யார் நாயகன் என்பதை நிர்ணயம் செய்பவை. துளிவிஷம், சம்பூர்ண ராமாயணம், குழந்தைகள் கண்ட குடியரசு , பெண்ணின் பெருமை, மற்றும் பல உதாரணங்களை கூற முடியும்..!


    மசாலா படங்களை மிக அதிகமாக பார்க்கும் பலரும் இதை தான் நம்புகின்றனர் ! காரணம், மசாலா படங்கள் பொருத்தவரை கதாநாயகியருடன் யார் டூயட் பாடுகிறாரோ அவர்தான் நாயகர்...வில்லனுடன் யார் சண்டை போடுகிறாரோ அவர்தான் நாயகர் ! அந்த மசாலா திரைப்படங்களில் இருந்து நல்ல பாடல்கள், சண்டைகாட்சிகள், வில்லன் இவர்களை நீக்கி நாயகர்களை நடிக்கசொல்லுங்கள் பாப்போம் ! Field out ஆகிவிடுவார்கள் !

    திரை உலகை பொருத்தவரை மசாலா படம் மட்டும் படம் அல்ல ! அது ஒரு genre !!! அவ்வளவுதான்...!!!

    நடிகர் திலகம் 1952 முதல் பூவுலகம் விட்டு மறையும் வரை கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து அதனை விரும்பி ஏற்றுகொள்பவர். தமது திறமையை காட்ட, கடினமான கதாபாத்திரம் என்றாலும் அதனை சவாலாக எடுத்து செய்து காட்டி என்றுமே வெற்றிகண்டவர்.

    4 டூயட் பாடல்கள் ..2 தத்துவ கொள்கை பாடல்கள்..4 சண்டை காட்சிகள்.நல்ல காமெடி..கவர்ச்சியான நாயகியர் இப்படி எல்லா பொழுதுபோக்கு அம்சத்தை அடக்கிகொண்டுள்ள, அரைத்த மாவையே அரைத்துகொண்டிருக்கும் படங்களில் ஒரு safezone இல் மட்டுமே நடிப்பவர் அல்ல !

    பல கதாபாத்திரங்களில் கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்துகொள்ள , அதனை திரையில் அவதரிக்க ஒரு தனி திறமை வேண்டும். அப்படி பட்ட நடிகர்களால் மட்டுமே எல்லா கதாபாத்திரத்திலும் நடித்து, நடித்ததோடு மட்டும் அல்லாமல் திறமையை மற்றவர் பாராட்டும்வண்ணம் நடந்துகொண்டு அந்த திரைப்படத்தை அவருக்காக மட்டுமே வெற்றி பெற்றது என்கின்ற நிலையில் கொண்டுவந்தது நடிகர் திலகம் மட்டுமே செய்த தனிப்பெரும் சாதனை !

    வேறு எவரும் இதனை கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது !

    பாடல் இல்லாத படங்கள் கூட நடிகர் திலகம் நடிப்பால் பெருவெற்றி பெற்றுள்ளது ! டூயட் இல்லாத படங்கள் கூட தனது நடிப்பால் பிரம்மாண்ட வெற்றிகண்டவர் நடிகர் திலகம் ஒருவரே.....படம் முழுதும் சோகமாக இருந்தாலும்...ஒரு சண்டை காட்சிகூட இல்லாமல் இருந்தாலும் ...ஜனரஞ்சகம் கடுகளவு இல்லாமல் இருந்தாலும் தனது நடிப்பு என்ற ஒரு விஷயத்தை மட்டுமே கொண்டு மதோன்னத வெற்றி தொடர்ச்சியாக கண்டவர் நடிகர் திலகம் மட்டுமே ...!!!

    கோபத்தால் நீங்கள் என்ன எழுதினாலும் .....அது உண்மை அல்ல என்பதை அனைவரும் அறிவர் ...ஏன் நீங்களே அறிவீர்கள் !

    நீங்கள் உதாரணம் சொன்ன படங்கள் ....அதில் நாயகத்தன்மை கொண்ட கதாபாத்திரம் நடிகர் திலகம் ஏற்ற கதாபாத்திரங்கள் !

    தேவர் மகன்....திரு கமல் அவர்கள் நடிகர் திலகம் இதில் நடிக்கவில்லை என்றால் இந்த படமே எடுக்கபோவதில்லை என்று அழுத்தமாக கூறியதால் நடிகர் திலகம் உடல் சரியில்லாத நிலையில் திரு கமலுக்காக செய்துகொடுத்த படம். கதையின் கரு...கதாபாத்திரம் ....தேவர் இல்லை என்றால்..தேவருக்கு நிகழும் நிகழ்வு நிகழவில்லை என்றால்.. மகனுக்கு வேலை இல்லை என்பது அனைவரும் ஒத்துகொள்வர்..நீங்கள் நீங்கலாக !

    படிக்காதவன் திரு ரஜினிகாந்துடன் ! - வெளிவந்த ஆண்டு 1985 - இந்த ஆண்டில் நடிகர் திலகம் அவர்கள் நடித்த படங்கள் மொத்தம் 8 திரைப்படங்கள் ..அதாவது சராசரி 45 நாட்களுக்கு ஒரு நடிகர் திலகத்தின் புதிய திரைப்படம் வெளிவந்துள்ளது !
    படிக்காதவன் - தொடக்கம் ...இடைவேளை ....க்ளைமாக்ஸ் மூன்று முக்கியகட்டங்களிலும் நடிகர் திலகம் அவர்கள் கதாபாத்திரம் முக்கியத்துவம் கொண்ட நாயகர் வேடம் ! புதிய நடிகர்கள்....இளைய நடிகர்கள் ...புதிய மாற்றங்கள் என்ன தமிழ் உலகை ஆக்ரமித்தாலும், நடிகர் திலகம் அவர்களுடைய market 1952 முதல் perfectly intact என்பது இதில் இருந்து நிரூபணம் இந்த வருடமும் !

    படையப்பா....கமலுடன் தேவர் மகன் செய்தவுடன்...திரு ரஜினிக்கும் நடிகர் திலகம் வைத்து படம் செய்யவேண்டும் என்று தோன்றியதன் பலன்...படையப்பா ! படையப்பா படம் பாருங்கள்....நடிகர் திலகம் மறையும் காட்சி யின் கரு கிட்டத்தட்ட தேவர் மகன் சாயலில் இருக்கும் ! படையப்பா படத்தின் முடிச்சு நடிகர் திலகம் கதாபாத்திரம் ! பிறகு நடக்கும் சம்பவங்கள் பழிவாங்கும் படலங்கள்.....படையப்பாவில் பிரபலமான தமிழ் நாளிதழ் ஒன்றில் நடிகர் திலகம் அவர்கள் அதில் வாங்கிய சம்பளமாக எழுதப்பட்ட தொகை ருபாய் ஒரு கோடி ! எந்த துணை நடிகருக்கு உலக திரைஉலகில் ஒரு கோடி சம்பளம் கொடுத்தார்கள் என்று முடிந்தால் விசாரித்து சொல்லுங்கள் !

    தேவர் மகன் மற்றும் படையப்பா - வயது என்ற வரம்பில் நாயகன் என்று நினைபவர்கள், இந்த கதையில் தம்முடைய நாயகதன்மையை காட்டுவது நடிகர் திலகம் அவர்களுடைய காட்சிகளுக்கு பின்பே !

    அடுத்து சத்யராஜ் புதியவானம் - rv உதயகுமார் மற்றும் rm வீரப்பன் நடிகர் திலகம் தான் இந்த கதாபாத்திரத்தை செய்யவேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததால், அப்போதும்...நடிகர் திலகம் உதயகுமாரிடம் , ராம வீரப்பன் அவர்கள் என்னை வைத்து படம் எடுக்கமாடாரே அவருக்கு தெரியுமா அவரிடம் அனுமதி கேடீர்களா என்று கேள்வி எழுப்பியபோது அவர்தான் முதலில் உங்கள் பெயரை உரைத்தவர் என்று கூறி சம்மதம் பெற்றவர் உதயகுமார் !

    சத்யா மூவீஸ் நிறுவனம் தான் நடிகர் திலகம் அவர்களை அணுகியதே தவிர நடிகர் திலகம் எந்தகாலத்திலும் எந்த பட கம்பனிகளையும் அணுகியதில்லை !

    ஜல்லிக்கட்டு - அனைவருக்குமே தெரியும் இதில் நாயகர் நடிகர் திலகம் தான் என்று ...கதாபாத்திரத்தின் தன்மையில் சத்யராஜ் கதாபாத்திரம் ஒரு executionist ! அவ்வளவுதான் !

    ராஜா மரியாதை - 1987 - 1985 இல் 8 படங்களில் நாயகராக வலம் வந்த நடிகர் திலகம் 1987 இல் 10 படங்களில் நாயகராக வலம் வந்தது ஊர் மற்றும் உலகம் அறிந்த விஷயம். சராசரி 36 நாட்களுக்கு நடிகர் திலகத்தின் ஒரு புதிய படம் வெளிவந்த நிலையில் ....1957, 1967, 1977, 1987 இலும் நடிகர் திலகம் மட்டுமே தயாரிப்பாளர்களின் முதல் தேர்வு என்பதை தெள்ளம் தெளிவாக விளங்குகிறது...பாவம் உங்களிடம் இந்த தகவல் இல்லை போலிருகிறது ..ஆகையால் நீங்கள் குருட்டாம்போக்கில் ஏதோ சொல்லவேண்டுமே என்று கூறிவிட்டீர்கள் !

    மோகனுடன் - கிருஷ்ணன் வந்தான் - திரைப்பட வியாபாரத்திற்கு நடிகர் திலகம் வேண்டும் என்று தேங்காய் ஸ்ரீனிவாசன் அடம் பிடித்ததன் விளைவு.....ஐந்து பைசா கூட வாங்காமல் ஓசியில் நடித்து கொடுத்தது நடிகர் திலகம் அவர்கள் பெருந்தன்மை. படத்தின் கதையில் நடிகர் திலகம் கதாபாதிரத்திர்க்கு நிகழும் tragedy இல்லையென்றால் நீங்கள் கூறும் மோகனுக்கு திரைப்படத்தில் வேலையே இல்லை ! ஆக இதிலும் நடிகர் திலகமே central character !!!

    மேலும்.....70 வயதை கடந்த ஒருவர் உங்களுடைய விருப்பப்படி கதாநாயகியருடன் மரத்தை சுற்றி டூயட்...10 முதல் 15 ஆட்களை அடித்து நொறுக்குவது ......இப்படியெல்லாம் நடிப்பது ஒருசிலரின் வாக்கின்படி "இயற்க்கை நடிப்பு" என்று பெருமை பேச தகுந்ததா ?
    அதையும் கொஞ்சம் யோசியுங்கள் !

    மக்கள் கலைஞர் ஜெய்ஷங்கர் பேசும்படம் அல்லது பொம்மை பேட்டியிலோ உரைத்ததைபோல "தங்கத்தின் விலை கூடலாம் குறையலாம்...ஆனால் தரத்தில் என்றும் தங்கம் தங்கமே ! "

    rks

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •