Results 1,251 to 1,260 of 3994

Thread: Makkal Thilagam MGR Part - 20

Threaded View

  1. #10
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by suharaam63783 View Post
    சென்னையில் போன சனிக்கிழமை 9-ம் தேதி ஒரு சினிமா பட நிகழ்ச்சி நடந்தது. அதில் அகில உலக வசூல் சக்கரவர்த்தியும் உலக பேரழகனுமான மக்கள் திலகம், புரட்சித் தலைவருடன் இணைந்து பல வெற்றிப் படங்களில் நடித்த நடிகை கலை இளவரசி திருமதி. லதா அவர்கள் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், ஊருக்கு உழைப்பவன் படத்தில் ‘இதுதான் முதல் ராத்திரி...’ என்ற ஒரே பாடல் மூலமாகவே மக்கள் திலகத்தின் ரசிகர்களின் உள்ளங்களில் இடம் பிடித்திருக்கும் நடிகை திருமதி. வாணி ஸ்ரீ அவர்களும் கலந்து கொண்டார்கள்.

    நன்றி கெட்ட இந்த உலகத்தில் மக்கள் திலகத்தின் நன்றி மறக்காத விசுவாசியாக இன்றும் விளங்கிவரும் திருமதி. லதா அவர்கள் நிகழ்ச்சியில் பேசும்போது, தமிழர்களின் உள்ளமெல்லாம் இனிக்கும் புரட்சித் தலைவரின் பெயரைக் சொன்னவுடன் எட்டிக்காயை சாப்பிட்டதுபோல மூஞ்சியை சுளித்து பீ(பே)தியடையும் சில அரைவேக்காடுகள், விருந்தினர்களை கவுரவப்படுத்தி அவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற சபை நாகரீகம் கூட தெரியாமல் ‘ஸ்டாப் இட்’ என்று கூக்குரலிட்டனர்.

    அவர்களுக்கு திருமதி. லதா நன்கு சூடு கொடுத்தார். ‘என் கருத்தை பதிவு செய்ய உரிமை உண்டு’ என்று ‘உரிமைக் குரல்’ கொடுத்தார். உடனே, பொறாமை கொண்ட அரைவேக்காடுகள் அடங்கிப்போய் உட்கார்ந்துவிட்டன.

    அதற்குப்பிறகு, திருமதி. வாணிஸ்ரீ பேசும்போதும், ‘மக்கள் திலகத்தின் ரசிகர்கள் என்னை எங்கே பார்த்தாலும் ‘ஊருக்கு உழைப்பவன்’ படத்தில் நான் அவரோடு நடித்தை சொல்லி என்னை அன்போடு விசாரிப்பார்கள்...’ என்றார். அரைவேக்காடுகள் மூஞ்சிகளைப் பார்க்க வேண்டுமே? வண்டி வண்டியாய் விளக்கெண்ணை. சிரிப்பாய் வந்தது.

    நன்றி மறக்காத நடிகைகள் திருமதி. லதா, திருமதி. வாணி ஸ்ரீ ஆகியோரின் பேச்சு மக்கள் திலகம் ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது. அவர்களுக்கு நன்றி.

    புரட்சித் தலைவர் புகழை யாரும் மறைக்கவோ, மறுக்கவோ, அழிக்கவோ முடியாது என்பது இந்நிகழ்ச்சியின் மூலம் ஆணித்தரமாக விளங்குகிறது என்பதை சொல்லிக் கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
    stop it என்று கூக்குரலிட்டவரையும், அநாகரீகமாக கூச்சலிட்டோரையும் தனது ஆளுமை திறனால் அடக்கி, புரட்சித்தலைவரை நினைவு கூர்ந்த நன்றி மறவாத நல்ல நடிகைகள் திருமதி லதா மற்றும் திருமதி வாணிஸ்ரீ போன்றவர்களை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

    புவி உள்ளவரை புரட்சித்தலைவரின் புகழ் எந்த மேடையிலும் எதிரொலிக்கும். இதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது என்பது காலத்தின் கட்டாயம்.

    பின்குறிப்பு : மறுவெளியீட்டில், வெள்ளி விழாவையும் தாண்டி, 190 நாட்கள் ஓடி. தமிழ் திரையுலகில் ஒரு புதிய வரலாறு படைத்த பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களின் " ஆயிரத்தில் ஒருவன் " காவியத்துக்காக, சென்னை சத்யம் அரங்கில் டிரைய்லர் வெளியிட்ட பொழுது, திவ்யா பிலிம்ஸ் திரு. சொக்கலிங்கம் மற்றுமொரு சிறப்பு விருந்தினர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை பற்றி நினைவு கூர்ந்து பேசிய சமயத்திலும், இனி எவராலும் தர முடியாத பொற்கால ஆட்சி தந்த பொன்மனச்செம்மல் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் பொழுது நடிகர் பாக்கியராஜ் அவர்கள் மறைத்திரு சிவாஜி கணேசன் பற்றி பேசும் பொழுதும், இது போன்ற அநாகரீக கூக்குரல்களை மக்கள் திலகத்தின் ரசிகர்கள், பக்தர்கள் எழுப்ப வில்லை. பெருந்தன்மையின் சிகரமாம் நம் புரட்சித்தலைவர் போல், அவரது ரசிகர்களும், பக்தர்களும், அன்பர்களும், அமைதியுடன் இருந்து கண்ணியம் காத்தனர்.

    திரு. சுஹாராம் அவர்கள் குறிப்பிட மறந்து போனது : புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தயவால் பள்ளி கட்டிடத்துக்காக இடம் பெற்று நன்றி மறந்த அரை லூஸ் காமெடியன் மகேந்திரனின் (சுவாதி கொலை வழக்கில் ஏனோ தானோ என்றும் தத்து பித்து என்றும், அரை வேக்காட்டுத்தனமாய் உளறிக்கொட்டி பின்பு ஜகா வாங்கி மன்னிப்பு கேட்டு கொண்ட மகேந்திரன்) வழக்கமான உளறல் பற்றிய செய்தி !

    Last edited by makkal thilagam mgr; 16th July 2016 at 09:08 PM.

  2. Thanks orodizli thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •