-
1st July 2016, 08:49 AM
#10
Junior Member
Veteran Hubber
கப்ஸாக்கதைகளின் கான மதுரங்கள்!
பகுதி 5
Heavenly Bodies Invited by Moonraker GG!
GG believed that of all the heavenly bodies surrounding our planet and floating in the Universe, Moon always comes to rescue him in all sorts of his situations related to the success and failure of his helm of affairs in his love life!!
பெரும்பாலும் மனித வாழ்க்கை பிறப்பு முதல் இறப்பு வரை தனிமனித சுகதுக்கங்கள் குடும்பசூழல் சார்ந்த சுமைகளால் கடமைகளால் நேரும் இன்ப துன்பங்கள் துயரங்கள் கோபதாபங்கள் விருப்பு வெறுப்புகள் நியாய அநியாயங்கள் சண்டை சச்சரவுகள் வரவு செலவுகள் போக்குவரத்துக்கள் லாப நஷ்டங்கள் கணக்கு வழக்குகள் அலைச்சல்கள் உளைச்சல்கள்......இவற்றிலேயே கவனம் செல்லும் போது நம்மை சுற்றியிருக்கும் காற்று நீர் வன வானமண்டலங்களில் நாம் மனதை ஈடுபடுத்த முடிவதில்லை.....நாம் நம்மை சுற்றியுள்ள கிரகங்களால் அவற்றின் நீள்வட்டப்பாதை சுழற்சிகளால் கண்காணிக்கப்பட்டு நமது கபாலத்தில் தலைவிதியாக நிர்ணயம் செய்யப்பட்டு பூமியோடு அதன் புவியீர்ப்பு விசையோடு சேர்ந்து நாமும் நமது வாழ்க்கை நிகழ்வுகளும் சுழல வேண்டியுள்ளது. எனவேதான் கடவுளின் விசையேற்றப்பட்ட படைப்புப் பொம்மைகளான நாம் கடவுளையும் நம்விதிசார்ந்த கிரகங்களையும் இசைவான பொம்மை வடிவங்களாக்கி வழிபாடுகள் நடத்தி அவர்களை திருப்திப்படுத்த பூஜைபுனஸ்காரங்கள் திருவிழாக்கள் அர்ச்சனைகள் செய்கிறோமோ.....?!
மற்ற உணர்வுகள்எப்படியோ.....காதல் மன்னரால் உருவகப் படுத்தப் பட்டு உயிர்ப்பிக்கப் பட்ட மென்மையான மேன்மை நிறைந்த காதல் உணர்வுகளுக்கு உற்ற வழிகாட்டியாக நிலவை மட்டுமே பூமிக்கு வரச்சொல்லி அழைப்பனுப்பினார் மன்னர்!
நிலாவே வா நில்லாதே வா..வா வெண்ணிலா உன்னைத்தானே.....அமுதைப்பொழியும் நிலவே என் அருகில் வராததேனோ....என்றெல்லாம் எத்தனையோ பேர் அழைத்தும் செவிமடுக்காத நிலாப்பெண்ணரசி காதல் மன்னரின் வசீகரிக்கும் புவியீர்ப்பு தாள முடியாமல் பூமிக்கு வருகிறாள்!
( சின்னா மற்றும் வாசுவுக்குப் பிடித்த) விஜயகுமாரியின் அவதாரமாக பூமிக்கு வந்த நிலவை வரவேற்று இடைக்கால ரொமான்ஸ் அடிக்கிறார் மன்னர்!
சாவித்திரி, விஜயா, சரோஜாதேவி, பத்மினி,வைஜயந்தி,தேவிகா ....விருந்தாளியாக பூமிக்கு வந்த நிலவரசி நிரந்தரமாக தங்களுக்கு சக்களத்தியாகி விடுவாளோ என்று பயந்து தேவலோக மகளிர்நல மன்றத்திற்கு பெட்டிஷன் போடுகிறார்கள்!
பூவுலக தேவதைகள் கடுப்பாகி மன்னரை வெறுப்பேற்றி பூமிக்கு தேடியோடி வந்த நிலவுப் பெண்ணை நெருங்காதே என்று விரக்தியோடு வழியனுப்ப வைக்கிறார்கள்!!
எட்டாத கனிக்கு கொட்டாவி விட்டு ஏமாந்த மன்னர் மீண்டும் வானத்துக்கு ஜம்படித்த நிலாவைப் பார்த்து மருகி இப்படிப் பாடுகிறார்!!
Last edited by sivajisenthil; 1st July 2016 at 03:23 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks